COMBINED DOUBLES TWO IN ONE ARTICLE
தொண்மையான மதத்தில் தொன்று தொட்டு படிக்காத எந்த பட்டம் பெறாத தொன்மைவாதிகளான அறிஞர்கள், மாமேதைகள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ரிஷிகள், முனிவர்கள், புலவர்கள் செதுக்கி கட்டியமைத்த மதம் "நம் இந்து மதம்". ஏகாந்தம் ஆக எந்த ஏமாற்றமும் இல்லாமல்! நல்ல சித்தாந்தம் ஆக அமைதியுடன் பேணி வாழ! எந்த ஏளனமும் இல்லாமல்! மேள தாளத்துடன் குதூகலமாக வாழ! உருவாக்கபட்ட கெட்டி மதம் இந்து மதம். கெட்டிகாரர்களின் மதமும் கூட. வியப்பில் ஆழ்த்தி வியப்பிலேயே வைத்திருக்கும் மதம் நம் இந்து மதம்! இந்து ஆன்மீகம், தத்துவம் என்பது நம் பெரியவர்கள் நாம் பின்னோக்கி செல்லாமல் முன்னோக்கி அழைத்து செல்ல அரும்பாடுபட்டு வாய் வழியாக தெய்வ வாக்காக கூறியவைகளே நம் மதம். மர்மமான ரகசியங்களை எல்லாவற்றையும் மிச்சம்மில்லாமல், மீந்து போகாமல் கண்டறிந்து தெளிய உனக்கு மச்சம், யோகம், அதிஷ்டம், கடவுளின் அனுக்கிரகம், கொடுப்பனை, ஜாதகத்தில் எந்தவித பாதகமில்லாமல் சாதக நிலையில் உச்சத்தில் இருக்கும் தருணம் வேண்டும் என்பதை புறம் தள்ளி நித்திரையில்லாமல் கூட, தியாகம் செய்தும் கூட, யாத்திரை செல்வது போல் சென்று கடைகோடி சாமானியன் எட்டி பிடிக்கும் தூரம் தான் என்பது போல் வீரியமாக தயிரியமாக அங்குலம் அங்குலமாய் வெட்ட வெளிச்சமாக்கியவர்கள் பலர் வாழ்ந்து, ஜீவசமாதியாகி, மாய ஏழு திரைகளை விளக்கி ஜோதி ஸ்வரூபமாகி, மறைந்தும் நம் கூடவே வாழ்ந்து வருகின்றனர் ஏராளமானவர்கள். ஒரு பானை (குதிரைவாலி, திணையரிசி, பச்சையரிசி, புழுங்கல் அரிசி) சாப்பாடு சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் உதாரணதிற்கு கூறவேண்டுமென்றால் திருமூலர், வள்ளலார், லேக்ராஜ் [ஆத்மாவை பற்றி மட்டும் அதிகபட்சமாக ஆழமாக உடைத்து கூறியவர்]. இன்னும் பட்டியல் நீளமாய் நீண்டுகொண்டே செல்கிறது. பாம்பு பஞ்சாங்கம் முதல் உண்மையான வாஸ்து சாஸ்த்திரம், ஜாதக ஜோதிடம், நாடி ஜோதிடம் வரை அனைத்தையும் துல்லியமாக நாடி பிடித்து வேதமாய் கூறு போட்டு கூவியது நமக்காக மட்டுமே. யாரிடமும் வீதி வீதியாய் அலைந்து யாசகம் பெறாமல் யாக்கையோடு ஒரு யாகம் போல் நடத்தி கூறியது நாம் வெற்றி வாகை சூடி மகிழ்ந்திட மட்டுமே. இவர்கள் தூக்கம்மில்லாமல் மெதுவாக ஆராய்ச்சி செய்தது நம் ஆராவை நாம் தெரிந்துகொள்ளத்தான் மேம்படத்தான். நம்மை ஆன்மிகம் மூலமாக நம்முடைய அனைத்தையும் பெரிதான இம்சையில்லாமல், எதிலும் சறுக்கி வழுக்கி விழாமல் அதோடு குண்டு குழி பள்ளத்தில் இருந்து குரு மேடு என்பதற்கு கொண்டு வந்து மேட்டுக்குடியாக்க தான். இடுப்பில் கட்டும் அருனாகயிரில் ஆரம்பித்து குபேரயந்திரம், கையில் கட்டும் கயிறு, விரலில் போடும் மோதிரம், கழுத்தில் கட்டும் தாலி கயிறு, செயின், கருங்காலி, ருத்திராட்சம்,ஸ்படிக மாலை, காலில் அணியும் மெட்டி, கொலுசு தாயத்து வரை ஆஹா அற்புதம் என்று நம் வாழ்க்கையை தான்றோனித்தனமாக எதுவும் பாழ் ஆகாமல் ஆரோக்கியமான கூழ் போலாக்கி குதூகலமாக சிறப்பாக சான்றோன் போல தலை முறை தலை முறையாய் கூழாங்கல்லாய் குளு குளுவென்று சிலு சிலுவென்று வாழ்ந்து மறையத்தான். நம்முடைய பிறப்பிற்கான தோற்றம் நல்ல தட்பவெப்ப நிலையுடன் மிதமாக திடமான களிமண்ணாய் தோன்றிவிட்டது. அதில் சிறிது நல்ல மாற்றம் செய்தால் ஏற்றமான நிகழ்வு உறுதியானது. நம் மதம் நம்மை ஏற்றிவிடும் ஏணி ! அதோடு மகத்தான கேணியும் கூட! [Real Magic and Beautiful Traditional Religion is Royal Hindu Religion]★Valavanur வை.ரா.SaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,
வைரா, வீரா, ராச என்று பல பெயர்களுடன் ஒரு பெயராய், ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN ரிதம் F.M 605 108-லிருந்து Justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய வாசகர்களே. என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும். இது கட்டுரை அல்ல.
இந்த கட்டுரை உலகில் வாழும் அனைத்து
நல்ல மனிதர்களுக்கும் சமர்பணம். இதை
எழுதுவதில் பெருமைபடுகிறேன்.
இதில் உள்ள கவிதையை நடு இரவில்
எழுதியதாகும். என்னுள் இருந்து எழுது என்று சொல்லி எழுதியது. தூங்க விடவில்லை. கவிதை எழுதி முடித்த பிறகே தூங்க முடிந்தது. அதோடு கட்டுரையும் அப்போதே எழுதியிருப்பேன். சரி
தூங்கலாம் என்று தூங்கிவிட்டேன். அடுத்த நாள் இரவில் முழு கட்டுரையும் எழுதி
முடித்தேன். நான் என்பது உள்ளே இருந்து
கூறுவதா? வேறு எது நான் என்பது. நம்மை
ஆட்டி படைப்பது யார்? நல்ல விஷயமே
என்றாயினும் அதை தெரிந்து கொள்வதும் நல்ல விஷயம் தானே.
இந்து மதம் ஒரு மிக மிக பழம் பெரும் மதமாகும். இம்மதம் தோன்றிய வருடம் உத்தேசமாக தான் கூற
முடியும். அதோடு மொழியை வைத்தும் இதனுடைய
உண்மையான தோற்றத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம். தெளிவாக சொன்னால் தமிழ் மொழியை வைத்து
கண்டறியலாம். தமிழ் மொழியின் தோற்றம் என்பது மிகவும் தொன்மை வாய்ந்தது. பல நாடுகளே இல்லாத போது இங்கு தமிழ்மொழி
இருந்துள்ளது (ரமணா திரைபடம் கிளைமாக்ஸ்). அதோடு
தெய்வங்களும் இருந்துள்ளது. வழிபாடுகளும்
நடந்துள்ளது. அதோடு இம்மதம் முழுக்க முழுக்க தன் முன்னோர்களை அடிப்படையாக கொண்டு
கட்டியமைக்கபட்ட மதமாகும். அதாவது
அனைத்துமே வாய் வழியானது. தெளிவாக
சொன்னால்
முன்னோர்களின் வாக்கு! எங்களின் போக்கு! சிவன் வழி! சித்தன்
வழி! என்பதாகும். அதனால்
தான் இதுவரை இந்து மதத்திற்கு என்று யாரும் தனிபட்ட ஆன்மிக தலைவர்கள் இல்லை. ஆன்மீக
மடங்கள் இருக்கும் அவ்வளவே.
அதாவது கோயிலுக்கு செல்வார்கள் இறைவனை வணங்குவார்கள். இறைவனிடம் லயித்து விட்டால் இறைவன் பாடல்கள்
பாடுவார்கள், தியானம் செய்வார்கள்,
துறவறம் செல்வார்கள். மற்றபடி அவரவர்கு
என்று முன்னோர்கள் சொன்ன வழிமுறையை மட்டுமே பின்பற்றுவார்கள்.
உதாரணத்திற்கு கூற வேண்டுமென்றால் வெள்ளி கிழமை, கிருத்திகை
தினத்தன்று ஏழை முதல் கோடிஸ்வரன் வரை இறைவனுக்கு படைப்பார்கள். செவ்வாய், வெள்ளி, சனி
கிழமைகளில் அசைவம் சாப்பிடமாட்டார்கள். அதாவது
வீட்டில் சமைத்து.
ஒரு மாதத்தில் பௌர்ணமி, அமாவாசை, சிவராத்திரி, ஏகாதசி, பிரதோஷம், சதுர்த்தி
மற்றும் இன்னும் விசேஷமான பல தினங்கள் உள்ளது.
அவற்றில் எதிலுமே பலர் படைக்க மாட்டார்கள். ஒரு சிலர் மட்டுமே நான் இந்த தினத்திலும்
வீட்டில் படைப்பேன் என்பார்கள். அதோடு
நான் சிவனின், விஷ்னுவின், வினாயகரின் தீவிர பக்தன் அதனால் அந்த
தினங்களில் நான் தவறாமல் வீட்டில் படைப்பேன் என்பார்கள்.
பொதுப்படையாக இதில் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது இது தான்.
இந்து மதம் என்பது சைவம், வைணவர்கள் என்ற இரு பிரிவை சார்ந்தது மட்டுமே. இதில் ஏன் பல தெய்வங்களின் விசேஷமான நாட்களில்
வீட்டில் அனைவரும் படைப்பதில்லை. ஏனென்றால்
அதை நம் முன்னோர்கள் கூறவில்லை. அதோடு
ரத்தத்திலே ஒரு சிலவைகளை நம் முன்னோர்களால் புகுத்தபட்டு வழி வழியாக வந்துவிட்டோம்
என்பதாலேயே தான். அதனால் தான் இந்த நாட்களிலும் படைத்தால் தான் நல்லது என்று
கூறினாலும் விட்டால் முப்பது நாட்களும் படைக்க வேண்டும் என்று கூறுவாய். அதெல்லாம் வேண்டாம் என்பது.
"நம்
முன்னோர்களின் வாக்கு! நமக்கான வேத வாக்கு! அது நம் ரத்த நாளங்களில் உள்ள வாக்கு!" இதுவே இந்து மதமாகும்.
அதனால் தான் எந்த தர்மத்தை கூறியும் இதுவரை இதை அனைவரும்
பின்பற்றியாக வேண்டும் என்று யாரும் கூறியதில்லை.
அதை அனைவரும் பின்பற்றியதும் கிடையாது. அதிகாரத்தாலும், அடக்கு முறையாலும்
வேண்டுமென்றால் எங்காவது நடந்திருக்கலாம்.
அதோடு இந்து மதத்திற்கு என்று அதிகார பூர்வமாக ஆஸ்தான குரு, தலைவர் என்று
யாரும் கிடையாது. ஏனென்றால் இந்து மதம்
ஒரு தனிநபரால் கட்டி எழுப்பபட்ட மதம் அல்ல. மனிதனை அனைவரும் தெய்வமாக்கி உருவாகிய
மதமும் அல்ல. அதோடு கிருஷ்ணர், ராமர்
என்று பல தெய்வங்கள் இம்மண்ணில் அவதரித்தாலும்
"வந்தேன்! சொன்னேன்!
தர்மத்தை ஸ்தாபித்தேன்! சென்றேன்!"
என்று தான் இருக்கும்.
அவர்களும் இனி நான் பிறந்த இந்த ஜாதியில் இருப்பவரே வைஷ்ணவ
மதத்தை மேலும் ஸ்தாபிக்க வேண்டும் என்று கூறவில்லை. ஏனெனில் அக்கடவுள் அந்த வைஷ்ணவ மதத்தை
உருவாக்கவில்லை. அது உருவாகிய பின்னரே
அதில் அவர் அவதாரம் எடுக்கிறார்.
அதே போல் காலம் காலமாக வைஷ்ணவ மதத்திற்கான நடை முறைகளை
தூக்கியெறிந்துவிட்டு, இந்த அவதாரங்கள் வருவதற்கு முன்னாடி இருந்த பெருமாள்
சிலைகளை அகற்றிவிட்டு இனி கிருஷ்ணர், ராமர் கூறியதே வைஷ்ணவ மதம் அந்த கடவுள் உள்ள
கோயிலே வைஷ்ணவ கோயில்கள் என்று எந்த வைஷ்ணவர்களும் கூறவில்லை. அதோடு
கிருஷ்ணருக்கும், ராமருக்கும் இன்றளவும் இந்தியாவில் எத்தனை கோயில்கள் இருக்கிறது. அதிகமாக திரௌபதை இருக்குமிடத்தில் கிருஷ்ணர்
கோவில் இருக்கும். ராமருக்கு பல இடங்களில்
கோவிலே கிடையாது. அதற்காக அக்கடவுள்
பிடிக்காதா? என்றால் இல்லை. பிடிக்கும்
ஆனால் நம் முன்னோர்கள் கூறியதில் தான் நமக்கு நாட்டம் அதிகமாக இருக்கும்
இருக்கிறது.
அதற்கு காரணம் நம் இந்து மதம், நம் முன்னோர்களின்
வாக்கு நம் இரத்தத்தில் இரண்டற கலந்துவிட்டது.
அதனால் தான் எதையும் இன்று இது வந்தததால் அது அழிந்தது
என்றில்லை. ஒரு வேலை அழிந்திருந்தால் அது
சர்வாதிகாரத்தால், சூழ்ச்சியால் மட்டுமே அழிந்திருக்கும். அதனால் தான் பலவற்றை
நம் மனது ஏற்க மறுக்கிறது.
வினாயகர் வட நாட்டு ஏற்றுமதி என்பார்கள். ஒரு சிலர் அவர்
கடவுளே இல்லை என்பார்கள். அவர்களுக்காக
இந்த உதாரணம். இந்த
உதாரணம் ரொம்ப தொண்மை வாய்ந்த உதாரணம் அல்ல. உதாரணம் உண்மையென்றால் பழையதாயினும், புதியதாயினும் அது
உண்மையே.
மணக்குள வினாயகரின் வரலாற்றை பாண்டிச்சேரிக்கு சென்று
விசாரித்தாலே தெரிந்துவிடும். மணக்குள வினாயகர் என்பவர் இந்து மதத்தின் பிரதான
தெய்வம்.
வெள்ளைகாரர்கள் இந்து மத கோயிலுக்கு குறிப்பிட்டு
தமிழ்நாட்டிற்கு அதிகம் வருவது ஒன்று பாண்டிச்சேரி மற்றொன்று திருவண்ணாமலை ஆகும்.
பாண்டிச்சேரி கடற்கரைக்கு அருகில் மணக்குள வினாயகர் கோயில்
உள்ளது. சுருக்கமாக கூறுகிறேன். வெள்ளைகார கிறிஸ்துவன் இந்த கோவிலின் வினாயகர்
சிலையை கடலில் வீசினான். திரும்பி
வருவதற்குள் அந்த சிலை கோயிலில் இருந்தது.
மறுபடியும் நடு கடலில் வீசினான். மறுபடியும்
அதே கோயிலை சென்றடைந்தார். இந்து மத
தெய்வத்திற்கு சக்தி இருக்கிறது எனவே இக்கோயிலை நாங்களே கட்டி தருகிறோம் என்று
கூறி கட்டி கொடுத்தனர்.
"நன்றாக இதில்
புரிந்து கொள்ள வேண்டியது கிறிஸ்துவன் இந்து மத தெய்வம் உண்மையெனில் அதை அவன்
ஏற்று கொள்கிறான். சதியோ, சூழ்ச்சியோ செய்யவில்லை. வினாயகரும் கோயிலை அடைந்தாரே
தவிர அவர்களை தன் சக்தியால் உயிரை பறிக்கவில்லை.
ஏனென்றால் அவன் வேறு மதமாக இருந்தாலும்
அக்கிறிஸ்த்துவன் நல்லவன் என்பது அக்கடவுளுக்கு தெரிந்திருக்கிறது. இது தான் இந்து மத கடவுள்." அதே போல் கம்சன் என்னை எதிரியாக நினைத்து தினந்தோறும் நினைக்கிறான்
என்பதால் அவனுக்கு நான் என்னுடைய திவ்ய தரிசனத்தை காட்டினேன் என்று கூறும்
தெய்வங்கள் உள்ள மதம் என் இந்து மதம்.
அதே போல் நமக்கு மேலே ஒரு உயர் சக்தி உள்ளது அவனே இறைவன்
என்பார்கள். அவனே அனைத்தையும் படைத்தான்
என்பார்கள். அது இந்து மதத்தில் நிரூபிக்கபட்டு
உள்ளது. இந்து மதத்தில் இரண்டு பிரிவே
உள்ளது. இரண்டு பிரிவில் இரண்டு தெய்வங்களே முதன்மையானது, இறுதியானதும்
கூட. அது
ஈஸ்வரன், விஷ்ணு இந்த இரு தெய்வங்களை வணங்கி ஆழ்வார்களா, சித்தர்களாக பெயெரெடுத்து, ஜீவ சமாதி
அடைந்தது நிரூபணமான உண்மையே. இதை யாரும்
மறுக்க முடியாது. அதனால் தான் ஆங்கிலேயன்
பல வருடங்களாக கொடுங்கோல் ஆட்சி செய்தும் மத மாற்றம் என்ற பெயரில் கோயிலை இடித்து
தள்ளவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு
ஓரளவிற்கு தெரிந்திருக்கிறது இந்து மதம் பழமையான உண்மையான மதம் என்பது. அதோடு பல ஆங்கிலேயர்கள் இந்து மதத்தை
தழுவியிருப்பார்கள். ஆனால் அவர்கள்
கிறிஸ்த்துவ ராஜ குடும்பம் என்பதால் வந்த இடத்தில்" இந்து மதத்தில்
மூழ்கி முத்தெடுத்து கொண்டிருக்கிறாயோ" என்று வினவி ராஜ
பரம்பரையில் இருந்து நீக்கிவிட போகிறார்கள் என்ற பயத்தால் மதம் மாறாமல்
இருந்திருக்கலாம் அல் வேறு காரணங்கள் இருந்திருக்கலாம் அவ்வளவே. அப்போது இருந்த மகா ராணி விக்டோரியா அவர்கள். அவர்களும் நல்லவர்களே.
"எந்த மதத்தில்
பிறந்தாலும் எந்த கோவிலுக்கு சென்றாலும், எந்த மதத்தின் பெயரில் இருந்தாலும்
மனதில் ஓர் கோயில் கட்டி அதில் எந்த சாமி இருக்கிறதோ அதுவே அவன் சாமி" ஆகும்.
இதில் வருத்தபடவோ, கவலைபடவோ ஒன்றுமில்லை.
இந்து மதம் தனிபட்ட ஒரு நாட்டிற்கான
மதம் அல்ல. இந்த மதத்தை எந்த நாடாயினும் உரிமை கோர முடியாது. இந்து மதம் வேறொரு
நாட்டில் இருந்தால் அது அந்த நாட்டினுடைய மதம். அதை வேறொரு நாடு இது எங்கள் மதம் என்று கூற முடியாது.
இதில் ஒரு சில மதத்தை போல நூலை
திருத்தி எழுதி இது பழையது இது புதியது என்றெல்லாம் கிடையாது. இங்கு இதிகாசங்கள், புராணங்கள்
பொதுப்படையாக அனைவரும் பின்பற்றுவதில்லை. அதை
தெரிந்து கொள்வார்கள் தன் பிள்ளைகளுக்கு தெரிவிப்பார்கள். ஆனால் அவர்களின் மூதாதையர்கள் கூறியதே வேத
வாக்கு ஆகும். இங்கு எத்தனை சக்திமிக்க கோயில்கள் இருந்தாலும், புதிதாக
கட்டினாலும் குல தெய்வ வழிபாடே இந்து மதத்தில் முக்கியமான ஒன்று. கல்யாணம் போன்ற
சுப நிகழ்ச்சிகள் தன் குடும்பத்தில் நடக்கிறது என்றால் அங்கு திருமண பத்திரிக்கை
வைத்து ஆசிர்வாதம் வாங்கி, பொங்கல் வைத்து கும்பிட்ட பிறகே மற்ற வேலைகள் எல்லாம். இதுவும் முன்னோர்களின் வழி பின்பற்றுதலே. இது ஏழைகள் முதல் கோடிஸ்வரன் வரை பொருந்தும்.
பல நன் கொடைகளை பல கோவில்களுக்கு
வழங்கும் நல் உள்ளங்கள் உங்கள் குல தெய்வம் சம்பந்தபட்ட கோயிலுக்கு நன் கொடை
அளியுங்கள். அது மாபெரும் புண்ணியம். ஏனென்றால் அது உங்கள் குல தெய்வம். உங்கள் குல
தெய்வ கோயிலை ஒளிர வைத்து விட்டு பின்பு நன்கு ஒளிர்ந்து இருக்கும் கோவிலை மேலும்
ஒளி மயமாக்குங்கள் தவறொன்றுமில்லை.
அதே போல் ஒவ்வொரு நாளும் வெளியே
சென்றால் ஜோதிடம், சோழி உருட்டி பார்க்கும் வழக்கம் அனைவருக்குமில்லை. சந்திராஷ்டமம் கூட இன்றளவும் பலரும் பெரிதாக
கவனிப்பதில்லை. அதே போல் இன்று தினமும்
ராசி பலன் கூறுகிறார்கள். அதை கேட்டு
விட்டு இன்று நடத்தலாம் என்று இருந்த காரியத்தை தள்ளி வைப்பவர்களும் குறைவே.
மொத்தத்தில் பலவற்றை பலர் என்ன சொல்லி
கூறினாலும் அதை பலர் கேட்பதுமில்லை,
பின்பற்றுவதுமில்லை. ஏனென்றால் நம் முன்னோர்கள் பலவற்றை நம்மிடம்
கூறவில்லை. அதை பின்பற்றுங்கள் என்றும்
கூறவில்லை.
★
நாம் சூரியனை தெய்வமாக வணங்கியுள்ளோம். அதற்கு தை பொங்கல் சாட்சி.
★★
மழை வரவில்லையென்றால் மாரியம்மனை
வணங்கியுள்ளோம். மழையும் பொழிந்துள்ளது.
வேற்றுமையில் ஒற்றுமை என்பார்கள். வேறுபட்ட
பல தெய்வங்கள் பல பெயரில் ஒரு மதத்தில் இருந்தாலும் ஓர் உயர் பக்தி ஓர் உயர் சக்தி
அதில் வந்தடைந்து நமக்கானவற்றை நிறைவாக பூர்த்தி செய்கிறது. இதுவே இந்து மதமாகும்.
இந்து மதத்தில் உள்ளவர்களின்
செயல்பாடுகள்:-
எவ்வளவு பேர் மதமாற்றம் செய்ய
முற்பட்டாலும் , மதம் மாறினாலும் நம் இந்து மதம் போல் திறந்த புத்தகமாய் இல்லாத
காரணத்தால் வேண்டுமென்றால் அதில் இருப்பார்கள்.
மொத்தமாக அனைத்தும் தமிழாக்கம் (அவரவர் மொழிகளில்) செய்யபட்டு நம் இந்து மதம் போல எளிதாக
அனைத்து தகவல்களையும் தெரிந்து கொண்டால் தாய் மதம் திரும்புவது உறுதி.
★
ஏனென்றால் இந்து மதத்தில் இருந்தவர்கள்
மதத்தை பரப்புவதற்காக, அனைவரும் ஏற்று கொள்வதற்காக பல போர்களை நடத்தியதில்லை. ★★
பணம் கொடுத்தும் வேறு மதத்தில் இருப்பவர்களை
பெரிதாக மாற்றுவதில்லை. எங்காகவது இந்து
மதம் மாற்றம் செய்ய ஒரு குழு கிளம்பியுள்ளது என்று கேள்விபட்டீருக்கிறார்களா?
★ ★ ★
மத அமைப்பு இருக்கும் மத மாற்றும்
அமைப்பு கிடையாது. இந்து மத அமைப்புகள் பெரிதாக இந்து மத மாற்றம் செய்ய
கிளம்பியதில்லை. ★★★★
தெரு தெருவாக, வீடு வீடாக
பிரசுரங்கள் கொடுத்து மதம் மாற்றியதில்லை.
★★★★★
இந்து மத சேனல்களில் கோயில்
கும்பாபிஷேகம், தெய்வீக பாடல்கள் மட்டுமே இதுவரை ஒளிபரப்பு செய்யபட்டுள்ளது. மற்ற மத சேனல்களை போல செயல்படாது. செயல்படுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? ஆனால் செயல்படவில்லை. ★★★★★★
மதம் மாற்றுவதே எங்கள் தினந்தோறும்
வேலை என்று செயல்படாது. இது வரை
எங்காவது செயல்பட்டு தான் பார்த்திருக்கிறார்களா? ★★★★★★★
எங்காவது மதத்தின் பெயரால் வன்முறை, ஒரு சில
நேரங்களில் ஒரு சில இடங்களில் கலவரம் நடைபெற்றிருக்கலாம் அவ்வளவே. அதில் பல நம்
பக்கமே நியாயம் இருக்கும். அதற்காக மேற்கண்டது தவறில்லை என்று கூறவில்லை.
பல நாட்டுடன் மதத்துடன் Compare செய்தால்
வன்முறையை பெரிதாக சொல்லாத, விரும்பாத மதம் நம் இந்து மதம்.(Kashmir Files). பகவத் கீதையில் மட்டுமே கடவுளின் அவதாரம் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியிருப்பார். பெரிதாக ரத்த கரையை இந்து மதம் விரும்புவது
இல்லை.
தெய்வத்தின் கையிலே ஆயுதம் இருக்கும்
போது அவனுடைய பக்தன் உன்னிடம் ஆயுதம் இருந்தால் என்ன தவறு? தெய்வம் கெட்டவனை
அவனுடைய தீவிர பக்தனிடம் கொடுத்தே அழிக்க சொல்வான் என்று வன்முறை, ஆயுத
கலாச்சாரத்தை பழக்கவில்லை. அவ்வாறு
இருந்தால் புண்ணியம் என்று கூறவில்லை. கத்தி
யாரெடுத்தாலும் வெட்டுமல்லவா? அபச்சாரம் அபச்சாரம்.
ஒரு நாட்டில் நம் இந்து மதத்தில்
உள்ளவர்களை கட்டாய மத மாற்றம் செய்து,
அங்கிருந்த கோயில்களை இடித்து அழிக்க
முற்பட்டனர். இன்று மழை வெள்ளத்தில் பாதித்த போது அங்கே தான் ஒதுங்கியுள்ளனர். இந்து
மத கோயிலை அழிக்க முற்பட்ட எந்த நாடும் உயர்ந்ததாய் வரலாறில்லை. அதிகபட்சமாக இந்து
மதத்தை சீர் குலைத்து அழிக்க முற்பட்ட எந்த நாடும் அமைதியாய் வாழ்ந்ததில்லை. இது
ஆதார பூர்வமானது. இது போல் இந்து மதத்தில்
உள்ளவர்கள் செயல்பட்டுள்ளார்களா? இன்னொரு சிறிய நாடு எங்கள் இனத்தை, இந்து மதம்
சார்ந்தவர்களை போர் என்ற பெயரில் கொன்று குவித்து அழிக்க முற்பட்டது. அழித்தவர் எங்கே? அழித்த
நாடு என்ன ஆனது? முன்னேற்றத்தின் உச்சிக்கே சென்றுவிட்டதா? அந்த நாடு சிவனின் மனைவி பார்வதிக்கு மிகவும்
பிடித்த நாடாகும். ஆனால் அந்த நாட்டில்
இந்து மத காரர்களை அழிக்க நினைத்தால் இப்படி தான் நடக்கும். இதுவும் ஆதார பூர்வமானது.
இந்து மதம் முழுமையாக இல்லாவிட்டாலும்
ஒரு சில நாடுகளில் இந்து மத கோயில்கள் உள்ளது.
அந்நாடுகள் வளர்ச்சியாக உள்ளது. E.g:- மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா.
எங்கள் நாட்டில் எங்கள் மதம் மட்டுமே
இருக்க வேண்டும். எங்கள் மதக்காரர்கள்
தான் எங்கள் இறைவனை வழிபட வேண்டும் மீறி வேறு யாராவது வழிபட்டால் அவர்களை
வெளியேற்றுங்கள் என்று கூறாத மதம் இந்து மதம்.
கடவுளுக்கு செய்யும் செலவுகள் எதற்கென்று
சில வீனர்கள் வீணாய் கூறி கொண்டு திரிகின்றனர்.
அவரவர்கு பிடித்திருக்கிறது அவர்கள் செய்கிறார்கள். அவர்களுக்கு அந்த மத சுதந்திரம் கூட கிடையாதா?
இம் மதத்தில் அவர்களுக்கு பிடித்த
தெய்வத்தை அவர்கள் செலவில் அலங்காரம், அபிஷேகம், கற்பூரம் ஏற்றி பார்க்கிறார்கள். திருவிழாவை
தவிர்த்து வேறு யாரும் இந்து மத தெய்வத்தின் பெயரை சொல்லி எந்த பணமும்
வசூலிப்பதில்லை.
இந்து மத சாமிக்கு எதற்கு இத்தனை
சொத்து, பணம், நகை என்ற கேள்வியை கேட்கும் முன் கீழ்கண்டவற்றை தெரிந்து
கொள்ளுங்கள்.
நீங்கள் மத மாற்றம் செய்யபட்டு
விட்டால் உங்களுக்கும் இந்த கதி தான். அனேகமாக
வெளி நாட்டில் வேலை செய்யும் இந்து மதத்தினரும் அந்த மதத்திற்காக பிடித்தம்
செய்யபடும் என்று நினைக்கிறேன். கீழ்கண்டவை முதல் மேற்கண்டவரை உண்மையா, பொய்யா என
தெரியவில்லை.
ஒரு மதத்தில் நீங்கள் கஷ்டபட்டு இரவு
பகல் பாராமல் உழைத்து சம்பாதித்த பணத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிதத்தினை
மதத்திற்காக பிடித்தம் என்று உங்களை கேட்காமலேயே பிடித்தம் செய்தே கொடுப்பார்கள். வங்கியில், வெளியே பலரிடம்
கடன் வாங்கி அதற்கு வட்டி கட்டி கஷ்டபட்டு தொழில் செய்து சம்பாதித்த பணத்தில் ஒரு
பகுதியை மதத்திற்காக கட்டாயம் கொடுக்க வேண்டுமாம்.
நம் நாட்டிற்கான GST-யையே பலர்
எதிர்க்கிறார்கள். இது அநியாயம் என்றும்
கூறுகிறார்கள். இது நியாயமா? அநியாயமா? உங்கள்
மனதிற்கே விட்டுவிடுகிறேன்.
"அதோடு மதத்திற்கான பிடித்தம் ஆண்டிற்கு ஒரு நாட்டில்
எவ்வளவு தொகை வரும் என்பதையும் கணக்கிட்டு பாருங்கள். நம் சாமி போல பெரிய அலங்காரம் இல்லை. நிறைய விசேஷங்களும் இல்லை.
அந்த பணம் எல்லாம் எங்கு தான் போகிறது?
யார் எதற்கு செலவிடுகிறார்கள்? இதனை
அந்நாட்டின் அரசு கையகபடுத்தினால் அந்நாட்டின் பொருளாதாரம் எப்படி இருக்கும்?" நம் இந்து மதம்
எப்படி? HOW IS IT?
இதில் உதாரணங்களுக்காக மற்றும் பலரின்
கேள்விகளுக்காக ஒரு சில மதங்களை குறிப்பிட்டு கூற வேண்டி இருப்பதால் மட்டுமே இதில்
கூறபட்டுள்ளது. மற்றபடி எந்த மதத்தையும்
தனிபட்ட முறையில் கூற எழுதியது அல்ல. அதோடு
இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.
என்ன ஒரு நடுநிலை தன்மை என்கிறீர்களா? இதே போல் மற்ற மதக்காரர்கள் இருக்கிறார்களா? இருப்பார்களா?
அவர்கள் மதத்தில் இருப்பதை தானே கூறினோம்.
இதில் தவறொன்றுமில்லையே என்று தான் கூறுவார்கள். உடனே கருத்து சுதந்திரத்தை பற்றி பேசுவார்கள். அதோடு எங்கள் மதத்தை அவர்கள் இழிவாக பேசும்
போது நாம் பேசினால் என்ன தவறு என்பார்கள்.
சரி விடுங்கள். ஒன்றை மறந்துவிட்டேன். என்ன என்று கேட்கிறீர்களா? நம் பிறந்த நாளை பற்றி தான்.
அதாவது நம் பிறந்த நாளில் நம்பரை வைத்து
கொண்டாடும் பழக்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன் இல்லை போலும். அதோடு நாம் அர்ச்சனை செய்யும் போது
நட்சத்திரத்தை கூறி தான் அர்ச்சனை செய்கிறோம்.
நம்பரை கூறி அர்ச்சனை செய்யபடுவதில்லை.
அதோடு வைஷ்ணவ மதத்தின் கடவுள்களான கிருஷ்ணர், ராமர் பிறந்த நாள் திதியில்
கொண்டாடுகின்றனர். அதாவது அஷ்டமி, நவமி
திதிகள். சைவ மதத்தின் கடவுள்களை பொறுத்தவரை திருவாதிரை, கிருத்திகை
நட்சத்திரங்களில் கொண்டாடுகின்றனர். நாம் இறந்தாலும் இறந்த தேதியை வைத்து நினைவு
நாள், தெவிஷம், கொடுப்பதில்லை. மாறாக
திதியிலும் ஒரு சிலர் நட்சத்திரத்திலும் மட்டுமே அதை செய்கின்றனர். நம் திருமணத்திற்கு ஜாதகம் பார்த்தாலும் நம்
பிறந்த தேதியை வைத்து இல்லாமல் நாம் பிறந்த நட்சத்திரத்தை வைத்து தான் ஜாதகம்
பார்க்கபடுகிறது. அப்படியென்றால் நாம் பிறந்த நட்சத்திரம் நம் இந்து மதத்தில்
முக்கியமானதாக கருதபடுகிறது என்பது தெளிவாக தெரிகிறது.
இதில் இருந்து தெளிவாக தெரிவது நாம்
நம்பரை வைத்து நம்முடைய பலவற்றை செய்யவில்லை என்பதே அது. அதனால் வேண்டுமென்றால் நட்சத்திரத்தில் ஒரு
முறை, நம்பரில் ஒருமுறை என்று இரண்டு முறை பிறந்த நாள் கொண்டாடலாம். அதோடு இது
நம்முடைய பிறந்த நாள் கொண்டாட்டம் தானே. இதில் ஏதாவது தவறாகிவிடுமா என்ன?
அடுத்ததாக கோயிலில் உள்ள சிற்பங்களை
பற்றி சிலர் "பலான பலான" தாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். அது புரியாத புதிர் ஆகவே இன்றளவும் இருக்கிறது. ஏன்? எதற்காக? என்று தெரியவில்லை.
கோயிலில் உள்ள சிற்பங்களை ரசிப்பவர்கள்
மட்டுமே அதை காண்பார்கள். அது பெரிதாக கவனிக்க
படாத ஒன்று. ஆனால் ஒரு சில மதத்தில் தன்
மத நூல் என்று கூறி கொள்ளும் அவற்றினை அவரவர் மொழியில் மொழி பெயர்ப்பு செய்து
படித்தீர்களே ஆனால் மேற்கண்ட ஒன்று பெரிதாக தெரியாது. அந்த அளவுக்கு மோசமாக இருக்கும். பலர் Whatsup Messenger-களில் படித்திருப்பீர்கள்.
இந்து மதத்தை ஒரு மதமே இல்லையென்று
சிலர் கூவுகிறார்கள். இதற்கு ஆங்கிலேயன்
தான் பெயர் வைத்தான் என்றும் கூறுகிறார்கள். இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்
என்று கூறுகிறார்கள்.
முதலில் "இந்து" என்ற
பெயரே இந்தியா, இந்துஸ்தானம் என்ற பெயரில் இருந்து தான் வந்தது. உலகம் முழுக்க பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்து
மதம் பரவியிருந்த ஆதாரம் கோயில்களாக, லிங்கங்களாக இருந்தாலும் தற்போதைக்கு இந்தியாவில்
மட்டுமே இருப்பதால் அந்த பெயரையே வைத்து விட்டார்கள். அதோடு
ஆங்கிலத்தில் "காலனி"
என்ற வார்த்தை பெரிதாக பயன்படும்
வார்த்தையாகும். தமிழில் காலனி என்றால் "செருப்பு" என்று அர்த்தம். அதற்காக நாம் "செருப்பு டா" என்று கூறியிருக்கிறோமா? அதே போல் "Boot" என்கிற வார்த்தையும்
Boots காலால் என்னை உதைத்து விட்டான் என்பார்கள்.
மேற்கண்ட அனைத்தையும் ஆராய்ந்து
அதனுடைய உண்மை தன்மையை புரிந்து கொள்ளுங்கள். உண்மை என்றால் ஏற்று கொள்ளுங்கள், விழித்து கொள்ளுங்கள். இல்லையென்றால்
விட்டுவிடுங்கள். இதற்காக மட்டுமே இக்கட்டுரை. அதற்காக மட்டுமே பலவற்றை
கூறியிருக்கிறேன்.
விருப்பமுடன் வா! கோயிலில் இருப்பிடம் தருகிறேன்! விருப்பமுடன் என்னை வணங்கு! தியானத்தை தருகிறேன்! விருப்பமுடன் என்னை தியானம் செய்! சக்தியை மன அமைதியை தருகிறேன்! விருப்பமுடன் அனைவரையும் நேசி! அனைத்தையும் தருகிறேன் என்கிறது நம் இந்து மதம்!
அனைத்தையும் புகுத்தினாலும் நம் முன்னோர் வகுத்ததையே பலரும்
பின்பற்றுகின்றனர். இடை சொருகல் பல
இருந்தாலும் சொருகியது சொருகியபடியே இருக்கிறதே தவிர அது பெரிதாக வேர் ஊன்றவில்லை
அது தான் இந்து மதம்.
தொண்மையான மதத்தில் தொன்று தொட்டு படிக்காத எந்த பட்டம் பெறாத தொன்மைவாதிகளான அறிஞர்கள், மாமேதைகள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ரிஷிகள், முனிவர்கள், புலவர்கள் செதுக்கி கட்டியமைத்த மதம் "நம் இந்து மதம்". ஏகாந்தம் ஆக எந்த ஏமாற்றமும் இல்லாமல்! நல்ல சித்தாந்தம் ஆக அமைதியுடன் பேணி வாழ! எந்த ஏளனமும் இல்லாமல்! மேள தாளத்துடன் குதூகலமாக வாழ! உருவாக்கபட்ட கெட்டி மதம் இந்து மதம். கெட்டிகாரர்களின் மதமும் கூட. இந்து ஆன்மீகம், தத்துவம் என்பது நம் பெரியவர்கள் நாம் பின்னோக்கி செல்லாமல் முன்னோக்கி அழைத்து செல்ல அரும்பாடுபட்டு வாய் வழியாக வேதமாக, தெய்வ வாக்காக கூறியவைகளே நம் மதம். மர்மமான ரகசியங்களை எல்லாவற்றையும் மிச்சம்மில்லாமல், மீந்து போகாமல் கண்டறிந்து தெளிய உனக்கு மச்சம், யோகம், அதிஷ்டம், கடவுளின் அனுக்கிரகம், கொடுப்பனை, ஜாதகத்தில் எந்தவித பாதகம்மில்லாமல் சாதக நிலையில் உச்சத்தில் இருக்கும் தருணம் வேண்டும் என்பதை புறம் தள்ளி நித்திரையில்லாமல் கூட, தியாகம் செய்தும் கூட, யாத்திரை செல்வது போல் சென்று கடைகோடி சாமானியன் எட்டி பிடிக்கும் தூரம் தான் என்பது போல் வீரியமாக தயிரியமாக அங்குலம் அங்குலமாய் வெட்ட வெளிச்சமாக்கியவர்கள் பலர் வாழ்ந்து, ஜீவசமாதியாகி, மாய ஏழு திரைகளை விளக்கி ஜோதி ஸ்வரூபமாகி, மறைந்தும் நம் கூடவே வாழ்ந்து வருகின்றனர் ஏராளமானவர்கள். ஒரு பானை (குதிரைவாலி, திணையரிசி, பச்சையரிசி, புழுங்கல் அரிசி) சாப்பாடு சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் உதாரணதிற்கு கூறவேண்டுமென்றால் திருமூலர், வள்ளலார், லேக்ராஜ் [ஆத்மாவை பற்றி மட்டும் அதிகபட்சமாக ஆழமாக உடைத்து கூறியவர்]. இன்னும் பட்டியல் நீளமாய் நீண்டுகொண்டே செல்கிறது. பாம்பு பஞ்சாங்கம் முதல் உண்மையான வாஸ்து சாஸ்த்திரம், ஜாதக ஜோதிடம், நாடி ஜோதிடம் வரை அனைத்தையும் துல்லியமாக நாடி பிடித்து வேதமாய் கூறு போட்டு கூவியது நமக்காக மட்டுமே. யாரிடமும் வீதி வீதியாய் அலைந்து யாசகம் பெறாமல் யாக்கையோடு ஒரு யாகம் போல் நடத்தி கூறியது நாம் வெற்றி வாகை சூடி மகிழ்ந்திட மட்டுமே. இவர்கள் தூக்கம்மில்லாமல் மெதுவாக ஆராய்ச்சி செய்தது நம் ஆராவை நாம் தெரிந்துகொள்ளத்தான் மேம்படதான். நம்மை ஆன்மிகம் மூலமாக நம்முடைய அனைத்தையும் பெரிதான இம்சையில்லாமல், எதிலும் சறுக்கி வழுக்கி விழாமல் அதோடு குண்டு குழி பள்ளத்தில் இருந்து குரு மேடு என்பதற்கு கொண்டு வந்து மேட்டுக்குடியாக்க தான். இடுப்பில் கட்டும் அருனாகயிரில் ஆரம்பித்து குபேரயந்திரம், கையில் கட்டும் கயிறு, விரலில் போடும் மோதிரம், கழுத்தில் கட்டும் தாலி கயிறு, செயின், கருங்காலி, ருத்திராட்சம், ஸ்படிக மாலை, காலில் அணியும் மெட்டி, கொலுசு தாயத்து வரை ஆஹா அற்புதம் என்று நம் வாழ்க்கையை தான்றோனித்தனமாக எதுவும் பாழ் ஆகாமல் ஆரோக்கியமான கூழ் போலாக்கி குதூகலமாக சிறப்பாக சான்றோன் போல தலை முறை தலை முறையாய் கூழாங்கல்லாய் குளு குளுவென்று, சிலு சிலுவென்று வாழ்ந்து மறையத்தான். நம்முடைய பிறப்பிற்கான தோற்றம் நல்ல தட்பவெப்ப நிலையுடன் மிதமாக திடமான களிமண்ணாய் தோன்றிவிட்டது. அதில் சிறிது நல்ல மாற்றம் செய்தால் ஏற்றமான நிகழ்வு உறுதியானது. நம் மதம் நம்மை ஏற்றிவிடும் ஏணி ! அதோடு மகத்தான கேணியும் கூட!. This is Real Magic and Beautiful Traditional Religion and also Royal Religion Hindu Religion.
மாயம் உண்டு! எந்த காயம் இல்லை! சக்தி உண்டு! முக்தி உண்டு!
ஏமாற்றம் இல்லை!
தொன்மை வாய்ந்த மேற்கண்டவர்கள் இந்த மத
தெய்வத்தை வணங்கி ஞானம் பெற்று தொன்மை காலத்தில் கூறியவற்றை தற்போது ஆராய்ச்சி
செய்து தொன்மைவாதிகள் கூறியது சரியே என்று கூறுகின்றனர். ஏழாம் அறிவு திரைபடம்.
அன்றைய காலத்திலேயே மலையின் மீது
கோவில்கள் அதிகாக கட்டி உள்ள மதம் நம் இந்து மதம். அதையும் வியப்பாக பார்க்கிறார்கள்.
ஒன்புது கோள் என்பதை அன்றே கூறியதையும்
வியப்பாக பார்க்கிறார்கள்.
இயற்கையை அழிக்காமல் இயற்கை வளங்களை
காக்கும் இயற்கை மருத்துவம் சித்த மருத்துவம் என்ற பெயரில் அன்றே நாம் மருத்துவம்
செய்து குணப்படுத்தியதையும் வியப்பாக பார்க்கிறார்கள்.
வியப்பில் ஆழ்த்தி வியப்பிலேயே
வைத்திருக்கும் மதம் நம் இந்து மதம்.
இந்து மதத்திற்கும், இந்து மத
கடவுளுக்கும் என்னுடைய கோடானுகோடி நன்றிகள். இன்று நான் பிறந்த கிழமையில் இதை அனுப்புவதில் மகிழ்ச்சியே.
நவ ரத்தினங்கள் ஒன்றினைந்து வானவில் போன்று ஜொலிக்கும் "வையகத்தின் திருவாளர் இந்த இந்து மதம்" இந்து மத கலாச்சாரம்! ஏதுமில்லை அபச்சாரம்! இந்து மதத்தின் பண்பாடு! நம் முன்னோர்களின் பெரும்பாடு!★ Valavanur V.ரா.SaravanaLingam Chettiyar
ஏகாந்தம் உண்டு ஏமாற்றம் இல்லை! பத்தியம் போன்ற
விரதம் உண்டு! ஏகாதிபத்தியம் இல்லை! கல் போன்ற மனதை கரைக்கும் உபாயம் உண்டு! அபாயம் இல்லை! நியமம் உண்டு! யாரையும் நிந்திப்பதில்லை!
★
ஆண்டவன் உண்டு! அவரை யாரும் ஆண்டதில்லை! பல மாய வித்தைகள்
உண்டு! யாரும் காயபட்டதில்லை! முடியாது என்று உண்டு ! இங்கு விடியாதது
என்று இல்லை! ஆழ்கடலில் கட்டுமரம் சாயும்! கப்பல் கதி கலங்கும்! விழி பிதுங்கும்! இது என்றுமே சாயாது! யாரையும் சாராது! அணையா கலங்கரை விளக்கு என்றுமே கலங்காது! இங்கு தெய்வம் தெய்வீகம்! இந்த மண்ணில் இது
இருப்பதோ பல பூர்வீகம்!
★★
இந்த தெய்வம் என்றும் தேய்ந்ததில்லை! யாரையும் ஏய்த்ததில்லை! இதை வணங்கி பூரித்த
கண்கள் உண்டு! நெகிழ்ந்த நெஞ்சமுன்டு! சிலாகித்த அனுபவம்
உண்டு! எதையும் இழந்து வாடி வதங்கிய இதயமில்லை!
★★★
இதில் எந்த வஞ்சமும் நஞ்ஞாய் கொடியதாய் இல்லை! மத யானை போல் பிளிறும்! ஆனால் என்றுமே ஒளிறும்! இம்மதத்திற்கு என்றுமே
மதம்(யானை)பிடித்ததில்லை! பிடிப்பதில்லை! வையகத்தில் பல மதம்! நவ ரத்தினங்கள்
பல வண்ணங்களில் ஒன்றிணைந்து ஜொலிப்பது என் வானவில் இந்து மதம்! வானவில் சில கணங்களில்
மறையும்! என் இந்து மதம் வானம் உள்ள வரை மறையாது! என்றுமே உறையாது!
★★★★
மிடுக்காய் இருக்கும்! ஆனால் நம் மனதிற்கு கடுக்காய் கொடுக்காது!
கருடன் போல மனதை வட்டமிடும்! அனைவரின் மனதையும்
கொள்ளையிடும் மதம் என் இந்து மதம்! திருடன் போல எதிராளி நோட்டமிட்டாலும் அவனையும் ஈர்க்கும் மதம் என் இந்து
மதம்! பஞ்ச பூதமும் வாழ்த்தும் மதம் என் இந்து மதம்! நவ கிரகங்களும்
வாழும் மதம் என் இந்து மதம்! சித்தர்கள் சித்தமாய் இருப்பது என் இந்து
மதம்!
★★★★★
ஆயுதங்களுடன் இருக்கும் தெய்வங்கள் நிறைந்தது என் இந்து மதம்! ருத்திரனும் இங்கே! சித்தனும் இங்கே! கால பைரவனும் இங்கே! ஆயுதமும் இங்கே! அகிசிம்சையும் இங்கே! அமைதியும் இங்கே! தியானமும் இங்கே! சித்த வைத்தியமும் இங்கே! நாயன்மார்கள் இங்கே! ஆழ்வார்கள் இங்கே! ஜூவ சமாதி அடைந்தவர்கள் இங்கே! அதிசிய தக்க கோயில்கள் இங்கே! கெட்டவர்களை அழிக்க ஆயுதம் ஏந்தி பக்தனை வாழ வைக்கும் மதம் என் இந்து மதம்! மொத்தத்தில் இந்த மதம் இந்தியாவின் இந்து மதம் அல்ல! வையகத்தின் திருவாளர் இந்த இந்து மதம்!இந்து மத கலாச்சாரம் ! ஏதுமில்லை அபச்சாரம்! இந்து மதத்தின் பண்பாடு! நம் முன்னோர்களின் பெரும்பாடு!இம்மதம் போன்று வேறு மதம் எங்கே!
★★★★★★