ஆயுதம் [Red Alert Post]

 




போர் ஆயுதம் நாட்டை துவண்டு போகாமல் பாதுகாக்கும் பேராயுதம்! வேலாயுதம்! ஆயுதம் நாட்டை நிர்மூலம் ஆக்குவதிலும் பேராயுதம்! ஆயுதம் மக்கள் உயிரோடு நிம்மதியாக வாழ தான்! ஆயுதத்தின் ஆயுள் நாம் உயிரோடு வாழும் வரை மட்டுமே! ஆயுதத்தின் பெருமை நம் உயிரை காக்கும் வரை!

அனுபவம் உள்ளவன் ஆயுதம் ஏந்த துடிக்கமாட்டான்! அப்படி மீறி ஏதோ காரணத்திற்காக ஆயுதம் ஏந்தினாலும் தொடர மாட்டான்!  ஏனென்றால் 

பல பேர் மடிவார்கள்! ஆயுதத்தை கட்டி ஆர தழுவ விரும்புபவன் பலவற்றை கை நழுவி போக செய்பவன் ஆவான்!

 போரை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பவனே சிறந்த அரசன்! திசை மாறி போன கப்பல் நாடு திரும்பாது! திசை மாறி போன அரசன் பலரால் வசை பாடும் வரலாற்று பிழை ஆவான்!

ராணுவ போராளி வர்க்கத்தை சரியானவற்றிற்கு சரியாக வழிநடத்தும் அதிபர்! என்றும் தேசத்சை சரிவர பாதுகாக்கும் நாட்டின் கூட்டாளி அதிபர்!  அதே சமயம் போரின் தன்மையை சுதாரித்து கொடுக்கும் சமாதான ரோஜா பூச்சண்டு! நாட்டு மக்கள் பிணம் ஆகாமல் காக்கும் அடிநாத தண்டு![வந்துட்டான்யா வந்துட்டான் நாட்டின் மீது விஸ்வாசத்த்துடன் விஸ்வ்வரூபம் கொண்டு என்று இதயம் கனிந்து நேசமுடன், பாசமுடன் மற்றும் பலர் வெந்து நொந்து போகாமல் பேணி காக்க விந்தையில்லாமல் எழுதும் இந்திய குடிமகனின் சைரன் இல்லா "சிவப்பு எச்சரிக்கை குறுஞ்செய்தி அறிவுரை அல் அட்வைஸ் அல் கருத்து"ஜெய்ஹிந்த்.[ India Citizen-ன் "Ambulance Red Alert Post" but It is Green Alert Weapon Post" For Save All Country and All Country Peoples. Useful Turning Point Important High Table Command Is Very Demand Command.]★புரட்சி கவிஞர் வளவனூர் ரா.C.சரவணலிங்கம்செட்டியார் B.A.,B.E.,D.M.E.,


இது ஏற்கனவே ஒரு M.S.FILE ARTICLE ஆக உங்களை வந்தடைந்த ஒன்றாகும்.  நியாபகம் வருகிறதா.  அதே! அதே தான்.

இது எந்தவொரு தனி நபரையோ, நாட்டையோ, அமைப்பையோ குறிப்பிட கூறியது அல்ல. அதோடு இந்த கட்டுரையை ஒரு இந்தியனாக, தமிழனாக எழுதுவதில் பெருமை கொள்கிறேன். இக்கட்டுரை உலக அளவில் பலவற்றை கவனத்தில் எடுத்து கொண்டு பலரை காப்பாற்றுவதற்காக மட்டுமே எழுதபட்டுள்ளது. மற்றபடி வேறு எந்த நோக்கத்திற்காகவோ, யாரையும் தனிபட்ட முறையில் குறிப்பிடவோ எழுதபட்டது அல்ல.  அதோடு உலக நாடுகளுக்கும் இந்தியர்களுக்கும், தமிழனுக்கும் உலக அளவில் தொடர்பு உண்டு என்பது குறிப்பிடதக்கது.

போர் ஆயுதம் விஸ்வ்வரூபம் கொண்டு நாட்டை காக்கும் பேராயுதம் அதே சமயம் ஒரு வேலை தவறான முடிவாக அது அமைந்தால் அதுவே பேராபத்தாக அமைந்துவிடும். எதிராளியின் கையிலும் நம்மை போலவே பேராயுதங்கள் இருக்கிறது என்பதை போர் செய்யும் போது விஸ்வாசத்துடன் கண்டிப்பாக கவனத்தில்  கொள்ள வேண்டும் அதோடு என்றும் நினைவிலேயே இருக்க வேண்டும். அது தான் நாட்டு மக்களையும், தாய் நாட்டிற்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் ராணுவ வீரர்களையும் காக்கும்.  அவர்களை காக்க வேண்டிய பொறுப்பு அதிபர் முதல்  மக்களுக்காக மக்கள் பணி  செய்யும் கடைமட்ட ஊழியர்கள் வரை தலையாய கடமையாகும் என்பது குறிப்பிடதக்கது.


கொரோனா வைரஸ் எனும் கொடியவனால் நாடே சில வருடங்களாக அள்ளாடி
, தள்ளாடி கொண்டிருக்கிறது. பொருளாதாரம் என்பதன் "பொருள்" என்பது பொருளற்றதாக ஆனது போல் ஆகி விழி பிதுங்கி நிற்கிறோம்.  இதையும் கவனத்தில் கொண்டு செயல்படுவது சாலச்சிறந்தது.

ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் போல ஒன்றாக இருந்தவர்கள் தான் இருபக்கமும் ஆயுதம் ஏந்தி இரத்தம் சிந்தி கொண்டிருக்கிறது. அதனை எந்த அளவிற்கு பேச்சு வார்த்தை மூலமாக சுமூகமாக முடித்து கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு முடித்து கொண்டால் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு அந்த அளவிற்கு ஆரோக்கியமானது. அதோடு அதை உங்களுக்குள்ளேயே கட்டாயம் முடித்து கொள்ள வேண்டும்.

நேட்டோ அமைப்பு சார்ந்த நாடுகள் முதல் ரஷ்ய அதிபர் வரை இது மூன்றாம் உலக போருக்கு வித்திடுவது என்பது போல் ஆகாமல் இருக்க முனைப்புடன், மிக கவனமாக செயல்பட வேண்டும்.  சின்ன தீப்பொறி தான் கொஞ்சம் கொஞ்சமாக அதே சமயம் அதி தீவிரமாக காட்டு தீயாக மாறி காட்டையே அழிக்கிறது என்பதை மறவாதீர்கள். எந்த போரையும் வித்திட்டவர்கள் எக்காலத்திலும் நன்றாக வாழ்ந்தது கிடையாது.  அது அலெக்ஸாண்டர் முதல் ஹிட்லர் வரை. அனைத்து நாடுகளிடமும் அதிபயங்கர ஆயுதங்களும், பீரங்கி டாங்கிகளும், வெடிகுண்டுகளும், துப்பாக்கிகளும், அதிநவீன தொழில்நுட்ப வானூர்திகள் மற்றும் தேச பற்று மிக்க வீரர்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. பெரிய நாசம் என்பதை அனைவருமே தவிர்க்கவே இயலாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மிகச்சிறந்த அனுபவம் உள்ளவர்களே பல நாடுகளில் அதிபர்களாக இருப்பதால் இதனுடைய வீரியம் கண்டிப்பாக புரியும். அதுவும் ரஷ்ய அதிபருக்கு நன்றாகவே புரியும்.  அதோடு ரஷ்ய மக்கள் நமக்கான நம்பிக்கையாக அவரை முழுவதாக நம்புவதால் தான் தொடர்ச்சியாக அவரே அதிபராக இருக்கிறார். அதோடு அவருடைய உலக அளவிலான செயல்பாடு, நட்புறவு என்பது உலக அளவில் இன்றளவும் பெரிதாக குறைகள் சொல்ல கூடியவைகளாக இருந்ததில்லை என்பது குறிப்பிடதக்கது.

இவர் அனுபவம் உள்ளவர் என்பதற்கு மற்றொரு சான்று இந்திய மாணவர்களை பத்திரமாக, பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்து செல்ல உறுதி கொடுத்தது. ஒரு அதிபர் என்றால் அனைத்தையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதை புரிந்தவர் தான் திரு. விளாடினிர் புடின் அவர்கள்.

வரலாற்றில் வரலாற்று பிழை இந்த அதிபர் என்ற பெயரெடுக்காமல் இருக்க இந்த உக்ரைன் பிரச்சனையை கவனமாக, சிறப்பாக கையாண்டாலே போதுமானது ரஷ்ய அதிபருக்கு. எங்கள் இந்திய பாணியில் சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா- உக்ரைன் பிரச்சனை என்ற பெயரில் ஏழரை (7 1/2) உங்களை அண்டி உலக அளவில் கெட்ட பெயரை ஏற்படுத்த முயற்ச்சிக்கிறது. அதனை அப்படியே சமாளித்து  அதை அப்படியே ரஷ்யா- உக்ரைனோடு முடித்து சமாதான உடன்படிக்கையை மேற்கொண்டாலே போதுமானது.

இதனை உலக நாடுகளின் தலையீடு (ரஷ்யா-உக்ரைன் பிரச்சனை) என்ற பெயரில் மூன்றாம் உலக போர் என்பது போல் உக்கிரம் ஆகாமல் பார்த்து கொள்வது ஒவ்வொரு நாட்டினருடைய கடமையாகும்.  இதனுடைய வீரியத்தை ஐக்கிய நாடு சபை முதல் நேட்டோ படை மற்றும் நேட்டோ நாடுகளின் அமைப்பு வரை கருத்தில் கொண்டு செயல்படுவது உத்தமம்.  இதுவே மிக சிறந்த உத்தமம் ஆன காரியம் இந்த 2022 வருடத்தில்.


போர் ஆயுதம் நாட்டை துவண்டு போகாமல் பாதுகாக்கும் பேராயுதம்வேலாயுதம்ஆயுதம் நாட்டை நிர்மூலம் ஆக்குவதிலும் பேராயுதம்! ஆயுதம் மக்கள் உயிரோடு நிம்மதியாக வாழ தான்! ஆயுதத்தின் ஆயுள் நாம் உயிரோடு வாழும் வரை மட்டுமே! ஆயுதத்தின் பெருமை நம் உயிரை காக்கும் வரை!

அனுபவம் உள்ளவன் ஆயுதம் ஏந்த துடிக்கமாட்டான்! அப்படி மீறி ஏதோ காரணத்திற்காக ஆயுதம் ஏந்தினாலும் தொடர மாட்டான்!  ஏனென்றால் பல பேர் மடிவார்கள்! ஆயுதத்தை கட்டி ஆர தழுவ விரும்புபவன் பலவற்றை கை நழுவி போக செய்பவன் ஆவான்!

போரை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பவனே சிறந்த அரசன்! திசை மாறி போன கப்பல் நாடு திரும்பாது! திசை மாறி போன அரசன் பலரால் வசை பாடும் வரலாற்று பிழை ஆவான்!

ராணுவ போராளி வர்க்கத்தை சரியானவற்றிற்கு சரியாக வழிநடத்தும் அதிபர்! என்றும் தேசத்சை சரிவர பாதுகாக்கும் நாட்டின் கூட்டாளி அதிபர் ஆவார்! போரின் தன்மையை சுதாரித்து கொடுக்கும் சமாதான ரோஜா பூச்சண்டு! நாட்டு மக்கள் பிணம் ஆகாமல் காக்கும் அடிநாத தண்டு!

Weapon-Full Depend-ஆக நினைத்தவர்கள் அனைத்திலும் Victory என்று ரிப்பன் வெட்டியதில்லை.

அனைத்து நாடுகளுடனான நல்லுறவு நேசம்! நமக்கு என்றைக்கும் நடக்காது நாசம்! அந்நாட்டு மக்களுக்கு என்றும் இருக்கும் பாசம்! ஜெய்ஹிந்த்.

இதுவே வந்துட்டான்யா வந்துட்டான் என்று இதயம் கனிந்து நேசமுடன், பாசமுடன் மற்றும் பலர் நொந்து போகாமல் பேணி காக்க விந்தையில்லாமல் எழுதும் இந்திய குடிமகனின் சைரன் இல்லா "சிவப்பு எச்சரிக்கை குறுஞ்செய்தி அறிவுரை அல் அட்வைஸ் அல் கருத்து"[ India Citizen-ன் "Red Alert Post" but It is Green Alert Post" For Save All Country and All Country Peoples ஆகும்.  Useful Turning Point Important High Table Command Is Very Demand Command]

இது அனைத்தும் எனக்கு தோன்றிய கருத்து மற்றும் ஆலோசனைகளே.  மற்றபடி நீங்களே மேற்கண்டதை சிந்தித்து நல்லதொரு முடிவெடுக்கவும்.

இன்று மஹாசிவராத்திரி சிவனை துதிப்போம்! இறைவன் ஆசி பெறுவோம்! ஓம் நமச்சிவாய.

இது அனைத்தும் மெய்யா, பொய்யா என தெரியவில்லை.