தமிழனாய் அமைதியாய் வாழ்கிறோம் தமிழினமாய்.. இந்நிய நாட்டில் இந்தியனாய். சித்தர்களை வணங்கும் போற்றும் மற்றும் சிவனை வணங்கும் நாட்டில் அமைதியாக வாழ்கிறோம். இதற்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம். ஓம் நமச்சி வாய. "இந்திய நாட்டை மொத்தமாக குறை கூறாதீர்கள்". Don"t Any Religion Compliant in India. Because...★ Puratchi Kavighar Valavanur வை.ரா.Saravanalingam Chetiyar B.A.,B.E.,D.M.E.,
வைரா, வீரா, ராச என்று பல பெயர்களுடன்ஒரு பெயராய், ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய வாசகர்களே. என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.
முகமது அலி ஜின்னா என்ன சொல்லி பாகிஸ்தான் என்ற நாட்டை உருவாக்கினார்? முஸ்லீம் மக்களை ஒன்று திரட்டினார்? தற்பொழுது பாகிஸ்தானில் இருக்கும் முஸ்லீம்களின் நிலை என்ன? இதற்கு யார் காரணம்?
ஒரு சில ஊடகங்களை தவிர்த்து பல ஊடகங்களில் இதை மறைத்தாலும் உண்மை நிலவரம் என்னவோ அது அங்கு நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.
அதோடு அதை எத்தனை ஊடகங்கள் விவாதமாக்கியது
தலைப்பை Ind vs Pak முஸ்லீம்கள் என்றோ அல்லது யார் நிம்மதியாக வாழ்கிறார்கள் என்று எந்த தலைப்பிலாவது விவாதம் நடத்தினார்களா? ஒருமைப்பாட்டை நிலவ செய்ய முயற்சித்தார்களா?
இங்கு இருக்கும் முஸ்லீம்களை அவ்வளவு எளிதில் அவர்கள் மதத்தை வைத்து கட்டுபடுத்த முடியாது. ஏனென்றால் இது முஸ்லீம் நாடு இல்லை.
அதனால் முஸ்லீம்கள் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானை போல மதத்தின் பெயரால் பெரிதாக கட்டுபடுத்தபடாமல்
நிம்மதியாக வாழ்கின்றனர்.
சண்டை சச்சரவுகள் இல்லாத நாடுகளே இல்லை என்பது குறிப்பிடதக்கது. இங்கு ஒரு சில இடங்களில் ஏதாவது நடக்கலாம் அவ்வளவே. இந்திய நாட்டின் மக்கள் தொகை அதிகம் என்பது குறிப்பிட தக்கது.
இந்தியாவை குறை கூறும் முன் மற்ற முஸ்லீம் நாடுகளில் முஸ்லீம் மக்கள் நிலை என்ன? அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு இந்தியாவை குறை கூறுங்கள்.
ஷியா பிரிவிற்கும் மற்ற பிரிவுக்கும் மோதல் ஒரு முஸ்லீம் நாட்டில்.
பாகிஸ்தான் நிலமை நாடறிந்தது.
ஆப்கானிஸ்தானில்
அமெரிக்கா இருந்த வரை நிலமை வேறு. இப்போது மதம் ரீதியான முழு கட்டுபாட்டில் அந்நாடு இருக்கிறது.
இன்னொரு முஸ்லீம் நாட்டில் தெரியாமல மத கட்டுப்பாடான ஹிஜாப் அணியாததால் அவரை அடிக்க அது சீரியசாகி கலவரம் வெடித்தது.
துருக்கி , சிரியா போன்ற முஸ்லீம் நாடுகள் இயற்கை சீற்றமாகிய பூகம்பத்தில் சிக்கியது. ஒரு வேலை இந்திய முஸ்லீம்கள் அங்கிருந்திருந்தால்.
ரோஹிங்யா முஸ்லீம்களை அங்கிருப்பவர்களே
ஏற்று கொள்ளவில்லை. நம் நாடு ஏற்றது. நன்றி விஸ்வாசத்தோடு ரோஹிங்யா முஸ்லீம்கள் யாருக்கு இருக்க வேண்டும்?.
இந்தோனேசியா என்கிற முஸ்லீம் நாடு இந்து மதத்தை ஏற்று கொண்டு வினாயகரை அவர்கள் ரூபாய் நோட்டில் போட்டுள்ளனர்.
இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.
Search YouTube 6 வருடங்களில் இவ்வளவா? ஒரே மாதத்தில் கோடி கணக்கில் சேர்த்த பாகிஸ்தான் ராணுவ தளபதி.
தந்தி நியூஸ்.
Youtube லிங்கை அனுப்ப முடியாததால் Type செய்து அனுப்புகிறேன். பயன் அடையுங்கள். நன்றி.
HIJAB BAN ஹிஜாப் தடை செய்துள்ள உலக நாடுகள்:-
Source Of Links:-
https://www.bbc.com/tamil/global-60350528
சில நாடுகளில், பல ஆண்டுகளுக்கு முன்பே, பொது இடங்களில் முகத்தை
மூடுவது அல்லது நிகாப், புர்கா, பர்தா போன்ற முகத்தையும், உடலையும் மறைக்கும்
இஸ்லாமிய பெண்களுக்கான ஆடைகளை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. சில நாடுகளில், விதிகளை மீறுபவர்களுக்கு
கடுமையான அபராதம் விதிக்கும் முறையும் உள்ளது.
ஃபிரான்ஸ்:-
11 ஏப்ரல் 2011 அன்று, பொது இடங்களில் முகத்தை முழுவதுமாக மூடும் இஸ்லாமிய
முக்காடுகளான நிகாப்களைத் தடை செய்த முதல் ஐரோப்பிய நாடாக ஃபிரான்ஸ் ஆனது. இந்தக்
கட்டுப்பாட்டின் கீழ், எந்தப் பெண்ணும், பிரெஞ்சுக்காரராக இருந்தாலும் சரி, வெளிநாட்டவராக
இருந்தாலும் சரி, முகத்தை முழுவதுமாக மூடிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே
செல்ல முடியாது. விதியை மீறுவோருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
அப்போது ஃபிரான்ஸ்
அதிபராக இருந்தவர் நிக்கோலா சர்கோசி. தடையை விதித்த சர்கோசி நிர்வாகம், பர்தா பெண்களுக்கு
எதிரான அடக்குமுறை என்றும் ஃபிரான்ஸில் அது வரவேற்கப்படாது என்றும் கருதியது.
ஐந்து ஆண்டுகளுக்குப்
பிறகு, அதாவது 2016-ம் ஆண்டு ஃபிரான்ஸில் இன்னொரு சர்ச்சைக்குரிய சட்டம்
கொண்டுவரப்பட்டது. பெண்களின் முழு உடலையும் மறைக்கும் 'புர்கினி' (புர்கா + பிகினி)
என்னும் நீச்சலுடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், பின்னர் ஃபிரெஞ்சு உச்ச
நீதிமன்றம் இந்தச் சட்டத்தை ரத்து செய்தது.
பிரான்சில் சுமார் 50 லட்சம் முஸ்லிம்கள்
வாழ்கின்றனர். மேற்கு ஐரோப்பாவிலேயே இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது, ஆனால் 2,000 முஸ்லிம் பெண்கள்
மட்டுமே உடலை முழுவதுமாக மறைக்கும் பர்தா அணிகின்றனர் என்று கருதப்படுகிறது.
அவ்வாறு செய்வதற்கு 150 யூரோக்கள் அபராதம்
விதிக்கப்பட்டது. ஒரு பெண்ணை முகத்தை மறைக்க யாராவது வற்புறுத்தினால், அவருக்கு 30 ஆயிரம் யூரோக்கள்
அபராதம் விதிக்கப்படுகிறது.
பெல்ஜியம்:_
உலகளவில் ஹிஜாப் குறித்த
சர்ச்சைகளும் தடை செய்யப்பட்டுள்ள நாடுகளும்
பெல்ஜியத்திலும் 2011 ஜூலையில் முகம்
முழுவதையும் மூடுவது தடை செய்யப்பட்டது. இந்தப் புதிய சட்டம் பொது இடங்களில்
அணிந்திருப்பவரின் அடையாளத்தை வெளிப்படுத்தாத எந்த ஆடையையும் தடை செய்தது.
டிசம்பர் 2012 இல், பெல்ஜிய நீதிமன்றம், இச்சட்டம், மனித உரிமைகளை மீறவில்லை
என்று கூறி இந்தத் தடையை ரத்து செய்யக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தது.
பெல்ஜியம் நாட்டின்
இந்தச் சட்டத்தை 2017ஆம் ஆண்டில் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றமும்
உறுதி செய்தது.
நெதர்லாந்து:-
நவம்பர் 2016இல், நெதர்லாந்தில் பள்ளிகள்
மற்றும் மருத்துவமனைகள் போன்ற பொது இடங்களிலும்,
பொதுப் போக்குவரத்தைப்
பயன்படுத்தும்போதும் முகத்தை முழுவதுமாக மூடும் இஸ்லாமிய முக்காடுகளைத் தடை
செய்வதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தனர்.
ஹிஜாப் சர்ச்சை:
வன்முறையால் கல்லூரிகள் முடக்கம் - முஸ்லிம் பெண்களுக்கு மலாலா ஆதரவு
எனினும், இந்தத் தடை சட்டமாக மாற
நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட வேண்டியிருந்தது. இறுதியாக ஜூன் 2018இல் முகத்தை மூடுவதை
நெதர்லாந்து தடை செய்தது.
இத்தாலி:-
இத்தாலியின் சில
நகரங்களில் முகத்தை மறைக்கும் இது போன்ற உடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதில் நோவாரா நகரமும் அடங்கும். இத்தாலியின் லோம்பார்டி பகுதியில், புர்கா மீதான தடை
டிசம்பர் 2015இல் ஒப்புக் கொள்ளப்பட்டு, ஜனவரி 2016 முதல் அமலுக்கு வந்தது.
இருப்பினும், இந்த விதி நாடு முழுவதும் பொருந்தாது.
உலகளவில் ஹிஜாப் குறித்த
சர்ச்சைகளும் தடை செய்யப்பட்டுள்ள நாடுகளும்
ஜெர்மனி:-
6 டிசம்பர் 2016 அன்று, அப்போதைய ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கெல், "நாட்டில்
எங்கெல்லாம் முகத்தை மூடும் ஆடைகள், சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்பட முடியுமோ அங்கெல்லாம்
தடை செய்யப்பட வேண்டும்" என்று கூறினார்.
ஜெர்மனியில் இதுவரை
அத்தகைய சட்டம் இல்லை என்றாலும், வாகனம் ஓட்டும்போது முகத்தை மறைப்பது சட்டவிரோதமானது.
ஜெர்மனியின்
நாடாளுமன்றத்தின் கீழ் சபை, நீதிபதிகள், வீரர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு மட்டும்
தடைக்கு ஒப்புதல் அளித்தது. இங்கு முகம் முழுவதையும் மறைக்கும் பெண்கள், தேவைப்படும் போது
முகத்தைக் காட்டுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரியா:-
அக்டோபர் 2017 இல், ஆஸ்திரியாவில் பள்ளிகள்
மற்றும் நீதிமன்றங்கள் போன்ற பொது இடங்களில் முகத்தை மூடுவது தடை செய்யப்பட்டது.
நார்வே:-
நார்வேயில், ஜூன் 2018 இல் இயற்றப்பட்ட சட்டம்
கல்வி நிறுவனங்களில் முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிவதைத் தடை செய்கிறது.
ஸ்பெயின்:-
ஸ்பெயினில் தேசிய அளவில்
தடைக்கான திட்டம் எதுவும் இல்லை என்றாலும்,
2010 இல் பார்சிலோனா நகரில்
உள்ள நகராட்சி அலுவலகங்கள், சந்தைகள் மற்றும் நூலகங்கள் போன்ற சில பொது இடங்களில்
முகத்தை முழுவதுமாக மூடும் இஸ்லாமிய முக்காடுகளைத் தடை செய்வதாக அறிவித்தது.
இருப்பினும், லிடா நகரில்
விதிக்கப்பட்ட தடை ஸ்பெயினின் உச்ச நீதிமன்றத்தால் பிப்ரவரி 2013இல் ரத்து செய்யப்பட்டது.
இது மத சுதந்திரத்தை மீறும் செயல் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
உலகளவில் ஹிஜாப் குறித்த
சர்ச்சைகளும் தடை செய்யப்பட்டுள்ள நாடுகளும்
பிரிட்டன்:-
பிரிட்டனில் இஸ்லாமிய
உடைக்கு எந்தத் தடையும் இல்லை, ஆனால் அங்குள்ள பள்ளிகள் தத்தம் சீருடைகளையும் ஆடை
விதிகளையும் வகுக்க அனுமதிக்கப்படுகின்றன. ஆகஸ்ட் 2016 இல் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 57 சதவீத பிரிட்டிஷ்
பொதுமக்கள் இங்கிலாந்தில் புர்காவைத் தடை செய்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஆப்ரிக்க நாடுகள்:-
2015ஆம் ஆண்டில், பர்தா அணிந்த பெண்கள் பல பெரிய தற்கொலை குண்டுத்
தாக்குதல்களை நடத்தினர். இதற்குப் பிறகு, சாட், கேமரூனின் வடக்குப் பகுதி, நைஜரின் சில பகுதிகள்
மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகளில் முழுவதுமாக முகத்தை மூடுவது தடை
செய்யப்பட்டது.
துருக்கி:-
துருக்கி 85 ஆண்டுகளுக்கும் மேலாக
அதிகாரப்பூர்வமாக மதச்சார்பற்ற நாடாக இருந்தது. துருக்கியின் நிறுவனர் முஸ்தபா
கெமால் அட்டதுர்க், இது பிற்போக்குவாதம் என்று கூறி ஹிஜாபை நிராகரித்தார்.
உத்தியோகபூர்வ கட்டடங்கள்
மற்றும் சில பொது இடங்களில் ஹிஜாப் தடை செய்யப்பட்டது, ஆனால் நாட்டின்
பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் இந்தப் பிரச்னையில் மாறுபட்ட கருத்துகளைக்
கொண்டுள்ளனர்.
பிரதம மந்திரி மற்றும்
ஜனாதிபதி பதவியில் இருப்பவர்களின் மனைவிகள் மற்றும் மகள்கள் உட்பட அனைத்து துருக்கிய
பெண்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தங்கள் தலையை மறைக்கும் ஆடைகளை அணிகிறார்கள்.
2008இல், துருக்கிய அரசியலமைப்பை திருத்தி, பல்கலைக்கழகங்களில்
கடுமையான கட்டுப்பாடுகளுக்கு சில தளர்வுகள் வழங்கப்பட்டன. பின்னர் தளர்வாக
கட்டப்பட்ட ஹிஜாப்புக்கு ஒப்புதல் கிடைத்தது. இருப்பினும், கழுத்து மற்றும் முழு
முகத்தை மறைக்கும் நிகாப் மீதான தடை தொடர்ந்தது.
உலகளவில் ஹிஜாப் குறித்த
சர்ச்சைகளும் தடை செய்யப்பட்டுள்ள நாடுகளும்
2013 இல், துருக்கி தேசிய நிறுவனங்களில் பெண்கள் ஹிஜாப்
அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெற்றது. இருப்பினும், நீதித்துறை, ராணுவம் மற்றும்
காவல்துறை போன்ற சேவைகளுக்கு இந்தக் கட்டுப்பாடு தொடர்ந்தது.
2016ஆம் ஆண்டு துருக்கியும் பெண் காவலர்கள் ஹிஜாப் அணிய
அனுமதித்தது.
டென்மார்க்:-
டென்மார்க் நாடாளுமன்றம்
2018 இல் முழுவதுமாக முகத்தை மூடுபவர்களுக்கு அபராதம்
விதிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. இந்தச் சட்டத்தின்படி, ஒருவர் இரண்டாவது
முறையாக இந்தத் தடையை மீறியதாகக் கண்டறியப்பட்டால்,
அவருக்கு முதல்முறையை விட 10 மடங்கு அபராதம் அல்லது
ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அதேசமயம் யாரேனும் ஒருவரை பர்தா
அணிய வற்புறுத்தினால் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை
விதிக்கப்படும்.
பத்து ஆண்டுகளுக்கு
முன்பு, நீதிமன்ற அறைகளில் நீதிபதிகள் தலையில் முக்காடு
மற்றும் சிலுவை, தொப்பி அல்லது தலைப்பாகை போன்ற பிற மத அல்லது அரசியல்
சின்னங்களை அணிவதைத் தடை செய்வதாக அரசாங்கம் அறிவித்தது.
ரஷ்யா:-
ரஷ்யாவின் ஸ்வட்ரோபோல்
பகுதியில் ஹிஜாப் அணிவது தடைசெய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இதுபோன்ற தடை
விதிக்கப்படுவது இதுவே முதல்முறை. ஜூலை 2013 இல், ரஷ்யாவின் உச்ச நீதிமன்றம் இந்த முடிவை உறுதி செய்தது.
உலகளவில் ஹிஜாப் குறித்த
சர்ச்சைகளும் தடை செய்யப்பட்டுள்ள நாடுகளும்
சுவிட்சர்லாந்து:-
2009ஆம் ஆண்டில், சுவிட்சர்லாந்தின் நீதித்துறை அமைச்சர் ஈவ்லின்
விட்மர், அதிகமான பெண்கள் நிகாப் அணிவதைக் கண்டால் தடை
விதிக்கப்பட வேண்டும் என்று கூறினார். செப்டம்பர் 2013 இல், சுவிட்சர்லாந்தின் டிசினோவில் 65 சதவீத மக்கள் பொது
இடங்களில் எந்த சமூகமும் முகத்தை மூடுவதைத் தடைசெய்வதறு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்தப் பகுதியில் இத்தாலிய மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.
சுவிட்சர்லாந்தின் 26 மாகாணங்களில் இதுபோன்ற
தடை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை.
சுவிட்சர்லாந்தின் 80 லட்சம் மக்கள் தொகையில்
சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் முஸ்லிம்கள்.
பல்கேரியா:-
அக்டோபர் 2016 இல், பல்கேரியாவின்
நாடாளுமன்றம் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட
வேண்டும் அல்லது அவர்களுக்குக் கிடைக்கும் வசதிகள் குறைக்கப்பட வேண்டும் என்ற
மசோதாவை நிறைவேற்றியது.