சிங்க ராஜா கவச சூத்திரம் [VEHICLE WANT PETROL]

 

விண்ணில் நட்சத்திரங்களாய் மின்ன வேண்டியவர்கள் ஜாமீன் வாங்கிய சிறை கைதி ஆகி உள்ளனர். முழு நிலவாய் வானத்தில் விரிவடைந்து இருக்க வேண்டியவர்கள் கார்மேகம் மறைத்தது போல், அமாவாசையில் கறுத்த இருள் சூழ்ந்தது போல் தள்ளாடுகின்றனர். சுறா மீன் கடல் தண்ணீரில் குட்டை மீன் ஆன கதை தான். மதி நுட்பத்துடன் மேலே வர வேண்டிய ஆட்கள் கண்ணீர் மல்க கந்த கோலமாய் குதி கால் பிடரி அடித்து தலை குப்புற விழுகின்றனர். இதனால் அரச மரம், மாமரம், வேப்ப மரம், ஆலமரம் போன்றவர்கள் முருங்கை மரமாய் சரிந்து விழுகிறோம்.  பல இடங்களில் அல்லல் பட்டு குண்டு கட்டாய் தூக்கி வீசபடுகிறோம்.  இதற்கு காரணம் அரவணைப்புடன் கூடிய அக்கறை காட்ட ஆள் கிடைக்காததே காரணம் ஆகும்.  இதனை சிறந்த ராகமாக வீணை இசை மீட்டுவது போல் மீட்டி தூண் ஆய் இருக்க வேண்டிய மல்யுத்த வீரர்கள் தூண்டிலில் சிக்கிய மீனாய் ஆகாமல் மீட்டெடுக்க இதோ கதம்பமாக, இனிய சுவையுடன் நேரத்தை கடத்தாமல் பட்டென்று "பட்டு" போல சத்தியமான வாக்கு ஆக " சிங்க ராஜா-வின் சுலபமான, கைராசியான சகல சம்பத்களை தரும் கவச சூத்திரம்". இது ஓர் மாபெரும் பாதுகாப்பு அரண்.  குளியல் அறையில் சூடு பறக்கும் வெண்ணீர் ஓர் பன்னீர் குளிர் பருவத்தில்.  [Vehicle Loudly Tell Iam In Serious Condition. so" I Want Petrol" கொடுப்பீங்களா கொடுத்துடுங்க "Secret Of Success People Energy"and also "LION SAFE GUARD FORMULA"★ புரட்சி கவிஞர் Valavanur வை.ரா.SivaSaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,







வைரா, வீரா, ராச என்று பல பெயர்களுடன் ஒரு பெயராய், ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் justicemayel.blogspot.com தளத்தில் ரிதம் F.M 605 108-ன் வாயிலாக அஸ்திவாரங்களாகிய வாசகர்களே.

கோவிந்தா கோவிந்தா

எதையும் நீட்டி முழக்காமல் வீணை இசையை ராகத்துடன் மீட்டுவது போல் மீட்டி தூண்டிலில் சிக்கிய மீன் குட்டையில் மாட்டும் குட்டி மீன் அல்ல அது சுறா ஆகும். சுறாக்கள் போட்டி போட்டு எவ்வளவு பெரிய ஆளையும் படகில் அல் Boat-ல் இருந்து கூட ஆளை கீழே தள்ளி போட்டி என்கிற குடலை கிழிக்கும் சக்தி கொண்டது.  அது போலவே பல சுறா போன்ற மனிதர்கள் அவர்களுக்கு தேவை வெறும் ஓர் சின்ன அரவணைப்புடன் கூடிய அக்கறை மட்டுமே ஆகும். அவர்களை சின்ன அளவில் கூட முறை படுத்தி வழி நடத்த ஆள் இல்லாததால் தான் ஓர் ஆலமரம் முருங்கை மரம் போல் கீழே சரிந்து விழுகிறார்கள்.  மேகத்தில் முழு பௌர்ணமி நிலவு விரிவடைந்தும்  மறைக்க பட்டது போல் இவர்களை சின்ன அளவிற்கு முறைபடுத்த கூட ஆள் இல்லாததால் அமாவாசை இரவில் கறுத்த கார் இருள் சூழ்ந்தது போல் ஆகி வழி தெரியாமல் தள்ளாடுகின்றனர். 

உடனே சாதிப்பது, லட்சியம் பற்றியெல்லாம் வினவ போவதில்லை.  சிறு சிறு விஷயங்களில் சிறு சிறு அக்கறையை பற்றி தான் கூற போகிறேன்.  இது பலரை மனது பிளவு அடைந்து துவளாமல் காக்கும் நல்ல மருந்து ஆகும்.  இந்த மருந்து கிடைத்து விட்டால் அதுவே அவர்களுக்கு மிக பெரிய கவசமாகிவிடும்.  பிறகு இவர்களை யாரோ குண்டு கட்டாய் தூக்கி வீசுவது போல் ஆகாமல் இவர்கள் "குண்டு மனிதனின் வலிமை" என்பது போல் மல்யுத்தம் வீரர் போல் ஆகி பலரை இவர்கள் தூக்கி வீசுவார்கள். இவர்கள் அல்லல் படுத்துவோர்களை "குச்சி" எடுத்து தாக்குவார்கள்.  பிறகு இவர்களிடம் யாரும் மல்லு கட்ட முடியாது.

யாரும் எதுவும் செய்ய வேண்டியதில்லை.  அப்ப அப்ப ஓர் அக்கறையை கொடுங்கள் போதும்.  இது ஓர் விலை மதிப்புள்ள பட்டு புடவை போன்றதாகும்.  எப்படி காட்டன் வேட்டியை கஞ்சி போட்டால் தான் நன்றாக இருக்குமோ அது போல் தான் வாழ்க்கையிலும் இம்மாதியான ஆட்கள் இருந்தால் தான் இனிமையாக வாழ்க்கையை கடத்தி செல்ல முடியும்.  இதனை பட்டென்று சத்தியமான "வாக்கு" என்பது போல் கூறிவிட்டேன்.

குளிர் பருவத்தில் குளியல் அறையில் சூடான வெண்ணீர் என்பது எவ்வளவு இதமாக நம் உடம்பிற்கு இருக்கும். அவ்வாறு இல்லாமல் பச்சை தண்ணீரில் குளித்தால் நம் உடம்பிற்கு காய்ச்சல் வருகிறது ஏன் தெரியுமா?  உடம்பு ஆனது என் மீது அக்கறை இல்லாமல் இருக்கிறாயா என்று துன்பபடுகிறது, கோபபடுகிறது. உடனே சிறிது காலத்திற்கு வேலை நிறுத்தம் செய்கிறது.  உடனே நாம் மருந்து எடுத்து கொண்டதும் நம் அக்கறையோடு தான் இருக்கிறார் என்று ஆனந்தபட்டு வேலை நிறுத்தத்தை திரும்ப பெற்று கொள்கிறது.  அதாவது அதற்கு சுடு தண்ணீர் என்பது பன்னீர் தெளிப்பது போல கருதுகிறது.  இந்த கருததை நாம் புரிந்து கொண்டால் நோயில்லா பெரு வாழ்வு நமக்கு நிச்சயம் என்பதில் மாற்றமில்லை.

புத்தி மதி சொல்ல ஆள் இல்லாததால் தகாத வன்முறையில் ஈடுபட்டு நம்மையே தேள் கொட்டி பாதித்தது போல் சிறை கைதி ஆகி சிறைவாசம் அடைந்தவர்கள்  இருக்கிறார்கள்.  புத்தி மதி சொல்லி கண்டிக்காமல் இருந்ததால் தான் பல இடங்களில் பல தகாத விஷயங்கள் நடக்கிறது. புத்தி மதி சொல்லியும் கேட்கவில்லையென்றால் விட்டுவிடுங்கள் பரவாயில்லை.  அந்த அக்கறையே போதும்.  அது கூட இல்லாமல் எனக்கு யாரும் அக்கறையெடுத்து இந்த அளவிற்கு விளக்கமாய் கூறியிருந்தால் நான் திருந்தி இருப்பேன் என்று கூறுபவர்கள் பலர் இருக்கின்றனர். அதாவது கிடைக்க வேண்டியவருக்கு கடைமட்ட அளவில் கூட கிடைக்கவில்லை.  பலருக்கு பல தகவல்கள் தெரியாமல் தெரிந்திருந்திருந்தால் இவ்வாறெல்லாம் எனக்கு நடந்திருக்காது என்று கூறி இருக்கின்றனர்.  தொழிலில் வெற்றி அடைந்த பலர் கூறுவது தன் குடும்பத்தையும், தோழர்களையும், சுற்றத்தாரையும் தான்.  அவர்கள் செய்தது வேறொன்றுமில்லை ஓர் அரவணைப்புடன் கூடிய அக்கறை வெற்றி அடைந்தவர் மீது செலுத்தியது மட்டுமே ஆகும்.

பலருக்கு பல மூலதனங்கள் இருந்தாலும் இந்த மூலதனம் இல்லாமல் வாழ்க்கையில் அல்லல்படுகின்றனர்.  அதாவது நாம் எவ்வளவு மதி நுட்பத்துடன் இருந்தாலும் நம்முடையதில் யாரும் எந்த அக்கறையும் கொண்டு பொறுப்பை எடுத்து கொள்ள ஆள் இல்லையென்றால் நாம் ஒரே விஷத்தில் ரங்கராட்டினம் போல் சுற்றி கொண்டே இருப்போம்.  அதோடு அது M Kumaran Son Of Mahalakshmi படம் போல் Take Divertion என்பது போல் ஆகி விடுவதால் பிற விஷயங்களில் சிந்திக்க நேரமில்லாமல் இவர்கள் மேலே வர முடியாமல் குதி கால் பிடரி அடித்து கண்ணீர் மல்க தலை குப்புற கீழே விழுகின்றனர்.  இவர்கள் விண்ணில் நட்சத்திரங்கள் மின்னுவது போல் அவர்கள் தொழிலில் மின்ன வேண்டியவர்கள் ஆவார்கள்.  இதில் பலர் தற்சமயத்திற்கு ஜாமீன் வாங்கியது போல் ஆள் கிடைத்து நிம்மதி பெரு மூச்சு விட்டவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.  அதனால் தான் பலர்  நீ போய்விட்டால் நான் என்ன செய்வேன் என்று தோழர்களிடம் கூறுகிறார்கள்.

சுலப தவணையில் பலருக்கு கிடைக்கிறது. பலருக்கு அது கிடைக்க மறுக்கிறது. "தவளை" கூட ஒழுங்காக வாங்க தெரியாமல் வாங்கி அது சிறிது காலத்திலேயே பழுது அடைந்தது போல் ஆகி அதில் தவளை உயிரினம் வாழ்கிறது என்று ஆன கதையெல்லாம் உள்ளது. 

தவத்தில் கூட சில எளிதான முறைகளில் இறைவனை அடைய முடியும்.  ஆனால் அதற்கான "ரூட்" தெரியவில்லை.  இதை மட்டும் எனக்கு சொன்னால் போதும். சுற்றி சுற்றி திரிந்தாலும் தலைவாசல் எங்கடா என்கிற வடிவேல் "தமாஷ்" செய்தது போல் இருக்கிறது என் நிலமை.  எவ்வளவு பயனுள்ள கட்டுரைகளை அனுப்புகிறேன் இதை கூட கூறமாட்டீர்களா என்ன? ஏனென்றால் எனக்கு விட்டலாச்சாரியார் படங்களில் வரும் அத்தனையையும் செய்ய வேண்டும் என்று ஆசை.  அவ்வளவு இல்லையென்றாலும் குறைந்தபட்சம் ஒரு குட்டலாச்சாரியார் போல குட்டி குட்டி மந்திர வித்தைகள் ஆவது செய்ய வேண்டும்.

சிங்கம் என்பது ஏன் காட்டிற்கு ராஜாவாக இருக்கிறது என்று தெரியுமா? காரணம் இது தான்.  அது மற்ற விலங்குகளுக்கு இல்லாத தனிபட்ட குணத்தை பெற்றுள்ளது.  அதுவே அதனுடைய தனி சிறப்பாகும்.  அதாவது அது பசிக்காமல் எந்த விலங்கையும் வேட்டையாடி புசிக்காது.  இதனால் தான் அது காட்டுக்கே ராஜாவாக உள்ளது.  எந்த தனிபட்ட தகுதியும் இல்லாமல் யாரும் எதனையும் பெற்றுவிட முடியாது.  புலி தான் ராஜா-வாக இருந்திருக்க வேண்டும்.  ஏனென்றால் இதனிடம் மட்டுமே சாதுர்யமாக பதுங்கி பாயும் ஆற்றல் உள்ளது. ஆனால் அந்த தகுதி வேட்டையாடுவதில் ராஜா என்ற பெயரை தான் வாங்கி கொடுக்கும்.  இது போல் வாழ்க்கையில் குறைந்தபட்சம் நாம் நிம்மதியாக வாழ நமக்கு சிலது வேண்டும்.  அது தான் நம்மை சுற்றி அக்கறை கொண்ட மனிதர்கள் இருப்பது.  அது இல்லையென்றால் சாதாரண வாழ்க்கை கூட வாழ முடியாது.  அதாவது சுலபமான வாழ்க்கை பெரும் பாறை கல்லை தூக்கி சுமந்து கடந்து செல்வது போல் ஆகிவிடும்.

இதுவே கதம்பமான "சிங்க ராஜா-வின் சுலபமான, கைராசியான சகல சம்பத்களை தரும் கவச சூத்திரம்" ஆகும்.  இது ஓர் நமக்கான பாதுகாப்பு அரண் ஆகும்.  எவ்வளவு பெரிய பானா பட்டமாய் இருந்தாலும் அதற்கு "சூத்திரம்" என்பது மிக முக்கியம் ஆகும்.  சூத்திரம் சரி இல்லையென்றால் விண்ணில் பறக்க முடியாது.  சரியான சூத்திரம் பேப்பர் பட்டத்தையே வானில் பறக்க வைக்கிறது.  ஆறு அறிவு உடைய நம்மை எதிலும் கோலோச்ச வைக்க முடியாதா என்ன?  குறைந்தபட்சம் சாதாரண வாழ்க்கையை 

சாகவாசமாக கூறுவது சகவாசம் என்பதை தான்.  சகவாசம் நல்ல மணமுடன் இருந்தால் போதாது.  அதில் பூ நாகம் தீண்டுவது என்பது இல்லாமல் அக்கறையுடன் இருக்க வேண்டும். இதனை கனிந்த சுவை மிகுந்த வாழை பழத்தை ஊட்டி விடுவது போல் கூறிவிட்டேன். அரவணைப்புடன் கூடிய அக்கறை மிகுந்த ஆள் கிடைத்து விட்டால் அதன்பின் வாழையடி வாழையாய் ஆனந்த மிகுதியில் வாழலாம்.  இதனை தொகுதி வாரியாக பிரித்து கூறியது அனைவரும் சுபிட்சமாக வாழ தான் வாழ்வோமாக.

காசு, பணம் கேட்கவில்லை, காணக்கிடைக்காத ஒன்றையும் கேட்கவில்லை.  அப்ப அப்ப ஓர் அரவணைப்புடன் கூடிய அக்கறையை தான் சிலர் கேட்கிறார்கள்.  அப்போது தான் எதிலும் இக்கரையில் இருந்து அக்கறைக்கு செல்ல முடியும்.  கொடுப்பீங்களா கொடுத்துடுங்க.

ஏற்கனவே போதும் போதும் என்று நிரம்ப கொடுத்து நிரப்பியவர்களுக்கு மற்றும் மேற்கண்டதை அடைந்து பலருக்கு அடையாளம் தெரிவது போல் வாழ்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கர்ணனுக்கு கவசம் மார்பில் இருந்த கவச குண்டலம்.  நமக்கான கவச குண்டலம் அக்கறை கொண்ட மனிதர்கள் தான்.  THIS IS LION SAFE GUARD FORMULA.

முகமதியர்களின் சுல்தான் ஆட்சியில் "பராக்" என்றால் "வரார்" என்று அர்த்தம். பேட்ட பராக் போல வீரா வரார், வைரா வரார், ராச வரார் என்பது.  இது அனைத்தும் ஒன்றாக அதோடு பெயரில் பல PUNCH வசனங்களுடன் இருக்கும் நான் என்றென்றும் உங்களுக்காக நான் எழுத்துக்கள் அடங்கிய ஆர்டிகல்லாக உங்கள் மனதில் வரைய "வரார்" என்று வந்து கொண்டே இருப்பேன்.  அதோடு என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.

இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html