சகாப்தத்தின் சாய்வு நாற்காலி [Submit Life Skiding Report]

 

 Welcome To வாசகர்கள்

நீதி மயில் செய்திகள் (செம நீதி மக்களுக்கு செம தீநி)

Justice Mayil News (JMN)-ன் ரிதம் F.M 605 108-ன் Frequency -லிருந்து வரும் ஆர்டிக்கல் எப்போதும் Mass ஆக  அதிரவைக்கும் ஷாக்காக

.

      ALL  IN  ONE  SARAVANA 175


JUSTICE MAYIL News (JMN) மூலம்  கட்டுரையானது பெயருக்கு தகுந்தாற்  போல் நீதியானது மயில்(Mayil) வழியாக பறந்து சென்று உலகமே பார்த்து ,படிக்கிறது.

இதற்கு காரணம் வாசகர்களாகிய நீங்கள்.

ஆதலால் வாசகர்களாகிய  பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், Lawyers, Auditors, IAS அதிகாரிகள், IPS அதிகாரிகள், பல Company அதிகாரிகள், அரசு அதிகாரிகள், App Developers, Yahoo and HOT Mail, Google, Blogspot M.D மற்றும் ஊழியர்கள், பொதுநலவாதிகள்,  மக்கள், ரசிகர்களுக்கும் நன்றி.

இந்த கட்டுரைகள் உங்களை ஒரு நிமிடம் (or) One Second-வது சிந்திக்க வைக்க வேண்டும் என்பதற்காக தான்.  இந்த Justice -ன் கொள்கையும் இதுவே.  அப்ப சிந்திக்கலாமா? 

175-வது கட்டுரை "சாய்வு நாற்காலி நினைவுகள் மனது என்கிற குடோனில் இருந்து"  உங்கள் பார்வைக்கு




வித்தியாசமான ராட்ச்சச ரங்கராட்டின வட்ட பாதையில் நம்மிடம் சண்டை போடாமல் பல மண்டலங்களில் பல ரூபங்களில் ரொம்ப தொந்தரவு தந்து மனதில் புகைச்சல் கிளப்பும் கதி கலங்க வைக்கும் சிக்கல் நிறைந்த, ஊசி குத்தும் கொடிய நாசகார சதிராட்டத்தில் ஈடுபட்ட வகை வகையான புழு, பூச்சிகளாக வளைந்து நெளியும் தலை குனிந்த ஏழைகள் மற்றும் பல பரிணாமங்களில் நடமாடி எதிலும் உறங்காமல் இவர்களை மிதித்து ,சாதித்து சகாப்தமான முத்தாய்ப்பான, அன்பான, பெரும் செல்வாக்கான மேன்மை மிகு ஐஸ்வர்யங்களை பெற்று முக்கியத்துவம் வாய்ந்தவர்களான நல்ல தொழில் அதிபர்கள் மற்றும் வீழ்ந்த நபர்களின் "சாய்வு நாற்காலி நினைவுகள் மனது என்கிற குடோனில் இருந்து" விதியா? சதியா? என்று கடந்து வந்த பாதையில் நிகழ்ந்த சதிராட்ட நினைவுகளை ஒற்றன், காவல் அதிகாரி போல அலசி ஆராய்ந்து  துப்பு துலக்கி அசைபோடுவது போல்..  தொழிலில் தடைகள் வர  காரணம் யாரோ?  நம்மிடம் உள்ள பற்றாகுறை என்பது என்ன?     நமக்கு நேசமும், மனித நேயமும் நிஜமாக கிடைத்துவிட்டதா? இதனை  உற்று நோக்கி ஒற்றன் அருதியிட்டு கூறும் பொய்கள் இல்லா நிஜங்கள. [All Poor Man is  Not a Pure Man.  "Submitted Reason of Life Skiding Report" ]★புரட்சி கவிஞர் Valavanur வை.ரா.SivaSaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,

கோவிந்தா கோவிந்தா

வைராவீராராச என்று பல பெயர்களுடன் ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களே.  என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.

இதில் கூறபடுவது எந்த ஒரு தனி நபரையும், யாரையும் குறிப்பிட அல்லஅதோடு இதில் ஏழைகளை குறை கூற எழுதபட்டதும் அல்ல. இன்று நாம் சுபிட்சமாக இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் அவர்களே.  சுயநலம் இல்லாமல் விஸ்வாசமாக உழைப்பவர்கள் இவர்களே. ஆனால் பலர் ஏழைகளை மதிப்பதில்லை.  அதோடு அவர்களை வெறுக்கிறார்கள்.  பணத்திற்காக எதையும் செய்பவர்கள் என்று தவறாக கூறுகிறார்கள்.  அதற்கு காரணம் பலருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களே.

இந்த கட்டுரையின் நோக்கம் யாரையும் தரம் தாழ்த்த அல்ல.  தரம் உயர்த்துவதற்காகவே எழுதபட்டது. அதோடு ஏழை ஏழையாக இருக்க காரணம் ஒரு சில ஏழைகளால் தான் என்பதை ஆணித்தரமாக ஆதாரங்களுடன் கூறி பலரை விழிப்படைய செய்ய தான்.  ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஆறிலிருந்து அறுபது வரை படம் போல் சாய்வு நாற்காலில் நினைவுகளை அலசி அசை போடுவது என்பது கண்டிப்பாக நடக்கும்.  அவ்வாறு சாதித்தவர்கள் மற்றும் வீழ்ந்தவர்கள் என்று யாராயினும் கசப்பான அனுபவத்தை அசை போட்டால் அனைத்தும் நம் அருகில் இருப்பவர்களாலேயே நடந்ததாக பலது இருக்கிறது.  மன புகைச்சலை கிளப்பும்  கதி கலங்க வைக்கும் சிக்கல் நிறைந்த ஊசி குத்தும் கொடிய நாசகார சதிராட்டத்தை கடக்காமல் தொழில் அதிபர் ஆனவர்கள் மிகவும் குறைவே. அரசியல்வாதிகள் முதல் தொழில் அதிபர்கள் வரை இதில் விதி விலக்கு பெரும்பாலும் இல்லை.  இந்த சதிராட்டத்தை மிதித்து வந்தவர்கள் சகாப்தமானார்கள்.  இதில் மிதி பட்டு நசுங்கியது போல் ஆனவர்கள் வீழ்ந்தார்கள் அவ்வளவே.  இதனை தான் விவேக் என்கிற நகைச்சுவை கலைஞன் பேரழகன் படத்தில் கலைஞர் கருணாதி போல் "மிமிக்ரி" செய்து கூறியிருப்பார்.  குரு, வேலையில்லா பட்டதாரி, வேலைகாரன், மங்காத்தா, இசை, மங்காத்தா படத்திலும் ஒரு சில காட்சிகள் இருக்கும்.   

மேன்மை மிகு ஐஸ்வர்யங்களை பெற்று சாதித்து சகாப்தமான முக்கியத்துவம் வாய்ந்தவர்களான நல்ல செல்வந்தர்கள் பல வகைகளில், பல மண்டலங்களாக உள்ள தொழில்களில், பள்ளி, கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில், மென் பொருள் உற்பத்தி செய்யும் இடங்களில் etc என்று வேலை செய்தவர்கள் தான். 

இதில் மேன்மையுடன் வேலை செய்து சாதித்தவர்கள், சகாப்தமானவர்கள், பெரும் செல்வந்தர்கள் ஆனவர் மேற்கண்டதில் இருந்தே வந்திருப்பார்கள்.  இனி வர போகிறவர்கள் இதில் வேலை செய்தவர்களாகவே பெரும்பாலும் இருக்க போகிறார்கள்.  இவர்கள் பல இடங்களில் அவர்களுடைய பல பரிமாணங்களை வெளிபடுத்தியே இதனை எட்டியுள்ளனர்.

இதில் சாதித்து சகாப்தமான செல்வந்தர்கள் என்பவர்கள் ஏழையாக இருந்து பெரும் செல்வம் ஈட்டி அதன் பின் மக்களுக்காக பல பணிகள் ஆற்றி அதில் நல்ல பெயர் கிடைத்தோ அல் ஒரு தொழிலில் பல புதிய நுட்பங்களை உட்புகுத்தி அந்த தொழிலையே வேறு ஒரு புதிய பரிமாணத்திற்கு கொண்டு வந்து சாதித்தவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை "சகாப்தம்" என்பார்கள்.

இவ்வாறு சாதித்து சகாப்தமான பெரும் செல்வந்தர்கள் பல ரூபங்களில் கடந்து வந்த பாதையை யாராவது ஓர் ஒற்றன், காவல் அதிகாரி போல் உற்று நோக்கி ஆராய்ந்து புலன் விசாரணை செய்து இருக்கிறோமாஅப்படி உற்று நோக்கியவர்கள் யாராயினும் அவர்களுக்கு கதி கலங்க வைக்கும் மிக பெரிய மன புகைச்சலே பரிசாக கிடைத்திருக்கும்இந்த புகையில் மிக பெரிய அளவில் "Pollute" ஆனது நாம் தான்.

பொதுவாகவே பெரும் பணக்காரர்கள், சாதித்தவர்கள், ஏழைகள் ஆயினும் அவர்கள் இதே நிலமையில் இப்படியே தான் பல வருடங்கள் கடப்பார்கள் என்று உருதியாக அருதியிட்டு சொல்ல முடியாது.  ஏனென்றால் நம்முடைய பயணம் என்பது ஓர் ரங்கராட்டின பயணமே ஆகும்.  இதில் மேலே மற்றும் கீழே இருப்பது என்பது எப்படி சர்வ சாதாரணமான ஒன்றோ அது போன்றதே நம் வாழ்க்கையும்.  ராட்டின வேக வித்தியாசம் போன்றே நம் வாழ்க்கையின் மேலே, கீழே இருக்கும் வருடங்கள் ஆகும்.  

அதில் யாரோ சுற்றுவது போல் தான் இங்கேயும் யாரோ ஒருவர் ஏற்படுத்திய உந்துதலினால் தான் நமக்கு ஓர் இசைவு ஏற்பட்டு இதில் பயணம் செய்கிறோம். ஒரு சின்ன வித்தியாசம் இது ராட்சஷ ரங்க ராட்டினம் ஆகும். ஒரு சிறிய தவறும் பெரிய விளைவை ஏற்படுத்தி விடும்.

வாழ்க்கை எனும் ரங்கராட்டினத்தில் ராட்ச்சசன்களாய் இருந்து நமக்கு கெட்டது முதல் துரோகம், வஞ்சம் என்று பொறாமை வரை அதிகமாக உள்ளவர்கள் மற்றும் செய்பவர்கள் அனைவரும் நம்முடைய சுற்றத்தார்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் ஆவர். உடனே நாம் கூறலாம் அப்படியெல்லாம் கிடையாது என்று. அது உங்களுக்கு நடக்கவில்லை அவ்வளவே.  மற்றபடி அனைவரும் இருந்தும் நாம் எதிலும் விழ என்ன தான் காரணம்? ஓர் ஒற்றன், போலிஸ் ஆக துப்பு துலக்கி உற்று நோக்கினால் இது புரியும். சுற்றத்தார்கள் என்பவர்கள் இதில் சொந்தங்கள் அல்ல.  நம்மை சுற்றி இருப்பவர்கள்.

ஏனென்றால் தொழிற் போட்டியோ அல் எந்த போட்டியாக இருந்தாலும் நம்மை தாக்க வேண்டுமென்றால் நம் கூட இருப்பவர்கள் அனுமதியில்லாமல், ஆதரவு இல்லாமல் தாக்க முடியாது அல் எதுவும் செய்ய முடியாது.  வீண் பழி முதல் நம்முடைய இடத்திற்கே வந்து எதாவது தவறாக நம்மை ஏமாற்றி வீழ்த்தும் காரியத்தை சாதிக்க நினைத்தால் அங்கிருந்து கொண்டே இங்கு நடத்த முடியுமா?  நிச்சயம் முடியாது இங்கே  பொம்மாயி, சுந்தர பாண்டியன், வேலைக்காரன், மகாநதி படம் போல் அவர்களுக்கான ஆளாக நம்முடைய ஆள் இருந்தால் தான் முடியும்.

அவ்வாறான ஆட்களால் நாம் சரிந்து விட்டு கேட்டால் அவன் தான் காரணம் என்று யார் யாரையோ கை காட்டுகிறோம்.  ஆனால் உண்மை பணத்திற்காக யார் எது சொன்னாலும் புழு, பூச்சி போல அவர்களுக்கு தகுந்தாற் போல் வளைந்து, நெளிந்து அவர்களுக்கு "சலாம்" போடும் சில ஏழைகள் மற்றும் வசதி படைத்தவர்களால் தான் எல்லாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  அவன் வயிற்று பிழைப்புக்கு எந்த வித சூடு, சொரணையும் இல்லாமல் நம் குடும்ப மானம், கௌரவம் என்று எதை பற்றியும் கவலைபடாமல், குறைந்தபட்சம்  நாம் மனிதன் என்பதையே மறந்து  கேவலமான பிச்சை பணத்திற்காக எதையும் செய்ய தயங்குவதில்லை. வேண்டுமென்றால் தொழிலில் சதிராட்டத்தால் நஷ்டம் அடைந்து வேதனையில் புலம்புவர்களின் கதையை கேளுங்கள் கண்ணீர் வடிப்பீர்கள் நீங்கள்.  சதிராட்டம் பல வகைபடும். ஒன்று எதிரியை வீழ்த்துவதற்கு நம் அருகில் இருப்பவர்களை வைத்து ஆடுவது.  இன்னொன்று பணத்தாசை கொண்டு அவர்கள் ஆடும் சதிராட்டம்.  இது போன்று சதிராட்டம் பல பரிமாணங்களில் உலா வருகிறது. இதில் எந்த சதிராட்டத்தில் நாம் வீழ்த்தபட்டோம் என்பதே ஒரு சிலரிடமிருந்து நம்மை வித்தியாசபடுத்தும்.  மற்றபடி விஷயம் எல்லாம் ஒன்றே.  அது நம் அருகில் இருப்பவர்கள் பணத்தாசை கொண்டு எந்த எல்லைக்கும் செல்கிறார்கள் என்பதே.   

ஏனென்றால் தொழிலில் தொழிற் போட்டியை விட நாம் வளர்கிறோமே என்கிற பொறாமை குணம் மேலோங்கியவர்கள் கூறிய தவறான வழிகாட்டுதலால் தடுமாறி விழுந்தவர்களும் பலர் இருக்கிறார்கள்.

இதில் ஏழைகள் என்று குறிப்பிட்டிருப்பது அனைவரையும் அல்ல.  நல்லவர்கள் என்றும் நல்லவர்களே.  அதோடு இதில் யாரை குறிப்பிட்டு கூறி இருந்தாலும் அவர்கள் கதையில் வரும் கதாபாத்திரங்கள் போன்றவர்களே ஆவர்.  ஏனென்றால் உலகம் மிக பெரியது நமக்கு கெட்டது நடந்த இதே உலகில் தான் பலருக்கு நல்லதும் நடக்கிறது.  

இந்த கட்டுரை என்பதே எதற்கு என்றால் பலர் இவர்கள் தான் இந்த தொழிலை செய்ய சொன்னார்கள் அல் இதில் ஈடுபட சொன்னார்கள்  அல் இந்த வேலைக்கு வெளியூர் செல்ல சொன்னார்கள் என்று கூறுவார்கள். அதில் தவறொன்றுமில்லை.  ஆனால் நாம் வீழ்ந்தால் இவன் சொன்னது நாள் தான் நான் அதில் ஈடுபட்டேன் என்று பலர் புலம்பி தீர்த்ததை நாம் பல இடங்களில் கேட்டிருப்போம். இவ்வாறு கேள்விபட்டது மற்றும் சொந்தமாகவே எனக்கே பல கெட்ட அனுபவங்கள் பல விஷயங்களில் கிடைத்தது.  இது எப்படி நடந்தது என்று புலன் விசாரணை செய்வது போல் செய்தால் விளங்குவது இது தான்.

நாம் வெளியில் இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது எவ்வளவு நல்லதோ அதை விட நாம் கூடவே பயணிப்பவர்களிடம் அதிக கவனம் தேவை என்பதே அது.  அதை உணர்த்தவே இக்கட்டுரை ஆகும்.  குற்றவாளி மாட்டி கொண்டால் நிச்சயம் எதாவது ஒரு கதை கூறுவான். அவ்வாறு கூறும் கதை யாருக்கும் பிரயோஜனம் இல்லாத கதையாகும்அந்த கதையில் உண்மையும் இருக்கலாம் அல் வேண்டுமென்றே எதாவது கதை கூற வேண்டும் என்று பொய்யும் கூறலாம்.  எது கூறினாலும் தண்டனை நிச்சயம் நீதி மன்றத்தில்.

இதை கூற மற்றொரு காரணம் யாரை கேட்டாலும் எந்த விஷயமானாலும் அவன் தான் காரணம், இவன் தான் காரணம் என்று கடமைக்கு ஒரு காரணத்தை  கூறுகிறார்கள். சில சமயங்களில் கடவுளே காரணம் என்கிறோம் கேட்டால் ஜோசியர் கூறினார் என்கிறோம். உண்மையில் எது சரியோ, தவறாயினும்  அருந்ததி படத்தில் கூறுவது போல் ஆயுதம் கட்டாயம் தேவை என்பது போல் எது நடக்க வேண்டுமென்றாலும் அது நம் கூட உள்ளவர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் நடத்த முடியாது.  அப்படியென்றால் தவறு யார் மீது?  எதுவும் எட்டா கனியாக யார் காரணம்?  நம்மிடையே பெரிதான பஞ்சம் என்பது எந்த பஞ்சம்?  பண பஞ்சமா?  நம் கூட நல்லவர்கள் இல்லாத பஞ்சமா?  என்பதை உற்று நோக்கி ஒற்றன் போல, காவலாளி போல சிந்தித்தால் புரியும்.  அருதியிட்டு புரியும் போது கண்களில் கண்ணீர் மல்க அதோடு  குனிந்த தலை நிமிராமல் தான் நம்மால் நிற்க முடிகிறது.

அதே சமயம் எந்த நெருக்கமும், பழக்கமும், உரிமையும் அளவுக்கதிகமாக செல்லும் போது காற்று அதிகம் ஆன பலூன் போல வெடித்து தான் சிதறும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பலர் பலரை நம்பி  ராஜதந்திரம் படம் போல் தொழிலை விட்டு சென்று  நஷ்டமடைந்து பிறகு தொழிலையே விட்டு விட்டு செல்லும் அளவிற்கு சென்றதெல்லாம் உள்ளது.  இது அனைத்தும் நஷ்டபட்டவர்களுக்கே புரியும். 

அதோடு எந்த பணக்காரனும் நம்மை வீழ்த்த நினைத்தால் அவன் முதலில் சந்திப்பது ஏழையை தான்.  ஏனென்றால் ஏழை மட்டுமே எங்கும் விலை போகிறான். பல நாள்  பட்டினியில் இருப்பவனுக்கு சாதாரண சாப்பாடு என்பதே ஓர் பிரியாணி போன்றது தான்.  அந்த கேவலமான சாப்பாடு சாப்பிட மலிவு விலைக்கு நாற்றமடிக்கு கேவலமாயினும் ஏற்பவன் ஒரு சில ஏழையே.  இவன் என்றும் தலை குனிந்தவனே.  இவனால் என்றும் நிமிர முடியாது.  பலரை நிமிர்த்த முனைபவரையும் கண்ணீர் மல்க குனிய செய்பவன் இவனே ஆவான்.  இவர்களை போன்ற நாணமில்லாதவர்கள், நாணயமில்லாதவர்கள் இருக்கும் வரை சிவாஜி படத்தில் கூறுவது போல் ஏழை ஏழையாக தான் இருப்பார்கள்.

அனைத்து படங்களிலும் கூட பணக்காரனை விட ஏழை விலை போவதே அதிகமாக இருக்கும்.  லிங்கா, பூலோகம். விலை போவது பொய்யாலா, வஞ்சத்தாலா, பணத்தாலா என்பது விஷயமில்லை.  விலை போவது மட்டுமே விஷயமாகும்.

விலை போவதினால் மட்டும் எவ்வளவு குற்றங்கள், ஏமாற்று வேலைகள் நடக்கிறது என்று தெரியுமா? உழைக்காமல் விலை போவதால் கிடைக்கும் பணம் ஓர் குளிக்காதவன் மீது இருந்து அடிக்கும் நாற்றம் போன்றது ஆகும்.  அதன் பின் நாம் ஷவரில் குளித்து பிரயோஜனம் இல்லை.  மன அழுக்கு போனால் தான் நம் மீது உள்ள இழுக்குகள் தீரும்.

இதில் அனைத்துமே கூறபட்டிருக்கும் முடிவு உங்கள் கையில்.  எது உங்களுக்கு தேவையோ அதை சரியாக ஆராய்ந்து முடிவெடுத்து வாழ்க்கையில் சிறந்து விளங்குங்கள்.  எல்லாமே நம் கைகளில் தான் இருக்கிறது.  நம் கைகளில் தான் பல அழுக்குகள் இருக்கிறது.  நம் கையிலிருக்கும் அழுக்கினை கழுவி சுத்தம் செய்து விட்டால் கையும் சுத்தமாகும்.  நாம் சாப்பிடுவதும் சுத்தமாகவே உடலுக்குள் செல்லும்.  இப்படி இல்லாமல் அழுக்குடன் நாம் சாப்பிட்டுவிட்டு சாப்பாட்டை குறை சொல்லி ஒரு பயணில்லை. இதில் அழுக்கு என்பது நம் அருகில் இருக்கும் கெட்ட மனிதர்கள் தான்.  பசுந்தோல் போர்த்திய நரிகள் பலது பல இடங்களில் இருக்க தான் செய்யும். அதனை நாம் தான் களையெடுக்க வேண்டும்.

தடைகளை தகர்த்தெறிய, நம்மிடம் சண்டை போடாமல் சதிராட்டத்தில் ஈடுபட்டார்களா என்பதை நிதானம் கொண்டு நல்லவரின் தோலில் சாய்ந்து அலசி ஆராய்ந்தால் நிச்சயம் உங்களுக்கான தடைகள் இல்லா கதவுகள் திறக்கும்.

இவ்வளவு சதி வேலைகளில் ஈடுபட்ட ஏழைகளை கண்ட பல பேர் இன்றும் அன்பாகவும், மனித நேயத்துடன் எல்லாவற்றிலும் ஓர் நேசத்துடன் இருக்க காரணம்.  மிதித்ததும் ஏழைகள் தான்.  தூக்கிவிட்டவர்களும் ஏழைகள் தான் என்பதால் தான்.

நமக்கான எதிரியும் ஏழை தான்.  உற்ற தோழனும் ஏழை தான். All Poor Man Is not a Pure Man.  But Pure Man is Poor Man.  This is My Submitted Report for Life Skidding.

புல் தடுக்கி பயில்வான் வீழ்ந்த கதையை விட ஒரு சில ஏழைகள் விலை போனதால் நடக்கும் சம்பங்களும், குற்றங்களும், வீழ்ந்ததுமே நாட்டில் அதிகமாகும்.

இது நிஜம் என்று நினைத்தால் விழிப்படையுங்கள்பொய் என்று நினைத்தால் விட்டு விடுங்கள். இந்த அனைத்து அருதியிட்டு கூறும் பொய்யில்லா நிஜம் என்பது நமக்கு விபத்து, உடல் உபாதையை தவிர்த்து தொழிலில் எந்த ஆபத்து வந்தாலும் அது பெரும்பாலும் நம் அருகில் இருப்பவர்களால் தான் வர முடியும் என்பது தான். 

இதனை குற்றம் செய்யும் ஏழையும் புரிந்து கொண்டால் தான் அவர்கள் வீட்டில் யாராவது தொழில் அதிபர் ஆக வர முடியும்.  ஏனென்றால் இவர்களை களைக்கவும் விலை போகும்  வேறு ஆள் இருக்கிறார்கள்.  இப்படியே ஏழைகளாகிய நாம் ரங்க ராட்டினத்தில் சுற்றுவது போல் அற்ப காசிற்கு விலை போகி கொண்டே இருந்தால் இதிலேயே தான் சுற்றி கொண்டு இருக்க முடியும். பிறகு ஏழைகள் அதிபர் ஆவது அதிகமாக இல்லாமலே போய்விடும்.  எந்த சதி இல்லாமல் நடப்பது தான் விதி.  ஒரு வேலை விதியில் சதி இருந்தால் அதற்கு பெயர் சதி என்று தான் கூற முடியும்.

அதற்காக ஊர் முழுக்க இது தான் நடக்கின்றது என்று அர்த்தமில்லை.  இதுவும் நடக்கின்றது அவ்வளவே. மாநகரில் திருட்டு சம்பங்கள் அதிகம் என்றால் அதற்காக ஒட்டு மொத்த மாநகரமே திருடர்கள் வாழும் பகுதியாகிவிடாது.

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை. 

 https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html