சொல்லுங்க எஜமான்[ Salam Politician]

Part-1 சொல்லுங்க  எஜமான் [பாரம்பர்ய டங்ஸ்டன் இழை சமன்பாடு] Salam Politician★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.

நம்முடைய பரம்பரை, பண்பாடு, ஜாதி, மதம்தொழில் என்று அவரவர்களுக்கு ஏழையோ, லட்சாதிபதியோ, கோடிஸ்வரனோ ஒரு பாரம்பர்யம் உள்ளது.  அதனை கட்டி காக்க இன்னுயிரை கூட வாழையடி வாழையாக சத்திரிய குலத்தில் அளித்து வானுயர புகழ் பெற்றுள்ளனர்.  எ.கா:- மாமாங்கம் திரைபடம்.  அதாவது நம்முடைய அனைத்தும் பல்பில் உள்ள ஒளி தரும் முக்கியமான  'டங்கஸ்டன் இழைபோல்  உள்ள மெல்லிய மெலிதான இழையில் தான் அடங்கியுள்ளது.  அந்த 'இழையில்தான் நம்முடைய அந்தஸ்து முதல் மனிதன் என்று சொல்லிக் கொள்வது வரை எதுவும் 'டல்அடிக்காமல் இருப்பதெல்லாம் உள்ளது. 'மேனா மினுக்கிடகால்டி வேலையில் இறங்கினால் வேலையிலேயே இருக்க முடியாது என்கிற போது கோட்டை எழுப்ப முடியுமா?  .  சாம்ராஜ்யத்தை 'நிறுவமுடியுமா?   சாதாரண  'நிறுவனத்தைநிறுவினாலும் கூட அது நிர்வாண நிலையை தான் அடையும்.  நம் 'மேனிமுழுவதும் சாதித்த சந்தோஷத்தில் தான் 'மினுக்கவேண்டும்.

அரசு சலுகைகள்:- 

துறையில் இருக்கும் அனைவருக்குமா என்பது விஷயம் அல்ல. சாதாரண வேலையில் இருந்தாலே எவ்வளவு சலுகைகள் உள்ளது என்பது தான் விஷயம். 

1)போக்குவரத்து துறையில் வேலையில் இருந்தால் தமிழ்நாடு முழுவதும் இலவச Family Pass-ல் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

2)ரயில்வே துறையில் பணி புரியும் பணியாளர்களுக்கு இந்தியா முழுக்க இலவசமாக எங்கு வேண்டுமானாலும் செல்ல பாஸ் கொடுக்கபட்டிருக்கிறது.

3) இதே போல் பல துறைகளில் இருக்கும் பல பணியாளர்கள் முதல் பதவியில் இருக்கும் அரசியல்வாதிகள் வரை சலுகைகள் வாரி இறைக்கபட்டுள்ளது.  குறிப்பிட்டு சட்டசபை முதல் நாடாளுமன்றம் வரை பதவியில் உள்ளவர்கள் பெரும் பணக்காரர்கள் என்பது குறிப்பிட தக்கது.  அரசு அதிகாரிகளும் பலர் வசதியான குடும்பத்தில் இருந்து வேலை செய்கிறார்கள்.  ஆனால் பெரும்பாலானவர்கள் யாரும் அரசின் சலுகைகளை விட்டு தர தயார் ஆக இல்லை.  குறைந்தபட்சம் சிலிண்டர் முதல் ரேஷன் கடை வரை எதையும் விட்டு  வைக்கவில்லை மற்றும் விட்டு கொடுக்கவும் இல்லை.

4) இந்தியா மற்றும் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தொழில் அதிபர்களுக்கு மட்டும் வங்கிகள் முதல் பலவற்றில் பல சலுகைகள் கொடுக்கபட்டு அதை முழுவதுமாக எந்த மிச்சம் வைக்காமல் அவர்களும் அனுபவிக்கின்றனர்.  எதற்காக  அவ்வாறு பல சலுகைகள் மற்றும் கடன் தள்ளுபடிகள் கொடுக்கபட வேண்டும்? அதற்கான என்ன 'முகாந்திரம்இருக்கிறது?  அதோடு பொருட்களை உற்பத்தி செய்ய அவர்களுக்கு படித்த மனித வளம் கண்டிப்பாக தேவை. அப்போது தான் தரமான உற்பத்தியை அந்நிறுவனம் அடைய முடியும்.  அதேபோல் படித்த இளைஞர்கள் கண்டிப்பாக இந்த வேலைக்கு தான் செல்ல வேண்டும் என்று எந்த அவசியமும்கட்டாயமும் இல்லை.  15 வருடங்களுக்கு முன்னால் இருந்த இளைஞர்கள் எப்படி தான் பிழைத்தார்கள்? இப்போது இருக்கும் படித்த இளைஞர்களும் வேலையே கிடைக்காததால் 'விரக்தியில்இளைஞர் கூட்டம் அழிந்துவிட்டதா என்றால் இல்லையென்பதே உண்மை. பிழைக்க ஆயிரம் வழிகள் உள்ளது.  அதே சமயம் பலர் உற்பத்தி 'பணிமனைகளைநம்பி தான் உள்ளனர் என்பதும் மிகையில்லை.  படித்தவர்களால் எப்படியும் வாழ முடியும்.  அதே போல் முதலாளிகளால் அப்படி இருக்க முடியாது. வேலை ஆட்கள் இல்லாமல் உற்பத்தி முதல் எதையும் அவர்களால் மேற்கொள்ள முடியாது. 

அப்படியிருக்க உலக நாடுகள்  முதல் இந்திய அரசு வரை எதற்கு பல சலுகைகளை வாரி இறைத்து  'அரசுஆனது இந்த பணமுதலைகளுக்கு 'முரசுகொட்ட  வேண்டும்.  அப்படி இறைத்துவிட்டு நாடு ஏன் கடனில் பஞ்சத்தில் தவிக்க வேண்டும்?.  உலகம் முழுக்க எந்த உலக நாடுகளும் எந்த வரிச் சலுகையும் எவருக்கும் தரப்படமாட்டாது காரணம் நீங்கள் எதுவும் 'பிரத்யேகமாகநாட்டிற்கு எதுவும் செய்யவில்லை என்று ஏன் கூறவில்லை?.  அதோடு கம்பெனியானது ஊழியர்களின் பல சலுகைகள் அவர்களுக்கு தராமல் பறிக்கபட்டுள்ளது.  எ.கா:- அரசு தடையால் கொரானா-வினால் பலர் வேலைக்கு போகவில்லை.  அவர்களுக்கு எத்தனை கம்பெனிகள் முழு சம்பளம் மற்றும் E.S. and P.F கட்டியுள்ளது.  அதோடு Rane Group-ல் உள்ள பல கம்பெனிகள் படிக்காதவர்களை வைத்து உற்பத்தி செய்கிறார்கள் அதோடு பழைய காயிலாங்கடை மெஷின்களுக்கு Paint அடித்து புதிய மெஷின் போல் ஆக்கி பல Order-களை வாங்குகிறார்கள் மற்றும் பல Auditing-ஐயும் முடிக்கிறார்கள் இந்த சிறந்த கம்பெனியில்.  Caliberation என்பது இந்த பெரிய கம்பெனியில் வெறும் Sticker ஒட்டுவது மட்டுமே ஆகும்.  இது சட்டபடி குற்றம்.  இந்த வேலைக்கு இந்த படித்த நபரை வேலைக்கு வைக்க வேண்டும் என்று வரையறுக்கபட்டு சட்டமே உள்ளது.  பல உயரிய பொறுப்புகளுக்கு எப்படி வேலைக்கு எடுக்கிறார்கள் என்பது இன்று வரை மர்மமாக உள்ளது.  கேட்டால் Job Web Site-ல் Site Supervisor முதல் Manager வரை Vacancy வரும். அதில் Apply செய்யுங்கள் என்கிறார்கள்.  உண்மையில் 100% அதில் இருந்து வேலையில் எடுக்கபடுவதில்லை என்றும் கூறபடுகிறது.  படித்தவர்களுக்கும் பல கம்பெனியில் வேலை கொடுக்கவில்லை.  அதோடு பல கம்பெனிகள் இப்போது தான் தன் பணிமனையில் படித்த வேலையாட்களை மாற்றியமைத்து உள்ளன.  நிலமை இப்படி இருக்க ஏன் இப்படி வரி முதல் வங்கிகள் வரை வரிந்துகட்டி கொண்டு இவர்களுக்கு 'முறைவாசல்செய்ய வேண்டும்? உண்மையில் அரசியல்வாதிகளுக்கும் தொழில்பதிபர்களுக்கும் வேறு எதாவது கோடிகணக்கில் லஞ்ச நெருக்கம் இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது.  இப்போது  ஓடிய தொழில்பதிபர்களுக்கு 60,000 கோடிகளுக்கு மேல் தள்ளுபடி நீக்கம் செய்துள்ளனராம். நீக்கம் என்பது வேறு தள்ளுபடி என்பது வேறு என்று பட்டிமன்றம் வைத்து விவாதித்து என்ன பிரயோஜனம்?  எப்படியாயினும் சுலையா 60,000 கோடி ரூபாய் அளவிற்கு அவர்கள் லாபம் அடைந்துள்ளார்கள் என்பது உண்மை.  ஆனால் 'பாமர மக்கள்' 'பாமரனாகவாழவே இங்கு படாத பாடு பட வேண்டி உள்ளது.  இவ்வாறு பாமர மக்களிடம் இருந்து முற்றிலும் பலவற்றில் 'முரன்பட்டுவிலகியே உள்ளனர்.  ஆனால் நான் ஏழையாக இருந்தவன்விவசாயி என்று பலவாறு கூறி கொள்கிறார்களே தவிர மற்றபடி அனைத்தும் 'முரணானதுபோல் ஏழை பாமரன் உணர்வுகளை புரிந்து கொள்வதில்லை அதோடு பொதுமக்கள் வாழ்க்கையில் விளக்கெண்ணெய் ஊற்றி ஒளியேற்ற வேண்டியவர்களே 'முரட்டு தனமாகநடந்து கொண்டு விளக்கை அணைத்தது போல் தான் பலரின் வாழ்க்கை இருக்கிறது.  

இப்படியெல்லாம் பல குறைபாடுகளுடன் அரசை நடத்திவிட்டு அதோடு பல பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் வேறு. இதில் உலகவங்கியில் கையேந்தி கடன் வாங்கி கடன் சுமையாகி பல மாநிலங்கள் கடனில் தத்தளிக்கிறது.  தத்தம் இவர்கள் நம்முடைய வரிபணத்தை நித்தம் ஒழுங்கான முறைகளில் எதையும் வரையறுத்து செலவும் செய்வதில்லை. பல பேருக்கு கோடிகணக்கான ரூபாய் தள்ளுபடி என்றால் நாடு உறுபட எதாவது வாய்ப்பு இருக்கிறதா?  இவர்கள் கொடுத்த வரிசலுகை மற்றும் வங்கி தள்ளுபடியை அவர்களிடம் முறைபடி வாங்கியிருந்தாலே நாடு இந்நேரத்திற்கு 'வல்லரசுஆகி இருக்கும். அதோடு இயற்கை வளங்களை முறையாக கையாண்டிருந்தாலே பல மாநிலங்கள் செல்வ செழிப்போடு இன்று இருக்கும்.  இந்த ஊழல் முறை கேடு பற்றி ஏற்கனவே பல கட்டுரைகளில் ஆதாரத்துடன் விவரித்து ஆகிவிட்டது.

அதைவிட்டு மக்களின் மீது அத்தனையும் திணித்து வதைத்தால் இவர்கள் வல்லவர்களா?  அதோடு நாடாளும் தகுதி உள்ளவர்களிடம் தான் நாட்டை ஒப்படைத்துள்ளோமா?  கொரானாவிற்கு வாங்கிய மெஷினில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.  இவர்கள் ராகுலை குறை சொல்கிறார்கள்.  அவரை குறை சொல்ல என்ன தகுதி இவர்களுக்கு இருக்கிறது என்றே புரியவில்லை.

உடனே அரசு அதிகாரிகளுக்கு கொடுக்கும் சம்பளம் அதோடு பென்ஷனை சொல்வது.  130 கோடி மக்களில் வெறும் 13 கோடி மக்களுக்கு யார் தண்ணி போல் வாரி இறைத்து கொட்டியது?  பென்ஷன் என்பது பிள்ளைகள் இல்லாமல் அதோடு பிள்ளைகள் வேலை இல்லாமல் அவதிபடும் போது மற்றும் நிர்கதியில் பிள்ளைகள் இவர்களை விடும்போது கொடுக்கபடலாம் தவறில்லை.  ஆனால் அரசு அதிகாரிகளின் பிள்ளைகள் பெரும்பாலும் நல்ல வசதியுடன் தான் உள்ளனர்.  அப்படியிருக்க எதற்காக பென்ஷன் கொடுக்கபடுகிறது?  அதோடு பென்ஷன் பெறும் அரசு அதிகாரிகளின் பிள்ளைகள் ஆதார் அட்டை முதல் Bank Statement வரை Verfication செய்து எவ்வளவு பணம் பிள்ளைகளிடம் இருந்தால் அந்த பெற்றோர்களுக்கு பென்ஷன் தர வேண்டும் என்று வரையறுக்க வேண்டும்.  அதோடு அவர்கள் என்ன பொறுப்பு வகித்தார்கள்?  எவ்வளவு சம்பளம் கொடுக்கபட்டது?  அதிகமாக என்றால் அவர்கள் 'சேமிக்காமல்செலவு செய்ததற்கு பென்ஷன் என்ற பெயரில் நாம் 'மொய்எழுதி நம் திருமணத்தை நிறுத்தி கொள்ள முடியுமா?  இவ்வாறு பலவற்றை பலதுறைகளில் சரியாக வரையறுத்தால் தான் சரியானவர்களுக்கு உதவிகள் போய் சேரும்.  அதோடு கஷ்டபடும் பல அரசு அதிகாரிகளுக்கு உதவியும் அரசால் செய்ய முடியும்.

கொரானாவிற்காக உழைப்பவர்கள் மருத்துவ துறை அதிகாரிகள், டாக்டர்கள், நர்ஸ்கள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் இவர்களே பெரிய அளவில் 24 மணி நேரமும் 'சுழற்சிமுறையில் பெரும் பங்காற்றி கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் மாத சம்பளம் இவர்களுக்கு மட்டும் தான் கொடுக்கபடுகிறதா?  அனைத்து லஞ்சம் வாங்காத கை சுத்தம் உடைய நேர்மையான மற்றும்  சுறுசுறுப்பாய் வேலை செய்து அயர்ந்து போன மொத்த அரசு அதிகாரிகளுக்கும் வேலைக்கு போகாமலேயே சம்பளம் ஆனது 'பட்டுவாடாசெய்யபடுகிறது. அப்படியென்றால் இவர்களுக்கும் அங்கு உழைத்து கொண்டிருப்பவர்களுக்கும் என்ன தான் வித்தியாசம்?  விபத்து காப்பீட்டு திட்டம் 50லட்சம் கொடுக்கபடுகிறது.  இதற்கே 'Shift' முறையில் அவர்கள் வேலையை தான் சேவையாக செய்கின்றனர்.  ஆனால் அவர்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்து கொண்டிருப்பதால் இந்த காப்பீடு திட்டம். இதுவும் வேலைக்கே போகாமல் பயந்து வீட்டில் இருப்பவர்களுக்கும்பல நாள் விடுமுறையில் இருப்பவர்களுக்கும் அதோடு நோய் தொற்று பெரிதாக இல்லாமல் இருக்கும் மாவட்ட மருத்துவமனையில் பணிபுரியும் அத்தனை வேலையாட்களுக்கும்அதிகாரிகளுக்கும் இது பொருந்தும்.  

இவ்வாறு காட்டாறு போல் நம்முடைய வரிபணம் முதல் பலரின் வரிபணம் வரை வாங்கபடாமல் தள்ளுபடி நீக்கம் என்ற பெயரில் அவர்களுக்கு பாய்வதால் நாடானது இக்கட்டான சூழ்நிலையிலும் மற்றும் மக்கள் பசி பட்டினியோடும் வரி மட்டுமே செலுத்தி அவர்களுக்கு எந்த ஒரு 'சேமிப்பும்இல்லாமல் உள்ளது. 

எப்போதுமே அரசாங்க தலையீடு அதிகமாக இருந்தால் மற்றும் தொழில் அதிபர்களுக்கு வரிந்து கட்டி கொண்டு முன் வந்து ஆதரவு கரம் நீட்டினால் அவர்களிடம் இவர்கள் கை நீட்டியிருக்க வேண்டும் அல்லது இவர்களே பினாமியாக தொழில் அதிபர்களை வைத்து அந்த கம்பெனியை நடத்தியிருக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லாமல் எதற்காக மக்களுக்கு உழைக்காமல் இந்த உழைப்பாளிகள் இவர்களுக்கு உழைத்து மக்களின் இரத்த பணத்தை மற்றும் சலுகைகளை இவர்களுக்கு கொட்ட வேண்டும்.   விலைவாசி உயர்வு என்றாலும்வரி ரத்து என்றாலும் அனுகூலம் அனைத்தும் இந்த வியாபாரிகளுக்கு தான்.  இப்படி அனைத்திலும் கொள்ளையடிக்கும் இந்த கொள்ளைகார அசுர கும்பலுக்கு ஏன் கொள்ளை புற வாசலை திறந்து விட்டது போல் அரசானது ஏன் செயல்பட வேண்டும்?. 'கையூட்டைதவிர்த்து வேறு என்ன முகாந்திரம் இருக்க முடியும்?.  எல்லாவற்றிற்கும் காரணம் சொல்வது என்பது நாய் ஆனது தொடர்ந்து கக்கா போய் அசுத்தமாகி நாறுவதற்கு சமமாகும்.

அதாவது இவ்வாறு செயல்பட்டு பணத்திற்காக எந்த உயரத்தில் இருந்தாலும் ஓர் அடிமை போல் சிரம் தாழ்ந்து சம்பந்தபட்டவர்களின் கேவலமான அனுகூல பணிகளை முக்கியமான அலுவல் பணியாக ஏற்று நடத்தி அதை முடித்து கொடுக்கும் அடிமை என்று நிரூபித்து உங்கள் பாரம்பர்ய கட்சி மற்றும் பலர் சாதித்து வளர்த்த கட்சியில் மற்றும் துறைகளில் நோகாமல் நீங்கள் 'குளிர் காய்ந்ததால்பல 'சமன்பாடுகளால்வரையறுத்த கணிதம் போல் தலைமுறை கடந்தும் இருந்த மெல்லிய கனமான 'இழைஅறுக்கபட்டு உங்கள் குடும்ப பரம்பரையின் மானம்மரியாதை முதல் உங்கள் துறை சார்ந்த மற்றும் கட்சியின் பாரம்பர்ய அந்தஸ்து பூசணி காய் விழுவது போல் உங்களால் விழுந்து உடைந்து விட்டது.  அதில் பாடுபட்ட உங்கள் முன்னோர்களின் மனது இதனை பார்த்து நொறுங்கி கதறி விட்டது. எதற்கும் சூடு சொரணையின்றி சமாளிக்க பதில் கூறலாம்.  அவ்வாறு பதில் கூறுவதால் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களே தலைகுனியும் நிலை தான் ஏற்படும்.

பல கொள்கை பிடிப்பு எனும் சமன்பாட்டில் பல ஏற்பாடுகள் செய்யபட்டு அதில் அந்தஸ்தாக கட்சியானது நிறுவபட்டுள்ளது.  இந்த கொள்கை பண்பாட்டை 'கண்ணியத்துடன்பின்பற்றாத எந்த கட்சியும்தலைவர்களும் கண்ணிய குறைவாகத்தான் ஆகி உள்ளனர்.

பிசினஸ் மேன்களுக்காக இத்தனை மானம்மரியாதைகௌரவம் என்று அனைத்தையும் அடகு வைத்து பணம் பெறுவது போல் பெற்று கொண்டதால் அது அளவுக்கதிகமாக போய் நகையே மூழ்கி போன நிலமை தான் இன்று பல கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும்.

எந்த எஜமானுக்காகவோ 11 வருடங்களாக அவர்கள் என்ன சொன்னாலும் அப்படியே 'சொல்லுங்க எஜமான்என்று அடிமை போல Full Co-Operation பண்ணி உங்களையும் உங்கள் கட்சியின் அத்தனை பாரம்பர்யம்மரியாதைகௌரவம் என்று சகலத்தையும் குழி தோண்டி புதைத்துள்ளீர்கள் அதோடு பெரிய "பலூனில்ஊசி பட்டு வெடித்தது போல் ஆகிவிட்டது.  அதோடு நீங்கள் நயவஞ்சகமாக துரோகம் செய்த நபர் ஆவாய். உங்கள் ஆட்சி முதல் கிட்ட தட்ட அரசையே நடத்தி உங்களையும் கட்சியையும் கட்டி காத்தவர்.  நாட்டு மக்கள் நன்மை அடைய மக்களுக்காக பல அர்பணிப்புகளை செய்தவர் மக்களை காத்தவர்.  உங்கள் அனைவருக்காகவும் இன்றளவும் சிந்தித்து கொண்டிருப்பவர்.  இது போல் உண்மையில் யார் இருக்க வேண்டும்.  குடிமகனாகிய நானா சம்பந்தபட்டவர்களா?.  இவ்வளவு இருந்தவருக்கே கேவலம் இந்த பிச்சைகார பணத்துக்காக எந்த இழிவையும்களங்கத்தையும் வேண்டுமென்றே திட்டமிட்டு சுமத்த தயார் என்றால் தொண்டர்கள் முதல் கட்சியில் பொறுப்பில் இருப்பவர்கள் வரை அவர்கள் நிலை என்னவாகும்?  அதோடு அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?  நமக்கும் இதே நிலைதான் என்பது தானே.  இதோடு உங்களை பற்றி தரம் தாழ்ந்து நினைக்காமல் வேறு என்ன நினைக்க முடியும்.  உங்கள் கட்சிக்காகவும் உங்களுக்காகவும் உழைத்த எனக்கு என்ன கிடைத்தது பச்சை துரோகம் மட்டுமே.  நாட்டிற்காக உழைத்தேன் நாடு என்ன செய்தது.  நாட்டில் உள்ள மக்களை கவனிப்பவர்களை கவனிக்க ஆள் இல்லை என்றால் அது யாருக்கு அசிங்கம்?  எதையும் சமாளிக்க ஆயிரம் காரணங்களை பதில்களாக கூறலாம்.  ஆனால் அதில் ஒரு காரணம் கூட சம்பந்தபட்டவருக்காக ஏன் இல்லைஎன்ற கேள்வி எழவே செய்யும். பதில்கள் யார் வேண்டுமானாலும் கூறலாம்.  ஆனால் பதிலில் உள்ள தரத்தை வைத்து தான் நம்மை மதிப்பார்கள்மதிப்பிடுவார்கள்.  நீங்கள் எல்லாம் நேர்மைநாணயம்சுயகௌரவம், தன்மானத்தை பற்றி பேச எந்த யோக்கியதையும் இல்லை.  பெண்ணை காப்பவன் விபச்சார விடுதி நடத்தியது போல் இருக்கிறது உங்கள் பேச்சு, செயல்பாடு எல்லாம்.

எந்த எஜமானனோ சொல்லுவதை கட்டளையாக ஏற்று பணத்திற்காக நீங்கள் நடக்கும் போது உங்களுக்காகவும்கட்சிக்காகவும்நாட்டிற்காகவும் அரும்பாடு பட்ட எனக்கு சாதகமாக நடந்தால் என்ன தவறு?  ஏமாற்றி சம்பாதித்த பணமோ, உழைத்த பணமோ எதிலும் ஓர் தர்மம்நியாயம் இருக்கிறது. எப்படியோ யாரோ ஒருவன் தான் மொத்த பணத்தைசொத்தை எடுத்து கொண்டு போக போகிறான்.  அது நானாக இருந்தால் என்ன ?  பணத்திற்கே "சொல்லுங்க எஜமான்என்று மண்டியிட்டு அடிமையாக இருந்துள்ளீர்கள் என்றால் எனக்கு கொத்தடிமையாக அல்லவா நீங்கள் இருக்க வேண்டும்.  அதைவிட்டு விஸ்வாசம் இல்லாமல் படுமோசம் ஆக பணத்தையே பார்க்காத பிச்சைகாரனுக்கு 2000 ரூபாய்  பிச்சை நோட்டு கிடைத்தது போல் திரிந்தால் எல்லா இழையும் நார் நாராக கிழிந்து பாரம்பர்யம்பரம்பரை மானம்அந்தஸ்துகர்வம் என்று அனைத்தும் காற்றில் பறந்து அசிங்கமாக தான் ஆகும்.  இதற்கு மட்டும் அல்ல எதற்கும் நியாயம் கற்பிக்கலாம்.  ஆனால் அது அநியாமமாக தான் இருக்க கூடாது.

மேற்கண்டவர்களுக்கே நாடானது கடமை பட்டது போல் நீங்கள் இவ்வளவு வாரி இறைக்கும் போது நான் உழைத்து சம்பாதித்த பணத்தை நான் எடுத்து செல்வதில் உனக்கு என்ன பிரச்சனை?  அதோடு என் வாழ்க்கையை எவனோ ஒரு பன்னாடை வரையறுக்க முற்பட்டால் நீ எதற்கு அவனுக்கு பொன்னாடை போட்டு 'சரிங்க எஜமான்என்று முழுவதுமாக ஒத்துழைத்தாய்? கனவுலகம் மற்றும் Vibration எல்லாம் உன் பதவிக்கு அவசியம் தானா?  மரியாதையாக இருக்குமா?  தலைமை பண்பே இல்லாமல் கொத்தடிமை கொக்கரிப்பதாய் இதோடு தன் உடம்பையே பண அரிப்பால் கொத்தி கொண்ட கொத்தனார் கதை போல இருக்கிறது உன் கதை.   பதவிஆட்சி, அதிகாரம் என்பது பணத்தை விட மேலானது.  இதை வைத்து பணம் சம்பாதிக்கலாம்.  ஆனால்  பணத்தை வைத்து மட்டும் ஆட்சியை பிடிக்க முடியாது.  அப்படி முடியும் என்றால் எதிர்கட்சி தான் அரியனையில் அமர்ந்திருக்க வேண்டும். பணம் தான் என்றால் எதற்கு தலைவர்கள்?, எதற்கு விஸ்வாசமான தொண்டர்கள்?, எதற்கு பல கட்சி பொறுப்புகள்?  என்னால் மற்றும் மேற்கண்டவர்களின் 'ஆதங்கம்தான் 'ஆதவன்போல மக்களை சுட்டு எழுச்சி பெற வைத்து 'ஓட்டுவாங்கி தர முடியும்.  அதோடு எனக்கான மற்றும் ஒவ்வொருவருக்குமான மக்கள் 'ஆதரவுஎன்பது வேறு உள்ளது.  அந்த மக்களுக்கு நான் சொன்னாலே போதும்.  பணம் என்பதையே அதை எங்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்று முடிவெடுப்பது நாங்கள் தான். மீடியாவில் நம்முடைய எந்த செய்திகள்  'பீடித்திருக்கவேண்டும் என்று முடிவு செய்து விளம்பரம் கொடுப்பதே நாங்கள் தான்.

நாடு முதல் அத்தனை பேருக்காகவும் பேரூராட்சி ஊழியர் உழைப்பது போல் உழைத்தவனை பேணி காக்காமல் அதோடு அவன் உழைத்து சம்பாதித்த பணத்தை வாங்கி கொடுக்காமல் சட்டத்திற்கு புறம்பாக சட்டத்தை மதித்து நடக்க வேண்டியவர்களே இப்படி இருப்பது தலைமுறை தாண்டிய இழிவாக கருதபட கூடிய ஒன்றாகும்.    

இது என் ஒருவன் சம்பந்தபட்டதல்ல.  அதோடு இது எனக்கான குரல் அல்ல  கட்சிக்காக உழைத்த கட்சி தொண்டர்கள்நியாயம் வேண்டி போராடுபவர்கள் முதல் ஒட்டு மொத்த மக்களுக்கான குரலாகும்.  "சொல்லுங்க எஜமான்என்று உங்களிடம் தொழில் அதிபர்கள் முதல் 11 வருட கேலி கூத்தை நடத்தியவன் வரை இருந்திருக்க வேண்டும் மற்றும் உனக்கு கட்டுபட்டு நடந்திருக்க வேண்டும்.  ஆனால் அவன் உத்தரவை நீ ஏதோ அவன் வேலை ஆள் போல் சிரம் தாழ்ந்து ஏற்று சம்பந்தபட்டவர்களுக்கு நடத்தி கொடுக்கிறாய்.

இதனால் கர்வம் கொண்டு என் நாட்டு தேசிய, மாநில தலைவர்கள் என்று சொல்லி கொள்ள முடியாமல் கூனி குருகும்படி இருக்கிறது.  நாட்டை மற்றும் இவர்களுக்கு அரும்பாடு பட்டவர்களை அவர்கள் எதிரிகள் மற்றும் எதிரி நாடுகள் தாக்குதல் நடத்தினாலோ, நயவஞ்சக முறையில் துரோகம் செய்தாலோ எதிர்த்து தாக்குதல் நடத்தி சரியோ தவறோ நீ தான் ஆறுதலாய் இருந்து தோல் கொடுத்திருக்க வேண்டும்.  அதுதான் ஆரோக்கியமான தாகும்.  கூட இருப்பவர்களே குழி பறித்தால் அது நாட்டிற்கான பெருமையா?  அது நல்ல ஜாதி மதத்தின் அடையாளமா?  நல்ல தலைவர்களுக்கு மேலும் ஓர் மகுடம் சூட்டிய நிகழ்வா?  மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்தும் "சொல்லுங்க எஜமான்என்று இருந்ததாய் கூறுவதை தவிர்த்து வேறு என்ன வார்த்தை கோர்த்து இதில் கூறுவது?   பாரம்பர்யம் எங்கே போனது?  கர்வம்தன்மானம், சுயகௌரவம் அனைத்தும் சொல்லுங்க எஜமானில் கலையிழந்து காணமலே போய்விட்டது.  நூற்றாண்டுகளை கடந்த கட்சி , கடந்து கொண்டிருக்கிற கட்சி இவ்வாறு அடிமை வேலையாட்களாக இருந்து தான் கடத்தபட்டதா என்று வினவ வேண்டி இருக்கிறது.  

ஒரு பெண்ணை எவனோ ஒருவன் கல்யாணம் செய்ய போகிறான்.  எவனோ ஒருவன் எங்கேயோ கூட்டி கொண்டு செல்ல போகிறான்.  யாரும் கூட்டி கொண்டு செல்லவில்லையென்றால் கூட பரவாயில்லை.  அப்படியிருக்க அந்த ஒருவன் நானாக இருப்பதால் உனக்கு என்ன வந்தது?  வேறுயாராவது இருந்தால் பரவாயில்லை என்று நீ கூறினால் அவனுக்கு நீ ஏன் விளக்கு பிடிக்க வேண்டும்?  அவனுக்கு உனக்கும் யாருக்கும் தெரியாமல் என்ன கள்ள தொடர்பு இருக்கிறது?   அப்படியென்றால் நாட்டிற்கும் உனக்கும் வெளிச்சம் தந்தவன் இருட்டில் மூழ்கலாமா?  இதே போல் தான் பணம் சம்பந்தபட்ட விஷயமும்.  அந்த பிச்சைகாரன் கொடுத்த பணம் அனைத்தையும் மானமே இல்லாமல் வேலையாள் போல் வாங்கி கொண்டு அவனிடம் "புழு பூச்சிநெளிவது போல் நெளிந்து கை கட்டி ஊழியம் செய்தாயே அவனிடன் என்றாவது இவ்வளவு பணம் உங்களுக்கு எப்படி வந்தது?  இதற்கான மூலதனம் ஏது?  வேறு ஒருவர் மூலமாக நீ சம்பாதிக்கிறாய் என்றால் அவனுக்கு எவ்வளவு கோடி பணம் கொடுத்தீர்கள்? 11 வருடங்கள் முன் இருந்த வளர்ச்சியை விட இப்போது பன்மடங்கு பணம்சொத்து என்று எப்படியானது? அதற்கு காரணம் யார்?  அவருக்கு என்ன நன்றி கடன் செலுத்தினீர்கள்?  இது அனைத்துமே அவன் போட்ட பிச்சை எனும் போது அதை நான் வாங்கி அவனுக்கே பாதகமாய் நடந்தால் பாமரன் கூட என்னை மன்னிக்க மாட்டான். குப்பன் சுப்பன் கூட என்னை கண்டால் முகம் சுளிக்க தான் செய்வான் என்று என்றாவது தன் மானத்துடன்பாரம்பர்ய சுய கௌரவ குடும்பம் மற்றும் கட்சியில் இருந்து வந்தவன் போல் பேசியுள்ளாயா? Income Tax, Vigilence அதிகாரிகள் போல் கேள்வி கேட்டிருக்கிறாயா?   Busness, Political, Police, Lawyer முதல் இப்போது கொரானா வரை etc Advice செய்து அவர்களை அவரவர் தொழிலில் தூக்கிவிட்டேன்.  இதைபற்றி ஏற்கனவே தெளிவாக பல கட்டுரைகளில் தெளிவாக கூறிவிட்டேன்.  பிரசாந்த் கிஷோர் 'ஐ பேக்என்று ஆரம்பித்து பல கோடிகள் சம்பாதிக்கலாம்.  ஆனால் நான் சம்பாதிக்க கூடாது அதோடு அந்த பணத்தை பெற கூடாது.  இப்படி உலகத்தில் இல்லாத ஒன்றை கூறும் போதே எங்கேயோ தவறு மற்றும் கை நீட்டி 'கையூட்டுபெற்று 'கைநாட்டுபோல் 'கையாடல்செய்தது அப்படியே அற்புதமாய் அப்பட்டமாய் தெரிகிறது.  இல்லையென்றால் பின்பு ஏன் என்னை மட்டும் இவ்வாறு கூற வேண்டும்?  காரணம் காரி துப்பும் படி இருந்தால் முகத்தில் காரி தான் துப்புவார்கள்.  அதை விட்டு நம்முடைய அழுகி போன போலியான நாடக அழுகையை துடைக்க மாட்டார்கள்.

சொல்லுங்க எஜமான் என்று நாம் பல இடங்களில் சூடு சொரணையின்றி இருந்துவிட்டு நான் எஜமான் என்று கூறினால் எஜமானாக அல்ல மனிதனாக கூட ஏற்றுகொள்வது சிரமமே.

11 வருடங்கள் அல்ல என் ஆயுள் வரை கூட ஏமாந்தால் Live முதல் எல்லாவற்றையும் செய்து இவர்கள் வாழ்க்கையை மேற்கொண்டு செழிக்க செய்து நம் வாழ்க்கையை பட்டு போகும் படி ஆக்க கூடிய கேடு கெட்ட ஜென்மங்கள் இவைகள்.  இதற்கு காரணம் ஓர் மனிதன் வியாபார பொருளை வாங்கலாம்விற்கலாம்.  ஆனால் ஆரம்பத்தில் நாமே நமக்கு தெரியாமல் வேறொருவர் முன்னேற்றத்திற்காக மீடியாவில்  வியாபார பொருள் ஆனதால் தான் இந்நிலமை.  எவ்வளவு பாதிப்பு யாருக்கு வந்தாலும் இவர்களுக்கு வராத வரை கவலைபட மாட்டார்கள். இவர்களுக்கே பல அவமானங்கள் ஏற்பட்டாலும் பணம் தான் பிரதானம் என்று இருப்பதால் எதற்கும் மனிதனாக இல்லாமல் மிருகமாக தான் செயல்படுவார்கள்.  அதோடு அதை நியாயபடுத்தி இவர் ஏதோ தேசத்திற்கு பெரிய சேவை செய்தது போல் பொய்யாக இவர்களே கூறி கொள்ளும் சாத்தான்கள் இவர்கள்.  எல்லாமே இவர்களால் தான் என்று இவர்களை நியாயபடுத்தி கொள்ளவே முற்படுபவர்கள்.  பின்பு நான் எதற்கு? என்று கேட்டால் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் சார் என்பார்கள்.  அதோடு எங்களுக்கும் கொஞ்சம் போலியான பில்டப் என்பார்கள் யாருடைய Mash-ஐயோ டப்மேஷ் செய்வது போல். இவர்கள் உடல் முழுக்க வஞ்சம்துரோகம் ஆனது 'புரையோடிபோய் இருப்பதால் தான் இவ்வளவு கோடிகள் சம்பாதிக்க காரணமாய் இருந்த இந்த ஆஸ்தானவனிடமே எதையும் ஆஸ்வாசபடுத்தி கொண்டு  இல்லாதவன் போல் பல்வேறு பேச்சுக்களில், செயல்களில் ஈனத்தனமாக ஈடுபட்டுள்ளனர்.  இதற்கு காரணம் கொடிய தொற்று நோயான இந்த கொடிய பணத்தாசை தான் என்பதே உண்மை.  வியாபார பொருள் தானே இவர்கள் ஆதாரமே அந்த பொருள் நான் இல்லை இறைவன் ஆனாலும் அவருக்கும் இதே தான் நிலமை என்பது குறிப்பிட தக்கது.  கொடியவர்களின் கூடாரத்தில் 'அக்குள் நாற்றம்போன்ற அந்நியாயங்களும் 'சந்தன வாசனையாய்'  நியாயபடுத்தபடும். ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் என்று நியாயபடுத்துவது அதிகமாக இருக்கிறதோ அதில் என்றென்றும் நியாயம் இருக்காது இருந்ததில்லை.  நியாயம் இருந்தால் நியாயபடுத்துதலுக்காக எந்த மெனக்கெடலும் பொதுவாக அதிகமாக இருக்காதுவிவாதம் தர்க்கமானால் அதில் எந்த தர்மமும் இல்லாமல் வெறும் அவர்களுக்கான வெற்று பேச்சாகவே முடியும்.

காரணம் அதிகமாக சொல்லபட்டால் பொதுவாக அது அவர்களுக்கான காரிய வெற்றியில் சம்பாதிக்கவே இருக்கும்.  கர்ணம் அடிப்பது போல் காரணங்களில் பல்டி அடித்து வெவ்வேறு வகையில் கூறுவது வெவ்வேறு வகையில் காரியம் சாதிக்கவே.  இது அனைத்தும் பொதுபடையாக வியாபார தளத்தில் தான் அதிகம் நடக்கும்.  வியாபார தளமாக பத்திரிக்கை துறையை நினைத்து அதில் ஒருவரை வியார பொருள் ஆக்கிவிட்டால் அதில் வெற்று காரணங்களும், நியாயபடுத்தலுமே மேலோங்கி இருக்கும்.   அதோடு சிக்கி கொண்டால் இவர்கள் பலரை குற்றம்சாட்டி தப்பிக்க முனைவார்கள்.  அதோடு பத்திரிக்கை தர்மம், சுதந்திரம் என்று பொய் கூறுவார்கள்.  இது எந்த இடத்திலும் அதர்மமான செயலே.  ஆனால் வியாபாரத்தில் எல்லா கேடு கெட்ட செயலும் அவர்களுக்கு தகுந்தாற்போல் அது தர்மமே அவர்களை பொறுத்த வரை. அதனால் தான் அவர்களை முன்னிலைபடுத்தியே பொய்யாக காய்களை நகர்த்துகிறார்கள்.  ஏனென்றால் அதில் அவர்களை முன்னிலைபடுத்த பெரிதாக ஒன்றுமில்லை.  அதனால் அவர்களே அவர்களை கொண்டாடி கொள்கிறார்கள்.  அப்படி ஒரு வேலை பணத்திற்காக யாராவது கூறினால் தலைவர்கள் எங்கே?  அதிகாரிகள் எங்கே?  இது நாள் வரை நாட்டிற்காக உழைத்த மனிதர்கள், இயக்கங்கள், கட்சிகள் எங்கே?  ஒளிபரப்பு செய்பவர்கள் என்றென்றும் எதையாவது எதையும் ஒளிபரப்பு செய்தே ஆக வேண்டும்.  ஏனென்றால் அவர்கள் தொழில் அது தான்.  எதையும் பரபரப்பாக இவர்கள் பேசி நம்மை பரபரப்பாக்கினால் தான் இவர்கள் சேனலை நாம் பார்ப்போம்.  அதனால் தான் Breaking News-ற்கு அப்படியொரு வியாபார போட்டி.  யார் தொடர்ந்து முதலில் செய்திகளை கூறுகிறார்களோ அதை தான் மக்கள் விரும்பி பார்ப்பார்கள். பல நல்ல ஊடகங்கள் உண்மையான விவாதங்களை திறன்பட விவாதங்களாகவே பலர் நடத்துகின்றனர்.  அவர்களின் பங்கு என்பது அதனை ஒளிபரப்பு செய்வதில் மட்டுமே உள்ளது.  அவர்களின் திறமையை நிரூபிக்கும் வகையில் அவர்கள் எதாவது நிகழ்ச்சி நடத்தினால் மற்றும் பலபேரை அழைத்து பலதலைப்புகளில் பேசினால் அது யாரும் கேள்வி கேட்க முடியாத அவர்களுக்கான முழு பங்கை நீயா நானா போல் அது அளிக்கும்.  அதாவது இதுவரை விவாதம் என்ற பெயரில் யாரோ பொது இயக்கம்கட்சிஅரசியல் தலைவர்கள் இல்லை நான் கூறியதை தான் விவாதமாக நடத்துகிறார்கள். அதாவது இதில் அங்கு இருப்பவர்களின் பெரிய பங்கு என்ன?  திறமை என்ன இருக்கிறது

அதாவது ஒரே ஒரு பெரிய வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு நம்மில் ஒருவர் நம்மால் அறிமுகபடுத்தபட்டு அவரது பேராற்றலால் வரலாற்று தலைவர் ஆனது.  அதோடு அவர் திறமையை பல இடங்களில் நிரூபித்து பல துறைகளில் மிக பெரிய ஜாம்பாவானாகவும் கோடிஸ்வரனாக தன்னை நிலை நிறுத்தி கொண்டது.  நிலை நிறுத்தி கொண்டது அவராக இருந்தாலும் பத்திரிக்கை மற்றும் மீடியா துறையில் தற்செயலாக வியாபாரத்திற்காக ஓர் 'பொறியாளனை' அறிமுகபடுத்தி அவர் அசைக்க முடியா சக்தியாக உருவெடுத்திருப்பது ஒட்டுமொத்த பத்திரிக்கை துறையில் இது ஓர் தீப்பொறி பறக்கும் "மைல்கல்லாகும்".  என்றென்றும் என்னுடன் அறிமுக படுத்திய பத்திரிக்கை துறை கூடவே  இருக்கும்.  பத்திரிக்கை துறையும் என்றென்றும் பெருமையாக மார் தட்டி கொள்ளும்.  இத்தலைமுறையின் முன்னேற்றம் எங்கள் பத்திரிக்கை துறை அறிமுகபடுத்தி அதில் உருவான தலைவரால் என்பது வரலாற்று சிறப்பு மிக்க ஒன்றே ஒன்றாகும்.

இது அனைத்தும் எந்தவொரு கட்சியையோ, தலைவர்களையோ, வியாபாரிகளையோ, சேனலையோபல துறைகளையோ, அதிகாரிகளையோ புறம் கூற  அல்ல.   பலர் அகத்தில் உணரவே JMN-ன் ரிதம் F.M 605 108-ல் இத்தலைப்பிலான கட்டுரை.  அதோடு இதில் ஒரு சில செய்திகள் செவி வழி செய்தியே.  உண்மையாய் இருந்தால் மேற்கண்டவற்றை  உணர்ந்து இனியாவது பலதை மீட்டெடுக்க முற்படுங்கள்.  இல்லையென்றால் எதிர் கட்சிகள் அவதூறுகள் கூறியது போல் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள்.  அதோடு ஒரேயடியாக இதற்கு முற்று புள்ளி வைத்தது போல் முடிவெடுத்து செயல்படுங்கள்.  வியாபாரிகள் இதுவரை எதிலும் நஷ்டபட்டதாய் வரலாறு இல்லை.  சிறிது நஷ்டம் என்றாலே ஈவு இரக்கம் இல்லாத பல முடிவுகளை எடுக்க கூடியவர்கள்.  அதனால் லாபம் ஓர் குறிப்பிட்ட எல்லை வரை இவர்களுக்கு உலகம் முழுக்க அந்நாட்டிற்கு தகுந்தாற் போல் வரையறுப்போம்.  ஏற்கனவே இவர்களுக்காக வரையறுத்ததை ரத்து செய்து நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பலவற்றை இனியாவது வரையறுப்போம் தலைநிமிர்வோம்!  நம் தன்மானமிக்க பாரம்பர்யத்தை கர்வத்துடன் சொல்லுங்க எஜமான் என்றில்லாமல் மீட்டெடுப்போம்!

அனைவருக்கும் 'சலாம்போட்டு வாழும் வாழ்க்கை ஓர் பெரிய தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு அழகல்ல. பிறகு எனக்கு 'சல்யூட்அடிக்கவில்லை எனக்கு மரியாதை குறைவு நிகழ்ந்துவிட்டது என்று கூறுவது 'கேளிக்கைநிகழ்ச்சியில் கேளிக்கை நாயகனை 'கேலிசெய்தது போல் ஆகிவிடும்.  பல 'போதை பானங்களைஅருந்தி வாழ்பவனால் சக்தி மிகுந்த 'பாணத்தை' 'எய்யமுடியாது என்பார்கள்.  சாலையே இல்லாத  கரடு முரடு சாலையில் பயணிப்பது போல் பயணிக்கும் மனிதர்களே தன்மானத்துடன் வாழ்கிறார்கள்.  ஆனால் கரடு முரடு மற்றும் குண்டு குழி என்றால் என்னவென்றே தெரியாத அளவிற்கு தரமான சாலையில் எங்கள் 'மரியாதைக்குரியவர்பயணித்தும் எதுவும் இல்லாமல் வாழ்வது போல் வாழ்கிறீர்கள்.  மேற்கண்டவை முதல் இன்னும் பலவற்றில் உங்கள் செயல்பாடு ஒட்டு மொத்த மக்களின் வளர்ச்சிக்கு எதிராகவும் தொழில் அதிபர்களுக்கு 'ஜால்ராபோலவும் இருக்கிறது.  இவர்களுக்கு ஜால்ரா அடிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?  'சாமானியன்முதல் உங்கள் கீழ் வேலை செய்யும் அதிகாரிகள் வரை தன்மானம் தான் மனிதனின் சொத்து சுகம் என்று கர்வத்துடன்  பலர் நேர்மையாக நடந்து வேலையை சரியாக 'செப்பனிட்டுசெய்வது போல் செய்து தங்களை சுற்றி உள்ளவற்றை "சொர்க்கம்படைப்பது போல் படைக்கிறார்கள்.

இது அனைத்தும் ஒட்டு மொத்த சாமானிய மக்களின் மன குமுறல் ஆகும்.  இந்த குமுறல் கொந்தளிப்பாகி வெடித்து கட்டுரையாக உங்கள் முன் வடிவம் எடுத்து இருக்கிறது அவ்வளவே. 

எங்களிடம் எந்த சாமான் செட்டு இருக்கிறதோ இல்லையோ, வாங்குகிறோமோ இல்லையோ ஆனால் நாங்கள் பட்டினி இருந்தாலும் வரி முதல் எல்லாவற்றையும் கட்டி அழுது எங்கள் வரிபணத்தில் உங்களை விலை உயர்ந்த காரில் பவணி வர செய்தும், நாங்கள் தரமான ஆடை அணிகிறோமோ இல்லையோ ஆனால் நீங்கள் உலக நாடுகளே வாய்பிளக்கும் அளவிற்கு விலை உயர்ந்த ஆடைகளை போட்டு தலைநிமிர்ந்து நடப்பதை அழகுபார்த்த நாடு இது என்பதை எந்த தலைவர்களும் மறக்காதீர்கள். உங்கள் பாதுகாப்பு, அரசு பங்களாதிண்கிற சோறு முதல் கட்டுகிற உடைகள் வரை அனைத்தும் மக்கள் வரிபணம்.  நீங்கள் ஏதோ முதலாளி போல் ஆர்டர் போட்டால் அனைவரும் அலறி அடித்து கொண்டு வேலை செய்பவர்களுக்கு ஊதியம் மக்கள் தான் கொடுக்கிறார்கள்.  நீங்கள் பெரிதாக எந்த செலவுமின்றி அரசு சொகுசு பங்களாவில் உங்களை சொகுசாக உட்கார வைத்து சுகமான வாழ்க்கை கொடுத்தது சொல்லுங்க எஜமான் என்று மேற்கண்ட பலரிடம் 'கைகட்டிநின்று அவர்களுக்கு ஜால்ரா போட்டு வேலை செய்ய அல்ல.  எங்களுக்கான வேலைகளை திறன்பட செய்து நாங்கள் 'கைதட்டிபாராட்ட தான்.  Current Bill முதல் உங்களின் அத்தனை  செலவுகளையும் மக்கள் ஏற்று கொண்டு அவர்களிடம் பணம் இல்லையென்றாலும் உங்களுக்கு கட்டி கொண்டு இருக்கிறார்கள் என்பதை கொஞ்சமாவது நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் சிறந்த மக்கள் செயல்பாடு ஆட்டத்தால் நாங்கள் 'டப்பாங்குத்துஆட்டத்தில் ஓர் குத்தாட்டம் போடலாம் என்று நினைத்தால் நீங்கள் ஒரேயடியாக கேவலமாக உங்களுக்கு நீங்களே 'டண்டனக்காபாடி கொண்டது எங்களுக்கு மிக பெரிய வருத்தத்தை அளிக்கிறது.    

இது அனைத்தும் ரைட்டா ராங்கா என்று தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html