ஓசியில் தொப்பை நிரப்பி கூட்டம்- Illuminati-களின் சதியா?[ Free of Stomack Filling]



பேரிகார்டு போட்டு தடுத்து நிறுத்துங்க ஓசியில் தொப்பை நிரப்பி கூட்டம்- Illuminati-களின் சதியா?[ Free of Stomack Filling]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.




திருசிற்றம்பலம்

J.M.N-ன் ரிதம் F.M 605 108-ல் 139-வது கட்டுரையாக வெளிவருகிறது.  இம்மாதிரியான கட்டுரைகள் வெளிவருவதால் தான் உண்மை எது என்று உணர முடிகிறது.  அதோடு இது அவர்களுக்குள் பல கோணங்களில் விவாதிக்கபட்டு  பொய் திரைகள் விலக்கபட்டு மெய் திரைகள் பல இடங்களில் பரந்து விரிந்து காணபட இம்மாதிரியான சூரியனை போன்று ஏமாற்று காரர்களை சுட்டெரிக்கும் கட்டுரையானது பலருக்கு இது வலது கரமாக இருந்து அவர்களை காத்துள்ளது.  இக்கட்டுரை ஏற்கனவே வந்த இரண்டு கட்டுரைகளின் தொடர்ச்சியாகும்.

போலி ஜோதிட கணவான்களே! அதோடு அவர்கள் சொல்லி அதை கேட்ட அரசியல் கட்சி தலைவர் அவர்களே! அனைவரும் ஜோதிடம் பார்த்து தான் கட்சியின் பெயர், சின்னம் முதல் கட்சி கொடி வரை நட்டீர்கள்.  ஆனால் அனைவராலும் ஆட்சி பிடிக்க முடிந்ததா?  பலருக்கு நட்டு கழன்றது போல் ஆகி எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியாமல் போனவர்களும் இருக்கின்றனர். பலர் ஏதோ கட்சி இருக்கிறது என்பது போல் சுமாராகவும் இருக்கின்றனர்.  எவ்வளவு முட்டி மோதியும் ஒன்றும் சோபிக்காமல் இருப்பவர்களும் இருக்கவே செய்கின்றனர்.  ஏன் இவ்வாறு அரங்கேறுகிறது? எப்படியும் ஒருவர் தான் ஆளுங்கட்சியாக இருக்க முடியும்?  அதோடு இருமுனை துருவ அரசியல் தான் எம்மாநிலத்தில் என்று கூறபடுகிறது.  ஏன் இவ்வளவு கட்சிகள் ஆச்சார அனுஷ்டானங்களை கடைபிடிப்பது போல் ஜோதிடர்கள் கூறுவதை கேட்டும் எதுவும் பல வருடங்களாக நடக்கவில்லை?  அது ஜாதி கட்சியோ, மத கட்சியோ, திராவிட கட்சியோ, பொது கட்சியோ கூறியவர்கள் சரியாக கூறியிருந்தால் நிச்சயம் நீங்கள் ஆளும் கட்சியாக ஒரு முறையாவது வந்திருக்க வேண்டும் இல்லையா?  இதே போல் தான் அனைத்து சுபநிகழ்ச்சிகளும் நடக்கிறது.  ஆனால் பல விவகாரத்துக்கள் ஏன் அதிகமாக நடக்கிறது?  இன்று  'ரியல் எஸ்டேட்' ஆனது 'முயல்' பிடிக்கிற கதை போல் ஆகி அதள பாதாளத்திற்கு  சென்று ஏன் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது?  அவர்களும் ஜோதிடம் பார்த்து தான் நிலம் வாங்கு கின்றனர் மற்றும் "Flat" விற்கும் Busness-ஐ தொடங்குகின்றனர்.  ஆனால் பல வருடங்கள் ஆகியும் விற்காமல் இவர்கள் முதலும், தொழிலும் கிட்டதட்ட "Flat" ஆனது போல் ஏன் ஆனது?  இது போல் எண்ணற்றவர்கள் சாதித்தவர்கள் முதல் வீழ்ந்தவர்கள் வரையான கதை ஒவ்வொரு ஊர்களிலும் மண்டிகிடக்கிறது.  அதற்காக ஜோதிட கலை பொய்யானது அல்ல.  அது ஓர் Danger Alert ஆகும்.  அதை நாம் கருத்தில் கொண்டு கவனமாய் இருக்கவே இந்த ஜோதிடம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இதனை கண்டுபிடித்து அதை மக்களிடம் கொண்டு சேர்த்தனர்.  ஆனால் இன்று இது உலக வர்த்தகம் போல ஆகி பெரும்பாலும் வர்த்தகம் மட்டுமே நடக்கிறது. 

திமுக, அதிமுக -வானது இவ்வாறு எந்த ஜோதிடரையும் கலந்தோசிக்காமல் ஆரம்பித்து ஆட்சியை பிடித்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

ஒவ்வொருவருடைய திறமையின் உழைப்பை அவர்களுக்காக எதையும் குறைந்தபட்சம் கிள்ளி கூட போடாமல் யாரோ எடுத்து செல்கிறார்கள்.  தனக்கு கிடைக்க வேண்டிய அங்கிகாரம் பறிக்கபட்டு பலர் வாழ்கின்றனர் என்று நிச்சயமாக கூறவில்லை. 

அதோடு உழைக்காமல், நோகாமல் அடுத்தவரின் பணத்தை பகல் கொள்ளை அடிக்கிறார்கள்.  அதோடு அவர்ளின் "காலை" பிடித்தே வாழ வைப்பதற்கான அத்தனை பித்தலாட்டங்களையும் அரங்கேற்றி அவர்களின் பாதத்தை "நாக்கு போட்டு நக்க வைத்து இருக்கிறார்கள்" என்று கடுமையான முறையில் உண்மையானதை உரைக்கும் படி கூற நிச்சயமாக இதை கூறவில்லை.  ஒருவர் தன் திறமையால் பெற்ற புகழ், பணம் என்பதை இவர்கள் கேவலமாக மானங்கெட்டு பறித்து கொள்ள முற்படுகிறார்கள் என்றும் கண்டிப்பாக கூறவில்லை.  அதோடு  போலியானவர்களை கொரானா வாரி கொண்டால் இந்தியாவே வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும் அதோடு அரசியல்வாதிகள் முதல் பாமர மக்கள் வரை பலர் இம்மாதிரியான போலி ஜோதிட சாமியார்களின் "கால் நக்கிகளாக" இல்லாமல் தவிர்க்கபட்டு வாழ்வார்கள் என்றும் கண்டிப்பாக கூறவில்லை.

மேலும் மேலும்  நல்ல ஜோதிடர்கள் நல்லபடியாக புகழ் பெற்று பிரபலமாகி மேலே வர வேண்டும்  என்ற எண்ணம் எப்போதும் என் மனதில் இருந்து துடியாய் துடிக்கிறது.  அது அதிமாக நடக்கவில்லையே என்பது தான் என் மன வேதனை.

இதில் ஏதாவது இலுமினாட்டிகளின் மிக பெரிய Chain Link தொடர்பு ஏதாவது இருக்குமா? என்ற சந்தேகம் எழுகிறது.  ஏனென்றால் ஒவ்வொன்றிற்கும் ஒரு இலுமினாட்டி இருக்கும் போது இந்த ஜோதிடத்திற்கும் ஜோதிடவாசிகளுக்கே தெரியாமல் யாராவது மாய மாந்தீரிகம் செய்யும் இலுமினாட்டி யாராவது இருக்க வாய்ப்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஒருவரின் திறமையை வேறொருவர் பறிக்கும் ஈனச்செயலை விட கேவலமான செயல் உலகில் இல்லை.  இதில் ஈடுபட்டுவிட்டு ஆச்சாரம், அனுஷ்டானங்களை பற்றி கூறுவதில் மற்றும் எந்த கெட்ட பழக்க வழக்கத்தை பற்றியோ கூறுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.  எதுவும் முடியாதவன் மற்றும் உழைத்து சம்பாதிக்கவே தன்னால் முடியாது என்று இருப்பவர்கள் மட்டுமே இவ்வாறாக ஈடுபடுவார்கள்.  இவர்கள் ஆம்பளையை பற்றியோ, வீரத்தை பற்றியோ பேச துளியும் அருகதை இல்லாதவர்கள்.  இது அனைத்தும் தவறானவர்களை மட்டுமே குறிப்பிடும் ஒன்றாகும்.   

காக்காய் உட்கார பனங்காய் விழலாம்.  ஆனால் பனங்காய் விழும் என்றே தெரிந்தே  காக்கா உட்கார்ந்து ஏதாவது கூறினால் அது ஒரு தாழ்ந்த நிலை ஆகும்.  இவ்வாறு தாழ்ந்து இருந்துவிட்டு எந்த தாழ்வை பற்றியும் இவர்கள் பேசினால் அவர்கள் ஓர் இழி குலத்தில் பிறந்து இழிவான செயல்களை செய்வதாகவே கருதபடுவார்கள்.

நான் என் ஊரின் அருகில் உள்ள கல்லூரியில் பொறியியல் பட்ட படிப்பிற்கான சீட் கேட்டிருந்தேன்.  அவர்களும் ஒரு சீட் இருக்கிறது என்றனர்.  Donation இல்லாமல் ரூ. 32,500  Fees கட்டினால் போதும் என்றனர்.  உடனே நான் இரண்டு நாட்களில் பணம் ரெடி பண்ணி கொண்டு சேர்ந்து விடுகிறேன் என்றேன்.  வீட்டில் கூறினேன் இந்தியாவில் யாரும் பெரிதாக ஜோதிடமே பார்க்காதவர்கள் என்னையும் சேர்த்து யாரும் இல்லை எனலாம். நாங்களோ என் ஜாதகத்தை பார்த்து என்ன படிப்பில் சேரலாம் என்று கேட்டு எதிலும் சேரவில்லை.  ஆனால் அஷ்டமி, நவமி என்ற ஜோதிடத்தை மட்டும் பார்த்து இரண்டு நாள் கழித்து சேரலாம் என்றிருந்தோம்.  பிறகு இரண்டு நாட்கள் கடந்து அந்த கல்லூரிக்கு சென்று கேட்டதற்கு சீட் முடிந்துவிட்டது என்றனர்.  உடனே நான் ஏற்கனவே கூறிவிட்டு  தானே சென்றிருந்தேன்.  அஷ்டமி, நவமி முடிந்து சேரலாம் என்று நினைத்தேன் அதோடு இரண்டு நாட்கள் தானே என்பதால் தான் Advance கூட கட்டவில்லை என்றேன்  .  அதற்கு அவர்கள் நீங்கள் பார்த்த மாதிரி உங்களை போன்றே இந்து மதத்தில் உள்ள நபர் பார்க்கவில்லையே மொத்த Fees-ஐயும் கட்டிவிட்டனர்.  அதனால் சீட் கொடுத்துவிட்டேன் Better Luck Next Year என்றனர்.  பிறகு அப்போது எனது மாவட்டத்தில் எங்கும் சீட் கிடைக்காததால் அடுத்த வருடம் வேறொரு கல்லூரியில் 1 லட்சம் Donation உடன் ரூ.50,000 Fees உடன்ரூ. 7,500 கல்லூரி பஸ் போக்குவரத்திற்காக கொடுக்கபட்டு  மூன்று வருடத்தில் முடித்துவிட்டு வர வேண்டிய தொகையை ஒரு வருட படிப்பிற்கே நல்ல கிழமை, நேரம் பார்த்து ஒப்பாரி வைக்காத குறையா தேம்பி தேம்பி அழுது கொடுக்க வேண்டியதானது. ஆங்கில வழி கல்வி என் மண்டையில் ஏற ஒரு வருடம் 6 மாதம் ஆனது.  பிறகு ரோபோ போல படித்தும் நான் Pass ஆவதில் ஏகபட்ட இடர்பாடுகள்.  அதனை எல்லாம் என் சாமர்த்தியத்தில் மிரட்டலாக கடந்து தான் Pass ஆனேன்.  நல்ல கிழமை, நேரம் பார்த்து சேர்ந்தும் எனக்கு ஏன் இவ்வளவு இடர்பாடுகள்?  அதற்கு ஏற்கனவே நான் சேர இருந்த கல்லூரியில் சேர்ந்து அத்தனை இடர்பாடுகளையும் சந்தித்திருக்கலாமே.  சந்தித்திருந்தால் எனக்கு இவ்வளவு பணம் நஷ்டம் வந்திருக்காதே.  அதோடு படித்து முடித்தும் B.E சம்பந்தபட்ட வேலைக்கு செல்ல முடியவில்லை.  நான் ஏற்கனவே D.M.E  படித்து வேலையில் இருந்த அதே வேலைக்கு தான் சென்றேன்.  சாக்கடையில் விழுவதற்கு  எதற்கடா நல்ல நாள் என்பது போல் என்னை பலர் இந்த வேலைக்கு செல்வதற்கு எதற்கடா B.E Mechanical என்கிற டிகிரி என்று கிண்டலடித்தார்கள்.  பணம் போனது, நண்பர்களிடம் ஏளன சொல் வாங்கினேன் இதை தவிர வேறு எதை எனக்கு இந்த ஜோதிடம் வழங்கியது.  நமக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று ஜோதிடம் மூலமாக இருக்கிறது என்றால் என் வாட்டத்தை மற்றும் பல சதி வேலைகளை அது முறியடித்து எனக்கு வெற்றி கனியை தந்திருக்க வேண்டும்.

அதோடு ஜாதகம் பார்த்து நல்ல கிழமை, நாள் என்று முகூர்த்தம் பார்த்து என் மகன் என்ன படிக்க வேண்டும், திருமணம் ஆன பிறகு எப்போது சாந்தி முகூர்த்தம் என்கின்ற தாம்பத்யம் பண்ண வேண்டும் என்று கேட்டு படித்த மற்றும் படுத்த பல பேருக்கு குழந்தையும் இல்லை, தாம்பத்யமும் சுகமாய் அமையாமல் மன வேதனையில் பலர் தத்தளித்து கொண்டிருக்கின்றனர்.  .கா:-  சென்னையில் குழந்தையின்மை அதிகம் என்கிற சர்வே. அதோடு இவ்வாறு படித்த அனைவரும் Distinction-ல் Gold Medal வாங்கிவிட்டார்களா?   ஏன் எதுவும் பலருக்கு சரியாக நடக்கவில்லை, அமையவில்லை. அனைத்தையும் கவனமாக பார்த்து பார்த்து செய்தும் இதில் எங்கு பிழை நடந்தது?  ஏனென்றால் நியாயமாக பார்த்தால் இந்த ஜோதிடம் நமக்கு வரும் சங்கடங்களை தூள் தூளாக்கி இருக்க வேண்டும்.  அப்படி எதாவது யாருக்காவது நடந்திருந்தால் வாழ்த்துக்கள். ஜான் ஏற முழம் சறுக்கினால் கூட  பரவாயில்லை. அதற்கே எங்கேடா ஜோதிட சக்தி என்று மனம் கேட்கும். இங்கு மொத்தமும் சறுக்கி உள்ளதே. இதை போல் எத்தனை பேருக்கு நடந்திருக்கிறதோ?  அதனால் ஜோதிடத்தை பற்றி கூறினால் மனம் எதையும் "லகிக்க" மறுக்கிறது.  'பிருந்தாவனம்' போன்ற வாழ்க்கை நம்முடைய 'திருந்தா' மனத்தால் இப்படியே இருந்தால் மொத்தமாகவே பாழாகிவிடுமோ என்ற எண்ணம் தான் மேலோங்குகிறது.  இப்படியே இதற்கு 'வருந்தா' மனதுடன் இருந்தால் நம்முடைய அனைத்தையும் சிறுக சிறுக அடுத்தவர்கள் எடுத்து கொண்டு நாம் அழிவது உறுதி என்று தான் எண்ண தோன்றுகிறது. என்னை போன்ற பலர் இதற்காக அதிகமாக செலவழித்ததில்லை மற்றும் இதனை பெரிதாக நம்பியதும் இல்லை ஆனால் சுபநிகழ்ச்சிகள், பணம் கொடுப்பது, வாங்குவது மற்றும் காலேஜ் சேர்ப்பது என்பது போன்றவைகளில் நல்ல நேரம், ராகு காலம், எம கண்டம் என்று ஜோதிட பஞ்சாங்கம் பார்ப்பது வழக்கம்.  இதற்கே எங்களுக்கு இது போன்ற மாபெரும் இழப்புகளை தாங்கி கொள்ள முடியவில்லை.

இதையெல்லாம் பார்க்கும் போது அப்பாடா ஆள விடுங்கடா சாமி நீங்களும் உங்க ஜோசியமும் என்று மனம் வெறுப்பின் உச்சத்தை தான் அடைந்துள்ளது.  அதோடு ஓசியில் தொப்பை நிரப்புவதற்கு தொப்பை நிரப்பிகளின் கூட்டம் நிரம்பவே இருக்கிறதோ என்ற சந்தேகம் தான் எழுகிறது.  அதோடு இதில் இலுமினாட்டியின் சதி மற்றும் பங்கு இருக்குமோ என்ற எண்ணம் வருகிறது.  ஏனென்றால் இதுவரை அவர்கள் வீரத்தில் சாய்தத்ததை விட துரோகத்தில் சாய்த்தது தான் அதிகமாக உள்ளது.  சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பது போல் தான் இதுவரை யாருக்கும் தெரியாமல் உலகை கைப்பற்ற மிக பெரிய மோசடி சிலந்தி சதி வலையை பின்னினார்கள்.  ஆனால் பலருக்கு இன்று இவர்களின் சுயநல பின்னல் தெரிந்துவிட்டது.  எதுவும் நமக்கல்ல இவர்களுக்காக நம்மை ஏவல் ஆள் போல் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது இன்று சம்பந்தபட்ட ஏவல் ஆட்களுக்கே வெட்ட வெளிச்சமாகி உள்ளது.  

எது எப்படியோ உழைக்காமல் ஊரை ஏய்த்து ஓசியில் பிழைக்கும் கூட்டம் பெருகி  உள்ளது தெளிவாக தெரிகிறது.  எவ்வளவு வாந்தி வந்து குமட்ட கூடிய  மானக்கெடான துரோகத்தையும் செய்து தொந்தியை நிரப்புவதில்  படு ஜோராய் பலர் இறங்கி உள்ளனர் போலும்.  இவர்களால் பல நல்ல கனவான்களுக்கும் கெட்ட பெயர்.  இதை பேரிகார்ட்  போட்டு தடுத்து நிறுத்த வேண்டும்.

இந்த பாவ கார, மோச கார கூட்டம் மேலும் பெருமளவில் அங்கங்கு கூடாமல் கலைத்துவிட்டு,  அதோடு இவர்களை கழித்து கட்டவில்லையென்றால் நம்முடைய அனைத்தும் சிறுக சிறுக கழிக்கபட்டுவிடும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.  இது எந்த தனி  நபரையோ, ஜோதிட நிலையத்தையோ குற்றம் சாட்ட அல்ல.  பவித்ரமான ஜோதிடம்  பவித்ரத்துடன் இருக்க அரசானது இதில் பல வழி முறைகளை வகுத்து அரசு அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே ஜோதிடம் நிலையம் முதல் ஜோதிடம் பார்ப்பது வரை இருக்க வேண்டும் என்று ஆணை பிறப்பிக்காமல் இந்தியளவில் பல போலி ஜோதிடர்களை களைய முடியாது என்றே எண்ண தோன்றுகிறது.  அதாவது யார் வேண்டுமென்றாலும் ஜோதிட கடையை போட்டு உட்கார்ந்துவிடலாம் என்பது போல் இருப்பதால் தான் இவ்வளவு அட்டூழியங்கள் இந்தியா முழுக்க நடைபெறுகிறது.  அதாவது ஜோதிட சாஸ்திரத்திலேயே ஜோதிடம் பார்ப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற வழி முறைகள் எல்லாம் இருக்கிறது.  குரு இல்லாமல் இதை முறையாக கற்க முடியாது என்று கூறபடுகிறது.  குரு இருந்தே பலரால் பலவற்றில் சோபிக்க முடியாமல் கடமைக்கு பயிற்சியை முடித்தவர்களும் இருக்கிறார்கள், தீட்சை பெற்றவர்களும் இருக்கிறார்கள்.  கிளி ஜோசியத்தை கிண்டல் செய்கிறோம் ஓரறிவு ஜீவனிடம் நம் வாழ்க்கையை ஒப்படைக்கிறோம் என்று. அதிலாவது  பல பச்சை கிளிகள் நமக்கு பரிட்சையமாகி பின் பழக்கமாகி அதை வீட்டிலேயே வளர்த்து கிளிகள் அழியாமல் நமக்கே தெரியாமல் பாதுகாத்தோம்.    ஆனால் இவர்கள் கூட Compare செய்தால் இந்த செலவெல்லாம் ஒன்றுமில்லை.      

இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html