கிறுக்கல் துணுக்குகள் [LITTLE BITS]

 

Part-1 அழகிய கோலம் அலங்கோலம் ஆகாது. பக்தி  கொண்டாட்டமான சொர்க்கமான ஊஞ்சலாட்டம்  என்பது திருமஞ்சனமாகும்  என்பது போல  அரைத்த மாவுயே மாத்தி மாத்தி  திரும்ப அரைக்காமல் தம்பட்டம் அடித்து ரகம் ரகமாக அதில் விதம் விதமாக  சூப்பர் ஆக வம்ச விருத்தி, ஜோக்கர், கிரைம்  கிறுக்கல் துணுக்குகள்[A LOT OF MIXING UNITY LITTLE BITS.]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.




திருசிற்றம்பலம்

வைரா, வீரா, ராச என்று பல பெயர்களுடன் ஒரு பெயராய், ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN தளத்தில் ரிதம் F.M 605 108-ன் வாயிலாக அஸ்திவாரங்களாகிய வாசகர்களே.

கிறுக்கல் துணுக்குகள் [LOT OF MIXING LITTLE UNITY BITS]:-

வம்ச விருத்தி:-

வம்ச விருத்தி என்பது குழந்தை பெற்று கொள்வது என்று சாதாரணமாக கடந்து செல்ல முடியாது.  அது பக்தி  கொண்டாட்டமான சொர்க்கமான ஊஞ்சலாட்டம் என்பது திருமஞ்சனமாகும் என்பது போல அந்த வம்சத்திற்கான ஓர் அம்சமாகும்.  அது அந்த குலத்தின் குல விளக்காகும்.  அதனால் தான் பல கௌரவ கொலைகள் காலம் காலமாக அரங்கேறுகிறது.  அது தவறு என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அவர்களை பொறுத்தவரை அது வம்சத்தின் களங்கமாக கருதுகிறார்கள்.  பலர் படிப்பை வம்ச கௌரவமாக கருதுகிறார்கள். அதனால் தான் பலர் பல ஆயிரங்களையோ, லட்சங்களையோ கொட்டி கொடுத்தாவது தன் பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர்.  அதாவது படிக்காத எங்கள் வம்சத்தில் முதன் முதலாக படித்தவன் வர வேண்டும் என்பதாலும், சிலர் டாக்டர் படிப்பு, பொறியியல் படிப்புகள் படிக்க வைத்து எங்கள் வம்சத்திலும் இந்த படிப்பு படித்தவர்கள் இருக்கிறார்கள் என்று பெருமையாக சொல்லி கொள்ளவும் படிக்க வைக்கிறார்கள். ஓர் வம்சத்தில் பிறக்கும் குழந்தையானது பல விருத்திகளை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு, எதிர்பார்ப்போடு  பலர் தாய்மை அடைந்து வம்ச விருத்திகளாகிய குழந்தைகளை பெற்று கொள்கின்றனர்.  எ.கா:- அமீர்கானின் குஸ்தி திரைபடம், நண்பன் திரைபடம். 

JOKER:-

ஜோக்கர் என்பது சீட்டு கட்டின் மன்னன் ஆவான்.  அதில் மட்டும் அல்ல சந்தோஷத்திற்கு அதிபதியும் இவனே.  அதோடு பல வியாதிகளை கட்டுபடுத்தி ஆள்பவன்.  வயிறு குலுங்க சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பவன். சர்க்கஸ்-ல் வரும் ரகம் ரகமான அதில் விதம் விதமாக கேளிக்கை Joker ஒரு வகை. கூத்து கட்டி இரவு முழுக்க ஆடுபவர்களில் ஒரு ஜோக்கர் இருக்கிறான் அவன் ஒரு வகை.  இவ்வாறு ஜோக்கர்-கள் பல வகையில் இவ்வுலகத்தில் உள்ள மக்களை நிம்மதியாக வைத்து கொண்டு இருக்கின்றனர்.  மின்னல் மின்னுவது போல் உடையில் மின்னி இடி இடிப்பது போல் தனது குணசித்ர நடிப்பால், பேச்சால் மழை பெய்வது போல் சிரிப்பு மழையை வர வைக்க கூடியவர்கள் இவர்கள்.  அதோடு அந்த ஜோக்கர் உடையமைப்பு வித்தியாசமான ஒன்றாகும்.  அதோடு நானும் ஓர் ஜோக்கரை போன்றவன் தான்.  அதிபதி, மன்னன் என்று எது இருந்தாலும் அதில் நான் இல்லாமல் எப்படி?  அதனால் தான் இயற்கையாகவே இவர்களுடன் சேர்ந்துவிட்டேன்.  இவ்வாறு Side Bit சேர்க்காம எழுத கடுப்படிக்கிறது.  ஆனால் இந்த ஜோக்கர் பெயர் சிறு வயதில் எனக்கு பெரிதாக பரிட்சையமில்லை. 

கிரைம்:-

கிரைம் என்பதில் மாத்தி மாத்தி விதம் விதமாக பலவகைகள் உள்ளது.  குறிப்பிட்டு பெண்கள் சம்பந்தபட்ட கிரைம் என்பது பல உள்ளது அவற்றுள் சில.  அதாவது காதல் மற்றும் திருமணம் என்பது ஆண், பெண் என்ற இருவரின் மனம் ஒத்து நடக்க கூடிய நிகழ்வாகவே இது இருக்க வேண்டும்.  அதோடு இதில் பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கிறேன் இல்லையென்றால் காதலை சேர்த்து வைக்கிறேன் என்ற போர்வையில் பெண்ணை தவறான பாதைக்கு யார் அழைத்து சென்றாலும், வழி நடத்தினாலும் அவர்கள் அந்த பெண்ணிடம் உள்ள மானம், மரியாதை, கௌரவம் என்று பலதை அழித்ததாகவே அர்த்தம்,  இது குற்றமே.  கௌரவம், மானம் மரியாதை என்று கூறி அத்தனையையும் காலி செய்த ஆசாமிகளும் இருக்கவே செய்கிறார்கள்.  கேட்டால் அப்பாவியாக உங்கள் மானம் மரியாதையை காப்பாற்றவே கூறினேன் என்று பாசாங்கு செய்வார்கள்.  இந்த படு பாதகத்தை வயிற்று பிழைப்புக்காகவோ, பணத்தை கரைப்பதற்காகவோ, அபகரிப்பதற்காகவோ அல் இதில் சுய விளம்பரம் தேடி கொள்ளவோ என்று பல பிழைப்புகளில் எதற்காக இருந்தாலும் இல்லையென்றாலும் இதை  செய்துவிட்டு நான் நல்லவன் என்று சொன்னால் வல்லவர்கள் யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள்.  ஏனென்றால் அப்பழுக்கற்ற நல்லவர்கள் ஏமாந்ததால் தான் இந்த குற்றங்கள் எல்லாம் அரங்கேறி  சிறைக்கு செல்லாத குற்றவாளியாக இருக்கிறார்கள்.  அதோடு அழையா விருந்தாளியின் சமூக சேவை என்பது போல் பலரின் பாலியியல் தேவையை ஆற்றி கொள்ள நாமே விளக்கு பிடித்து கொடுத்துவிட்டு நான் கவரி மான் ஜாதி என்று சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை.  ஏனென்றால் விபச்சாரத்தில் பெண்களின் ஆரம்ப கட்டம் என்று சொல்ல கூடியவைகள் அனைத்தும் இதிலிருந்தே ஆரம்பமாகிறது.  இதற்காக எந்த கண்ணீர் மல்க கூடிய எந்த பதிலை கூறி நியாயபடுத்த நினைத்தாலும் விபரம் தெரிந்தவர்கள் யாரும் காது கொடுத்து கேட்க மாட்டார்கள்.  மற்றவர்களுக்கெல்லாம் அனுப்புகிறாய் எனக்கும் அனுப்புடா என்று வேண்டுமென்றால் கூறுவார்கள். அதற்காக இது பரவலாய் நடக்கிறது என்று அர்த்தமில்லை.  இதுவும் நடக்கிறது அவ்வளவே.   

பெண்ணின் கணவருக்கு எதாவது கெட்ட பழக்கமோ, பல தொடர்புகளோ இருந்தால் அக்கா எப்ப எழுந்திருப்பா திண்ணை எப்போது காலியாகும் என்பது போல் அவர்கள் எதாவது இதை பற்றி கூறினால் உடனே அவர்களை தவறான வழி நடத்துவதாக செவி வழி செய்தியாக கேள்விபட்டேன்.  காதலில் காதலனுடன் இருப்பதை விட, இருப்பதை போல வேறு பலருடன்  இருப்பது, உரையாடுவது, Chating செய்வது கேட்டால் என்னை நம்ப மாட்டாயா என்று கேட்பது இதனால் Breakup ஆனவர்களும் ஏராளம். எ.கா:- மன்மதன், இமைக்கா நொடிகள். இதிலும் பலர் தவறாக வழி நடத்தி உள்ளனர்.  அதாவது காதலன் ஏதாவது கேட்டால் இப்பவே இப்படி இருக்கிறான்.  கல்யாணத்திற்கு பிறகு எப்படி இருப்பானோ என்பது, சந்தேக பிராணியை காதலிக்கிறாள் என்பது, உன் கூட Compare பண்ணா என் காதலன் எவ்வளவோ மேல் என்று உரைப்பது மற்றும் இவன் அழகே இல்லை சுமாராக தான் இருக்கிறான் இவனை போய் காதலிக்கிறாயே என்பது.  இவ்வாறாக பலவற்றை பலர் கூறுவதால் காதலன் காயிலாங்கடை இரும்பு போல் ஆகி தூக்கி எறியபடுகிறார்கள்.  இதை போலவே சில மாறுதல்களுடன் ஆண் காதலித்தால் அவர்கள் நண்பர்கள் கூறுவார்கள்.  உதா:- என்ன மச்சான் உன்ன தவிர்த்து எல்லார் கூடவும் Chating, வெளியே செல்வது, உரையாடுவது என்று இருக்கிறாள் போலும். கேட்டால் நீ வர மறுக்கிறாய் அதனால் பலருடன் சுற்றினால் இப்ப உனக்கு என்ன பிரச்சனை எங்க போவனும் என்ன பண்ணணும் சொல்லு உடனே பண்ணுகிறேன் போகலாம் என்பாய் அதற்காக தான் என்பாள்.  ஊர் மேய்வதை இப்படி கூட மேயலாமா மச்சான் என்பான். உடனே அவன் கோபமாக அதெல்லாம் ஒன்றுமில்லை என்பான்.  உடனே அவன் இந்த அமிச்சல் பிடித்தவளின் உண்மையை கூறினால் நீ ஏன்டா டென்ஷன் ஆகிறாய் உன் நல்லதுக்கு தான் சொன்னேன் அதோடு அமிச்சல் மாடு என்றைக்கும் அமிச்சலுக்காக பல கட்டு கதை காரணங்களை கூறி கொண்டே தான் இருக்கும் என்பான்.  இப்படியே கடலில் செல்லும் படகில் சின்ன சின்னதா ஓட்டை போட்ட கதையாகி காதலே மூழ்கி போய்விடுகிறது.  சாரல் தானே என்று ஜன்னலை மூடாமல் இருந்து தொடர்ச்சியாக சாரல் மழை நீர் பட்டு வீடே ஓதமான கதை தான்.  அதோடு நம் பொன்னான தெளிவான வாழ்க்கை எதோ கிறுக்கி வைத்தது போல ஆகி பிறகு நாம் கிறுக்கன் ஆனது போல் ஆகிவிடுகிறோம்.  அதை கிறுக்கல் துணுக்கு மூட்டையில் ஓர் கிறுக்கல் ஆக தம்பட்டம் அடித்து சூப்பர் ஆக கூறிவிட்டேன்.  THIS IS A LOT OF MIXING UNITY LITTLE BITS.

முகமதியர்களின் சுல்தான் ஆட்சியில் "பராக்" என்றால் "வரார்" என்று அர்த்தம். பேட்ட பராக் போல வீரா வரார், வைரா வரார், ராச வரார் என்பது.  இது அனைத்தும் ஒன்றாக அதோடு பெயரில் பல PUNCH வசனங்களுடன் இருக்கும் நான் என்றென்றும் உங்களுக்காக நான் எழுத்துக்கள் அடங்கிய ஆர்டிகல்லாக உங்கள் மனதில் வரைய "வரார்" என்று வந்து கொண்டே இருப்பேன்.  இன்னும் அரசியல் கட்டுரை எழுதின மூடு போகலைங்க. அதோடு என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும். 

 இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html