வாடா கொத்தடிமை பரம ரகசியம் [The Secret Slave]



வாடா கொத்தடிமை பரம ரகசியம் [The Secret Slave]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.




"கொத்தடிமைகளாக்கும் பரம ரகசியம்" என்ற ஆர்டிக்கல் JMN-ன் ரிதம் F.M 605 108 -ல் 140-வது கட்டுரையாக  வெளிவருகிறது.  இக்கட்டுரையானது எந்தவொரு ஜோதிடர்களையும், ஜோதிட சாஸ்திரத்தையும் குறை கூற எழுதபட்டது அல்ல. அதோடு எந்த குறிப்பிட நபர்களையோ, தலைவர்களையோ கூற அல்ல.   

உண்மையான  ஜோதிட கலை என்பது என்ன?  அதோடு அதில் இன்று பல புனையபட்டுள்ளதாக கூறபடுகிறது.  அதோடு ஜோதிட கலைக்கு எந்த பணமும் வாங்க கூடாது என்று சாஸ்திரங்களிலேயே சொல்லபட்டுள்ளது.  எதற்காக என்றால் தன்னுடைய சுயலாபத்திற்காக ஜோதிடத்தின் புனித தன்மையை கெடுத்து அதில் பல பேர் ஆதாயம் பார்ப்பார்கள் என்பதற்காக தான்.  அதனால் தான் பல போலி சாமியார்கள், ஜோதிடர்கள், நரபலிகள் கொடுக்கும் ஆசாமிகள் மாட்டிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.  இன்னும் பல பேர் மாட்டாமல் பலருடைய பணத்தில் குளிர் காய்ந்து கொண்டு இருக்கின்றனர்.  இதுமட்டுமல்லாமல் பல நல்ல அழகான குடும்ப பெண்களிடம் ஜோதிடம் என்ற பெயரில் பல போலி சாமியார்கள் உறவு வைத்து கொள்வது வரை நீள்கிறது.   ஜோதிடம் என்பது எதிர்காலத்தில் மற்றும் நிகழ் காலத்தில் நமக்கு எதுவும் தீங்கு நடக்காமல் முன்னெச்செரிக்கையாக எச்சரிக்கும் ஓர் எச்சரிக்கை கருவியாகும்.  நல்ல ஜோதிடர்கள் என்றும் நல்லவர்களே.  அவர்களால் பயன் பெற்றவர்கள் ஏராளம்.  அதே போல் கெட்ட ஜோதிடர்களால் பணத்தை இழந்து சீரழிந்தவர்களும் ஏராளம். 

பஞ்சாங்கத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளது.  அது கௌரி பஞ்சாங்கம் மற்றும் வாக்கிய பஞ்சாங்கமாகும்.  இதில் வாக்கிய பஞ்சாங்கம் தான் உண்மையானது என்கிறார்கள்.  இன்னும் சிலர் கௌரி பஞ்சாங்கம் தான் சிறந்தது என்கிறார்கள்.   முன்னோர்கள் வகுத்த பஞ்சாங்கம் எது?  பிறகு மற்றொரு பஞ்சாங்கம் எப்படி வந்தது?  அதே போல் ஜாதகம் பார்த்து தோஷம் எதாவது இருந்தால் கோயில்களில் சென்று செய்தால் மட்டுமே நிவர்த்தியாகும் என்று சில ஜோதிடர்கள் கூறுகின்றனர்.  இன்னும் சில ஜோதிடம் பார்க்கும் நபர்கள் பிரைவேட்டாக வீட்டில் பூஜை செய்து நிவர்த்தி செய்ய வேண்டும் என்கின்றனர்.  இதில் எது உண்மை?  கோயில்களிலேயே புராதரமான கோயில்கள் பல இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட கோயிலையே பரிந்துரை செய்கின்றனர். பல கோயிலுக்கும் இவர்களுக்கும் எதோ ஓர் கமிஷன் தொடர்பு இருக்கிறது அதனால் தான் ஒரு சில ஜோதிடர்கள் வற்புறுத்தி அங்கு தான் நிறைவேற்ற வேண்டும் என்று கிட்ட தட்ட அடம்பிடிக்கிறார்கள் என்று கூறபடுகிறது.  இது ஓர் மிக பெரிய Chain Link தொழில் ஆனது போல் கூறபடுகிறது.  எ.கா:- காஷ்மோரா, சார்லி ஜோதிடராக நடித்த சூர்யா படம், சிலம்பாட்டம் படத்தில் மயில்சாமியின் தாயத்து கயிறு காட்சிகள், பாளையத்து அம்மன் விவேக் காமெடி.

சைவ தலங்களை குறி வைத்து பல வதந்திகளை பரப்பி விடும் வேலையை பொறுத்தால் பூமி ஆள்வார் என்பது போல் சிலர் பொறுமையாக பரப்பி  குறிப்பிட்டு ஒரு வேற்று மாநில வைஷ்ணவ  கோயில்களுக்கு அனுகூலங்கள் செய்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.  ஆந்திர மாநிலத்தில் தான் காலஹஸ்தி என்கிற பிரபலமான பரிகார தலம் உள்ளது என்பது குறிப்பிட தக்கது.  அதோடு இதில் பெரும்பாலும் ஈடுபடுவர்கள் வைஷ்ணவர்கள் தானோ என்ற எண்ணம் வருகிறது.  அதோடு பிரபலமானவர்கள் முதல் பல பேருக்கு பரிட்சையமில்லாத ஜோதிடர்கள் கூட பெரும்பாலும் வைஷ்ணவ ஜோதிடர்களாக இருப்பார்களோ என்ற சந்தேகம் வருகிறது.  எனக்கு தெரிந்து பெரிதாக சைவம் என்கிற சிவ பிரிவை சார்ந்த ஜோதிடர்கள் இருப்பதாய் தெரியவில்லை.  அதோடு பிரபலமாக இருக்கும் ஜோதிடர்கள் சிவ பிரிவை சார்ந்தவர்களா அல் வைஷ்ணவ பிரிவை சார்ந்த ஜோதிடர்களா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டி உள்ளது.  அதற்காக வைஷ்ணவ பிரிவை சார்ந்தவர்கள் நம்பிக்கை மோசடி செய்யும் ஆட்கள் என்று கூறவில்லை.  ஏனென்றால் எனக்கு ஜாதகம் பார்ப்பவர் வைஷ்ணவ பிரிவை சார்ந்த தெலுங்கு பிராமணர் ஆவார். அவர் 605 108-ல் பலருக்கும் பரிட்சையமான ஒருவரே.  அவர் பணத்திற்காக எதையும் கூறியதில்லை.  பொருந்தாது என்றால் பொருந்தாது என்று தான் கூறுவார்.  ஒரு சிலர் அனைத்திற்கும் பரிகாரம் இருக்கிறது என்பார்கள்.  அதே போல் ஒவ்வொரு ஜோதிடர்கள்  ஒவ்வொரு மாதிரியாக ஒரு சிலவைகளை கூறுகிறார்கள்.  இதில் ஏவல் எடுப்பவர்கள் மற்றும் முன் ஜென்ம சாபத்தை நிவர்த்தி செய்கிறேன் என்று கூறும் ஆட்கள் வேறு உள்ளனர்.  இவர்கள் வள்ளுவ ஜாதி பிரிவை கொண்டவர்களாக உள்ளனர்.  வள்ளுவ பிரிவில் ஜோதிடம் பார்ப்பவர்கள் மட்டும் தான் உள்ளனர் என்று நினைத்தேன்.    

பழனி கோயிலை பற்றி தவறான வதந்தி உள்ளது.  அதாவது கோமணத்துடன் ஆண்டியாக மலையில் இருக்கும் சாமியாம். அதனால் அவரை வேண்டி பிறந்தாலோ, அவரை வணங்கினாலோ, அவர் பெயரையோ, பழனி என்று பெயர் வைத்தாலோ நம் நிலமையும் அது தானாம்.  இவ்வாறாக சிவ குடும்ப கோயில்களில் பல வதந்திகளை கிளப்பி விட்டுள்ளனர் சதிகாரர்கள்.  திருப்பதி கோயிலில் லட்டு Famous போல.   இங்கு பஞ்சாமிர்தம் Famous ஆகும்.  இந்த பாதககாரர்களுக்கு கூற விழைவது ஒன்றே ஒன்று தான்.  பழனி ஸ்ரீ தண்டாயுத பாணி முருக பெருமானை வணங்கி எவ்வளவு பேர் நன்றாக வாழ்கிறார்கள் என்று தெரியுமா?  அப்படி இல்லையென்றால் இவ்வளவு கூட்டம் எப்படி வரும்?  அதோடு தமிழ்நாட்டு முதல்வர் பெயரே முருகர் ஊராகிய பழனி பெயர் உடைய பழனிசாமி என்ற பெயர் தான். என்னையே திருப்பதி கோயிலில் திருமணம் செய்ய சொல்கின்றனர்.  அதாவது இவ்வாறு பல வதந்திகளை அள்ளிவிட்டு யாரோ பிழைப்பு நடத்த நினைக்கிறார்கள்.  இதற்காக எந்த எல்லைக்கும் சென்று யாரையும் எந்த படுகுழியிலும் தள்ள  தயாராக இருக்கிறார்கள் என்றே நினைக்க தோன்றுகிறது.  வைஷ்ணவ தலங்கள் எவ்வளவு இருக்கிறது இருந்தும் குறிப்பிட்டு திருப்பதி ஏழுமலையான் மட்டுமே உலகம் முழுக்க விஸ்திகரிக்க படுகிறது.  இவ்வாறு ஏன் மற்ற வைஷ்ணவ தளங்கள் மற்ற இடங்களுக்கு எடுத்து கொண்டு செல்லவில்லை. 

சகுனம் பார்ப்பதில் இருந்து Astrology, Numerology என்று ஜட்டியில் உள்ள கலர் வரை ஜோதிடர்களே  முடிவெடுக்கிறார்கள்.  இதில் உண்மையிலேயே ஜாதகம் பார்த்து நமக்கு ஆகாத கலர்களை பரிந்துரை செய்வதும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.  இது  ஜோதிட  சகுனிகளை வைத்து நடத்தும் சூழ்ச்சி நாடகமாகும்.  அதாவது ஜோதிடர்களை குளிப்பாட்டி மற்றும் விலைக்கு வாங்கி தனக்கு சாதகமான பலவற்றை நோகாமல் பெற்று கொள்கிறார்கள்.  அதனால் தான் பல பேர் குறுகிய காலத்திலேயே பல பெரிய பண முதலைகளை கைக்குள் போட்டு  கொண்டு ஏகபோகமாக சுகமாக வாழ்கிறார்கள்.  அதோடு பண முதலைகளின் உண்மையான விஸ்வாசிகளை இந்த ஜோதிடம் மூலமாக மற்றும் பல வேலைகள் செய்து அவர்களை வெளியேற்றி விட்டு தனக்கு சாதகமானவர்களை அமர்த்தி  பண முதலைகளை முழு கட்டுபாட்டிற்கு கொண்டு வந்து அவர்கள் இஷ்டத்திற்கு செயல்படுகின்றனர்.   அதன்பின் தலையாட்டி பொம்மைகளாகவே அவர்கள் வாழ்க்கை இருந்து விடுகிறது.  பல பணமுதலைகளை கொத்தடிமைகள் போல ஆட்டுவிக்கும் ஆட்டக்காரர்கள் இந்த ஜோதிடர்களே.    

ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்களை மூளை சலவை செய்வது போல் கொஞ்சம் கொஞ்சமாக சலவை செய்து ஜோதிட வலைக்குள் சிக்க வைக்கிறார்கள்.  பிறகு எதாவது நல்லது நடந்தது போல் சிறிய விஷயத்தை பெரிய அளவில் ஊதி மேலும் இந்த நம்பிக்கையை வலு பெற செய்கிறார்கள்.

அதோடு ஜோதிடம் என்ற பெயரில் சோழி உருட்டுவது முதல் பல பிரிவுகள் உள்ளது. ஜோதிடம் என்பது அரசியல் வட்டாரத்தில் மிகவும் தீவிரமாக உள்ளது.  சமீபத்தில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டில்  இறந்த கட்சி தலைவி அவர்கள் இதில் மிக பெரிய நாட்டம் உள்ளவர் ஆவார்.  அதோடு அவருக்கு வேறொரு மன்னார் குடி தோழி ஒருவர் நெருக்கமாக இருந்துள்ளார்.  அவருடைய பெரும்பான்மையான சொத்துக்களை அவர்தான் நிர்வகித்தார் என்று கூறபடுகிறது.  இதற்கு காரணம் ஜோதிடம் என்ற பெயரில் அவருக்கு கூறிய தவறான அறிவுரைகள் என்று கூறபடுகிறது. இதை கட்சியில் ஒருவரை தேர்ந்தெடுத்து இருக்கலாமே என்று நீங்கள் கூறுவது புரிகிறது.  தன்னுடைய கட்சியில் இருந்தால் ஆபத்து அதனால் வெளியில் இருந்த ஆள் தான் உத்தமம் என ஜோதிடர்கள் கூறியுள்ளனராம்.  அதனால் தான் அவர்கள் திமுக கட்சியில் இருந்தவர்களாக இருந்தாலும் முக்கியத்துவம் கொடுத்தாராம்.   அதனால் தான் புரட்சி தலைவி அவர்களுக்கும் அந்த தோழிக்கும் பல முரன்பாடுகள் இருந்தும் அவரை தன்னுடைய பல விஷயத்தில் அனுமதித்தார் என்றும் சொல்லபடுகிறது.  அதாவது தன்னுடன் பணம் சம்பந்தபட்ட பல விஷயங்களில் மற்றும் தனக்கு மிகவும் நெருக்கமானவர்களின் ஜாதகங்களை தன்னுடைய ஜாதகத்துடன் ஒப்பிட்டு பார்த்து பொருத்தம் சரியாக இருந்தால் தான் பல பேர் தன்னுடன் வைத்து கொள்வார்களாம்.  இதற்கு காரணம் அவர்களுக்கு அறிவுரை வழங்கும் ஜோதிடர்கள் என்று சொல்லபடுகிறது.  இவ்வாறு பல அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள்  இம்மாதிரியாகவே பலரை தேர்ந்தெடுத்து உள்ளனர் என்று கூறபடுகிறது.

ஆட்சியில் இருக்கும் ஒரு பெரிய தேசிய கட்சியே இவ்வாறுதானாம்.  திடிரென்று முளைத்து உடனே காய், கனி காய்த்தது போல் பெரிய பதவிக்கு வந்த ஒரு பெண் மினிஸ்டர் இப்படி தான் வந்ததாக சொல்லபடுகிறது இது வதந்தியா என்று தெரியவில்லை.  மேற்கண்டவைகளும் வழக்கம் போல வதந்தியா என்று தெரியவில்லை.  ஆனால் மிக பெரிய ஆன்மீக பீட அதிபதியின் மீது கைது நடவடிக்கை பாய்ந்தது இதனை முன்னரே அறிந்து பல கட்சியிடமிருந்து போன் கால் எல்லாம் வந்ததாம் கைது நடவடிக்கை வேண்டாம் என்று.  ஆனால் கைது செய்யபட்டார் அதற்கு காரணம் வேறொரு ஜோதிடர் தானாம்.  அவர் தான் இவர் கூறிய அனைத்தும் தவறானது அதோடு உங்களை தவறாக வழி நடத்தி விட்டார் என்று கூறினாராம். உண்மையோ, பொய்யோ ஜோதிடர்கள் நோகாமல் எவ்வளவு சக்தி வாய்ந்த நபராக அங்கங்கு உள்ளனர் என்று இதைவிட ஓர் நல்ல எடுத்து காட்டில் கூற முடியாது.  இரத்த பந்தம், உறவு பந்தம் என்பதெல்லாம் எளிதாக தவிடு பொடியாக்கும் மந்திரம் தெரிந்தவர்கள் இவர்கள். 

ஜோதிடர்கள் கூறுவது தான் வேதம் என்று பலர் இருக்கின்றனர்.  இதனால் எந்த அளவு தோல்வி மற்றும் நஷ்டம் வந்தாலும் கவலைபடுவதில்லை. அதோடு அது பெரிதுபடுத்தாமல் சமாளிக்கபட்டு சிறிய சிறிய இலாபத்தையே பிரதானமாக பெரிதாக  சொல்லி பல பேர் குளிர் காய்வதாக சொல்லபடுகிறது. எ.கா:- ராட்ஷசன் என்கிற படத்தில் Producer and Director ஜாதகம் பொருந்தாததால் வேண்டாம் எனும் காட்சி, அஜித் நடித்த முகவரி படம், தில்லுக்கு துட்டு சந்தானம் திரைபடம், பிதாமகன் விக்ரம் திரைபடம் ஜெயில் காட்சி.

இதில் ஜோதிடர்களுக்குள் மறை முகமாக பெரிய போட்டியே நடக்கிறதாம்.  அதோடு இதிலும் பல சிலந்தி சதி வேலைகள் நடக்கிறதாம்.  அதாவது நம்முடைய நெருங்கிய நண்பர் கூறுகிறாரே என்று நம்பி ஜோதிடரை அமர்த்தினால் அவர் அந்த நண்பருக்கு தொழிலில் சாதகமான அனுகூலங்களை வர வைக்கும் வேலையை செய்கின்றனராம்.  அதோடு ஜோதிடத்தில் கூறியதாக பல தொழில்களை ஆரம்பிக்க செய்து அது சோபிக்காமல் நஷ்டம் ஆகி தெருவுக்கு வந்தவர்களும் இருக்கின்றார்களாம்.  தந்தைக்கும் மகனுக்கும் இடையே கட்டங்கள் சரி இல்லை என்று சொல்லி மகனை கட்டம் கட்டி தொலைவான இடங்களில் கிட்ட தட்ட தொலைத்தது போல் மகனை ஆஸ்டலில் கொண்டு சேர்த்து விடுகின்றனர்.  அதே போல் உறவினர்கள் முதல் நணபர்கள் வரை ஜோதிடத்தை காரணமாக சொல்லி விலக்க பட்டிருக்கிறார்கள்.  இதிலும் பலவற்றில் பல உள் குத்துக்கள் ஜோதிடருக்கும், மற்றவருக்கும் இருப்பதாக சொல்லபடுகிறது.

இவ்வாறாக இது அனைத்தும் பரம ரகசியமாக மேற்கொள்ளபடுகிறது.  பாற்கடல் தெய்வம் பரந்தாமனையே இவர்கள் வணங்க சொன்னால் தான் ஒரு சிலர் வணங்குவார்கள்.  அதாவது உங்கள் ஜாதகபடி இப்போது இந்த தெய்வத்தை தான் வணங்க வேண்டும் என்று கூறிவிட்டால் அந்த தெய்வத்தை தான் வணங்க வேண்டும்.  இவ்வாறாக எந்த நேரத்தில், திசையில் எந்தந்த வேலைகளை செய்ய வேண்டும் மற்றும் அமர வேண்டும் என்று கூறுகிறார்களோ அங்கு தான் கொத்தடிமை போல அமர வேண்டும்.  மொத்தத்தில் அவர்களுக்கு ஓர் கொத்தடிமையும், பணமும் நோகாமல் கிடைத்துவிட்டது என்று கூறலாம்.  Secret Society போல  இதுவும் Secret-ஆக செயல்படுகிறது. சதுரங்க வேட்டை படத்தில் ரைஸ் புல்லிங் என்று கூறி ஏமாற்ற ஹீரோ பேசுவாரே ஒரு Speech  அதைவிட ஒரு படி மேலே Speech பண்ணுவார்கள் இந்த பித்தலாட்டகாரர்கள்.  ரைஸ் புல்லிங் மோசடியும் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது.  இதில் ஒரு சில ஜோதிடர்கள் இதை யாரிடமும் கலக்க கூடாது என்று கூறி உங்களை கொத்தடிமைகளாக்கி கலக்கோ கலக்கு என்று கலக்குகிறார்கள்.  இவ்வாறு இருந்தால் "வாடா கொத்தடிமை" என்று தான் உங்களை நெருங்கியவர்கள் அன்போடு கூறுவார்கள். பல்லி விழுந்தால் நமக்கு என்ன பலன் விழுமோ ஆனால் இவ்வாறாக துரோகம் செய்யும் ஜோதிடர்களை நம் அருகில் வைத்து கொண்டால் நம்முடைய அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக விழுந்து நொறுங்கி விடும் என்பது மட்டும் திண்ணம்.  

இதில் எது ரைட், ராங் என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.  ராங் இருந்தால் ராங் கால் வந்தது போல் டெலிட் செய்துவிடுங்கள். ரைட் என்றால் மனதில் ஏற்று கொள்ளுங்கள்.  இதை கூறியது வெறி தனமான வாசகர்களுக்காக தான் மற்றபடி எந்த ஒரு தனி நபரையும், கட்சியையும் குறிப்பிட அல்ல.  இவ்வளவு சொல்கின்ற நானே என்னுடைய குடும்பத்திற்காக அதாவது Sentiment மிரட்டலால் என் கல்யாணத்தையே ஒத்தி வைத்தேன்.  அதாவது எனது தந்தை மற்றும் எனது ஜாதகத்தை பார்த்துவிட்டு நீங்கள் திருமணம் செய்தால் உங்கள் அப்பா மரணிப்பார் என்று கூறிவிட்டார்கள்.   என் தாய் தாலி அறுத்து நான் வேறொரு பெண்ணுக்கு தாலி கட்டுவதா அப்படியொரு திருமணமே தேவையில்லை என்று இருந்து இன்று எனக்கு 36 வயது ஆகிறது.  இதுவரை  பெண் பார்க்கும் படலமே எங்கள் வீட்டில் அரங்கேற்றபடவில்லை.   அதோடு திருமணமும் செய்யவில்லை.    அந்த வேகமே வரவில்லை பயம் மட்டுமே மிஞ்சியது.  அதற்கு காரணம் இதை வள்ளுவன் கூறியதால்.  வள்ளுவன் சொன்னால் சரியாக தான் இருக்குமாம்.  மற்ற ஜோதிடர்களை கேட்டால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்கிறார்கள்.  அதிக சண்டை போட்டு மற்றும் கருத்து மோதல்கள் இருந்தாலும் தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் என்பது போல தந்தை பாசம் ஆனது என்னை கட்டி போட்டது.  அதனால் தாலி கட்டி  திருமணம் மட்டும் செய்யவில்லை.  அதற்காக காலத்தோடு பயிர் செய்யவில்லை என்பதால் இயற்கை உபாயத்தை கட்டுபடுத்த முடியாமல் நானே யாரையும் தாலி கட்டாமல் வெளியில் வித விதமாக தேடி கொள்ளவில்லை.  அதாவது பிரம்மசாரி தான் ஆனால் பல சம்சாரம் இருக்கிறது பிரம்மசர்யத்திற்கு 'சாரி' என்பது போல் எதையும் ருசிக்கவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html