வேதமான நெறிபடுத்துதல் பலமா? பலி ஆவதா? [DISCIPLINE IS THE STRENGTH]

எண்ட குருவாயூரப்பா! அட கர்த்தரே! அட ராமா! ராமனே! ஆஞ்ச்சநேயா! என் புருவ மத்தியில் உள்ள ஆத்மேஸ்வரா! நெற்றி கண்ணேஸ்வரா! வில்லங்கமில்லாமல் திட்டவட்டமாக கூறைய்யா வேதமான நெறிபடுத்துதல் பலமா? பலி ஆவதா? வரம்மா? சாபம்மா? தோஷம்மா? நிவர்த்தியா? கோயில் கோபுரங்கள் பல தாழ்வாக இல்லாமல் தலை நிமிர்ந்து  அதில் மூலவர் உற்சவ மூர்த்தி ஒருவரே என்று உணர ஏராளமாக கோயில்கள் கட்டி விக்கிரக சாமி சிலைகள், கலசம் வைத்து, தெப்ப குளம் அமைத்து சாமிக்கு பூரண கும்ப மரியாதை கொடுத்து புனரமைப்பு செய்த சுல்தான்! நிஜாம்! சேர! சோழ! பாண்டியர்களே! பல்லவ மன்னர்களே! நேரடியாக பட்டவர்த்தனமாக கூறைய்யா வேதமான நெறிபடுத்துதல் பலமா? பலி ஆவதா? வரம்மா? சாபம்மா? தோஷம்மா? நிவர்த்தியா?[SYSTEM DISCIPLINE IS THE STRENGTH.  BUT  DISCIPLINE IS DIFFERNT IN SEVERAL TYPES OF SYSTEM]★ Valavanur புரட்சி கவிஞர் ரா.C.SaravanaLingam Chettiyar.

திருசிற்றம்பலம்






வைராவீராராச என்று பல பெயர்களுடன் ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN தளத்தில் ரிதம் F.M 605 108-ன் வாயிலாக அஸ்திவாரங்களாகிய வாசகர்களே.

தனக்கான ஒன்றில் யாரும் தலையிட முடியாது மற்றும் கேட்க முடியாது.  அதோடு அதில் எந்த பித்தலாட்டங்களையும் அரங்கேற்ற வேண்டிய அவசியமில்லை. எது நடந்தாலும் எப்போதும் புன்னகையுடன் வாழலாம்.  ஏனென்றால் அது அனைத்தும் அவனுடைய சுயசம்பாத்யம்.  அது சொத்தாகவோ, தொழிலாகவோ, மனைவியாகவோ அது வெவ்வேறு பெயர்களில் அவனிடம் இருக்கும் சுயங்களாகும்.  இதில் அவன் எப்பொழுது வேண்டுமென்றாலும் தவறு என்றால் விலகி பித்தம் தெளியலாம்.  அதனால் தான் இன்று சமூகத்தில் நல்ல பண்பாடு, கலாச்சாரம் காக்க கூடியவர்களும் இருக்கிறார்கள் மற்றும் கலாச்சார சீரழிவும் நடந்து கொண்டு இருக்கிறது.  அதனால் தான் உலகம் ரெயின்போ போல வண்ண மயமாக இருக்கிறது.  இதில் சரி தவறு என்றெல்லாம் ஒன்றுமில்லை.  இன்று தவறாக தெரிவது நாளை சரியாக தெரியலாம்.  இன்று சரியாக தெரிவது சில காலம் கழித்து தவறாக தெரியலாம். இதுவெல்லாம் அவர்கள் மனதை பொறுத்த விஷயங்கள்.  ஒரு வேலை எதையாவது இது தவறு என்று இகழ்ந்தால் அவர்கள் உடனே உங்களுடையதில் வேண்டுமென்றே எதையாவது கூறி இகழ்வார்கள் இது ஊர் அறிந்த ரகசியம். இதிலும் ஒரு Eco System மற்றும் Check and Balance மறைந்து உள்ளது. எடுத்து காட்டிற்கு சைவம் மட்டுமே சாப்பிடுகிறோம் என்றால் மற்ற விலங்குகளின் தொகையானது அதிகமாகிவிடும்.  அதோடு அது சம்பந்தபட்ட அனைத்தும் முடங்கிவிடும்.  அசைவமே சாப்பிட்டால் மற்ற சைவம் சார்ந்த ஊடு பயிர்கள் முதல் அத்தனையும் முடங்கி நிலங்கள் முற்றாக அழியும் அபாயம் இருக்கிறது.  இயற்கை என்பதே சைவம் சார்ந்தவைகள் தான் என்பது குறிப்பிடதக்கது. அதுபோலவே எல்லாவற்றிற்கும் மனிதர்கள் இருந்தால் தான் சரியோ தவறோ அனைவரின் தேவைகளும் தீரும்.  இன்று நமக்கு தேவைபடாதவைகள் நாளை தேவைபடலாம்.  எ.கா:- இன்று நாம் திருமணம் செய்த பெண் வேலைக்கு போக கூடாது என்போம். அது வீட்டோடு இருக்கும் வரை அது தனிபட்ட உரிமை. நட்பு வட்டாரத்தில் இதை பற்றி சக தோழர்களிடம் எப்படி பேசி இருந்தாலும் அதுவும் நட்பு வட்டாரத்துடன் முடிந்து போக கூடிய ஒன்றே. ஆனால் ஒரு வேலை அனைவரும் இருக்கும் மக்கள் தளத்தில் பெண்கள் வேலைக்கு செல்வதே கூடாது என்று தடை வந்துவிட்டால் நாளைக்கு நீங்கள் எப்படி உங்கள் மனைவியை வேலைக்கு அனுப்ப முடியும். அதனால் தான் ஜோசியம் முதல் ஆச்சாரம், அனுஷ்டானங்கள்  வரை அனைத்திலுமே விதிகளும் இருக்கிறது. விதிவிலக்கு போன்ற விதிகளும் இருக்கிறது.  உதா:- மனம் செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்றும் இருக்கிறது.  மந்திரம் ஜெபிக்க வேண்டும் என்றும் இருக்கிறது.  ஜாதகம் பார்க்க வேண்டும் என்றும் இருக்கிறது.  மன பொருத்தம் இருந்தால் ஜாதகம் தேவையில்லை என்றும் இருக்கிறது.  அனைத்திற்கும் பரிகாரமும் இருக்கிறது.  கீதை என்பதே என்ன அதில் முறையாக போர் புரிவதும் யுத்த நியதி என்று கூறபடுகிறது.  முறையற்று சதி, வஞ்சம் வைத்து போர் புரிவதும் தர்மம் மற்றும் யுத்த நியதி என்று கூறபட்டுள்ளது.  இராமாயணம் என்பதிலும் வாலியை சூழ்ச்சியால் கொன்றதும் தர்மம் என்று சொல்லபடுகிறது.  இராவணணன் இறக்கும் தருவாயில் மற்றும் போர்புரியும் போது தனியாக இருக்கிறாய் இன்று போய் நாளை வா என்றும் கூறபடுகிறது.  சிவன் என்பவரை வணங்குவதிலும் பல வேற்றுமையில் ஒற்றுமை என்பது போல் பல உள்ளது.  ருத்திரன், அகோரி, சித்தர்கள், ஜீவ சமாதி அடைந்தவர்கள்நாயன்மார்கள், ஓதுவார்கள் என்று.  இன்னும் பல ஆன்மீக ஆசிரமங்கள், ஆதினங்கள், மடங்கள், பீடங்கள் எல்லாம் உள்ளது.  இதில் ஒன்றில் சரி இல்லை என்று கூறபடுவது மற்றொன்றில் சரி இருக்கலாம் என்று கூறபடுகிறது.  பல தெய்வங்களை ஐயர்களை தவிர்த்து வேறு யாரும் தொட கூடாது என்றும் இருக்கிறது.  தொடலாம் என்றும் இருக்கிறது. பெண்கள் தீட்டுடன் சில அம்மன் கோயிலுக்கு செல்லலாம் என்றும் கூறபடுகிறது.  அன்பே சிவம் என்று சொல்லபட்ட இடத்தில் தான் ருத்திரர்களும் இருக்கிறார்கள்  வதம் செய்தால் தவறில்லை என்றும் கூறபடுகிறது.  இது இந்துக்களின் Concept அந்நியன் படத்தில் வரும் கருட புராணம் போல மற்றும் முஸ்லீம்களின் ஜிகாத் போல.  ஆனால் இது இந்து மதத்தில் கூறபட்ட ருத்திரன் Concept-ஐ கூறி நாம் அனைவரும் கெட்டவர்களை வதம் செய்து சாய்க்கும் ருத்திரர்கள் மற்றும் நம் மதத்தின் பாதுகாவலர்கள் என்றும் அதோடு யாராவது தவறாக பேசினால் அவர்களை வதம் செய்யலாம் தவறில்லை என்றும் இது வரை எந்த அமைப்புகளும் பெரிதாக தோன்றவில்லை. 

இது அனைத்திலும் அனைத்துமே இருக்கும் யாருக்கு எது பிடிக்கிறதோ அதை பின்பற்றி கொள்ளலாம் என்று இருப்பதால் தான் அனைத்து கோயில்களிலும் மக்கள் கூட்டத்தை காண முடிகிறது. அப்படியென்றால் எதுவும் தவறில்லை என்று தானே அர்த்தமாகிறது.  ஆனால் மக்கள் தொகை அதிகம் என்பதால் நெறிபடுத்துவதற்காக கூறபட்டவைகள் தான் அனைத்தும் என்பது சான்றுகள் நமக்கு தெளிவாக விளக்குகிறது. ஓர் உதாரணத்திற்கு குடி பாட்டில், அசைவம் கொண்டும் படைக்கபடும் தெய்வங்கள் இருக்கிறது.  அதோடு கஞ்சா என்பது சிவ பானம் என்றும் கூறபடுகிறது.  அதற்காக கஞ்சா அடித்து கொண்டு கோயில்களில் இருந்து விட்டு ஐயரிடம் விளக்கினால் ஏற்று கொள்வாரா?  அதோடு அது வேறு தெய்வம் இது வேறு தெய்வம் என்பார்கள்.  அவர்களே தான் கடவுள் ஒருவரே அவரை அடைய பல உருவ வழிபாடுகள் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.  அதோடு ஐயர்கள் பின்பற்ற வேண்டியவற்றை பின்பற்றவில்லையென்றால் அது ஐயர்களுக்கு தோஷம் என்றும் அவர்களின் சாஸ்திரங்களே கூறுகிறது.  ஒரு சிலரை இதை பற்றி கேட்டால் என்னை பார்க்கிறாய் நான் நன்றாக தானே இருக்கிறேன் என்கிறார்கள்.  குறைந்தபட்சம் பூனூல் போடும் ஐயர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய நடை முறைகள் மற்றும் மந்திரங்களை எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் மற்றும் உச்சரிக்கிறார்கள். கேட்டால் பூனூல் போடுவதே சங்கடமாய் இருக்கிறது என்று கூறுபவர்களையும் கேள்விபட்டிருக்கிறேன்.  இவ்வாறாக மக்களிடம் கூற காரணம் அது ஒருவனோடு முடிவதில்லை.  அதனால் தான் ஒரு வேலை இது எங்காவது அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடந்தாலும் பெரிய அளவில் பேசபடுவதும் இல்லை பெரிதுபடுத்தபடுவதும் இல்லை.  ஏனென்றால் ஏதாவது பேசினால் அது விவாத பொருளாகும்.  விவாத பொருளானால் அனைத்தையும் சரியாக புரிந்து கொள்ளும் மக்கள் அனைவருமாக நிச்சயம் இருக்க முடியாது ஒவ்வொருவருக்கும் சரியாக புரிய வைப்பதும் கடினமே.  ஒரு வேலை சரி தான் என்று இது அதிகமானால் கோயிலே கஞ்சாவின் புகை மூட்டத்தில் இருக்க வாய்ப்பிருக்கிறது.  திருமணமே இரண்டு திருமணங்கள் பண்ணினால் ஊர் மக்கள், சொந்த காரர்கள் என்ன சொல்வார்கள் என்று கூறினால் தெய்வங்களே இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ளார்கள் அதோடு கோபியர்களுடன் கொஞ்சி விளையாடி உள்ளனர்.  அவர்கள் செய்தால் சரி நாங்கள் செய்தால் தவறா என்று தர்க்கம் நடக்கிறது. இதற்கே அங்கு யாருக்கும் ஒன்று அமைவதே போதும் என்ற மனநிலை உடையவர்களே. மனைவியை சந்தேகிப்பது தவறு என்று கூறினால் ராமன் சந்தேகித்து யாரும் இல்லாத அடர் வனகாட்டிற்கு அனுப்பலாம் நான் என் மனைவியின் அம்மா வீட்டிற்கு அனுப்பினால் தவறா என்கின்றனர். இதற்கே எவருக்கும் திருமணம் கூட ஆகவில்லை.  அதோடு பொண்டாட்டிய எப்பதான்டா அடிக்கிறது என்கிற கவுண்டமணி காமெடி போல மற்றும் பல ஆத்திகம்நாத்திகம் பட்டி மன்றங்களிலும் இது போன்ற பல கேள்விகள் எழுப்பபட்டுள்ளது.

இவ்வாறாக பல அமைப்புகள், மனிதர்கள் இருப்பதால் தான் நாம் ஒரே போரடிக்கும் இயந்திர வாழ்க்கையில் சிக்கி கொள்ளாமல் ஒரளவிற்கு இயந்திர தன்மை அற்று வாழ்கின்றோம்.  இல்லையென்றால் கடமைக்கு புத்தக மூட்டையை சுமந்து செல்லும் பிள்ளைகள் போல  மற்றும் தினமும் பொதி சுமக்கும் கழுதைகள் போல் ஆகியிருப்போம்.  அதாவது தினமும் காலையில் கேட்கும் சுப்ரவாதம் போல ஆகிவிடும்.  அதாவது அந்த காலத்தில் பெரிதாக பாடல்கள் இல்லாததால் இந்த ஒரு பாடல் மட்டுமே பெரும்பாலான இடங்களில் ஒலிக்கும்.  அதனால் பலர் பக்தி சுவாரஸ்யம் அற்று கடமைக்கு பாடல் போட்டுவிட்டு அது கடமைக்கு ஒலித்து கொண்டிருக்கும். இப்போது விதம் விதமாக பாடல்கள் இருப்பதால் பல பாடல்களை Repeat-ல் போட்டு கேட்கிறார்கள்.  அதோடு வாயும் முணங்குகிறது.  இவ்வாறாக அனைத்திலும் தெகிட்டாமல் வாழ எதிலும் ஒருமையில் இல்லாமல் பன்மையில் பல சுவைகளில் இருந்தால் தான் வாழ்க்கை ரசனையுடன் இருக்கிறது.

ஈம சடங்கு முறைகள்திருமணங்கள் அந்த காலத்தில் எப்படி நடந்தது. தற்சமயம் எப்படி நடக்கிறது.  ஈமகாரியங்களில் வேலை காரணமாக மூன்றே நாட்களில் கருமாதி வரை சிலர் நடத்திவிட்டு செல்கின்றனர்.  இம்மாதிரியாக ஐயர்கள் நடத்தி வைக்க கூடாது.

மனம் ஒத்து நடக்காத எந்த திருமணத்தையும் ஐயர்கள் செய்து வைக்க கூடாது.  அதோடு  அந்த திருமணத்திற்கு செல்வதையே தவிர்ப்பது நல்லதாம்.  ஏனென்றால் அந்த இடம் முழுக்க மனம் வருத்தபட்டு அழுவும் ஓலை ஓர் அபசகுணமான ஊளை சத்தம் போல் Negative Energy -யாக அந்த இடத்தில் இருக்குமாம்.  அதனால் தான் நம்மை சுற்றி எங்கும் Positive Energy இருக்கும்படி வைத்து கொள்ள கூறுகிறார்கள். அதோடு திருமணம் ஆகி வரும் பெண்ணை துன்ப படுத்த கூடாது என்று கூறுவதும் அதற்கு தான்.  அதாவது அவர்களின் யாருக்கும் தெரியாத அழுகை மற்றும் வேதனைதுன்பங்கள் அனைத்தும் அந்த வீட்டில் தான் இருக்குமாம்.  அது நம் கண்களுக்கு தெரியாது.  உதா:- வில்லா படம்.  இது ஆண்களுக்கும் பொருந்தும்.  ஆனால் பெண்கள் போல் அந்த அளவிற்கு அவதிபடுவது கிடையாது

ஐயர்களுக்கென்று சில விதி முறைகள் சாஸ்திரத்தில் கூறபட்டுள்ளது.  அதனை மீறி இம்மாதிரியான நல்ல மற்றும் கெட்ட விசேஷங்களில் பங்கேற்றால் தோஷம்பாவம் என்று கூறபடுகிறது.  தோஷம் இவர்களை என்ன செய்தது? இம்மாதிரியான தோஷங்களே அவர்களை ஒன்றும் செய்யாத போது நமக்கான தோஷங்கள் மட்டும் நம்மை என்ன செய்துவிட போகிறது?.  நமக்கான தோஷங்கள் என்று குறிப்பிடுவதே இரு கிரகங்களுக்கான மோதல்கள் தான்.  அதாவது அவர்களுக்குள் ஏற்கனவே வாய்க்யா பிரச்சனை அதனால் எதிரிகளாம். கிரகங்கள் என்று கூறபடுபவைகள் உப தெய்வங்கள். அந்த உப தெய்வங்கள் என்றைக்கும் நமக்கு ஒரு துளி துன்பத்தையும் தர முனையாதுநமக்கு நடப்பது அனைத்தும் நமக்கான அனுபவ பாடங்கள் மட்டுமே அது நல்லதோகெட்டதோ எதுவாயினும்.  இது ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம் அவ்வளவே. 

இவ்வாறாக பலவற்றில் நம்மை இப்படி செய்ய கூடாது , அப்படி செய்ய கூடாது என்று நெறியுடன் கூறுகிறார்கள்.  ஆனால் நெறி இல்லாமலும் பலவைகள் நடை பெறுகிறது.  அப்படியென்றால் நம்மை நெறிபடுத்துவது என்பது ஒட்டு மொத்த மக்களும் நெறியில்லாமல் ஆகிவிட்டால் என்ன செய்வது என்பதற்காக தான் என்பது தெளிவாக புரிகிறது.  அதாவது நம்முடைய கட்டமைப்பு உடைந்து விடும்கட்டமைப்பு உடைந்துவிட்டால் எல்லாம் அலங்கோலமாகிவிடும். அப்படி அலங்கோலமானால் புது கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.  புது கட்டமைப்பு உறுதியாக நிலைக்குமா என்பதும் உறுதியாக சொல்ல முடியாது. அதற்காக நாம் பிடிக்கிறதோ இல்லையோ இதை ஏற்று கொண்டு தான் வாழ வேண்டுமா?  பிடிக்காமல் யாகத்தில் பங்கேற்றாலும் யாகம் பலன் தராது என்கின்றனர்.  திருமணம் இருமணம் இணையும் நிகழ்வு ஆகும்.  அவ்வாறு இணையாத திருமணம் திருமணமே இல்லை என்றும் கூறபடுகிறது.

இது மட்டுமல்ல பொய் சொல்ல கூடாது உண்மையை தான் பேச வேண்டும் என்பார்கள்.  ஆனால் சில சமயங்களில் பணம் கேட்டால் பணம் இல்லை என்று கூறுவார்கள். அஞ்சல பெட்டியில் பார்த்தேனே பொய் ஏன் கூறுகிறீர்கள் என்று கேட்டால் நீ பணத்தை கெட்ட பழக்கங்களில் செலவிடுவாய் அதனால் பொய் கூறினேன் என்பார்கள்.  எல்லாமே அந்த சமயத்தில் அவரவர் வசதிக்காக கூறபடுபவை மற்றும் அதற்காக நெறிபடுத்துதல் என்று கூறுகிறார்கள் .  இதற்கு நாம் தொடர்ந்து ஒரு வேலை எல்லாவற்றிலும் பலியானால் நம் வாழ்க்கையில் என்ன இருக்கும்?  அதோடு நாம் யாராக இருப்போம்?.  பலி ஆடாக பழக்கபட்டு அதில் மக்கி பலி ஆடாகவே வீழவே படைக்க பட்டோமா?  ஏனென்றால் நெறிபடுத்துதல் என்ற பெயரில் நம் வாழ்க்கையில் எவ்வளவோ நெறிபடுத்துதல்கள் நடந்தும் நாம் ஏன் மற்றவர்கள் குறை சொல்லும் விதமாகவோ அல் பெரிதாக எதிலும் சோபிக்காமல் இருக்கிறோம். அதோடு எத்தனையில் நாம் சாதித்தோம்?  கரைகண்டவர்கள் கூறும் அத்தனையும் நம் மீது பலவற்றில் எக்கசக்க கரை உள்ளது போன்றும் அதனை பரிசுத்தமான இவர்கள் சுத்தம் செய்வது போலவும் கூறுகிறார்கள்.  சுத்தம் செய்தாகி விட்டது ஆனால் பெரிதாக உறுபட்டது போல், கரை மறைந்தது போல் தெரியவில்லையே.  அதற்காக நெறிபடுத்துதல் தவறு என்று கூறவில்லை.  குழந்தை பருவம் முதல் பாலகன் ஆகி பிறகு இளைஞன் ஆகி அதன் பிறகு திருமணம் ஆகி இருப்பவர்களுக்கும் நெறிபடுத்துதல் தொடர்கிறது பெரியவர்களின் வழி நடத்தல்கள் என்ற பெயரில்.  இவ்வளவு விஷயமும் அனைவருக்கும் நடக்கும் ஒன்றாகும்.  அனைவருக்கும் நெறிபடுத்துதல் நடக்கிறது பிறகு ஏன் வாழ்க்கையில் இவ்வளவு ஏற்ற தாழ்வுகள்இவ்வளவு கருத்து வேறுபாடுகள்?  இவ்வளவு வேற்றுமைகள்?  அப்படியென்றால் ஏதோ பிழை இருப்பது போல் தானே உள்ளது.  அது என்னவென்று அவரவர் விவாதித்து நல்ல தீர்வை கண்டால் புதிய பாரதம் மற்றும் புதிய உலகம் நிச்சயம் பிறக்கும்.  அதோடு நெறிபடுத்துதல் என்பதில் பொதுவான விஷயங்கள் பல இருக்கிறது.  அதிலும் ஏராளமான முரண்கள், கருத்து வேறுபாடுகள் ஏன் ஏற்படுகிறது.  நெறியாளர்கள் நெறிபடுத்துவது போல் நெறிபடுத்தினாலும் அதில் ஏதோ நெறி இல்லாதது போல் கண்டு கொள்ளபடவில்லையென்றால் அதற்கு என்ன அர்த்தம்? நம் கூற்றில் வலிமையில்லாதது தானே அர்த்தமாகிறது.  அப்படியென்றால் தவறு எங்கே நடக்கிறது?  

இவ்வாறாக அனைத்திலும் நாங்கள் சொல்வதே வேதம் என்பது போல் திட்டவட்டமாக கூறுகின்றனர். அதோடு உனக்கு ஒன்றும் தெரியாது என்கின்றனர். வேத சாஸ்திரத்திலேயே கூறபட்டிருக்கிறதே என்றால் நாங்கள் சொல்லும்வேத உபநிஷங்களை மட்டும் பின்பற்ற வேண்டும் என்கின்றனர். இப்படியே இவர்கள் கூறுவதை கேட்டு கொண்டு இருந்தால் கிணற்று தவளை போல் வாழ்ந்து நம் பிள்ளைகளும் நெறிபடுத்துதல் என்ற பெயரில் பலி கொடுக்க நேரிடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.    "நெறி" என்பதன் உண்மையை "அறிஅறிந்த பின் அதை மூளை கொண்டு "சொரி" அதன்  பின்"வெறி" கொண்டு திரிக.  இல்லையென்றால் சொரி, சிரங்கு போல நம் மனதில் பல காயங்கள் மற்றும் நம்மை விட்டு விலகாத மன நோய் நம்மை ஆட் கொண்டுவிடும்.  இதில் பல ஒட்டு மொத்த மக்களுக்காக கூறபட்டிருக்கிறது. இதில் கூறபட்டது  அனைத்தும் நம் வாழ்க்கையின் சிறிய பகுதியே.  மீதம் என்பது "வான்" போன்று பரந்து விரிந்து உள்ள விஷயங்களாகும்.

மொத்தத்தில் எண்ட குருவாயூரப்பா! அட கர்த்தரே! அட ராமா! ராமனே! ஆஞ்ச்சநேயா! என் புருவ மத்தியில் உள்ள ஆத்மேஸ்வரா! நெற்றி கண்ணேஸ்வரா! வில்லங்கமில்லாமல் திட்டவட்டமாக கூறைய்யா வேதமான நெறிபடுத்துதல் பலமா? பலி ஆவதா? வரம்மா? சாபம்மா? தோஷம்மா? நிவர்த்தியா? கோயில் கோபுரங்கள் பல தாழ்வாக இல்லாமல் தலை நிமிர்ந்து  அதில் மூலவர் உற்சவ மூர்த்தி ஒருவரே என்று உணர ஏராளமாக கோயில்கள் கட்டி விக்கிரக சாமி சிலைகள், கலசம் வைத்து, தெப்ப குளம் அமைத்து சாமிக்கு பூரண கும்ப மரியாதை கொடுத்து புனரமைப்பு செய்த சுல்தான்! நிஜாம்! சேர! சோழ! பாண்டியர்களே! பல்லவ மன்னர்களே! நேரடியாக பட்டவர்த்தனமாக கூறைய்யா வேதமான நெறிபடுத்துதல் பலமா? பலி ஆவதா? வரம்மா? சாபம்மா? தோஷம்மா? நிவர்த்தியா? SYSTEM DISCIPLINE IS THE STRENGTH. BUT  DISCIPLINE IS DIFFERNT IN SEVERAL TYPES OF SYSTEM . 

முகமதியர்களின் சுல்தான் ஆட்சியில் "பராக்என்றால் "வரார்என்று அர்த்தம்பேட்ட பராக் போல வீரா வரார்வைரா வரார்ராச வரார் என்பது.  இது அனைத்தும் ஒன்றாக அதோடு பெயரில் பல PUNCH வசனங்களுடன் இருக்கும் நான் என்றென்றும் உங்களுக்காக நான் எழுத்துக்கள் அடங்கிய ஆர்டிகல்லாக உங்கள் மனதில் வரைய "வரார்என்று வந்து கொண்டே இருப்பேன்.  இன்னும் அரசியல் கட்டுரை எழுதின மூடு போகலைங்கஅதோடு என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.

இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை. 

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html