எங்கே குற்ற உணர்ச்சி? ஜடமா? [ CRIME WORLD]

எங்கே குற்ற உணர்ச்சி? ஜடமா? [ THE CRIME WORLD]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.

ரிதம் F.M 605 108-ல் "சப்ஜெக்ட்" இது தான் "குற்ற உணர்ச்சி".  இதை வைத்து தான் கட்டுரையானது நகரவிருக்கிருக்கிறது. இது ஓர் "Supplymentry Document" போல் இதனை உங்களுக்கு "Submit" செய்கிறேன்.

Jmn Certificate:- "A".  இதனை 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் படிக்காதீர்கள் மற்றும் இதனை அவர்களுக்கு வாட்ஸ் அப்பிலோ அல் வேறு பொது தளத்திலோ "ஷேர்" செய்யாதீர்கள் என்பதை JMN தெரிவித்து கொள்கிறது.

 "சப் டைட்டில்" போட்டு படத்தை டி.வி.டி-ல் வெளியீடு செய்து அதனை மக்களுக்கு "சப்ளே" செய்துவிட்டு பிறகு மக்களுக்கு மனசாட்சியே இல்லை தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை புரிந்து கொள்ளாமல் பிரம்மாண்டமான படம் டி.வி.டி-யில் தயார் ஆனால் போதும் உடனே வாங்கிவிடுகிறார்கள் என்றெல்லாம் கூறுகிறோம்.

ஏதோ "சப்-கான்ட்ராக்ட்" எடுத்து நடத்துவது போல் அனைத்து கெட்டதையும் தலைமை தாங்கி நடத்துபவர்களை கேட்க ஆளில்லை. அனைத்து "Contact"-களும் எப்படி கிடைக்கிறது எப்படி எங்கு நடக்கிறது என்றே தெரியவில்லை.  ஆனால் அதிர்ச்சியளிக்க கூடிய அனைத்தும் எல்லா இடங்களிலும் கனஜோராக விழாகோலம் பூண்டு நடப்பது போல் நடந்து கொண்டு  இருக்கிறது. இதற்கு எல்லாம் "கான்ட்ராக்ட் Sign" வாங்குவது போல் பல ரூல்ஸ் போட்டும், அன்பாக மிரட்டியும் பல குற்றங்கள் குற்ற உணர்ச்சியே இல்லாமல் அரங்கேறுகிறது. இதில் எந்த" Pride"-ம் இல்லை. ஆனால்  "பிரைடு ரைஸ்" விரும்பி சாப்பிடுவது போல் குற்றங்களை செய்து  குற்ற உணர்ச்சியே இல்லாமல் அதனை தன் "பிரைவஸி" என்று கூறி இதில் யாரும் தலையிட உரிமை இல்லை என்கிறார்கள். "பிரைவேட் Property"-யில் "Private" - ஆக ஆனந்த கூத்தாடுகிறார்கள். கூத்து கட்டுவதில் பல கேரக்டர்கள் இருக்கும் அது போலவே அச்சில் ஏற்ற முடியாத அதிர்ச்சியளிக்க கூடிய குற்றங்கள் பல இருக்கிறது. அது அத்தனையும்  அச்சு பிழை இல்லாமல் எங்கோ நடந்து கொண்டு தான் இருக்கிறது ஓர் தட்டச்சு போல். இதில் எந்த மன அச்சமும் இல்லாமல் உடலை கெடுத்து கொள்கின்றனர்.

எல்லாவற்றிற்கும் புற்றீசல் போல "Consultancy" வந்துவிட்டது.  அனைத்து விதமான விஷயத்தையும் "Consult" செய்ய ஆட்களுக்கும் பஞ்சமில்லை. ஆனால் எல்லா விஷயமும் அப்படியே பஞ்சமில்லாமல் பஞ்சமி நிலம் போல் இருக்கிறது.

அந்த காலத்தில் "பாத் ரூம்" இல்லை. ஆனால் "பாத்" என்பதை "பாத்து" எடுத்து கொண்டு மானத்துடன் வாழ்ந்தார்கள்.  "பாத்திரம்" கழுவது போல் நம்மிடம் பல கெட்டதை அண்டவிடாமல் அதோடு தன்னிடமிருந்து அத்தனையும் கழுவி  அண்ட சராசரங்களையும் ஆண்டனர் மற்றும் பல சக்திகளையும் பெற்றனர். 

இயற்கை உபாதைகளில் ஒன்றான "செக்ஸ்" என்பதை நாம் பெற பல "செக்" இருந்தது அன்று.  இன்று "செக் பவுன்ஸ்" ஆனது போல் மற்றும் பல மோசடி வேலைகள் அவர்களுக்கான மோசங்களுடன் எளிதாக மிக மோசமாக நடக்கிறது. ஆனால் எதையும் யாரும் கண்டு கொள்வதில்லை.

தனக்கு உண்டான பல உணர்ச்சிகளை போக்கி கொள்ள இன்று பல போக்கிடங்கள் ஓர் சரியான போக்கு இல்லாமல் போக்கு காட்டி கொண்டு வழி எங்கிலும் காணபடுகிறது. 

ஆபாச காட்சிகள் பார்ப்பது தவறு.  ஆனால் ஆங்கில, இந்தி மற்றும் பல மொழி சேனல்களில் ஒளிப்பரப்பாகும் படங்கள், பாடல்கள் அனைத்திலும் ஓர் பாசத்துடன் ஆபாசமானது ஓர் காட்சியாவது மிக தெளிவான காட்சியுடன் இருக்கிறது. Chating Application-ல் Chating மற்றும் Likes-கள் இது தான் அதிகமாக அள்ளுகிறது. "ஆடிட்டிங்" நடப்பது போல தேடி தேடி இவ்வாறு ஆடியதை "ஆடிட்" செய்து பார்க்கின்றனர். ஆபாச வலை தளங்களை பலதை தடை பண்ணினாலும் அதனை தேடி தேடி அந்த வலையில் இன்றும் விழவே செய்கிறார்கள்.

மொத்தத்தில் எந்த தவறும் எங்கும் நடக்கவே இல்லை என்ற கருத்து நம்மிடம் இருந்தால் அதற்கு மாற்று கருத்து உள்ளது என்பது போல் இவைகள் உலகில் நிரந்தமில்லா வாழ்க்கையில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறது. அது இன்று ஓர் நிரந்தர ஆதாரமாக மனிதர்களின் ஆதார தன்மையுடன் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

பாலைவன "வெயிலில்" மற்றும் உஷ்ணத்தில் "வெயிட்டர்" "வெயிட்டான ஆர்டர்" எடுக்க காத்திருப்பது போல் உங்களுக்குள் மாற்று கருத்து ஏற்படுத்த மற்றும் எதுவும் அறிந்தும் கவனிக்காமல் அறியாமல் இருக்கும் ஈரமனதை நனைக்க "வெயிட்டிங்"-ல் பல உள்ளது. Go to Browser and Search Public Sex in india or another Country, State.  Public Sex in bus stand and Railway Station, Park, Bus, Car etc.  எதையும் எங்கும் எவரும் விட்டுவைக்கவில்லை.  அனைத்தும் படுஜோராக கண்ணுக்கு தெரியாமல் ஆனால் எல்லோரின் மத்தியில் தெரிந்தே எல்லையே இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.

நாம் யாரை ஏமாற்றுகிறோம் தன்னையே வா (அல்) பிறரையா என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன். நாம் யாரையும் காப்பாற்றவில்லை  ஆனால் ஓர் பப்ளிசிட்டி-க்காக நாம் பலரை காப்பாற்றியதாக  கூறி கொண்டு இருக்கிறோம்.  உண்மையில் காப்பாளர்களுக்கு அந்த எண்ணம் இருப்பதாக தெரியவில்லை. அப்படி எதுவும் காப்பாற்றியதாகவும் தெரியவில்லை. ஏனென்றால் காப்பாற்றுங்கள் என்று இவர்களிடம் யாரும் கூறியதாய் தெரியவில்லை. 

ஆனால் இவர்களின் சுயநலத்திற்காக நம்மை பலி கெடாவாக்கி இவர்கள் பிழைக்க நினைத்துள்ளார்கள்.  இது பொதுப்படையாகவே பொது தளத்தில் பொதுவாக வைக்கிறேன். இதை யாரையும் தனிபட்ட முறையில் கூற அல்ல. நல்லது என்பது பொதுவான முறையில் அனைவருக்கும் நடக்க வேண்டும்.  அது தான் பொது இயக்கம் மற்றும் சங்கம், ஆகும். ஏனென்றால் பொது தளம் என்பது "கிரவுண்ட்"-ல் பல பொதுவான விஷயங்களில் பொதுவாக பல ரவுண்ட்கள் வருவது ஆகும்.  இந்த "கிரவுண்ட் கிளியரண்ஸ்" தான் பொதுவாக கிளியர் ஆக இருக்க வேண்டும்.  "கிரகனம்" பிடித்தது போல் மற்றும் பல தோஷங்களுடன் இருந்து விட்டு பல நல்ல "கிரகங்கள்" ஒன்று சேர "கிரகபிரவேசம்" செய்ய நினைத்தது போல் நடத்த நினைத்தால் நடக்குமா?  ஏமாற்ற வேண்டும் என்றால் ஏமாற ஆள் இருக்க வேண்டும்.  இங்கு யாரும் இல்லை.

Connection Correct-ஆக இருந்தால் கனெக்ட்டிங்-ம் கரெக்டா இருக்கும். Connectivity சரி இல்லை என்றால் Transformer வெடிப்பது போல் தான் வெடிக்கும். மின்னழுத்தம் ஆனது சரியான மின்னனு முறையில் சரியாக மின்னினால் மின்னலில் இருந்தும் மின்சாரம் எடுத்து மின்மயம் இல்லா உலகத்தில் மின்மயத்துடன் வாழலாம்.

பலர் ஒரு குறிப்பிட்ட நபரிடம் மற்றும் குறிப்பிட்ட விஷத்தை காப்பாற்ற கூறுவதாக கூறி அவர்கள் தனக்கான ஆதாயத்தை பெற முனைந்துள்ளனர். இதில் மட்டுமே முனைப்பாக செயல்படுகின்றனர்.  பல அட்டூழியங்கள் ஓர் அட்டை படம் போல அங்கங்கே உள்ளது. பல அநியாங்கள் அநியாத்திற்கு நல்லவர்கள் மீது ஏவபடுகிறது.  பல கொடுமைகள் கடுமையுடன் செயல்பட்டு பலரை வதைத்து கொண்டிருக்கிறது.

ஜாதி, மதம், காதல் திருமணம், கௌரவ பிரச்சனை, மான பிரச்சனை etc என்று கடை குட்டி சிங்கம் மற்றும் காதல் படம் போல் செயல்படுவது எதையோ சுயநலத்துடன் ருசிக்கத்தான். 

நமக்குள் பல குற்ற உணர்ச்சிகளை குற்றங்கள் செய்யாமல் நம்முடைய அத்தியாவசமான காரியங்களில் அத்தியாவசமாக ஈடுபட்டால் அதில் நம் அத்தியாயத்தில் பிழை மற்றும் பாவம் இருக் கிறது என்று சிறிய விஷயத்திலே பலர் பலவிதமாக கூறுகிறார்கள்.

ஆனால் கீழ்கண்டவற்றில் யாரும் கூறியதாக தெரியவில்லை. அதோடு இதுவெல்லாம் அவர்களுக்கு தெரியாமல் நடக்க சின்ன குழந்தைகளும் அல்ல. அதோடு துரோகமும், பண்பாடும் பல "கலாச்சாரங்களும்" அவர்களுக்கு "கலாக்காய்" போல கசப்பு ஏற்பட்டு உள்ளது அதோடு இதனை ரூம் போட்டும் மற்றும் பொது வெளியில் திரிந்து பட்டவர்த்தனமாக அவர்களுடைய பலதை பகிர்ந்து சொல்லாமல் சொல்லிவிட்டனர்.  பகிரங்கமாக ரங்க ராட்டினம் சுற்றுவது போல் பலருடன் சுற்றுவதிலேயே இது தெரிகிறது.

Search You Tube And Download Given Belows:-

1)உலகை ஆள்கிறார்களா இலுமினாட்டிகள்?  உண்மை என்ன?-கலைஞர் டி.வி.

2)சென்னையில் கார் சாவியை குலுக்கி போட்டு மனைவிகள்.-NEWS 18 and Tamil Trend.

3)காமலீலையில் ஈடுபட்ட இந்தியன் வங்கி காசாளரின் அந்தரங்க வீடியோ-கேப்டன் டி.வி.

4)போதை கும்பல் பிடியில் பார்க் ஓட்டல் பப்?  பெண்கள் சீரழிவதா?

5)நள்ளிரவில் போதை வலையில் சிக்கும் ஐ.டி. பெண்கள்

6)நடிகைகளை இரையாக்கும் இசையமைப்பாளர்- விகடன் டி.வி.

இவ்வாறு "கிரைம் டைம்" என்றும், இன்னும் பல பெயர்களில் உள்ள பல ஒரே  "கிரைம்கள்" "கிரைண்டர்" போல அதை பலர் பலவித மாவை அரைப்பது போல் அரைத்து கொண்டு அந்த கிரைம்களை கிரைம்மே இல்லாதது போல் செய்கின்றனர். கீரை கொத்து வாங்குவது போல் அத்தனையும் அங்கும் இங்கும் நடந்து வாழ்ந்து கொண்டும், விழுந்து கொண்டும் இருக்கிறார்கள். இதனை பல சேனல்களில் பலவித பெயர்களில் ஒளிபரப்பு செய்கின்றனர்.

நாம் கிரைம் செய்யவில்லையே தவிர ஆனால் கிரைம் உலகத்தின் ஓர் அங்கமே நாம்.  இந்த அங்கத்தில் நமக்கு பங்கம் ஏற்பட்டால் நாம் நம்முடைய அங்கங்களை வெட்டி கொண்டும் அல் வேறுவழிகளில் விபரீதமான முடிவுகளை எடுக்கிறோம்.  ஆனால் விபரீதமான காரியங்களை எந்த விபரீதமும் அவமானமும் ஏற்படாதது போல் மற்றும் எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் இவர்களுடைய அலப்பறை ஓர் பறை எழுப்பி உலகத்தை முகம் சுளிக்க வைத்திருக்கிறது மற்றும் நம்மை மேலும் பாதுகாக்க பல நடவடிக்கையில் உடனடியாக மனதில் உலமாற உட்படுத்தி இறங்க வேண்டும் என்பதே நிஜமான நிதர்சனமாக உணர்த்தியுள்ளது.

உணர்ச்சி எரிமலை வெடித்து உணர்ச்சி பிழம்பானது அது ஓர் குழம்பாக யார் யாரிடமோ சகட்டுமேனிக்கு சகஜமாக தன்னுடைய அனைத்து உணர்ச்சிகளையும் கொட்டி தீர்த்துள்ள இந்த மனிதர்களுக்கு மத்தியில் நாம் இன்னும் மனித தன்மை இழக்காமல் வாழ்வதே மேற்கண்டவர்களுக்கான பாடம் மற்றும் உதாரணம்.  உதாரணம் சாதாரணமாக பல இடத்தில் இருப்பதால் உதாரணமாய் தெரியவில்லை போலும்.  பதாகையில் எதையும் அச்சில் வார்ப்பது போல் அச்சிட்டு பலனில்லை. மனதில் செதுக்கி பொறிக்க வேண்டும்.  அப்போது பொறி கிளம்பும் தரமான சம்பவங்களை தரத்துடன் செய்ய முடியும். சம்பவம் நடப்பது மற்றும் செய்வது என்பது சாதாரணமானதாகவும் அசாதாரணமானதாகவும் இருப்பது நம் கையில் தான் உள்ளது.

நம்மை பெற்றெடுத்த  பெற்றோர்களின்  நம்பிக்கையில் கல்வீச பட்டிருக்கிறது.  திருமணம் முதல் வெளியில் அனுப்புவது வரை அனைத்தும் அவர்களின் நலத்துக்காக தான்.  ஆனால் அவர்களின் நலம் பல சூழ்ச்சி வலையில் பலவீனமானவர்கள் பலவீனமாய் மாட்டி கொண்டது போல் மாட்டி, கவலைக்கிடமாக ஆகி மிகவும் பலவீனமான நிலையில் உள்ளனர்.

"சம்மந்தம்" இல்லாமல் "சம்பந்தபடுத்தி" கொண்டது போல் பொதுவாக ஓர் "சம்மங்கி பூ" வாசனை கொடுப்பது போல் பொதுநலத்துடன் அதில் நடுநிலையுடன் எதிலும் நடுங்காமல் பலரை நடுநடுங்க வைக்கும் காரியங்களில்   எதிலும் யாரும் இருக்க வேண்டும். அப்போது தான் பூ போல நல்ல வாசம் வீசும்.  அதை விட்டு "சம்திங் சம்திங்" என்று சுயநலவாதியாக செயல்பட்டால் அது பொது தளத்தில் பொது மனிதர்கள் மீது பொதுவாக சாக்கடை நாற்றம் தான் நாற்றங்கால் நட்டு வைத்தது போல் உங்களின் மீது சுகமாக வீசும்.  

சிலிர்க்க வைக்கும் நம்முடைய கூச்சமான, அருவருக்க தக்க விஷயங்கள் நம் வாழ்க்கையில் சிலிண்டர் போல் வெடித்து நாசம் செய்ய கூடியது. நல்லதில் சிலிர்த்து கொண்டவர்கள் வாழ்க்கையில் எந்த நல்லதும் இதுவரை நடந்ததில்லை. அவர்கள் வாழ்க்கை சிலிக்கான் ஜெல்லை பிய்த்தது போல் சிக்கலாகி, குழப்பமாகி தான் இருக்கும். 

அடுத்தவரின் வாழ்க்கையை "துப்பு துலக்கி" வாழ்வதை விட நம்மை யாரும் "துப்பாமல்" வாழும் வாழ்க்கையே சிறந்தது. எதிரிநாட்டு இராணுவ வீரனின் தாக்குதலால் "துப்பாக்கியில்" நமக்கும் அவர்களுக்கும் எதுவும்  பாக்கியில்லாதது போல் நம் "சோல்" முழுவதும் நாட்டுபற்று  நிறைந்து  அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியும் நாம் "சோல்ஜர்"-  ஆக  சுடப்பட்டு  உயிர் நீத்தாலும், நாம் நாட்டுபற்றில்" மூத்தார்" போல் நமக்கு பெருமையும், கௌரவமும் குவியும். சால்வைகள் "வால்வை" திறந்துவிட்டது போல் பாராட்டு மழையில் நம் பீரோ-வில் குவிந்து கிடக்கும்.  இதனை "குவி லென்ஸ்" வைத்து பார்த்தாலும் நம்மால் முடியாது.  இதற்கு ஓர் சிறந்த "சென்ஸ்" தேவைபடுகிறது அதோடு ஓர் இடத்தில் மனதை குவித்தால் தான் அனைத்தும் சாத்தியமாகும். குருவே இல்லாமல் அனைத்தையும் சாத்தியபடுத்தி கற்று சகாப்தம் ஆனவர்களும் இருக்கிறார்கள். குருவை மிஞ்சிய சிஷ்யன்களும் நம் புவியில் வாழ்ந்துள்ளார்கள். மாநிலத்தின், மாவட்டத்தின்  மையபகுதியில் வசித்தால் நம்மை மையபடுத்தியே அனைத்தும் நடக்காது. அதோடு   பல Group-களில் நாம் இருந்தால் Group Leader -ஆக முடியாது.  எதையும் விதாண்டா வாதம் மற்றும் தர்க்கம் செய்து தன்னை நியாயபடுத்தி கொள்பவர்களுக்கு எந்த நியாயமும் அந்நியாயமாக தான் தெரியும். இப்படியே நியாயமின்றி இருந்தால் நம்மை பலரும் கேவலமாக தூற்றி அப்படியே மண்ணுக்குள் போகும் மார்க்கமே அமையும். வாதத்திற்கு மருந்து உண்டு.  பிடிவாதத்திற்கும்,தர்க்கத்திற்கும் எந்த மருந்தும் கிடையாது.  மூட்டு வலிக்கு மூட்டு தைலம் கிடைக்கும். மூட்டு தேய்ந்தோ, உடைந்தோ மூட்டே இல்லாதவனுக்கு எந்த தைலமரத்திலும் தைலம் கிடையாது. 

"மடத்தனமாக" வாதம், பேச்சு, செயல் செய்பவர்கள் "ஜடம்" போன்ற வாழ்க்கை தான் வாழ முடியும். "மடம்" கட்டி ஆன்மீக உலகத்தில் தெய்வத்திற்கு பூஜை பண்ணி "தடம்" பதித்து நம் வாழ்க்கை தடத்தை பிறர் நம்மை தெய்வதிருவாக நினைத்து அதோடு குருவாக ஏற்று நமக்கு மலர் பூஜை, பாத பூஜை  பண்ணி  Follow பண்ண வைக்க முடியாது நாம் ஜைன மதத்திலேயே பிறந்திருந்தாலும். சாதித்தவர்களின்" படம்" பார்த்து கனவு கண்டு கனவுலகில் தான் வாழ முடியும்.

"கேப்டன் ஷிப்" பெற்று தலையில் "கேப்" மாற்றி "கேப்டன்" ஆனவர்கள் எல்லாம் எந்த துறையிலும் தலைசிறந்த கேப்டன்கள் கிடையாது. மகத்தான காரியத்தை மகத்துவமாக செய்தால் தான் சிறந்த கேப்டன் ஆக முடியும். கேப்டன்கள் பலர் இருக்கின்றனர்.  ஆனால் தலைசிறந்த கேப்டன்கள் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு தான் இருக்கிறார்கள். பல "கேப் மாரிதனம்" மற்றும் முறைகேடுகள் பண்ணி கேப்டன் பதவியை இழந்தவர்கள் எல்லாம் உள்ளனர்.

மேற்கண்டவைகளுக்கெல்லாம் யார் "Permission" கொடுத்து இந்த "Mission"-கள் எல்லாம் செயல்படுகிறது. சமூகத்தை பற்றியோ மற்றும் குடும்ப பாரம்பரியத்தை பற்றியோ "துளி" கூட யாரும் கவலைபட்டதாக தெரியவில்லை. இது வேற்று கிரகத்தில் பல வேற்றுமையுடன் நடக்கவில்லை.

"வீணர்கள்" என்றும் "வீணாண" காரியத்தை "வீண்" இல்லாமல் செய்து "விண்மீன்" போல ஜொலிக்க நினைத்து "கருவோடு" போல "காய்ந்து" கடைசியில் "திருவோடு" ஏந்திய கதை தான் இவர்கள் கதை. நோய் வந்தவர்கள் கஞ்சி காய்ச்சி மற்றும் காய்ச்சிய குடிநீரை மற்றும் சுடுநீரில் காய்கறிகளை கழுவி உண்டால், பருகினால் உடம்புக்கு ஆரோக்யம் மற்றும் நல்லது. அதற்காக சாராயத்தை "காய்ச்சி" குடித்துவிட்டு அதுவும் "காய்ச்சினது" தான் இதுவும் காய்ச்சினது தான் என்று நம்மை "காய்ச்சி" எடுத்தால் யார் மீது தவறு? பலரை சமாதியாக்கிய இந்த காமெடி சமாளிப்பு யாரை காக்கபோகிறது?  இவர்களையா?  குடும்பத்தையா?  மதத்தையா?  ஜாதியையா? பண்பாட்டையா? சமுதாயத்தையா?  நேர்மையாளர்களையா?  என்றால் யாரையும் இல்லை என்பதே கசப்பான உண்மை.  சமாளிக்க நினைத்து சமாதானம் அடையாமல் நடக்கும் குற்றங்கள் மட்டும் எத்தனை தெரியுமா?  இது அனைத்தும் ஜாதி மதம் கடந்து  கடத்தல் தொழிலில் ஈடுபட்டதுபோல் இது நம்மை பரந்து விரிந்த கடலுக்கு கடத்தி சென்று பின் அதை நம்மால் கடக்க முடியாமல் அதிலேயே   மூழ்கி மாண்டுவிடுகிறோம். ஆனால் இதில் குற்ற உணர்ச்சியே இல்லாத ஜடங்கள் துயரபட்டதாய் தெரியவில்லை. ஆனால் அயராமல் உழைத்து அயர்ந்து போன பலர் தேவையில்லாத குற்ற உணர்ச்சியால் "குற்றவாளி" ஆகி உள்ளனர் மற்றும் பெரும் மன உளைச்சலில் சிக்கியுள்ளனர். 

ஊரே நம் பொழப்பை சிரிப்பாய் சிரிக்கும் பல காரியத்தை, அவலத்தை சிரித்து கொண்டே ஜாலியாக அது ஓர் "ஹாபியாக" Just One Cup Of "காபி" குடிப்பது போல் எதை பற்றியும் கவலை கொள்ளாமல் எளிதாக எதையும் சூடு சொரணையின்றி எடுத்து கொள்கிறார்கள். ராணி என்று கூறி கொள்பவர்கள் அனைவரும் ராணிகள் கிடையாது.  சீதை ராணி தான் ஆனால் பத்தினி என்று நிரூபிக்க பல பேர்முன் தீ குளித்தாள்.  ஆனால் கண்ணகி ராணியே அல்ல செல்வந்தர் மட்டுமே ஆனால் மதுரை ஊரையே தன் பத்தினி தீயால் தீ குளிக்க வைத்தாள். அனைவரும் குளியலறை முதல் சமையலறை வரை எங்கு சென்றாலும் அவர்கள் கல்லறைக்கு அனுப்பபட்டார்கள். சமாளிப்பதற்காக சுயநலத்திற்காக கூறும் அத்தனை வார்த்தைகளும் நமக்கு ஓர் பூச்சி கொல்லி வைத்தது போல் நமக்கு நாமே மேலும் தீயானது "கொழுந்து" விட்டு எரிந்து "கொழுந்து" போன்ற நம் "கொழுத்த" வாழ்க்கை நம் "கொழுப்பால்" சாம்பல் ஆனது தான் மிச்சம் ஆகும்.     

இது அனைத்தும் ரைட்டா ராங்கா என தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html