HIGH LEVEL FAKE ATTACK [சாகாத மாயமான்]

HIGH LEVEL HIGH TECH FAKE ATTACK[சாகாத மாயமான்]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam Chettiyar.

போதி மரத்தில் பிறந்த போதி தர்மர் போல இருக்கும் ஒருவரை கபோதிகள் சிலர் அவரை பற்றி எதையோ கூறினார்களாம்.

ஏமாற்றுவதில் பழங்காலத்தில் பழமையான முறையில் இருக்கும் பழையதை அப்படியே பின்பற்றவில்லை.  இது போன்ற கள்ளத்தனமான வேலைகள் பழம்பெரும் இலக்கியத்திலும் இருக்கிறதாய் தெரியவில்லை. இதை கள்ளம் கபடம் இல்லாதவர்கள் செய்யவில்லை. இவர்கள் ஓர் பழம்பெருச்சாலிகள் ஆவர். இவர்களை கையும்களவுமாக "பிடிப்பது" கடினம். இவர்கள் கையை பிடிக்காமல் இவர்களை ஓர் பிடி பிடி என்று பிடிக்க வேண்டும். ஆனால் இவர்கள் நமக்கு "பிடிப்பது" போல் செயல்படுபவர்கள். நம் மனது துன்பத்தில் துடி துடியாய் துடிப்பது என்பது இவர்கள் போலியாய் இடியாய் ஓர் இடியாப்ப சிக்கலை நம்மிடத்தில் இடிப்பதால் மற்றும் நம் வாழ்வில் இறக்குவதால் தான் இறகு இருந்தும் இறந்த பறவை மேலே பறந்தது போல் கீழே விழுகிறோம். 

இவர்கள் ஏதோ "ஆவ" நம்மை ஆவாத காரியங்களை செய்ய வைப்பவர்கள். ஆனால் நாம் ஆவசிறந்த காரியத்தை சிறப்பாக செய்தது போல் கூறுவார்கள்.  இதை வைத்து இந்த யோக்கியர்கள் முன்னேற்ற பாதையில் முன்னோக்கி சென்று முன்னேறுவார்கள். கிமு கிபி போல  தான் நம் LIFE-ல் "இவா" நுழைந்தபின் எல்லாம் இந்த யோக்கிய "அவா" தான். பிறகு நம் வாழ்வே இவர்கள் முன் நாம் பின் என்பது போல தான் நம்முடைய அனைத்தும் இருக்கும். வாழ்க்கையில் வாழ்வு என்பது ஓர் தாழ்வு நிலையிலேயே செல்லும். பிறகு எல்லாமே எந்தவித பின்புலம் இல்லாமல் பின்னோக்கி செல்லும். முன்னோக்கி என்பது நமக்கு நடக்க முன்னாடி இவர்களை மடக்கி பின் முடக்கி வீழ்த்துவதில் முன்னோடியாக நாம் இருக்க வேண்டும்.     ஏழ்மை நிலையில் இருப்பவன் கூட ஏற்றம் அடைந்து எழுந்து நிற்பான். ஆனால் நம்மால் முடியாது.

நம்பி கெட்டவர்கள் அனைவரும் யாரின் மீதோ நம்பிக்கையுடன் இருந்ததால் தான் என்பது குறிப்பிடதக்கது. இதை பலர் குறிப்பாலும் உணரவில்லை.

போலியை போலியில்லாமல் கூறி நாங்கள் போலியில்லாதவர்கள் என்று வாதாடி நம்மை காலி செய்யும் ஜோலி உடையவர்கள் இவர்கள். இவ்வாறான கெட்ட செய்கை செய்பவர்கள் போலியில் போலி சேர்க்காமல் போலியை சிறப்பாக  செய்வதால் தான் நாம் செய்வதறியாமல் திகைத்து, வகை தொகையில்லாமல் வகையாக இவர்களிடம் மாட்டிக்கொள்கிறோம்.  இதனால் தான் நம்முடைய மொத்த செயல்களையும் செயல்பாடற்று இருக்க செய்து மொத்தமாக பூட்டு போட்டு பூட்டி, இவர்கள் இஷ்டத்திற்கு செயல்பட்டு, நமக்கு கஷ்டத்தை கொடுத்து அதில் மானாவாரியாக நஷ்டத்தையும் ஏற்படுத்துகிறார்கள்.

வாதியும் இவர்களே பிரதிவாதியும் இவர்ளே. அதனால் தான் இதிலிருந்து நாம் விடுபடமுடியாமல், ஓர் நாதியில்லாமல் திரிகிறோம்.

நிரூபிக்க எந்த நிரூபணமும் இருந்தாலும் நிரூபிக்க முடியாது. நிரூபணம் என்பதே உங்கள் வாழ்க்கையின் துன்பகரமான நிகழ்வு தான். இது நிகழ்ந்தும் ஏதும் நிகழாதது போல கூறுவதால், அது உங்களுக்கு நடந்தாலும் நடக்காதது போலவும், பெரிய நடனம் ஆடியது போலவும் போலியாக நடந்து செல்வீர்கள். இதில் உண்மை தெரிந்து அவர்களுக்கு எதுவும் துர்பாக்கியமாக நிகழாத வண்ணம் பார்த்து கொண்டு உங்களுடைய பணம், சொத்து என்பதுபோன்ற பாக்கியம் அனைத்தையும் எந்தவித பாக்கியும் இல்லாமல் பாக்கெட்-ல் போட்டு கொண்டு செல்பவர்கள்.

அடிபட்டும் அடிபடாதது போல உங்கள் மனம் அடிப்படையில்  எந்த வித மாற்றமும் இல்லாமல் இருந்தால் எதிலும் பெரிய ஏற்றம் இல்லாமல் எல்லாவற்றிலும் ஏமாற்றம் கண்டு ஏமாந்த ஓர் ஏமாளியாகி ஏமாற்றம் காண்பீர்கள். வருத்தம் உங்களை தொடர்ந்து வறுத்தெடுக்கும்.  ஏனென்றால் இதில் நீங்கள் வருந்தா மனம் உடையவர்கள் போல செயல்படுகிறீர்கள். "வருந்தா" மனம் என்பது உண்மையில் உங்களுக்கு "பொருந்தா" வண்ணம் உள்ளது. 

"வருத்தம்" நிறுத்தம் பெற நீங்கள் உங்கள் வாழ்வில் சில "திருத்தம்" செய்தே தீர வேண்டும். அப்போது தான் கொஞ்சமாவது தீரா துன்பம் தீர்ந்து போகும்.

இவ்வாறு இல்லையென்றால்  தொடரும் ஓர் தொடர்கதையாகி விடும் உங்கள் வாழ்வில் கஷ்டங்கள் அனைத்தும். அனைவரும் ருசி கண்ட பூனை விடாது என்பது போல தொடர்ந்து செயல்பட்டு உங்களை தொட செய்வார்கள். ஒர்வரை எல்லாரும் தொட்டால் அதன் பெயர் என்ன என்பது உங்களுக்கு தெரியும். அவர்கள் நிலமை என்ன மாதிரியான நிலமையோ கிட்டதட்ட அதே நிலமை தான் உங்களுடையதும்.  என்ன இது வேற ஜர்னல். தொட்டால் பூ மலரும் எல்லாரும்  பூவை பூபோல பூவை தொட்டாலும் பூ என்னவாகும்?  அது போல் தான் உங்கள் வாழ்வும்.

நிலைத்து நின்ற அனைவரும் எல்லாரிடமும் தன் வாழ்க்கையின் செயல்பாடுகளை வலைந்து கொடுத்ததில்லை. அவர்களின் சுயமுடிவே ஓர் இறுதி முடிவாக உறுதி எடுத்து நிலையான முடிவாக எடுத்தனர்.  இதனால் தான் அவர்கள் இறந்தும் நிலையாக நிலை பெற்றுள்ளனர். வாழ்க்கையில் துர்பாக்கிய நிலை என்பது இவர்களுக்கு நிரந்தரமாக நிரம்பவில்லை.  யார் நினைத்தாலும் நிரப்பவும் முடியாது.

இவர்களிடம் நம் வாழ்க்கை பத்திரமாக இருக்க எந்த உத்திரவாதமும் இல்லை. நாம் உத்திரத்தில் தூக்கில் தொங்கும் அளவிற்கு நம்மை அழைத்து செல்பவர்கள். நாம் உத்திராடம்  நட்சத்திரத்தில் பிறந்தவர் ஆயினும் அல் வேறு எதில் பிறந்தாலும் நம்முடைய பிறப்பே இந்த எதிரிகளை நமக்கு எதிரில் வைத்து "ராடம்" எடுத்து அடித்து "லாடம்" கட்டி  விரட்டுவதாய்  இருக்க வேண்டும். அதற்காகவே உத்திராடத்தில் பிறந்தேனடா என்று கூறுவதாய் இருக்க வேண்டும்.

உள்எதிரியாக உள்ளே நுழைந்தால் உள்ளடிகொடுத்து இனி உள்ளே நுழையாத வண்ணம் நம் அடி அவர்கள் மனதில் அடைமழையாக நுழைய வேண்டும். அதோடு நுழைந்தவர்கள் இங்கு எதுவும் செய்ய முடியாத வண்ணம் அவர்கள் கதையை முடிக்க  வேண்டும்.

 இவர்களிடம் நம்முடைய அனைத்தையும் மற்றும் நம்முடைய செயல்பாடுகளையும் பத்திரம் எழுதி கொடுப்பது போல கொடுத்தால் நாம் பத்து தலைமுறைக்கும் எழுவதற்கு வாய்ப்பில்லை.

ஆண்டி மடம் கட்டுவது போல் FAKE-ஆக ஆனால் ORIGINAL-ஆக கட்டியது போல் கூறுவார்கள்.  இவர்களிடம் எந்த ஓனர் மாட்டினாலும் ஓட்டாண்டி தான். அடுத்தவரை போன்டி ஆக்குவதில் வேகம் என்பதில் ராக்கெட் வேகத்தில் வேகமாக செயல்படுபவர்கள்.  பொறுமையாக இருக்க சொன்னாலும் பொறுமையாக இருந்து நம்மால் பொறுக்க முடியாத துர்க்கமான காரியத்தை செய்து நம்மை துர்க்கமடைய செய்பவர்கள்.  இவர்கள் ஓர் துர்தேவதை போன்றவர்கள்.  நாம் நாகம்  மோகம் கொண்டது போல் அவர்கள் மகுடிக்கு கிறங்கினால் நாம் பூமிக்குள் இறங்குவது நிச்சயம்.

தண்டல் காரன் சுண்டல் தின்று கொண்டே "தண்டல்" ஆக "வண்டல்" மண்ணை அள்ளி செல்வது போல் போலியாக நம்மிடம் பலவற்றை ஒன்னை பத்தாக போலியாக கூறி  நம்மிடம் இருப்பதை அள்ளி செல்பவர்கள். நான் சிலவற்றை தான் மேற்கண்டவற்றில் கூறியுள்ளேன். தொடர்ந்து ஏமாற்றமடைந்தால் பத்தல பத்தல என்று  நம்முடைய வெத்தல பெட்டியை கூட விட்டு வைக்க மாட்டார்கள்.  அதோடு நம்மை சுத்தலில் விட்டு நம் வாழ்க்கையே பொத்தலாகிவிடும்.

இவர்களிடம் வற்றாத ஜீவநதியும் வற்றி விடும். இவர்களை என்றைக்குமே பற்ற கூடாது. பற்றினால் நம்முடையது எல்லாம் எதுவும் இல்லாமல் சாம்பல் ஆவது உறுதி. அதை சொல்லாமல் சொல்லிவிட்டேன்.

 நதி போன்ற வாழ்க்கையாக நம் வாழ்க்கை பாதை கண்ட இடமெல்லாம் சென்றால் நம் கதி அரோகதி தான் என்பதில் ஐயமில்லை.

இவர்களின் LOW LEVEL-ஐ HIGH LEVEL ஆக மற்றும் நம்முடைய ஹைலெவலை லோ லெவல் ஆக்க ஆவல் கொண்டு சேவல் போல கொக்கரிப்பார்கள்  நம்மை லோ லோ என சுற்ற வைத்து எந்த வித HIGH END-ற்கும் ஓர் FAKE-ஆன HIGH TECH ஏமாற்றுவேலையில் இவர்கள் நம்மை  HIGH லெவலில் மூளைசலவை செய்து ஏமாளியாக மூளையில் உட்கார வைப்பவர்கள். 

இவர்களுடைய அனைத்துமே ஓர் மாயமான் வேலை தான். மாயம் மாயமாகவே இருப்பதால் நமக்கு பெருங்காயமானது மாயமில்லாமல் வந்தடைகிறது.  இதில் நாம் அனைத்திலுமே மாய்ந்து வீழ்ந்துவிடுகிறோம். அதோடு இதில் மாட்டி கொண்டு ஓய்ந்துவிடுகிறோம். இது மாய மந்திரவேலை அல்ல.  "மாயமான்" வேலை ஆகும்.

 

இதில் TECHNICAL MOVE என்பது ஓர் FAKE மாயமான் வேலையாகும்.  இந்த வேலையை அப்பட்டமாக முழு நேர வேலையாக அவர்கள் நம்மிடம் இருந்து கொண்டு வேலை செய்கின்றனர். இவர்கள் வஞ்சம் வைத்து நஞ்சை கெஞ்சி கொஞ்சி கொடுப்பவர்கள். இவர்களுக்கு தஞ்சம் கொடுத்தால் மஞ்சம் முதல் அனைத்துமே துவண்டு மாண்டுவிடும்.

இந்த மாயமான் வேலையை அம்பலம் ஏற்ற ஆதாரம் என்பது இவர்கள் அடைந்த ஆதாயமே ஆகும். அதோடு நாம் அடைந்த நஷ்டங்களும் தான். வாழ்க்கையே வாழா வெட்டி ஆனது போல் ஆனது மற்றும் பல கேவலங்களை கௌரவம் என்று சொல்லி அடைந்தது, நம்மிடம் மற்றவர்கள் வைத்திருந்த மரியாதை மரியாதையோடு சென்றது. சௌபாக்கியம் இவர்களுக்கு சௌக்கியமாக இருக்க நம்மிடம் இருந்து சௌகர்யமாக சென்றது.

நட்பு பாராட்டி சிரித்து கொண்டே நம்மிடம் பாராமுகமாக இருந்து சீரழித்து மற்றும் அனைத்தையும் பாரமாக்கி பாழும் கிணற்றில்  தள்ளியது.  இவர்கள் அனைத்தையும் அடைய நம்முடைய அனைத்தும் ஓர் தள்ளுபடி போல நம்முடைய பல தள்ளுபடியாகி இழந்தது.  நாம் எதை கூறினாலும் கேட்க மறுத்து உன் பேச்சை தள்ளுபடி செய்கிறோம் என்பது போல நிராகரித்தது இதுவெல்லாம் தான்.

மேற்கண்டவெல்லாம் நடக்கிறது என்றால் நம் வாழ்க்கையில் எங்கேயோ ஏதோ தவறு நடக்காமல் நடக்குமா?  அப்படியென்றால் யாரோ கூடவே இருந்து மாய பேச்சு மற்றும் மாய தோற்றம் ஏற்படுத்தி நம்மை யாரோ ஏமாற்றி உள்ளனர் என்று தானே அர்த்தம். அது யார் என்பது எனக்கு தெரியாது உனக்கு தெரியும்.  நம் கணக்கு என்பதில் பிணக்கு எங்கேயோ ஏற்பட்டிருக்கிறது. யாருடைய ஏற்பாட்டோலோ தான் விடை என்பது தவறாகி அனைத்து கெட்டதும் நமக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் சிகரெட் பிடிப்பவனை நாம் அருகில் வைத்து கொண்டதால் புகையால் கேன்சர் நம்மிடம் கேன்சல் ஆகாமல் ஓர் கேன்வாட்டர் போல நோய் வந்த கதையாகிவிட்டது நம் கதை.  ஓர் கொரானோ போல். இதற்கு காரணம் தவறான கேன்வாஷ்-ல் நாம் "வாஷ்" ஆனதால் தான்.

இந்த சாகாத மாயமான் என்பதற்கு என்றுமே சாவில்லை.  ஏனெனில் அப்படியொன்று உயிரோடு இருந்தால் தானே. ஆனால் இதில் சாகாவரம் கொடுப்பவர்கள். நாம் சாதனை செய்ததாக சொல்லி வேதனை கொடுக்கும் ரோதனையாளர்கள்.  இவர்கள் நமக்கு சோதனை போன்றவர்கள் . இவர்களை சோதனை செய்து சோதிக்காமல் நம் சோதியில் எல்லாமே ஆனால் நாம் சோபிக்க முடியாது. நாம் ஏதோ சோதனை குழாயில் பிறந்தவர்கள் போல  நம்முடைய அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தபட்டுபட்டது போல் தேவையில்லாமல் நம் வாழ்க்கை ஆகி இவர்களால் நம்மை பல இடத்தில் நம்பமறுத்து, தேம்பி தேம்பி அழுகிறோம். 

இந்த அட்டாக் ஆனது ஓர் ஹார்ட் அட்டாக்-கைவிட கொடுமையானது, கேவலமானது, அசிங்கமானதும் கூட.  இந்த அட்டாக்கில் வீழ்ந்தால் உயிரை விட மதிப்பு மிகுந்த பலவற்றை அதன் மதிப்பு தெரியாமல் நம்முடைய மதியிழந்த செயல்பாட்டால் நம் மனதில் பதிப்பு போல பதியாது போன காரணத்தால் நம்முடைய மதிப்பு என்பது எந்தவித மதிப்பில்லாமல் போகும். இழப்பு என்பது இழந்து கொண்டே இருப்பது அல்ல.  இழப்பு என்பதே நம் வாழ்வின் பிழைப்பு என்று ஆக கூடாது. எதுவுமே இழப்பாக இல்லாமல்  ஆக சிறந்த வேலைகளை ஆக்கபூர்வம் ஆக தெளிவாக  செய்து  எதையும் ஆறபோடாமல் வேலையை வேலையோடு இனிதாக முடிப்போம்.

இது பாலைவன மணலில் ஓர் அணல் காற்று போல வீசும்.  அதோடு நம் வாழ்க்கையே கூசும்படி செய்ய கூடியது.  நமக்கான ஒரினஸ் என்பதே ஒரிஜினல் போன்று தோற்றமளிக்கும் இந்த டூப்ளிகேட் தான்.  இதனை "டூப் "போட்டு ஆனால் ஒரிஜினல் ஆக ஓர் நல்ல நயமிக்க டூயட் பாடலை போன்று நமக்கு  தருவதால் தான் நாம் எல்லாற்றிற்கும் பயமிக்க ஒர் வாழ்க்கையை வாழ்கிறோம். இவர்களின் இந்த பின்னல் ஜன்னல் என்பதில் இருக்கும் வலை போன்று இருக்கும். இந்த வலை வெளியில் இருந்து வரும் கெட்டதை பில்டர் செய்வதாக டாப் டக்கர் ஆக "டக்னு" பொய் சொல்லி "டக்னு" நமக்கு "பக்னு" இருக்கும் காரியத்தை வீரியத்துடன் செய்யும் வீரியமிக்கவர்கள் இந்த விரியன்கள். இவர்கள் பரந்து விரிந்து நம் குடும்பத்தில் இருந்தால் நம் செல்வாக்கு, கௌரவம், பணம், சொத்து மற்றும் இது அனைத்தும் அடங்கிய நம் வாழ்க்கை மொத்தமாக அடங்கி அடக்கம் செய்தது போல் என்றும் விரிவடையாது. இதனை மணிகணக்காக விரிவாக கூறிவிட்டேன். "மணி" என்பதில் கணக்காக இருந்தால் தான் நேரத்தையும், பணத்தையும் மிச்சபடுத்தி எதையும் மிச்சமில்லாமல் எல்லா வேலைகளையும், பல நல்ல காரியங்களையும் எதுவும் துச்சம் என்பது போல் செய்ய முடியும்.

விபரீதமான கெட்ட வேலைகளை அபரீவிதமாக அபகரிக்க  விதம் விதமாக பல விதங்களில் Fake-ஆக வித்தை காட்டும் சொத்தைகாரர்கள் இவர்கள். விபத்தை ஏற்படுத்திவிட்டு விபத்தால் நடந்ததை எதுவும் நடக்காதது போல் எந்தவித ஆபத்தும் இல்லை என்று கூறும் அபச்சாரமிக்கவர்கள். நம்மிடம் இருப்பதை ஆட்டையை போட்டுவிட்டு திருப்பதியில் மொட்டை போடுவதாக சொல்லி அல்வா கொடுக்கும் தூள் பட காமெடி போல, கவுண்டமணி கூறுவது போல் ரீல் அறுந்து போச்சு என்பது போல் நம்முடைய அனைத்தையும் அறுப்பவர்கள் இந்த கனவான்கள்.  இவர்கள் கனவிலும் வரகூடாத ஆபத்தானவர்கள். கனவு கலைந்தது போல் நம் வாழ்க்கையை கலைய செய்யும் கலை தெரிந்தவர்கள். இவர்களே நம் தங்க வாழ்க்கையை சொட்டை ஆக்குவார்கள் பிறகு இவர்களே அதை சரி செய்வதாக சொல்லி அனைத்தையும் சொரண்டி எடுத்து செல்லும் சொரனை இல்லாதவர்கள்.  இவர்கள் பரனையில் இருக்கும் பூனை போல யாருக்கும் தெரியாமல் சகுனி போல இருப்பார்கள். இந்த "கும்பல்" ஓர் "தும்பல்" போல ஏமாற்றியதும் தெரியாது மற்றும் நாம் இழந்ததும் பல தெரியாது. நமக்கு தெரியாமல் தெரிந்தே எடுத்து செல்ல திரிபவர்கள்.  இந்த திரி முந்திரி பருப்பு முதல் எதனையும் விட்டு வைக்காது. இதனை பற்ற வைத்தால் நம் வீடும் மனதும் தான் எரியும்.  ஏனென்றால் பூஜை ரூமில் நமக்கு மங்கலகரமாக நடக்க விளக்கு ஏற்றுவதற்கான திரியாக இவர்கள் இருப்பவர்கள் அல்ல. மங்கலம் பாடி நம்மிடம் இருக்கும் இருப்பை  இருட்டடிப்பு செய்து கொஞ்சம் இருங்கள் என்று கூறி இருக்கிறதை இல்லாமல் ஆக்குபவர்கள்.  அதோடு அதனை பொறுமையாக செய்பவர்கள்.

செல்லரித்த செல்லா காசு போல் ஆக்கிவிட்டு உங்களுடைய செல்வத்தை காணோம் என்று கூறுபவர்கள். எல்லாவற்றையும் செல்லமாக கூறுவது போல் கூறி நம் செல்வ சீமானை கீழே தள்ளி தண்ணி காட்டுவதில் விவரமானவர்கள். இவர்கள் விவரம் தெரிந்தும் கூட வைத்து கொண்டால் நமக்கு விவாகாரத்து ஆவது உறுதி ஆகும்.  விவகாரம்பிடித்தவர்கள் விவசாயம் செய்வதாக சொல்லி அவர்கள் சாயம் வெளுத்துவிட்டது. பிறகு இவர்களை வெளுத்துவாங்கி வெளியே  தள்ளாமல் இருந்தால் நம் வாழ்க்கை கோர்ட்டில் தள்ளுபடியாவது போல் சீக்கிரமாக நம்மை தள்ளி அதில் படிகட்டு போல ஏறுவார்கள். 

ஆனால் அடுத்தவன் சொத்தை சோத்தை திண்பது போல திண்ண முயற்ச்சிப்பவன்.  ஆனால் திண்ணையில் இருந்து காக்கும் காப்பான் போல கூறுவார்கள். காக்க காக்க என்று காக்கி போடாமல் இருந்து பின் நம்மை தாக்க தாக்க என்று சந்தோஷத்தை கபளீகரம் செய்பவர்கள். இவர்களே நம்முடைய தோஷம் ஆகும்.

இவர்களிடம் "பந்தம்" என்பது ஓர் "பந்த்" போல இருக்க வேண்டும். நமக்காக "பந்தம்" கொளுத்தி  இருட்டில் வெளிச்சம் தருவதாக கூறி நம்மை சுருட்டி போடும்  இவர்களை வெளிநடப்பு செய்ய வைக்க வேண்டும். வீட்டிற்கு வெளியிலும் இவர்களிடம் எதையும் வெளிப்படையாக கூற கூடாது. பிராந்தியத்தில் நாட்டுகோழி போல் சந்தோஷமாக இருந்த நம் வாழ்க்கை பிராய்லர் கோழி போல் ஆக்கி நம்மை அனைத்திலும் ஸ்தம்பிக்க செய்துவிடுவார்கள். சிக்கன் குனியா மற்றும் பல கெட்டவைகள் உங்களுக்கு இலவசம். அவர்கள் வசதிக்காக நீங்கள் வசமாக மாட்டி கொள்வீர்கள். உங்கள் வீட்டை சுத்தபடுத்துவதாக சொல்லி உங்களிடம் இருக்கும் அனைத்தையும் சுத்தமாக துடைத்துவிட்டு பிறகு உங்களை மழையில் இருந்து காக்க ஓர் குடை பிடித்தது போல் கூறுவார்கள்.  இவர்களை சரியாக எடை போடாததால் தான் சுத்தியில் அடிப்பது போல் உணர்ச்சிகரமாக பேசி உணர்ச்சியில்லாத மனிதனுக்கு எல்லா உணர்வும் கொடுத்தது போல் கூறி நம்மை பிணமாக்கி மற்றும் பலவற்றில் நம்மை பணயமாக வைத்து அவர்கள் பணத்தை பதமாக எடுத்து சென்றுவிடுகின்றனர். ஆனால் நமக்கு இதமாக இதயத்தில் எந்த அட்டாக்கும் வராமல் பார்த்து கொண்டது போல் கூறுவார்கள். இதனை இதனால் விடு என்பார்கள். மகாநதி கமல் போலவும், தெகிடி படம் போலவும், சத்யா படம் போலவும் பலரின் வாழ்க்கையை எந்த கேள்வியும் இல்லாமல் கேள்விபட்டிருக்கிறேன். அதற்காக அப்படியே அப்பட்டமாக எல்லோருக்கும் நடப்பதாக, நடந்ததாக சொல்லவில்லை. அப்பளம் போல மனமுடைந்து ஏன் உடைந்தது, எதற்காக உடைந்தது என்றே தெரியாமல் உடையணிந்தும் நிர்வாணம் ஆக,  வானம் பார்த்த பூமியாக வாழ்பவர்கள் பலர் உள்ளனர் அவர்களுக்கான பதில் இது.

அதனால்தான் மேற்கண்ட அதனை அதற்காக அத்தனை தடவை அர்த்தம் உடன் ஓர் முகூர்த்தம் போல கூறுகிறேன். மனதில் சாந்தம் என்கிற சாந்தியே இல்லாமல் சாந்தி முகூர்த்தம் நடந்தால் அது நமக்கு ஓர் வாந்தி போல இன்பகரமாக இருக்காது என்பது குறிப்பிடதக்கது. சாந்தபடுத்துவதாக கூறி காந்தம் போல பேசி ஈர்த்து  கோபபட செய்ய வைப்பவர்கள்.   

துன்பத்தில் இருந்து துன்பபடாமல் துன்பத்தை போக்கி  இனிதாக விடைபெறவே இக்கட்டுரை. மற்றபடி யாரையும் குறிப்பிட அல்ல சத்தியமாக. "பத்தியம்" என்பதே குணமடைய ஓர் "குணாளன்" என்று "வைத்தியம்" கூறுகிறது. அது போல தான் இதுவும் இதில் குணமடைய நல்ல குணங்களை உடைய குணாளனை என்னை போன்று நல்லவனை நம்பமாட்டீங்க.  சரி என்னை போன்ற வல்லவனை நல்லமுறையில் அருகில் வைத்துக்கொள்ளுங்கள்.

சரி வரி வரியாக உங்களிடம் எந்த வரிபணமும் தற்போது வரை வாங்காமல் வரிந்து கட்டி கொண்டு இந்த கட்டுரையை எழுதிவிட்டேன்.  பிறகு என்ன விடைபெறுகிறேன். மீண்டும் JMN-ன் ரிதம் F.M.605 108-ல்  சந்திப்போம்.

 இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html