GREAT BOX OFFICE THREATNING STORY

கிரேட் பாக்ஸ் ஆபிஸ் அட்டவணை "மிரட்டல்" ஸ்டோரி [GREAT BOX OFFICE THREATNING STORY]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.

JMN-ன் ரிதம் F.M- 605 108-ல் 119-வது கட்டுரையாக "GREAT BOX OFFICE MIRATAL STORY".

இதில் கூறுவது அனைத்தும்  உண்மையாக, சத்தியமாக யாரையும் குறிப்பிட அல்ல.

வாழ்க்கையே அட்டகாசமான அட்டவணையில் தான் உள்ளது. அட்டபெட்டி போன்ற வாழ்க்கையில் நம்முடைய அனைத்தும் இதில் அடக்கம். பிறப்பது முதல் அடக்கம் செய்வது வரை இது கூடவே இருப்பது. இந்த அட்டவணையில் தான் அனைத்தும் காரியங்களும் வரையறுக்கபடுகிறது. இந்த அட்டவணையில் அடங்கியவர்கள் தான் நேரத்தை உபயோகமாக உபயோகிக்க முடியும். அதோடு எந்த செயலும் உபத்திரம் இல்லாமல் நடக்கும்.

உலகத்தில் எல்லாம் அட்டவணை போட்டு தான் அரங்கேறுகிறது. பணக்காரர்கள் அட்டவணையில் தான் செயல்படுகின்றனர்.

மிரட்டல்:-

மிரட்டல் பலருக்கு நல்ல ராசியாகவும் அமையும்.  ராகு, கேது, சனி போன்றவர்கள் மொத்தமாக அசெம்பிள் ஆகி துரதிஷ்டவசமாகவும் அமையும். வசதியாக வாழ வசமாக மாட்டிகொண்டது போலும் ஆகும். சில சமயங்களில் நம்மிடம் இருந்த வசந்தமான வாழ்க்கை இலையுதிர் காலம் போல் நிசப்தம் அடையும்.  சௌகர்யமான வாழ்க்கை அசௌகர்யமாக ஆவதும் இதில் நடக்கும். துச்சம் ஆன விஷயங்கள் மிச்சம் இல்லாமல் நடக்கும். நம் எதிரில் இருப்பவர்களுக்கு அச்சம் என்பதை ஏற்படுத்துவது. 

மிரட்டல் என்பதற்கு நியாயம் என்பதே அநியாயமாகவும் இருக்கும். சில சமயங்களில் தர்மத்தை நிலைநாட்ட அதர்மம் ஆன மிரட்டலும் விடுவிக்கபடும்.

கீழ்கண்ட மிரட்டல்கள் யாவும் தங்களுக்கு கீழ் உள்ளவர்களை மட்டுமே மிரட்ட முடியும். அவர்கள் கீழ் உள்ளவர்களுக்கு கீழ்தனமாக எதாவது நடந்து அதிருப்தி ஏற்பட்டாலும், அவர்கள் கீழ்மட்டத்தில் இருப்பதால் கீழ்கண்ட வகையில் வகை தொகை இல்லாமல்  மட்டமாக நடந்து கொண்டாலும் அவர்களுக்கு தான் நியாயமே இல்லாமல் தலைகீழ் ஆக நடப்பது போல் அனைத்தும் நடக்கும். ஐயா என நீங்கள் தான் கூப்பீடுவீர்கள். அவர்கள் கூப்பிடமாட்டார்கள். சமஉரிமை என்பது ஓர் உரிமைகுரல் இல்லாமல் உரிமையை உரித்து எடுத்தது போல் இருக்கும். எல்லாம் மேல்மட்டத்திற்கு மட்டுமே உரியது. அது தான் மட்டுபடுத்துகிறது. மேல் உள்ளவர்கள் அதற்குமேல் உள்ளவரிடம் இவ்வாறு நடந்துகொள்ளமாட்டார்கள்.

உள்ளது உள்ளபடியே நமக்கு என்ன நல்ல உள்ளம் இருந்தாலும் அதிகாரம் உள்ளவருக்கு மட்டுமே எந்த பள்ளம் இல்லாமல் அனைத்தும் நடைபோடும்.

சில சமயங்களில்  மரியாதை மரித்து போகும். இதற்குமேல் அனைவரும் சமம் என்று கூறினால் இருக்கிறது சமத்துவமாக அந்த அந்த அதிகாரத்திற்கு உட்பட்டு.

 

மிரட்டல் பலவகைபடும்:-

1) அதிகாரத்தை வைத்து மிரட்டுவது.

2)ஆளை வைத்து மிரட்டுவது.

3)பதவியை வைத்து மிரட்டுவது.

4) அட்ட கத்தி மிரட்டல். ETC.


அட்டகத்தி மிரட்டல்:-

மேற்கண்டவற்றில் அட்டகத்தி மிரட்டல் ஓர் அசட்டு தனமான மிரட்டல் ஆகும். இது மேற்கண்டவற்றை கூறி யாரை வேண்டுமென்றாலும் மிரட்டுவது.  இதில் சேதாரம் அதிகமாக இருக்கும். அடி, உதை, வெட்டு வாங்குவது வரை நடக்க வாய்ப்புண்டு.

இதில் தான் நம்மை நண்டுபிடி போட்டு நாம் செய்த குற்றங்களையெல்லாம் EMAIL-ல் SENT செய்ய வைப்பது.  அநியாயம் பண்ணி அப்பட்டமாக அதர்மமாக  சேர்த்த அசையும் மற்றும் அசையா பல சென்ட் சொத்துக்கள் எந்தவித அசைவும் இல்லாமல் அசத்தல் ஆக INCOME TAX-ல் சிக்குவது மற்றும் லஞ்சம் வாங்கி மாட்டி கொள்வது எல்லாம் நடைபெறுவது அட்டகத்தி செயல்பாடுகளால் தான். இதனால் இவர்கள் பாடு பெரும்பாடு ஆகிவிடுகிறது. 

கூப்பாடு போட்டு கூச்சம் இல்லாமல் கூச்சல் போட்டு கத்தினாலும் இந்த அட்டகத்தியை கத்திரிகோலில் கத்திரித்தது போல் கத்தரித்துவிடுகின்றனர்.

ஓர் நீச்சல் தெரியாமல் கடலில் இறங்கிய நீச்சல்காரன் இந்த அட்டகத்திகாரன்.

கௌரவம் காற்றில் பறக்கும். வானம் போன்ற பரந்து விரிந்த நம் வாழ்க்கை ஓர் மானம் இல்லாமல் ஆக செய்யகூடியது.

அட்டகத்தி மிரட்டல் டம்மி பீஸ்கள் செய்ய கூடியது. டம்மி பீஸ் டம்மியாக இல்லாமல் அம்மி போன்று வலிமையானது என்பது போல் காட்டி கொள்ள செய்வது. முக்கியமான ஒன்றான கம்மியான பேச்சுடன் கமுக்கமாக இல்லாமல், அமுக்கி வாசிக்காமல் அவர்கள் வாழ்க்கையே அமுங்கி போகிறது. அம்புட்டும் என்னால் தான் நடக்கிறது என்று வில் வீரனிடம் கூர் இல்லாத அம்பு வீசி வீழ்வது தான் பெரும்பாலும் இவர்கள் ஸ்டோரி.

அட்டகத்தி மிரட்டலால் பல பேருக்கு "ஸ்டோக்" வந்தது போல் ஆகியுள்ளனர். நம்மிடம் "ஸ்டோன்" எதுவும் இல்லாமல் போல்டு ஆக கூடியவர்கள்.

போல்டான மிரட்டல் போல் தெரியும். ஆனால் இவர்கள் போல்ட் நட்டை கழற்றிவிடும்.

சிவப்பு கம்பள விரிப்பு சிறப்பாக கிடைக்க சிரிப்பு வர வைக்க கூடிய அட்டகத்தி செயல்களை பல செயல்பாடுகள் மூலமாக செயல்படுத்தி எதிலும் செயல் அற்றவர்கள் என்பதை காட்டுவார்கள்.

காட்டு ராஜா போல் செயல்பட்டு காட்டுத்தனமான அடி வாங்குபவர்கள்.  காட்டுமிராண்டி எதையோ பிராண்டியது போல் இருக்கும் இவர்களுடைய அனைத்து காரியங்களும். இவர்கள் வேலைக்கு இவர்களே வேட்டு வைத்துகொள்ள கூடியவர்கள் பருத்தி வீரன் காமெடி போல. பல இடங்களில்  அதிகாரிகளால் கொட்டுபட்டு இருக்க கூடியவர்கள்.

 வேலைகாரி முதலாளி என்று சொல்லி கொண்ட கதை தான் இவர்கள் கதை. அமைதியானவள் என்றென்றும் அகங்காரி என்று பெயர் வாங்க முடியாது.

வேலையில் ஓர் நல்ல வேலைகாரன் ஆக இல்லாமல் வேலையிழந்து நிற்க கூடியவர்கள். ஓர் வேலையில்  பல வேலைகள் செய்பவர்களே இவ்வாறு அட்டகத்தி வேலைகள் செய்வதில்லை.

ஆண்மையில்லாத ஆம்பள  மிரட்டல்:-

ஆண்மை உள்ள ஆம்பளயை மனைவிதான் "ஆம்" ஆம்பளதான் என்று கூற வேண்டும் மற்றும் அவனுடன் மஞ்சம் என்பதில் பஞ்சம் இல்லாமல் வாழ வேண்டும். அதைவிட்டு ஆம்லேட்-ஐ பிரட்டி போட்டு செய்வது போல் இவனை பிரட்டி போட்டு அவள் அடித்தால், திட்டினால் எவ்வளவு அசிங்கமோ அது போல தான்.  

ஆண்மையில்லாதவன் பெண்ணை அண்மை காலத்தில் கல்யாணம் செய்து விட்டு பிறகு இவனால் முடியாமல் அந்தி பொழுதில் அவள் அந்நியம்  என்றால் என்ன ஓர் கேவலமோ அது போல தான் மேற்கண்ட மிரட்டலும் சந்திரமுகி காமெடி போல மானங்கெட்டதாகிவிடும்.

சந்தி சிரிச்ச ஆம்பள முந்தி விரிக்க சொன்ன கதை போல ஆகிவிடும்.

யாசிப்பவன் தான் சந்நியாசி.  வேசியை மற்றும் ஓர் தாசியை தேடி செல்பவன் அல்ல.

 கிரேட் பாக்ஸ் ஆபிஸ் மிரட்டல்:-

பாக்ஸ் ஆபிஸ் மிரட்டல் சரியோ, தவறோ எல்லாவற்றிலும் மாஸ் ஆனவனால் தான் முடியும். எல்லாவற்றிலும் ஆனவன் ஆனவமாய் எதிலும் மிரட்டல் விடுக்க முடியும். இவனை விட்டுவிடு என்று எல்லாமே விடுப்பு வாங்கி சென்றுவிடும். இவனிடம் எதை விடுத்தாலும் அது விடுதலை அடைந்து வெற்றி பெற்று விடைபெற்றுவிடும்.

பலம் பொருந்தியவன் பலத்தோடு பலமிக்க மற்றும் பலன் உள்ள வேலைகளை பலாபலன் இல்லாமல் கூட செய்வான். 

கிரேட்-ஆக இருப்பவனுக்கு எல்லாமே FIRST GRADE தான் அவன் வாழ்வில். எதற்கும் ரேட் என்பது கிடையாது இருந்தாலும் அது பெரிய விஷயம் கிடையாது.

விருப்பத்துடன் விரும்பி, அனைத்தும் ததும்பி "அட்ட" போல அவனோடு ஒட்டி இருக்கும். பிரண்டு போல அனைத்தும் பிரண்ட்லியாக இருக்கும். காந்தம் போன்று அனைத்தையும் ஈர்ப்பார்கள்.

அதிகாரகுரல் அதிகாரமில்லாமல் சாந்தம் ஆக இருக்கும். பதவியில் உள்ளவர்கள் பதமாக நடந்து கொள்வார்கள். ஆள்பலம் உள்ளவர்கள் அங்கு ஆள்நடமாட்டம் இல்லாமல் இருப்பார்கள்.  இவர்களால் தான்  GREAT BOX OFFICE MIRATAL விடமுடியும். அதோடு எதையும் விடாபடியாக விடாமல் பெற முடியும்.

மொத்தத்தில் என்னை போல இருப்பார்கள். இந்த V.R.S-ஐ எதிர்ப்பவர்கள் முதல் அனைத்தும் V.R.S வாங்கி செல்லும். முடியாத காரியம் என்பது என் அகராதியில் முடியாது. அதற்காக மேலே இருந்து குதிக்க சொல்லாதீர்கள்? தண்ணீரில் நடக்க சொல்லாதீர்கள்? சொல்வது புரிகிறதா?  என்னிடம் இருக்கும் எனக்கான வேலைகளில் அனைத்துமே நல்லபடியாக முடிந்த முடிவு தான். நாம் எழுதும் போது நம்மை பற்றி சிறிய Side Bit எழுதாமனா எப்படி?.

ஸ்டோரி போல பல பேர் குடும்பத்திலும், ஆபிஸிலும், FRIENDS இடமும் பல கதைகளை போலியாக அதில் போலியில்லாமல் மேற்கண்டவற்றையெல்லாம் செய்யும் பலம்மிக்கவன் போல குடும்பத்தில் ஆபிஸை பற்றியும், ஆபிஸில் குடும்பத்தை பற்றியும் கூறுகிறார்கள் என்று செவிவழி செய்தியாக கேள்விபட்டேன். நம்முடைய கதை ஓர் விதையாக இருக்க வேண்டும். அதைவிட்டு பலஉதை வாங்கியது போல் இருக்க கூடாது.

மனசாட்சி தான் நம்முடைய நிஜசாட்சி. நிஜசாட்சி நிஜமில்லாமல் இருந்தால் நிஜமாக நிம்மதியாக இருக்க முடியாது. தற்புகழ்ச்சி தற்காப்பு அல்ல தற்போதைக்கு கூறுவது. தற்போதைக்கு கூறுவது எப்போதைக்கும் இருக்காது. பிறகு அரசல், புரசல் ஆக கேவலங்கள், அசிங்கங்கள் அசிங்கமில்லாமல் நம் அன்றாட வாழ்க்கையின் ஒன்றாக ஆகிவிடும்.  

மேற்கண்டவற்றில் எது ஆண்மை இல்லாத ஆம்பள மிரட்டல் மற்றும் அட்டகத்தி மிரட்டல் மற்றும் கிரேட் பாக்ஸ் ஆபிஸ் மிரட்டல் என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன். போலியான தோற்றம் கரிபோல் இருக்கும் ஆனால் வைரம். நிஜதோற்றம்  கரி உண்மையான கரிபோன்ற தோற்றத்திலேயே இருப்பது. கரி என்றும் கரிதான். ஆனால் வைரம் கரி கிடையாது என்பது நமக்கு தெரியும். நமக்கு நம்மை பற்றி தெரிவது தான் நிஜ தோற்றம் என்பது குறிப்பிட தக்கது.

இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை.

ரைட்டான ரைட் PERSON வாழ்வில் எல்லாமே ரைட்டாக தான் நடக்கும்.  ராங்கான PERSON வாழ்வில் எல்லாமே ராங் கால் போல தேவையில்லாதது மற்றும் துன்பம் தரகூடியது தரமான தரத்துடன் தர தரவென்று அத்தனையும் ரைட்டாக நடக்கும்.

மிரட்டல் என்கிற பின்குறிப்பு:-

பின்குறிப்பு என்பது சிலசமயங்களில் நம் வாழ்க்கையில் பின்னாடி செல்லாமல் இருக்க உதவகூடிய முக்கியமான ஒன்றாகும்.

மிரட்டல் என்கிற பின்குறிப்பை பின்புலமாக வைத்து செயல்பட்டால் பின்னாடி பல பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதன் பின்னர் நாம் எதிலும் வின்னர் ஆக இருக்க முடியாது. இதில் அனைத்துமே தற்பொழுது தான். எப்பொழுதும் ஓர் பொழுதுபோக்குவது போல இதில் இருந்தால் முடியாது.

மனது என்ற நிறுவனத்தில் இவ்வாறு இருப்பது தவறு என்று நிறுவ வேண்டும்.  அப்போது தான் நம்மிடம் இருக்கும் கெட்டது அனைத்தும் நம்மால் நிறுத்த முடியும். கண்டவைகள் முதல் மேற்கண்டவை வரை யாவும் நமக்கு ஓர் கண்டம் போல தான். இதை மனதில் நிலை நிறுத்தினால் தான் அனைத்தையும் நம்மிடமிருந்து அனைக்க முடியும். இதனை அனைப்பதற்கு  அனையா தீபந்தம் ஆக நம் மனதில் இது சுடர் விட்டு எரிய வேண்டும்.  அப்போது தான் எந்த இடர்-ர்ம் ஓர் படர் கொடி போல் படராது.

வாக்கு மாறினாலும் மாறலாம் ஆனால் இந்த போக்கு ஓர் சரியில்லாத போக்காகும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் இது நமக்கு சரிவை ஏற்படுத்தகூடிய ஒன்று ஆகும். இது எல்லாவற்றிற்கும் சரிபட்டு வராது. இதுவே நிதர்சனம்.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html