இரத்த நாளங்களில் ஏறிய எச்சங்கள் [The Gents Historical Different Collections]

  

160 → இரத்த நாளங்களில்நாடி நரம்புகளில் மரபுகள் போல் தென்றலாய்பிசு பிசுத்த மழையாய் உள்ளே ஏறிய ஆடவர்களின் ஆண் திமிரு{பூலோக வரலாற்றில் எச்சங்களாய் சேகரிக்கபட்ட சிம்மசொப்பனமாய் விளங்கிய யுவராஜ மன்னர்களின்,நாயகர்களின்தெய்வங்களின் ஆண் தன்மை கோட்பாடுகளின் தாம்பூலங்கள்.} [The Gents Historical Different Collections]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.

திருசிற்றம்பலம்

வைராவீராராச என்று பல பெயர்களுடன் ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN-ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய வாசகர்களே.

இது அனைத்தும் பூலோக வரலாற்றில் எச்சங்களாய்  சேகரிக்கபட்ட சிம்ம சொப்பனமாய் விளங்கிய யுவராஜர்கள் மற்றும் தெய்வங்கள், அசுரர்களின் ஆண் திமிரு கோட்பாடுகளின் தாம்பூலங்கள் ஆகும்.  தாம்பூலம் என்பது வரவேற்பது, அழைப்பதற்கு கொடுப்பது மட்டும் அல்ல. தாம்பூலம் கொடுத்து ஆரம்பிப்பதும், பலவற்றை சொல்வதிலும் கூட இருக்கிறது.    அதாவது அந்த காலத்தில் திருடுவதற்கு முன் படைத்துவிட்டு திருடுவதோ அல் திருடி முடித்துவிட்டு படைக்கும் வழக்கம் இருந்து உள்ளது போல்.  அதாவது ஒவ்வொரு மன்னர்களும் ஒவ்வொரு விதமான தன்மை உடைய ஆண் திமிரை இப் புவியில் வெளிபடுத்தி ஆரம்பித்து வைத்துள்ளனர்.  அது இக்காலம் வரை இரத்த நாளங்களில் கலந்து வரலாற்றில் தாம்பூலங்களாக தொடர்கிறது.  இதனுடைய எச்சங்களே நாம். 

எதுவும் யுகம் யுகமாய் அல் நூற்றாண்டுகளை கடந்து சரியோ, தவறோ தொடர்ந்தால் அது நம்முடைய இரத்த நாளங்களில் மற்றும் நாடி நரம்புகளில் ஏறி விடும் என்பது குறிப்பிடதக்கது.  புராண காலத்திற்கு செல்வோமா.

சுயம் வரம் சென்று இளவரசியை கவர்ந்து வரும் மன்னனை விட பெண்களை கவர்ந்த மன்னனை தான் மன்மதன் என்கிறார்கள்ஆணழகன் என்று குறிப்பிடுவார்கள்.

மகாபாரதத்தில் குருஷேத்திரம் என்பதன் ஆரம்பமே பாஞ்சாலி துரியோதனன் தவறி தண்ணீரில் விழுந்து விடுவான்.  அதை பார்த்து அவள் சிரித்து விடுவாள்.  அது அவனுக்கு இழுக்காய் நினைத்து தான் துகில் உரிக்கும் சம்பவத்தை அத்தனை பேர் முன் அரங்கேற்றுவான்.  இது ஒரு வகையான ஆண் திமிரு.

இராமாயணத்தில் ராவணன் சீதை சுயம்வரத்திற்கு வருவான்.  வந்தவுடன் அவன் உன் மகளுக்காக நான் வரவில்லை.  உன் மகளை போன்றவர்கள் அந்தபுரத்தில் ஏராளமாய் உள்ளனர்.  நான் சிவதனுசு என்பதால் வந்துள்ளேன் என்பான்.  அதோடு விரும்பாத பெண்ணாகிய சீதையை கடைசி வரை தொடவே இல்லை.  அதோடு அத்தனை மாதங்கள் இருந்தும் இவளை நம்மால் கவர முடியவில்லையே என்று தான் வெட்கம் கொண்டான்.  கவர்ந்து வர தான் நம்மால் முடிந்தது அவளை கவர முடியவில்லையே என்ற வேதனையும் அவனுக்கு இருந்தது.  இதுவும் ஒரு ஆண் திமிரு.  இப்படியாக இராவணன், அசோகர் etc என்று வெவ்வேறுவிதமான ஆண்களின் திமிரையே இவ்வுலகம் கண்டுள்ளது.

ஜான்சிராணியே வெள்ளை காரனை தான் எதிர்த்தாள்.  ஆனால் அவளுக்கான பெண்ணியத்தை அவள் காத்தாள்.  அதோடு இப்போது வந்த இந்தி திரைபடத்தில் கூட அனைத்து இந்து மத பெண்களும் தீக்குளித்து இறந்து போன கதை தான் உண்டு.  இதையே காலம் காலமாக ஆண்கள் முதல் பெண்கள் வரை கண்டுள்ளனர்.

மன்னருக்கு அந்தபுரம் இருந்தது.  ஆனால் எந்த ஒரு அரசரே இல்லாத ராணிக்கும் அந்தபுரம் இல்லை என்பது குறிப்பிடதக்கது.  அந்தபுரம் உள்ள அரசனே அரசாண்ட மக்களை ஒழுங்காக தான் வழி நடத்தினார்கள் அதோடு பெண்களை கொடுமைபடுத்தினால் அதற்கான தண்டனைகளையும் அந்தபுரத்து மஹா ராசாதான் வழங்கினார்.

கண்ணகியே தன் கணவனுக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்க முற்பட்டு மன்னனின் சபையில் தன்னுடைய சிலம்பத்தை உடைத்து தன்னுடைய கணவன் களங்கமற்றவன் என நிரூபிப்பாள்.  அத்துடன் அவளின் பத்தினி சக்தியால் மதுரையே தீபற்றி எரிந்தது. அவளும் பெண்ணியத்தை காத்தாள்.  அத்துடன் கடைசி வரை நான் ஒழுங்கானவள் என்று பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தாள்.  இப்படியாக அனைத்துமே அன்று முதல் இன்று வரை பல கோட்பாடுகள் தனக்குள்ளேயே வகுத்து வாழ்ந்தவர்கள் ஏராளம்.

பாரதியார் பெண்கள் பற்றி புரட்சி பாடல்கள் பாடினார் என்பது மட்டும் தான் நமக்கு தெரியும்.  அது அவர் வீட்டுக்கு பாடவில்லை.  வீட்டிலும் பின்பற்ற சொல்லவில்லை.  நாட்டுக்கு தான் பாடினார்.  அந்த பாடல்  அப்போது இந்த அளவுக்கு பிரபலமாகவில்லை அதற்கே அவரை ஐயர் இனம் ஒதுக்கி வைத்தது என்று கூறபடுகிறது.  பெண்கள் மத்தியிலும் அக்காலத்தில் அவர் பாடல்களுக்கு பெரிதாய் ஆதரவில்லை என்று கூறபடுகிறது.  அவர் மதம் கொண்ட யானையால் மிதிபட்டு  அப்போது இறந்த போதும் பலர் வருத்தபடாமல் ஒழிந்தார் என்று நிம்மதி அடைந்துள்ளனர் என்றும் கூறபடுகிறது.  அதற்கு காரணம் பெண்கள் பற்றிய புரட்சி பாடல்கள் தான் காரணம் என்று சொல்லபடுகிறது. பல காலத்திற்கு பிறகே அவருடைய பாடல்கள் பிரபலமடைந்ததாக கூறபடுகிறது.  இப்போதும் அவர் பாடல்கள் கேட்க நன்றாக இருக்கும் நடைமுறைக்கு அவருடைய பல பாடல்கள் உதவாது என்று கூறுபவர்கள் ஏராளம்.  சாதிகள் இல்லையடி பாப்பா என்றார்.  அட போப்பா இதையெல்லாம் கேட்டால் ஜாதி கட்சியே இவர்களால் நடத்த முடியாது என்பார்கள் பலர்.  இதற்காக ஜாதி கட்சியை கலைக்க தான் போகிறார்களா என்பார்கள் பொது மக்களில் சிலர். அவனவனுக்கு தேவையானதை அந்தந்த பாடலில் இருந்து உறுவி கொண்டு வாய் கிழிய பேசுகிறார்கள் என்பார்கள்.  பாரதியார் நினைவு நாளான இன்று அவருடைய உண்மையான வரலாற்றை நினைவு கூறுவோம்.  

கடவுள் அவதாரங்களே இதனால் நடந்துள்ளன.  ஒரு அசுரன் தெய்வத்திடம் வரம் கேட்பான்.  அந்த வரத்தில் பெண்ணை தவிர்த்து யாராலும் நான் சாக கூடாது என்பான்.  பெண்ணை ஏன் விட்டாய் என்றதற்கு சாதாரண ஒரு பெண்ணால் என்னை என்ன செய்து விட முடியும் என்று ஆண் திமிருடன் கூறுவான் பின் தெய்வத்தால் அழிவான் என்பது வேறு விஷயம்.

இதே போல் தான் அர்த்தநாதீஸ்வரர் ஆக தன் உடலில் ஒரு பாகத்தை கொடுத்த சிவனே பார்வதியிடம் சிவ சக்தியாபார்வதி சக்தியா என பெரிய திருவிளையாடல் ஒன்றை நடத்தி முடித்துள்ளார்.  இதில் வெற்றி, தோல்வி முக்கியமல்ல ஏனென்றால் அனைத்தும் சிவ செயலே.  விஷயம் ஆண் திமிரு என்பது தான்.  தெய்வங்கள் முதல் சிம்மசொப்பனமாய் விளங்கிய யுவராஜ மன்னர்கள் வரை  ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோட்பாடுகளில் தன்னுடைய ஆண் திமிரை பறைசாற்றி உள்ளனர் அதோடு பெண்களை காத்துள்ளனர்.

இஸ்லாம் மார்க்கத்திலும் நபிகள் சொன்ன பெண்களுக்கு உண்டான அனைத்து கோட்பாடுகளும் ஆண்களுக்கு கூறிய கோட்பாடுகளும் வெவ்வேறானவை.  ஏனென்றால் ஆண் வேறு பெண் வேறு என்பதால் தான். இத்தோடு நபிகள் நாயகமும் பெண்களை காத்துள்ளார்.

இப்போதும் நீ பெண் என்பதை மறந்து விடாதே ஓவராக பேசுகிறாய்அடக்கம் ஒடுக்கமாய் இரு என்பார்கள்.  அத்துடன் இப்படி இருந்தால் புகுந்த வீட்டில் என்ன தான் செய்ய போகிறாயோ என்பார்கள்.  

அத்துடன் சட்ட சபையிலேயே பெண்ணியம் பேசும் மற்றும் பெண்கள் கணவன் இறந்து விட்டால் அவள் விதவை அல்ல கைம்பெண் என்று கூறிய முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியே இவள் ஒரு சாதாரண பெண் உனக்கு என்ன இவ்வளவு அகங்காரம் என்பது போல் தான் சட்ட சபையில் அன்று எதிர் கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவின் சேலையை உறுவினார்கள். 

மேற்கண்டவையெல்லாம் சரியோ தவறோ வரலாற்றில் நடந்த ஆதாரங்களாகும்.  இது அனைத்திலும் நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று தான்.  இதில் நம் தவறு என்று இருப்பது போல் எதுவும் தெரியவில்லை.  ஏனென்றால் இப்போது இருக்கும் ஆண்கள் அனைவரும் இவர்களின் மரபு வழி வந்தவர்கள் தான்.   நாயகர்களுக்கு ஒரு கோட்பாடு நாயகிகளுக்கு ஓர் கோட்பாடு என்று தான் உலகளவிலும் இன்றும் சம்பிரதாயங்களாய் வெவ்வேறு விதங்களில் மதங்கள் வழியாக இருக்கிறது 

ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு மதத்திற்கும்  ஒவ்வொரு சித்தாந்தங்கள்  பெண்கள் பற்றி இருக்கும் போது தனக்கு என ஒரு சில கோட்பாடுகளுடன்  ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் வாழ்ந்தால் தவறா என்ன?  இவன் வகுக்கும் கோட்பாடுகள் எதுவும் புதியது அல்ல.  தன்னுடைய மூதாதையர்கள் வழி வந்தவன்  என்பதை நிரூபிக்கும் வகையில் தான் அக்கோட்பாடுகளும் இருக்கிறது.  ஒரு வேலை தவறு என்றால் இது யார் குற்றம்? .  கட்சி வேறு குடும்பம் வேறு.  பதவிகள் வேறு பாசம் வேறு என்பது குறிப்பிடதக்கது.

மேற்கண்ட அனைத்தும் ஓர் தென்றலாய், பிசு பிசுத்த மழையாய் சரியோ தவறோ உள்ளே ஏறிய மற்றும் ஜூன்கள் வழி வந்த ஒன்றாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

முகமதியர்களின் சுல்தான் ஆட்சியில் "பராக்என்றால் "வரார்என்று அர்த்தம்பேட்ட பராக் போல வீரா வரார்வைரா வரார்ராச வரார் என்பது.  இது அனைத்தும் ஒன்றாக அதோடு பெயரில் பல PUNCH வசனங்களுடன் இருக்கும் நான் என்றென்றும் உங்களுக்காக நான் எழுத்துக்கள் அடங்கிய ஆர்டிகல்லாக உங்கள் மனதில் வரைய "வரார்என்று வந்து கொண்டே இருப்பேன்.  அதோடு என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.

இது அனைத்துமே மெய்யாபொய்யா என தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html