அதிபயங்கர மிருக மாந்திரீகம் [SHOCK MANTHRA]

அதிபயங்கர மிருக மாந்திரீகம் [HIGH FEAR SHOCK MANTHRA]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா. SL CHETTIYAR.

Jmn-ன் ரிதம் F.M 605 108-ல் 128-வது கட்டுரை "மிருக மாந்திரீகம்" உங்கள் பார்வைக்கு

மாந்திரீகம் என்பது காப்பாற்றுவதற்கும், கெடுதலுக்கும் பயன்படகூடிய ஓர் அதிபயங்கரமாகும். அமானுஷ்ய உலகத்தில் இது ஓர் பயங்கரமான மிருகம் போன்றது ஈவு இரக்கம் எந்த கடையில் கிடைக்கும் என்று கேட்க கூடியது.எந்த இரக்க உணர்ச்சியும் இல்லாதது ஆகும். இது அமாவாசை போல் நம் வாழ்க்கையை இருட்டில் தள்ளக்கூடியது. அதே சமயம் கார் இருளில் நம்மை காப்பாற்றி பௌர்ணமியையும் ஏற்படுத்தக்கூடியது. அமானுஷ்யத்தில் இவர்கள் ஓர் பயங்கரவாதிகள் ஆவர்.

மாந்திரீகமானது பலரை பயமே இல்லாமல் அதிபயங்கரமாக நிலைகுலைய வைக்க செய்வது. மாந்திரீகத்தில் பலவற்றை மந்திரித்து அதை உடலுக்குள் செலுத்தி அதன் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும். மாந்திரீகம் என்பது உண்மையா, பொய்யா என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன். விஷயம் இதுவல்ல அதிர்ச்சியான கசப்பான உண்மைகள் தான். அதாவது பலவீனமானவனை பலம் உள்ளவன் தாக்கினால் அதோடு நியாயம் மற்றும் தர்மக்கதை எது கூறினாலும் அவனை தர்மத்திற்கு விடமாட்டார்கள். காட்பாதர் படத்தில் சிங்க கதை வில்லன் கூறுவான் அது தான் ECO SYSTEM போல உலகமெங்கும் ஓர் உலகநாதன் போல அரங்கேறுகிறது. அதனால் தான் அந்த இடத்தில் பலவீனமானவன் எது சொன்னாலும் அந்த இடத்தில் அம்பளம் ஏறமறுக்கிறது. அதே உரையாடலை பலமானவன் உரையாற்றினால் உடனே அங்கு அக்கிரமம் அகல்கிறது.

இந்த மனித மாந்திரீகம் தான் மிருகமாக ஒவ்வொரு மனிதனையும் கட்டுபடுத்தி ஆட்டி வைக்கிறது. மீறி முயற்சி செய்தால் பலவிதங்களில் வதம் செய்யபடுகிறோம். அதையும் மீறி விலகி சென்றால் சிங்கத்திடம் இருந்து தப்பித்து போய் புலியிடம் மாட்டிய கதையாகிவிடுகிறது. அப்படி இல்லையென்றால் ஓனாய் இடமோ சிறுத்தையிடமோ அல் வேறு எந்த மிருகத்திடமாவது மாட்டிக்கொள்கிறோம். இல்லையென்றால் வேறொரு சிங்கத்திடம் மாட்டிக்கொள்கிறோம். இங்கு மனித வடிவில் மிருகம் அவ்வளவே. ஆனால் மனித குணங்களோடு நடமாடுகிறது.

இதில் தொடர்ந்து நாம் ஏன் மாட்டிக் கொள்கிறோம் அவர்களை போல் ஏன் நம்மால் அவர்களையோ அல் வேறு யாரையாவது வேட்டையாட முடியவில்லை. ஏனென்றால் நாம் பலவீனமாக இருப்பவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும், அதிகார அளவிலும், பண அளவிலும். இது இடத்திற்கு இடம் வேறுபடும்.  இதில் பணம், அதிகாரம் என்பது சின்னது, பெரியது, ஜாதி ,மதம் என்ற பேதமில்லை. அந்த இடம் சூழ்நிலை, ஆள் யார் என்பது மட்டும் தான். அனைவரும் மனிதர்கள் அனைவரும் சமம் என்று அனைவரும் கூறிவிட்டு மேற்கண்ட விதத்தில் தான் அனைவரும் செயல்படுகின்றனர். இதில் ஒன்றே ஒன்று தான் வேதமாகும் அந்த இடத்தில் உன் பலம் என்ன என்பது மட்டும் தான்.

கீழ்கண்டவற்றில் எந்த விளக்கமும் யாருக்கும் தேவையில்லை. நீங்கள் உத்தமன் என்றாலும் சரி, உத்தமபுத்திரனாக இருந்தாலும் சரி, அரிசந்திரனாக இருந்தாலும் சரி இருந்து கொள்ளுங்கள் அது எனக்கு தேவையில்லை. ஏனென்றால் எந்த ஓர் தனி நபரையும் கூற இதை சொல்லவில்லை. உலகம் இவ்வளவு தான் என்பதை கூறி விழிப்படைய வைக்கவே இக்கட்டுரை அவ்வளவு தான்.

ஏமாந்தால் ஏமாற்றும், பலவீனமாக இருந்தால் பலமுள்ளவன் உங்களை ஏமாற்றுவது முதல் அனைத்தையும் அரங்கேற்றுவான் எவ்வளவு தடவை என்றால் ஆயுள் முழுக்க தான். ஆனால் ஆள் மாறலாம் அவ்வளவே.

கெட்ட பழக்க வழக்கங்கள்:-

கெட்ட பழக்கவழக்கங்கள் கெட்ட ஒன்று. இந்த பழக்கம் இருந்தால் அது உடலுக்கும் குடும்பத்துக்கும் கேடு விளைவிக்க கூடியது. இவ்வாறு இருந்தால் என்ன கூறுகிறோம் கெட்ட பழக்கம் இருந்தால் மற்றும் வேலைக்கு போகாமல் இருந்தால் யார் பொண்ணு கொடுப்பார்கள் என்போம். உங்கள் வீட்டு பெண்ணை கொடுப்பீர்களா என்று கேட்போம். ஆனால் அவர்கள் அக்கறையுடன் கூறினார்களா என்றால் நிச்சயமாக இல்லை. அவனுக்கும் மகன், மகள் இருக்கிறார்கள். நல்ல பழக்கத்துடன் இருந்தாலும் ஒரு வேலையில் ஒழுங்காக இருக்க மாட்டான் அதோடு சம்பளத்தை ஒழுங்காக வீட்டில் தரமாட்டான் அதோடு அதே வேலையில் காலம் முழுக்க கொத்தடிமை போல் வேலை செய்யும் நிலமையில் இருப்பான். இன்னும் தகப்பனுக்கே பிடிக்காத மனித குறைகள் அவனிடம் பல இருக்கும். ஏன் சிறிய வயதிலே கண் தெரியாமல் கண்ணாடி போடுவார்கள் மற்றும் சர்க்கரை வியாதி, B.P உள்ளவர்கள் எல்லாம் உள்ளனர் ஆனால் அவன் மகனுக்கு கல்யாணம் செய்யாமல் இருப்பாரா? வியாக்கான விளக்கம் யாருக்கும் தேவையில்லை. உண்மை எல்லோருக்கும் தெரியும். இதில் தெரியாத பலவீனமானவர்கள் ஏமாற்றபடுவர்.

அதற்காக சகல கெட்ட  சௌபாக்கியம் உள்ளவருக்கு கொடுத்து விடலாமா? சகித்து கொள்ளலாமா? என்றால் அதற்கான விடை இது தான் நான் எழுதிய மொத்தமும் உண்மையை விளக்கவே மற்றபடி எதுவாயினும் சரியோ தவறோ அது உங்கள் விருப்பம். அந்த உண்மை இது தான் நாம் பலவீனமாக எதில் இருக்கிறோமோ அதில் பலமுள்ளவர்கள் நம்மை அடக்கி மற்றும் சர்வாதிகாரம் செய்வார்கள் அது உலகம் அழியும் வரை அரங்கேறி கொண்டே இருக்கும். இது தான் மனித ECO SYSTEM. ஆனால் நாம் ஆறு அறிவு உள்ள மனிதன். குறிப்பிட்ட மனித குணங்கள் கொஞ்சமாவது வெளிபட்டால் தான் மனிதனே நாம். அந்த இடத்தில் அவன் வைத்தது தான் மனித மிருக சட்டம். அவனைவிட பலமுள்ளவன் வந்தால் சட்டமானது வளைந்து கொடுத்து "சலாம்" வைக்கும் அவ்வளவே. இந்த பலவீனத்தில் தான் பல வியாபாரம் நடக்கிறது. வேலைக்காரி முதல் அனைத்துமே நம்முடைய பலவீனத்தால் தான் பல பேருக்கு பொழப்பே நடக்கிறது. பலமுள்ளவர்கள் பல வசதிகளால் உடலளவில் பலவீனம் அடைந்தும் இருக்கிறார்கள். பல பிடித்த உறவுகள் இறந்தும் மனதளவில் பலவீனமடைந்து வாழ்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

:-

சிங்கம் தனக்கு சமமான எந்த ஓர் விலங்கையையும்  வேட்டையாடியதில்லை, தாக்கியதில்லை. ஏன் தெரியுமா மாண்டு விடுவோம் என்று தெரியும். இல்லையென்றால் பலத்த அடியை பெற வேண்டி இருக்கும். இறைச்சி என்பதே பலவீனமானவைகளின் இறைச்சியை தான் விலங்குகள் அனைத்தும் உண்கிறது. மனிதனும் தான் கோழி, ஆடு, காடை, கொக்கு, கவுதாரி, நத்தை மற்றும் பல மீன் வகைகள் ETC. இது அனைத்துமே நம்மால் பலத்துடன் முடியும் இறைச்சி வகைகள். புலி, சிங்கம், சிறுத்தை, யானை, மான், சுறா, திமிங்கலம் தினமும் முடியாத இறைச்சி வகைகள். அதோடு முயற்சி செய்தால் நாம் அதற்கு இறைச்சி ஆவது உறுதி.  இது அனைத்தும் சட்டபடி குற்றம் மற்றும் காட்டு விலங்குகளை கொல்வது குற்றம். இந்த உயிர்களெல்லாம் குற்றம் கிடையாது பூரண அனுமதி உண்டு ஆனால் பாவம்.  இதிலேயே சிக்கன் குனியா என்றால் நம் தலை குணிந்து வாங்க மறுத்து ஓடுகிறோம். அதற்கு வியாதி இல்லையென்றால் தலை நிமிர்ந்து வாங்கி கொண்டு பெருமையாக இன்று இரத்த பொரியல் மற்றும் கறி வருவல், பிரியாணி, குருமா, மீன் குழம்பு என்போம் சாப்பாட்டை சுழற்றி சுழற்றி உண்போம்.

ஆ:-

இது போல் தான் உலகத்தில் ஆபிஸில் வேலை செய்யும் OFFICER, POLICE OFFICER, MILITARY OFFICER முதல் பல கீழ்மட்ட அதிகாரிகள் வரை. தனக்கு மேல் உள்ளவர்களுக்கு இவர்கள் கீழ் அதிகாரிகள் தானே. எது முரனாக, பிடிக்காமல் நடந்தாலும் சிறிதளவு கூட தொடர்ந்து எதிர்த்து பேச முடியாது.  மீறினால் நடவடிக்கை பாயும். இதுவரை எத்தனை தடவை தனக்கு மேல் உள்ள அதிகாரிகளை குறைந்த பட்சம் உரிமையோடு பேசியிருக்கிறார்கள் அவர்களும் வாடா ராஜா சொல்றா சிறுத்தை குட்டி என்று கேட்டிருக்கிறார்கள். கேட்டிருந்தாலும் கவலையில்லை. ஏனென்றால் எங்கோ ஒரு சில இடத்தில் அத்தி பூத்தாற் போல் நடப்பதை கணக்கில் எடுத்து கொள்ள முடியாது இந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தில். அத்தி பழத்தை குருவிகள் மற்றும் சிறிய பறவைகள் தான் சில சமயங்களில் கொத்தி செல்லும். இருந்தாலும் OK. இதில் நேர்மை, நியாயம், அனைவரும் சமம் எங்கே என்று கீழ் அதிகாரி கேட்பார்? இவர் இதே போல் நடந்து இவருக்கு கீழ் உள்ள அதிகாரி இதே வசனத்தை அச்சு பிசங்காமல் கூறுவார். காலம் முழுக்க  இப்படியே சொல்லி கொண்டு தான் இருக்க வேண்டும் எதுவும் ஈடேறாது.  ஏனென்றால் அங்கு உங்களைவிட பலமாக மேலதிகாரி இருக்கிறார். விஜய் சேதுபதி போலிஸ் திரைபடம்  வில்லன் டயலாக். அதை வருத்தத்துடன் ஹீரோவே சக அதிகாரியிடம் சொல்வார்.

:-

திருட்டு என்பது பலவகைகளில் பிக்பாக்கெட், Chain Scratching, Skimmer கருவி பொருத்தி Atm-ல் திருடுவது என்று நூதன முறையிலும் சிட்பண்ட், சீட்டு கட்டுதலில் ஏமாற்று துரோக வேலை செய்து தப்பி ஓட்டோம். இது போல் எண்ணற்ற முறையில் விபச்சாரம் வரை.  இதை படிக்கும் போது நல்ல வேலை நாம் போடவில்லை தப்பித்தோம் பிழைத்தோம் என்று பெருமூச்சு விடுகிறோம். அவனிடம் கூறி பாருங்கள் உனக்கும் அக்கா தங்கை என்று குடும்பம் இருக்கிறது இப்படி செய்கிறாயே என்று எதுவும் அவன் காதில் விழாது.  காலில் விழுந்தாலும் விடமாட்டான்.  ஏனென்றால் நீங்கள் அவனைவிட பலவீனமானவர்கள் உங்களுக்கு போலிஸோ, சண்டையோ தெரிந்து இருந்தால் இதிலிருந்து தப்பிக்கலாம்.  ஏனென்றால் அவனை விட பலமுள்ளவர்கள் இதை பற்றி கேட்பார்கள் என்பதால். இப்போது மேற்கண்டதை சொல்லி பாருங்கள்  ஆமாம் ஐயா நீங்கள் சொல்வது உண்மை தான்.  இனி இந்த குற்றங்களை உங்களிடம் செய்யமாட்டேன் என்று கூறுவான். ஏனென்றால் பலவீனமானவர்கள் பலர் இப்புவியில் உள்ளனர்.  எல்லாவற்றிற்கும் தகுதி இருந்தால் தான் அனைத்துமே கிடைக்கும். நாம் முதலில் எல்லாருமே ஒன்றல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  உடலில் உறுப்புகளை தவிர்த்து நிறம், உயரம் முதல் அனைத்திலுமே பல வேறுபாடுகள் உள்ளது.  தகுதியில்லாத பேச்சு என்றும் எங்கும் அம்பலம் ஏறியதில்லை மற்றும் சபை ஏறியதில்லை.

ஈ:-

பெண்கள் பற்றி பல நூற்றாண்டுகளாக பல பேசிவிட்டோம். ஆனால் எதுவும் நடந்தபாடில்லை எந்த பிரச்சனையும் ஓய்ந்தபாடில்லை.  எவ்வளவோ கூறியாச்சு உனக்கு அக்கா தங்கை இல்லையா? என்று அதோடு நீயும் மருமகளாக இருந்து தானே மாமியார் ஆனாய் மற்றும் நீயும் ஓர் பெண் தானே என்றெல்லாம் காலந்தோறும் கூறியாச்சு.  ஆனால் கால போக்கில் நம் பேச்சு காற்றில் கரைந்தது போல் பல இடங்களில் இன்றளவும் எல்லா கொடுமைகளும் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது.

சங்க காலத்தில் அரசன் என்பவனுக்கு அந்தபுரம் இருந்தது. ஆனால் ராணி கோணி போல் எல்லாவற்றையும் மூடி கொண்டு அரசனிடம் மட்டுமே கதவை திறக்க வேண்டும். இது போல் பெண்களும் மனுஷி தானே உங்களை போலவே அவளுக்கும் காமம் என்பது இயற்கை உபாதைகளுள் ஒன்று தானே அவளுக்கு அதிகமானால் ஏன் அவள் ஆண் அந்தபுரம் அமைக்க கூடாது. ஏன் அமைக்கவில்லை? தனியாக ராணியாக நாட்டை ஆண்டும் ?  எல்லாவற்றிற்குமான பதில் இது தான். பெண் என்றாலே ஆணை விட பலமுள்ளவள் அல்ல.  அதோடு அவளால் அனைவரிடமும் போராட முடியாது அதோடு தனித்தும் வாழ முடியாது என்பதால் தான்.  காலம் காலமாக பெண்ணியத்தை சொன்னவர்கள் முதல் கேட்டவர்கள் வரை எந்த பெண்ணும் கணவன் இறக்காமல் தனியாக போராடியதில்லை. பெண்ணியத்தை கூறிய  பலர் தன் வீட்டு பெண்ணை வெளியே விட்டதில்லை மற்றும் பெண்களே கணவனை விட்டு தனித்து தனது காலம் முடியும் வரை வாழ்ந்ததில்லை.  கேட்டால் ஊருக்கு தான் உபதேசம் என்பார்கள்.  கேட்டால் கேளுங்கள் கேட்கவில்லை என்றால் கவலையில்லை என்பார்கள்.  இதற்கும் பாரதியும் விதி விலக்கல்ல.  சரி ராணி விஷயத்திற்கு வருவோம் ஆண் அந்தபுரம் வைக்காதது பண்பாடு கலாச்சாரம் என்பதால் அல்ல. தனக்கு கீழ் வேலை செய்தாலும் ஆண் புத்தி முதல் அனைத்திற்குமே பெண்ணை விட பலம் அதிகம்.  அதோடு பல சதிகளும் அரங்கேறி தன்னை கொன்று ஆட்சி பீடத்தை எளிதில் அபகரித்து விடுவான் என்பதால் தான்.  எதிரி நாடுகள் போர் தொடுத்து எந்த ராணியும் வேறு ராஜாவை பலர் பலமுறை வென்றதாகவோ மற்றும் சிலர் சில முறை வென்றதாகவோ கூட  குறிப்புகள் இல்லை. ஜான்சி ராணியின் முடிவே உலகம் அறிந்தது. அதோடு LATEST HISTORICAL HINDI MOVIE அனைத்து இந்து பெண்களும் தீயில் தீ குளித்து மாண்டு போவார்கள்.  ஏனென்றால் பலமுள்ளவர்களை என்றென்றும் ஜெயிக்க முடியாது. வரதட்சனை கொடுமை, மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை இருப்பதெல்லாம் இதனால் தான்.  மீள நினைத்தால் பூனையிடமிருந்து தப்பி காட்டு பூனையிடம் மாட்டி கொண்ட கதை தான். எருமையிடம் தப்பி காட்டெருமையிடம் மாட்டி கொண்ட கதை தான்.  சிலர் ஓனாய், நரி, சிங்கம், புலியிடம் தப்பி மாட்டி கொண்டுள்ளார்கள். ஒரு சில ஆண்களுக்கும் இதே நிலமை தான்.  சிலர் தப்பித்துள்ளார்கள். நமக்கு பலர் தான் முக்கியம். இம்மாதிரி கூறுபவர்கள் அவர்கள் அந்த இடத்திற்கு வந்ததும் இதே போல் தான் இருக்கிறார்கள் காரணம் இதுவே. பலமில்லாதவர்கள் அனாதை போன்றவர்கள் அடைகலம் எங்காவது தேடி புகலிடம் பிடித்து குடியேறியே ஆக வேண்டும். அவர்கள் நிலமை என்றைக்கும் எங்கும் தஞ்சம் தேடி அலைவது மட்டுமே.

இங்கு அனைவருமே ஏதோ ஓர் வகையில் ஏதோ ஓர் இடத்தில் சிங்கம் புலி போன்று மனித காட்டு விலங்குகளே. இதில் ஜாதி பேதமில்லை. இதில் நம்மிடம் அவர்களின் மாந்தீரிகம் என்பது நம்முடைய பலவீனத்தில் தான் உள்ளது. நம்மிடம் பலவீனம் என்கிற ஊனம் இருக்கும் வரை மனித மிருக மாந்தீரிகமானது நம்மை மந்தரித்து அதன் விருப்பத்தை அரங்கேற்றி கொண்டே தான் இருப்பார்கள். நேர்மையாளர்கள் நேர்மையுடன் செயல்பட்டு பல நல்ல காரியங்களை ஆற்றுவதும் அவர்களின் பலத்தால் தான். பலவீனமானவர்கள் Corrupt ஆக இருந்தாலும் பொத்தி கொண்டு நல்ல காரியத்திற்கு துணை நிற்பார்கள்.  இங்கு சகலமும் இது தான் பலமுள்ளவர்கள் Vs பலமில்லாதவர்கள். இதில் தான் நல்லது முதல் அக்கிரமங்கள் வரை ஓர் அக்கி வியாதி போல் உலகம் முழுவதும் பரவி இயங்கி கொண்டிருக்கிறது. அதோடு சட்டம் மற்றும் ஊழல் துறை, லஞ்ச துறை, IncomeTax , Police department, Revenue Department, Collector Office, M.L.A, M.P, Cm Cell  மற்றம் பல சமூக இயக்கங்கள் என்று இருப்பதால் தான். ஏனென்றால் இவர்கள் அவர்களைவிட பலமானவர்கள் அடங்கி தான் ஆக வேண்டும்.  இல்லையென்றால் பல விளைவுகளை கம்பி எண்ணியோ, களி தின்றோ, தூக்கு தண்டனையாகவோ, சிறை தண்டனையாகவோ இன்னும் பல வகைகளில்  ETC  சந்திக்க நேரிடும். 

அரியாசனம் என்கிற சிம்மாசனத்தில் அமர்ந்துள்ள பலமுல்லவர்களின் கட்டளையே சாசனமாக ஏற்று பலமில்லாதவர்கள் அடிமை சாசனம் எழுதி கொடுத்தது போல் அரியாசனத்தை விட்டு கீழ் இறங்கி அதை நிறைவேற்ற வேண்டும்.

இது கடவுளுக்கும் பொருந்தும் கிருஷ்ணன், ஆஞ்சநேயர் பலமுல்லவர்கள் அனைவரும் பணிந்தார்கள் இராவணன் உட்பட. இயேசு அகிம்சை என்று கூறியதால் பலமில்லாதவர் அதனால் சிலுவையில் அறைந்தனர்.  இதற்கே அவர் தேவ தூதர்.  தூதாக வந்தவர்களை யாராக இருந்தாலும் கொள்ள கூடாது. அதுவும் இவர் தேவதூதர்.  அதாவது பரம பிதா புவியில் சொல்லி வா என்று கூறியதால் பூமிக்கு வந்து சொல்கிறார்.  அவர் ஒரு வகையில் என்னை போல MESSENGER ஆக MESSAGE- "டெலிவரி" பண்ணினார் அவ்வளவே.  கேட்டு நடப்பது உங்கள் விருப்பம். பிடிக்கவில்லையென்றால் சிம்பிள்ளாக மனதில் "டெலிட்" செய்துவிடலாம். அதற்கே கொடுமையான வலிகளை கொடுத்து கொடுமைபடுத்தி பெரும் பாதக செயலை அரங்கேற்றி உள்ளனர். "டெலிவிஷனில்" இவர் மூவியை பலர் பார்த்திருப்பீர்கள். "டெலிகாம் செக்டாரில்" ஜியோ புரட்சி நடந்து ஜியோ கொடி பறப்பது எப்படி தெரியுமா?  விலை குறைப்பில் பலமுடன் ரிலையன்ஸ் CUSTOMER உடன் ஓர் BIG RELATIONSHIP- ல் இருந்ததால் தான் SOCIETY-யில் PUBLIC இடம் JIO ஆனது CLOSE FRIENDSHIP பெற்று JIO SHIP ஆனது SOCIETY-யில் நங்கூரம் பாய்ச்சியது போல் கம்பீரமாய் நிற்கிறது. அதோடு பல டெலிகாமை  CLOSE செய்ய வைத்துவிட்டது.

இது அனைத்தும் ரைட்டா ராங்கா என தெரியவில்லை.

பின் குறிப்பு:-

இன்னும் விரிவாக விரிவான முறையில் அதை சுருங்க கூற வேண்டும் என்றால் நம் வாழ்க்கையில் பல சுருக்கங்கள் ஏற்பட காரணம் நம்முடைய பல பலவீனமே. அதனால் தான் பல வலைகளில் சருகு போல மாட்டிக்கொள்கிறோம். எ.கா:- ஒரு ஜீவன் மரத்தின் மேலே ராட்சஷ சிலந்தி கட்டிய பெரிய  சிலந்தி வலையில் மாட்டிக்கொண்டு தப்பிக்க நினைத்து கீழே இருந்த ஆற்றில் குதித்ததாம்.  ஆற்றில் ஆற்று மீனை பிடிக்க போட்டிருந்த வலையில் சிக்கியதாம். பிறகு அங்கு இருந்து தப்பித்து கரைக்கு வந்து அங்கிருந்த எலி வலையில் சென்றதாம். அங்கு கடைசியில் பாம்பும் கொத்தி விழுங்கியதாம். அது போல நம் வாழ்க்கை முழுக்க எங்கு போனாலும் ஏமாற்றம். இங்கு தான் ஏமாந்துவிட்டோம் சரி வேறொரு வலைக்கு சென்றால் அங்கும் இதே தான்.  வித்தியாசங்கள் என்பது இடம் வேறு, ஆள் வேறு, ஏமாற்றிய விதம் வேறு அவ்வளவே. ஆனால் அனைவரும் எந்த வித்தியாசமும் இன்றி ஒற்றுமையாக ஏமாற்றுவதில் மனசாட்டியே இல்லாமல் இருக்கின்றனர்.  எல்லா இடங்களிலும் மலைபாம்புவிடம் மாட்டிய இறை போல் ஆகிவிடுகிறோம். காரணம் நம்மால் தனிவலை கட்ட முடியாதது மற்றும் அதை பாதுகாக்க முடியாதது தான். நம்மால் அடைகலம் தேடி, அரவணைப்பு தேடி தான் செல்ல முடிந்தது. அதோடு நமக்காக   மெழுகு வத்தி போல நமக்காக உருகி வெளிச்சம் தர ஆளில்லை காரணம் நாம் பலசாலி அல்ல. எந்த இடத்திலும் பலசாலியாக இருந்தால் தான் குறைந்தபட்சம் கருவில் இருந்தே நாம் பிறக்க முடியும். பிறக்க முடிந்த நம்மால் வாழ பல பலங்கள் நம்மிடம் இருந்து பலசாலியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் எதிலிருந்தும் நம்மை எளிதில் விடுவித்து கொண்டு செல்ல முடியாது. கொத்துக்கறி போட்டது போல் உழைத்த கொத்தனார் சமையல் தெரியாமல் முனியாண்டி விலாஸ் ஹோட்டலுக்கு கொத்துக்கறி தோசை சாப்பிட சென்ற கதை தான் நம் வாழ்வாகவே இருக்கும். ஏனென்றால் இங்கு பலவீனம் என்பது சமையல் தெரியாதது. இது ஓர் வித்தியாசமான மனித மிருக மாந்திரீகம் ஆகும். இதில் சூது வாது தெரியாமல் மாட்டிக்கொண்டு அதிபயங்கரமான சம்பவங்களை  அவர்கள் குடும்பத்தில் பலர் பல விஷயங்களில் சந்தித்துள்ளனர். 

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html