அரசியல்வாதிகளை மிஞ்சிய சாமியார் சொத்துக்கள் [HIGH LEVEL PROPERTIES]

அரசியல்வாதிகளை மிஞ்சிய இரவல் சொத்துக்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்தே உடன்பட வைத்த ஆன்மிக சேவை செய்யும் திருவாளர்  சாமியார் [HIGH LEVEL PROPERTIES]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.

இது எந்த ஒரு தனி நபரையும் குறிப்பிடுவதற்காக கூறவில்லை. கோவில், ஆன்மிக சேவை  என்று வந்து விட்டால் யார் வேண்டும் என்றாலும் அதில் உள்ள குறைகளை கூறலாம்.  கூறுவது திருத்தி கொள்வதற்கே என்பது குறிப்படத்தக்கது.   

அரசியல்வாதிகளின் ஊழலையும், ஏமாற்று வேலைகளையும் மிஞ்சும் அளவிற்கு பங்காரு அடிகளார் சொத்து மதிப்பு உள்ளது.  இப்போது அடிகளாரிலிருந்து அம்மாவாக(ஆதிபராசக்தி யா-கவே) Promotion- ஆகி உள்ளார்.  அரசியலில் எப்படி தனக்கு பின்பு வாரிசுகளோ, அதுபோலவே இப்போது இவரது மகன்கள், மகள் நிர்வகிக்கின்றனர்.  கோயிலை பல பிரிவுகளாக(Car Parking ஒருவர், Security-கள் ஒருவர், உள்ளே சிவப்பு நிற வேலை ஆட்கள் ஒருவர்)  என பிரித்து கொண்டு யார் அடுத்த பங்காரு என்று அதிகார மோதல் நடந்து வருகிறது.  ஆன்மீக தொண்டு நிறுவனம் என்று சொல்லி கொள்கிறார்கள்.  ஆனால் தொண்டு நடப்பது போல் தெரியவில்லை.  இவ்வளவு கோடி சொத்துக்களும் மக்களுடைய சொத்து, மக்கள் கொடுத்தது.  ஆனால் குறைந்தபட்சம் வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு முறையான தங்கும் விடுதியோ, இலவச கழிப்பீடமோ இல்லை.  அங்கு தங்கும் விடுதி என்று கூறப்படுவது Plat form-ல் தங்குவதற்கு இணையானது போல் இருக்கும்,  Fan-ம் கிடையாது.  ஆதிபராசக்தி தொண்டு நிறுவனத்தின் மூலமாக நடைபெறும் அனைத்து கல்லூரிகளிலும் எத்தனை பேருக்கு இலவசமாக Admission-கொடுத்திருக்கிறார்கள்.  Lodge உள்ளது.  அதில் உள்ள கட்டணம் தொண்டு நிறுவனத்தின் மூலமாக நடைபெறுவது போல இல்லாமல் கட்டணம் இருக்கிறது.  மக்கள் சுவாமி-யை தரிசனம் செய்து கொண்டிருந்தால் இரவு 7.45 மணிக்கு பெரியவரோ (அல்) வேறு பெயரிலோ  அவரது மகனை கூறி அவர் வரகூடிய நேரம் என்று கூறி வெளி ஊரில் இருந்து சாமி கும்பிடுவர்களை வெளியேற்றும் அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நம்முடைய(மக்கள்)  பணத்தில் செல்வ செழிப்பில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்குறைந்தபட்சம் இதில் கூட புறகணிக்கபடுகிறார்கள்.  ஆதிபராசக்தி கோயிலின் உள்ளேயும்  பக்தர்கள் உட்காரும் இடத்தில் Fan இல்லை.  பக்கத்தில் இருக்கும் Fan-ஐயும் போடுவதாய் இல்லை.  ஆனால் பங்காரு திருமண நாளிலும் பல லட்சம் செலவு செய்து நான் ஆன்மீக வள்ளல் போல பொய்யாக காட்சியளிக்கிறார்.  ஆதிபராசக்தி குழுமத்தின்  அத்தனை கல்லூரிகளும் அதன் நிர்வாகிகளாக இவர்களே உள்ளனர்ஒருவர் கூட அங்கு கஷ்டபட்டு இந்த அளவிற்கு உயர்த்தியவர்களுக்கு இல்லை.  சட்டத்திற்கு புறம்பாக பேனர் வைப்பது.  அதனை தட்டி கேட்டால் பக்தர்களை ரவுடி-களை போல ஏவிவிடுவது.  இதுதான் நடக்கிறது.  மேற்கண்ட ஆதாரங்களும் இது உண்மை என்பதுபோலவே இருக்கிறது. கோயிலின் உள்ளே வண்டி சாவியை, வேறு எதையாவது சாமி பாதத்தில் வைத்து தாருங்கள் என்று கூறினால் உள்ளே  எங்களுக்கு அனுமதி கிடையாது என்று கூறுகிறார்கள்.  அப்படி அவர்கள் சுத்தமாக இல்லை என்றால் அவர்களை ஏன் அந்த வேலைக்கு அமர்த்த வேண்டும். கோயிலில் ஏதாவது  தீட்டு என்று கூறுவார்களே.  இதற்கு என்ன பெயர் கூறுவது.  இவ்வளவு மோசடிகள், ஏமாற்று வேலைகளை செய்து கொண்டு இருக்கும் இவர்களுக்கு கிடைக்கும் மரியாதை, புகழ், கௌரவம் எந்த ஒரு நல்லது செய்த மற்றும் சரியோ, தவறோ ஊழல்வாதிகளுக்கும் இல்லை.  அரசியல்வாதிகளை போல் தண்டிக்காததாலா, அரசியல்வாதிகள் விட்டு வைத்ததலா, மக்கள் தொடர்ந்து ஏமாறுவதலா, இல்லை என்றால் இப்படி ஒரு அநியாயம் நடப்பது தெரியாததாலா என்று தெரியவில்லை. 

அங்கு கஷ்டபட்டு உழைத்தவர்கள் ஒருவர் கூட இந்த அளவிற்கு கோடிகளுடனும் இல்லை.  பக்தர்களும், உழைத்தவர்களும் புலம்பியது தான் மிச்சம்.  ஏழை முதல் பணக்காரன் வரை நன்கொடை அளித்து ஏமாந்தது தான் மிச்சம்.  அரசியல்வாதிகள் நம்முடைய பணத்தை (வரி என்ற பெயரில்) ஊழல் செய்தனரோ, அதுக்கு சமமானது போல்(நன்கொடை என்ற பெயரில்)  இருக்கிறது அவ்வளவே.  இவ்வளவு பணத்தையும் நான் உழைத்து சம்பாதித்தது என்று கூறமுடியுமா?  இந்த சொத்துக்களை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்று கூறமுடியுமா?  அப்படி என்றால் ஆன்மிக தொண்டு நிறுவனம் என்றால் என்ன?  ஒரு வேலை ஆன்மிக சம்மந்தமான தொண்டு நிறுவனங்களை அரசு கட்டுபாட்டின் கீழ் கொண்டு வராததே காரணமோ?  கடவுளுக்கு தான் வெளிச்சம்?  உங்கள் மனதில் வெளிச்சம் ஏற்படவே இந்த கட்டுரை.  உழைத்து முன்னேற வேண்டும்  இல்லை என்றால் அந்த பணம் நிலைக்காது, கஷ்டபட வேண்டும் என்றெல்லாம் கூறுகிறார்களே?  இவர்களை பற்றி அரசியல்வாதிகளுக்கு தெரியவில்லையோ?  இவர்களுக்கு இருக்கும் பல அனுமதிகள், (கடவுளுக்கு உண்டான அத்தனை மரியாதை-கள்) அரசியல்வாதிகளுக்கு கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இனியாவது தொண்டு நிறுவனத்தில் தொண்டு இருக்கட்டும்.  ஆன்மீகத்தில் உங்களுக்கு மட்டுமான  சொத்து சேர்க்கும் பொய்யான ஆன்மீகம் மட்டும் இல்லாமல் உண்மையான ஆன்மீக சேவை மட்டும் இருக்கட்டும். 

இது முழுக்க ஆதிபராசக்தி தெய்வத்தை முன் நிறுத்திய கோயில் மற்றும் ஆன்மீக தொண்டு நிறுவனமே ஒழிய பங்காரு அடிகளாருக்கானது கிடையாது.

பேனர் முழுக்க பெரியதாய் இவர் Photo-வே முன் நிற்கிறது.  தெய்வத்திற்காக மக்கள் அங்கு வரவில்லை.  விரதம் இருக்கவில்லை.  அங்கபிரதக்ஷனம் செய்யவில்லை, தெய்வத்திற்காக மக்கள் காணிக்கை இடவில்லை என்று கூற முடியுமா?

அரசியல்வாதிகளை மிஞ்சிய இரவல் சொத்துக்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்தே உடன்பட வைத்த ஆன்மிக சேவை செய்யும் திருவாளர் சாமியார்களால் யாருக்கு பெருமை? கடவுளுக்கா ? பக்த கோடிகளுக்கா ? இது அவர்களுக்கே வெளிச்சம்.

 குறிப்பு:-

பல வருடங்களாக உழைத்த MLA, MP, தொழில் செய்பவர்கள், நல்ல சாமியார்கள்  கூட இந்த அளவு சொத்து, செல்வாக்குடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

 https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html