திருசிற்றம்பலம்
கூக்குரல் இட்டு கூறும் ஷரத் இது தான். அன்றைய முதலாளித்துவம் மற்றும் இன்றைய முதலாளித்துவம்
என்று பிரித்தால் இன்றைய முதலாளித்துவம் நவீன முதலாளித்துவமாக ஒரு சில
மாற்றங்களுடன் சிறிது மாறி உள்ளது அவ்வளவே. அதாவது புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் அடிமை விலங்கு
அகற்றபட்டு சிறிது வயிற்றுக்கு ஈயப்படும் என்பது போன்றது தான். அதுவும் கம்யூனிச
சித்தாந்தத்தால் தான். அதாவது கம்யூனிச சிந்தனை நாடு முழுவதும் தொழிலாளர்கள் மத்தியில்
பரவி அது புரட்சியாக வெடித்ததால் தான் அடிமை விலங்கு உடைக்கபட்டது.
இதனை பற்றிய கட்டுரைகள் ஏற்கனவே எழுதி விட்டதால்
சுருக்கமாக கூறுகிறேன். முதலாளித்துவம் என்றால் மக்களின் உழைப்பை சூறையாடுவது என்பது போல்
தான் கீழ்கண்டவைகள் நமக்கு உணர்த்துகிறது.
ஒரு கம்பெனியில் ஒரு வருட 100% லாபத்தில் 10% மட்டுமே சம்பளத்துடன் செலவழிக்கபடுகிறது. அது சம்பளம் முதல்
கக்கூஸ் கழுவுவது வரை. கம்பெனி லாபம் கிட்டதட்ட மொத்தமாக எடுத்து செல்கிறீர்களே கொஞ்சம்
சம்பளத்தை ஏற்றி கேட்டு நியாயமாக வேலை நிறுத்தம் செய்தால் ஒரு சில கம்பெனிகள்
இழுத்து மூடிவிட்டு செல்கின்றனர் அல் கொடுக்க மறுத்து பல பேச்சு வார்த்தைக்கு
பிறகு கொஞ்சம் ஏற்றிய கதைகளும் இருக்கிறது இது தான் இன்றைய நவீன முதலாளித்துவம். அதோடு Software
Field- ல் லாபம் சற்று குறைந்தாலே வேலையை விட்டு
எடுத்துவிடுகின்றனர் இது தான் முதலாளித்துவம்.
ஒரு கம்பெனி உலகில் எந்த நாட்டில் துவக்கினாலும் அந்த
நாட்டில் உள்ள ஊர் மக்களோ, மாநில மக்களோ தான் வேலை செய்ய முடியும். கட்டடம் கட்டுவதில்
ஆரம்பித்து துவக்க விழாவிற்கு அலங்கரிப்பது வரை அந்த மாநில மக்களால் தான்
எழுப்பபடுகிறது. ஆனால் ஏதோ பாரி வள்ளல் போல் கொடையை வாரி வழங்கியது போல் போலி
வார்த்தைகள் கூறி அரசு முதல் மக்கள் வரை ஏமாற்றபடுகிறார்கள். அது என்னவென்றால்
வேலை வாய்ப்பு கொடுப்பது. எங்கள் நாட்டில் கம்பெனி கட்டினால் எங்கள் நாட்டில் இருப்பவர்களை
தான் வேலைக்கு அமர்த்த முடியும் இது ஊரறிந்த செய்தி. இதுவே தான் உலகத்தில்தொழிற்சாலையை எங்கு அமைத்தாலும். ஆனால் இதில் பல பித்தலாட்டம் செய்து அரசிடமிருந்து பல
சலுகைகள் பெறபடுகிறது. அது படு அடியில் நிலம் வாங்குவது ஆரம்பித்து தடையில்லா Electricity, Water Facilities, Tax என்று அனைத்திலும் படு அடிக்கு அரசுக்கு நஷ்ட கணக்கில் சலுகைகள்
கொடுக்கபடுகிறது.
அரசுக்கு, கட்சிகளுக்கு பிரைவேட் ஆக ஆலோசனைகள் கூறி அதற்காக வெகுமதி கேட்டால்
அரசு ஆலோசகருக்கு எதுவும் பெரிதாக கொடுப்பதில்லை என்பது. அவர்களுக்கு கூட ஏகபட்ட அரசு சலுகைகள், கட்சி பதவிகள், சீட்டுகள் வழங்கபடுகிறது. அதோடு மாநில நலனுக்கு ஓர் குடிமகனாக உங்களின் பங்களிப்பை
ஆற்றியுள்ளீர்கள்என்பது. எவ்வளவு தான் ஆத்துவது ஒன்று இரண்டு என்றால் பரவாயில்லை.
நாட்டு பற்று உள்ளவனை நாடு கண்டு கொள்ளவில்லையென்றால் அது நாட்டிற்கான இழுக்கு
ஆகாதா? அதற்காக எதையும் கொடுக்கவில்லை என்று கூறவில்லை. நாட்டில் கிரிக்கெட் விளையாட்டில் சாதித்தவர்களுக்கு
ஏன் அரசு சலுகைகள் வழங்குகிறது? நீ நாட்டிற்காக விளையாட உனக்கான அனைத்து செலவுகளையும் அரசு செலவு
செய்து அனுப்புகிறது அதனால் பரிசெல்லாம் கிடையாது உதைப்பதற்குள் ஓடி விடு என்றா
கூறுகிறது. அதே போல் தனியார் பள்ளி, தனியார் பால், தனியார் மருத்துவம், தனியார் கல்லூரிகள், தனியார் வழக்குரைஞர்கள் என்று எல்லாமே அரசு வேறு தனியார் வேறு
என்பது போல் இருந்து கொள்ளையடிப்பவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள் மற்றும்
சட்டத்திற்கு உட்பட்டு சம்பாதிப்பவர்கள் என்று இருக்கிறது. இதற்கு அரசு பூரணமாக அனுமதி அளிக்கிறது. ஆனால் நாட்டிற்காக, கட்சிக்காக உழைத்த பிரைவேட் ஆலோசகர்களுக்கு மட்டும் கொடுக்கும் கை
ஏனோ நீள மறுக்கிறது. வாழ்க ஜன நாயகம்.
இதில் உழைப்பு என்பது திறமை முதல் அனைத்துமே தான்.
குறிப்பிட்டு மூளை கொண்டு உழைப்பது என்பது எளிதானது அல்ல. உடல் உழைப்பில் உடல் வலி
மட்டுமே வரும். ஆனால் மூளை உழைப்பில் சகல பிரச்சனைகளும் உடலுக்குள் Stress என்ற உருவம் கொண்டு வரும்.
இவ்வளவுக்கிடையில் இப்போது கொரானா வேட்டையில் பலரின்
பொருளாதாரம் சூறையாடபட்டுள்ளது. இவ்வாறு இங்கிருப்பவர்கள் கஷ்டபட்டு கொண்டிருக்க
இங்கிருப்பவர்களுக்கு வேலை கொடுக்காமல் வேறு மாநிலத்தில் இருந்து வேலைக்கு ஆட்களை
அமர்த்த முனைந்தால் என்ன அர்த்தம்?. இம்மாநிலத்தில் உள்ள மக்கள் மீது அக்கறை இல்லை என்று தானே
அர்த்தம் ஆகிறது. நாமெல்லாம் ஒரே ஊர், ஒரே மாவட்டம், ஒரே குடும்பம் என்று ஊரை ஏமாற்றியது இதன் மூலமாக அம்பலமாகி உள்ளது. அதோடு மக்களின் துயர் துடைக்க கம்பெனிகள் முதல்
கட்டுமானங்கள் வரை ஆரம்பிக்கபடுகிறது என்று கூறி நிலங்களை தாரை வார்த்து கொடுத்துவிட்டு மக்கள் தண்ணீர்
பஞ்சத்துடனும் இப்போது பல துயரங்களுடன் இருக்கும் போதும் துயர் துடைக்காத
மகத்துவம் தான் இந்த உழைப்பை சூறையாடும் முதலாளித்துவம்.
வேறு மாநிலங்களில் இருந்து ஆட்களை வரவழைப்பது எதற்கு
என்றால் அவர்கள் உழைப்பை சுரண்டி சம்பளம் குறைவாக கொடுத்து இவர்களின் மித மிஞ்சிய
லாபத்தை பெருக்கி கொள்ள தான். இதற்காக யார் எப்படி கஷ்டபட்டாலும் கவலை இல்லை இவர்கள் எல்லாம்
கொடையாளர்கள் சபாஷ்.
நான் சொல்ல போவது இதை தான் இதே சம்பளத்தை இவர்களுக்கு
கொடுத்து வேலைக்கு அமர்த்தலாமே என்பதை தான். ஏனென்றால் வேறு மாநில மக்கள் சம்பள குறைவாக வராத போது இங்கு
இருக்கும் மக்கள் உங்களுக்கான சொர்க்க வாசல் என்கிற லாபத்தினை திறக்கும்
சொர்க்க வாசிகளாக தெரிந்தார்கள். இப்போது நரகவாசிகள் போல தெரிகிறார்கள் என்றால்
இதில் அப்பட்டமான முதலாளித்துவ வெளிச்சம் நமக்கான அஸ்தமனமாக அம்பலமாக தெரிகிறது. .
அதோடு எல்லா இடங்களிலும் கொரானா பரவல் அதிகமாக உள்ளது.
வேற்று மாநிலத்தில் இருந்து வருபவர்கள் மூலமாக கொரானா பரவாது என்று என்ன
உத்திரவாதம் உள்ளது?. அதோடு அவர்கள் தங்குமிடம் முதல் அனைத்து இடங்களையும் தொடர்ந்து கண்காணிக்க முடியுமா? அதோடு மொழி தெரியாத
அவர்களின் சுத்தம் சுகாதாரம் பேணி காக்க அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு
எவ்வளவு மெனக்கெட வேண்டி இருக்கும்? பான் பராக்.
தனக்கு மிஞ்சி தான் தானம் தர்மம் என்பார்கள். நமக்கு இருக்கும் பிரச்சனையில் மற்றும் நம் மாநில
மக்கள் கஷ்டபட்டு கொண்டிருக்க இது இப்போது அவசியம் தானா? அப்படியென்றால் நம் ஏழை
மக்களின் பொருளாதாரம் என்ன ஆவது. பட்டினியில் சாக விட்டு விடலமா?
அல் ரேஷன் கடையில் கொடுக்கும் பொருளை வைத்து கொண்டு
கஞ்சி குடித்தால் போதுமா?
இதுவே உழைப்பை சூறையாடும் நவீன கொடையாளர்களின் மித மிஞ்சிய வேட்டையாடும் முதலாளித்துவ லாபத்தை பற்றி அப்பளம் போல் நொறுக்க நொண்டியாடாமல் நோண்டி கிண்டி கிளறி அவிழ்த்த "ஊமை ஜூவன்கள் அம்பலபடுத்தும் கூக்குரல் ஷரத்" ஆகும். This Is
இதனை அரசு ஆனது கருத்தில் கொண்டு பல முடிவுகளை
ஆலோசித்து எடுத்தால் இம்மாநில மக்கள் பயன் அடைவார்கள். அம்முடிவானது பல மாநிலங்களில் அமுல்படுத்தி உள்ள
அம்மாநிலத்தவருக்கு 80% வேலையில் முன்னுரிமை என்பது தான். இதை அரசானது அறிவித்துவிட்டாலே தானாக எல்லாம் முடிவுக்கு
வந்துவிடும். பல மாநிலங்கள் அப்போது 80% வேலையில் முன்னுரிமை என்று கூற என்
கட்டுரையும் காரணமாக இருந்து பெரும் பங்காற்றி உள்ளது என்பதை இச்சமயத்தில்
மகிழ்ச்சியாக கூறுவதில் நான் ஆனந்தமடைகிறேன். அது "தலைப்பே இல்லா தலைப்பு" என்கிற கட்டுரை என்று நினைக்கிறேன்.
இது அனைத்தும் எந்தவொரு தொழிற்சாலைகளையோ, கல்லூரிகளையோ, மருத்துவமனைகளையோ அல் நபரையோ குறிப்பிட அல்ல.
முகமதியர்களின் சுல்தான் ஆட்சியில் "பராக்" என்றால் "வரார்" என்று அர்த்தம். பேட்ட பராக் போல வீரா வரார், வைரா வரார், ராச வரார் என்பது. இது அனைத்தும் ஒன்றாக அதோடு பெயரில் பல PUNCH வசனங்களுடன் இருக்கும் நான் என்றென்றும் உங்களுக்காக நான் எழுத்துக்கள் அடங்கிய ஆர்டிகல்லாக உங்கள் மனதில் வரைய "வரார்" என்று வந்து கொண்டே இருப்பேன். அதோடு என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.
ஆசிரியர்களுக்கு ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்களை
இத்தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன்.
இது அனைத்தும் ரைட்டா,
ராங்கா என தெரியவில்லை.
https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html