சர்வதேச சௌக்கியமான கௌரவம் [WORLD WIDE PRESTIGE]

சர்வதேச சௌக்கியமான கௌரவம் என்பது "மௌனம்" [WORLD WIDE PRESTIGE]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SL செட்டியார்.

JMN-ன் "ரிதம் F.M" 605 108  Frequency of "MASS ARTICLES" ஆகும்.  இதில் காமெடி கலந்த மோட்டிவேஷன் மற்றும் பொது விஷயங்கள் உங்களுக்கு ரிங்காரம் பாடும் எழுத்துக்களை கொண்டு நல்ல ஓர் ரிதத்தில் எதிலும் வேஷம் போட்டு எழுதாமல், அதோடு தலைப்பிற்கு எந்தவித தோஷம் இல்லாமல் சந்தோஷம் ஆன  பல கட்டுரைகள் "MASS" ஆக எழுதபடுகிறது. இது பல பேருக்கு மோஷன் வரும் அளவிற்கு இருக்கும். இது ஹாசம் ஆக JMN-ன் "ரிதம்  F.M -ஆக 605 108"-ல் இருந்து உங்களை வந்தடையும்நானே F.M Station ஆரம்பித்தால் பெயர் இது தான். 

சர்வதேச அளவில் அனைத்து தேசங்களிலும் மனிதன் முதல் மிருகங்கள் வரை எதிர்பார்ப்பது மரியாதை, கௌரவம் என்பது.  ஆனால் அது பல பேருக்கு அது சௌக்கியமானதாக, சௌகர்யமாக இருக்கிறதா என்பது வேறு விஷயம். மிருகங்களையே விரட்டி கொண்டே இருந்தால் அது அந்த இடத்தில் இருக்காது.  ஏனென்றால் அங்கு அதற்கு சௌக்கியமான கௌரவம், மரியாதை கிடைக்கவில்லை என்பதால். அதனால் அதை பொறுத்தவரை பல பேருக்கு நிறைவாக கிடைக்கிறதா என்றால் மௌனம் தான் பதிலாக இருக்கும்.

சரியோ, தவறோ இதில் அசல், டூப்ளிகேட் என்று இதிலும் Fraud தனம் பண்ணி தனக்கு தானே தலையில் மண்ணை வாரி போட்டு கொண்டு உள்ளனர். இதிலும் "ஹானஸ்ட்" இல்லை.

"சம்" என்கிற "கணக்கு":-

வாழ்க்கையில் "சம்" (SUM)-தான் வாழ்க்கை. எல்லாமே கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் தான். அதாவது யார் தேவையோ அவர்களை கூட்டி சேர்க்க செய்தல் வேண்டும். நம்மிடம் FRAUD தனம் செய்பவர்களை நம்மிடம் இருந்து கழித்துகட்ட கூடிய நெய்தல் வேலையை செய்ய வேண்டும். இவ்வாறு பெருக்கல் வேலை செய்து தூக்கி போட வேண்டும்.  இதற்கு முறையான கொள்கைகளை நமக்கு நாம் வகுக்க வேண்டும்.

பாசம், நேசம்-முடன் இருப்பது மற்றும் நமக்கு மோசம் நடப்பது எல்லாம் இந்த "சம்" சரியாக இல்லாததால் தான்.  "சம்" என்கிற கணக்கு சரியாக போட்டால் நாம் எதிர்பார்த்த விடை கிடைக்கும்.

லைப்-பில் அனைத்துமே கணக்கு தான் அதில் பிணக்கு ஏற்படுவதால் தான் நமக்கு அது வழக்கு ஆகிறது. e.g:- அண்ணாமலை மண கணக்கு scene.

நாம் சரியில்லாமல் பேச பிறகு அவர்கள் ஏச, நேசம் நாசமாகி மோசமாகிறது. நம் வாழ்க்கையில் நல்ல வாசம் என்பதே இல்லாமல் அனைத்தும் கருகி விடுகிறது. நாம் நினைத்து உருகிய உறவுகள் பெருகி இருக்க வேண்டும். அதில் மருகி இருக்க வேண்டும். நமக்கு கடவுள் கொடுத்த "அருள்" பேர் "இருள்" ஆனது தான் மிச்சம்.  "சுருள்" போன்று நாம் சுருண்டுவிடுகிறோம்.

நம் வாழ்க்கையில் அனைத்தும் ஈசல் போல முடிந்து விடுகிறது. இதற்கு காரணம் நமக்குள் ஏற்பட்ட பூசல். E.g:- நட்பு முறிவு, டைவர்ஸ்.  இது அறிவு என்பதில் தெளிவு இல்லாததால் நம் வாழ்க்கையே உறவுகளில் "ரிஜக்ட்" ஆகிறது.

இதற்கு நாம் பலவற்றிற்கு கல்தா கொடுத்தல் வேண்டும்.  வேண்டுதல், தேடுதல் அனைத்தும் நிறைவேற "கணக்கு" என்கிற "சம்" சரியாக போடுதல் மிக முக்கியம் ஆகும். இல்லை என்றால் வீழ்தல் அனைத்தும் விதிதா என்ற புலம்பல் தான் நம்முடன் இருக்கும். தும்பல் போன்று அனைத்து கெட்டதும் போக வேண்டும் என்றால் மேற்கண்டவற்றை போடுவதில் சோம்பல் இருக்க கூடாது இருந்தால் நம்முடைய அனைத்தும் சாம்பல் தான். தேம்பல் மற்றும் பல ரோகம் என்கிற கெட்டது அனைத்தும் பட்டது போதும் என்றால் நம் வாழ்க்கையில் பலவற்றில் ஊறுகாய் போல தொட்டது ஆனால் தொடாமல் போல் இருக்க வேண்டும். அப்போது தான் எதுவும் நம் மனதை பலவும் சுட்டது போல் இருக்காது.

இங்கு சர்வதேச சௌக்கியமான கௌரவம் என்பது பல இடங்களில் மௌனமாய் இருப்பது தான்.  மௌனம் சம்மதம் என்று கூறுவது போல் பல இடங்களில் மௌனம் என்பது ஓர் மௌன ராகம் ஆக இருந்தால் நமக்கு எதிலும் தாகம் என்பது இருக்காது. மௌனம் நம்மை ஏளனம் என்பதில் காப்பாற்றும். அதோடு பல இடங்களில் தாழனம் என்பது இருக்காது. தானம் என்பதில் சிறந்தது அன்னதானம். பல இடங்களில் சிறந்த மொழி "மௌன மொழி" ஆகும்.

இங்கு மௌனம் என்பது பல இடங்களில் உறவுகளில், சொந்தம் ஓர் பந்தம் ஆக என்றும் நம்முடன் இருக்க மௌனமாக செல்வதே சிறந்தது ஆகும். இந்த மௌனம் என்கிற அமைதி பல இடங்களில் சொந்தங்கள் மற்றும் பல உறவுகளை காக்கிறது.  டென்ஷன், கோபம் என்கிற துடிப்பு.  அதில் எந்தவிதமான பிடிப்பும் இல்லாமல் இருப்பது ஓர் வகையில் மௌனமே. இவ்வாறான மௌனமே இன்றும் குடும்ப உறவு , சொந்த உறவு, நட்பு உறவு  துறவு போகாமல் காத்து நிற்பது இந்த மௌனம் தான்.  மௌனத்தின் சௌக்கியம் தான் நமக்கு பெரிய பாக்கியம்.

எதுவும் பிளவு படாமல் அது களவு போகாமல் இருக்க மௌனத்தை துளவ வேண்டும். மௌனமாக ஓர் இடத்தில் சிந்தனையை எந்த வித நிந்தனையும் இல்லாமல் வைப்பது தான் தியானம்.  இது மயானம் போகும் வரை நம்மை நிம்மதியாக வைத்திருக்கும்.  மௌனம் என்பது நமக்கு ஓர் வெகுமதி ஆகும்.

எல்லாவற்றிலும் நாட்டாமை கவுண்டமணி காமெடி போல பதில்-க்கு பதில் என்று எதில் இருந்தாலும் அதில் பெறுவதில் என்பது குறைவாக தான் இருக்கும். போவதில் வீழ்வதில் என்று நமக்கு அதிகமாக இருக்கும். வெல்வதில் எதற்கு முக்கியமோ அதற்கு தான் தில்லுடன் செயல்பட வேண்டும்.  "தில்" வேண்டும் என்பதற்காக அனைத்திலும் "தில்"- ஆக இருந்தால் நாம் துன்பத்தில் தான் விழ வேண்டும், எழ முடியாது, பிழ நம்மிடம் தான்.

நல்ல வாசமுள்ள வாழ்க்கை வாழவா இல்லை சிலவற்றில் தாழவா என்று நம் மனதை இறுக்க வேண்டும். அப்போது தான் துன்பங்கள் நொறுங்கும்.  நம் மனசின் ஆச என்றால் அதை பச போல ஓர் பிசின் ஆக எண்ணி மேற்கண்ட கணக்கை நம் மனதில் போட்டு ஒட்ட வேண்டும். பிறகு அனைவரும் கசின் போல பல உறவுகளுடன் வாழலாம்.

பலா போன்று தான் அனைத்திலும் இருக்கும்.  அதை கலாக்கா போல எண்ணிணால் நிலா போன்ற வாழ்க்கை நிச்சயம். இந்த வாழ்க்கைக்கு அச்சம் கொண்டு இச்சையுடன் செயல்பட்டால் அனைத்தும் துச்சம் தான். நம் வாழ்வில் எல்லாமே பச்சை தான். பிறகு தாழ்வில்லை.  வில்லில் இருந்து வரும் அம்பு போல மற்றும் பாம்பு-ல் இருந்து வரும் விஷம் போல தான் நமக்கு நடக்கும் துவேஷம். இதை வாழ்வில் தாழ்வில்லாமல், அதோடு நமக்கு வரும் துவேஷங்களை காம்பு போல தூக்கியெறிய, எந்த வம்பு, தும்பு இல்லாமல் இருக்க, நமக்கு எதுவும் பாழ் ஆகாமல் இருக்க இதை ஆரோக்கியமான  ஓர் கூழ் போல அருந்த வேண்டும்.  இதை மருந்து போல அருந்து. பிறகு பருந்து போல நல்லது மட்டுமே சுற்று போடும். மேற்கண்ட அனைத்தையும் பற்று கொண்டு கற்று கொண்டால் ஆற்றுவது எதுவாயினும் பெரும்பாலும் வெற்றி தான். ஆறு போன்ற வாழ்க்கையில் வீறு பெற்று நம் வாழ்க்கையை நாமே ஏற்றுவதற்கும் அதை பெறுவதற்கும் மேற்கண்டது என்பதெல்லாம் இருந்தால் நாம் சர்வதேச சௌபாக்கியத்தை சௌகர்யமாக பெற முடியும்.

கணக்கை அன்பால், பண்பால்  ஓர் பாசப்பால் சேர்த்து வெண்பா போல போட வேண்டும். பிறகு எந்த வம்பால்-லும் நம்மை ஒன்றும், என்றும் செய்ய முடியாது. கன்று போல பாசத்துடன் நம்முடன் இருக்கும்.

சர்வம் அனைத்தும் நமக்கு வேண்டும் என்றால் எதிலும் ஆர்வம் மற்றும் கர்வம் இருக்க வேண்டும்.  ஆனால் அதில் பல மர்மம் இருக்கிறது. அதன் வர்மம் எது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதில் சில தர்மம், நியாயம் என்பது இருக்காது.

கொடுப்பது, எடுப்பது, துடிப்பது, தொடுப்பது என்பதை சரியாக செய்ய வேண்டும்.

சரியாக கொடுப்பது, வேண்டாதவற்றை எடுப்பது, சரியானவற்றில் துடிப்பது , கொந்தளித்து வெடிப்பது இதனை அனைத்தையும் சரியாக தொடுத்து நாம் வாழ வேண்டும். இப்படி இருந்தால் அறத்துபால், பொருட்பால், காமத்துபால் அனைத்தும் நம்முடையதே.

யோகம் என்பதே யாகம் போன்றது தான். அதில் பலவற்றில் காகம் போல் "காகா" என்று இருக்க வேண்டும். போகம், மோகம் என்பது முதல் அனைத்து "கம்"-களும் நம்மிடம்"கம்" போல இருக்க மேற்கண்ட "சம்" போடுவோமா! ஜோர் ஆக வாழ்வோமா!. ஏமா! கணக்கே, சம்மே, வாமா!

வெண்பா போல ஓர் இன்பா ஆக, நம் வாழ்க்கையில் பண்பா வாழ மேற்கண்டவற்றை நினைவில் வைப்போம். நல்ல உறவு "சாந்தி" போல அமைதியாக நம்முடன் இருக்க காந்தி  அஹிம்சையை கையிலெடுத்தது போல் நாம் மௌனத்தை கையில் எடுத்தால், பல பூந்தி-யை சேர்த்து லட்டு செய்வது போல் பலவற்றை சரியாக கணக்கு போட்டால் உறவுகள் நமக்கு என்றும் குமட்டும் வாந்தியாக இருக்காது.

ஏழர சனி இருந்தாலும் சௌபாக்யமாக, சௌகர்யமாக வாழலாம். காஸ்ட்லி டிரஸ், டீ ஷர்ட், ஜீன்ஸ் என துணிகள் வாங்கி ரஸ்க் சாப்பிட்டு கொண்டே வாழலாம். நமக்கு வாழ்க்கையில் பல கஷ்டம்,நஷ்டம் என்று குஷ்டம் போன்று இருக்கும் அனைத்தையும் களையும் ஏணியே "சம்" மற்றும் பல இடங்களில் "மௌனம்" தான். வாணிபம் செய்ய இந்த"வாணி" நிச்சயம் உபயோகபடும். "சதா" மேற்கண்டபடி கணக்கும், மௌனமும் நம்முடன் என்றென்றும் இருக்க வேண்டும்.

 

யோகத்துடன் வாழ யோகா மற்றும் யோக்கிய தன்மையும் இருக்க வேண்டும். யோக்கியாம்சம் கம்சன் போல யார் வந்தாலும் துவம்சம் செய்து வம்சம் என்பதை பாதுகாக்கும்.

ஆனவணே ஆணவத்தில் ஆடாதே. எல்லாம் பார்த்தவணே  பாடாய் படுத்தாதே பிறகு பாழாய் போனாணே என்று ஆகிவிடும்.  இது ஓர் தத்துவம். இந்த தத்துவம் ஓரளவு அனைத்திற்கும் ஒத்து வரும். இது போல பல முத்துக்கள் நம்மை கடந்த சொத்து-களாக தத்துவங்களாக இன்றளவும் உள்ளது. இது ஒன்றும் பெரிய தத்துவம் அல்ல சிரியதாக இருந்தாலும் அது நம் மனதை விரிய செய்ய வேண்டும். நம் மனதை சொரிய செய்ய வேண்டும்.

யோக்கியா யோக்கியஸ்தா வானரா உர்னாங்களாம் என்று கூறுவார்கள். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? சொன்னாலும் எனக்கு புரியுமா என்று தெரியவில்லை.

இது அனைத்தும் மெய்யா, பொய்யா என தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html