Mr.வழிகாட்டி Since 1984-ன் "பூபால கூக்குரல்"[ Courier News Boy]





மிஸ்டர்Mr.வழிகாட்டி Since 1984-ன் பூபால "கூக்குரல்"[The Courier News Boy] ★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.

நான் தான் 80'S-ன் கடைசி பக்கம் மற்றும் Mr.வழிகாட்டி ஆவேன். Since 1984-ல் பிறந்த நான் JMN-ன் ரிதம் F.M 605 108-ல் 137-வது கட்டுரையாக எழுதுவது இதே தலைப்பில் தான் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

மிஸ்டர் Mr.வழிகாட்டி Since 1984 விளக்கவுரை:-

இளைஞர்களுக்கு மிக பெரிய Inspiration, Roll Model நான் தான் ஆனால் Row-வில் கடைசியாக தான் உட்காருவேன்.  அதற்கும் இயற்கையாகவே காரணம் இருந்தது.  Last Bench Student தான் இது வரை பல துறைகளில் சாதித்தவர்கள் மற்றும் சிறு குறு தொழில்களில் முதலாளிகளாகவும் உள்ளனர்.  உரிமை குரல் எழுப்பவர்களும் இவர்களே.  பெரும்பாலும் First Bench Student ஒரு பெரிய Corporate Company-யில் வேலை கிடைத்ததுமே அவருடைய மொத்த அத்தியாயமும் 'அகராதியின் கடைசி பக்கம்' போல் முடிந்துவிடுகிறது.  இந்த தலைமுறையில் இளம் வயதில் சாதித்தவன்.  அதோடு All Rounder போல் சிறு வயதிலேயே பல துறைகளில் ஒரு Round வந்துள்ளேன்.  பலபேருக்கு அழிக்க முடியாத சிம்ம சொப்பனமாக ஏழையான இடத்திலேயே தற்சமயத்திற்கு இருக்க கூடிய ஒரே நபர் மற்றும் அநேகமாக கடைசி நபரும் நானே தான் என்பது வரலாற்று சிறப்பு மிக்கது ஆகும். வரலாற்று சிறப்புமிக்கவர்கள் அனைவரும் உருவானது ஏழை களத்தில் தான்.  ஏழை களத்தில் பயிற்சி பெற்று பணக்கார தளத்தில் பணக்காரர்களிடம் மோதி ஜெயித்தவர்கள் தான் அநேகம்.  சாம்ராஜ்யத்தை எழுப்பியவர்கள் முதல் அதை ஆள்பவர்களின் 'அடிதளம்' பெரும்பாலும் ஏழை மாணவனாகவும், கல்லூரியிலும் தான் அமைக்கபட்டிருக்கும்.  வழிகாட்டிகளுக்கு பெரும்பாலும் வழி காட்ட ஆள் இல்லாமல் சுயமுயற்சியால் சுயம்பு போன்று சுயசிந்தனையால் அந்த துறைகளில் வழியை கண்டுபிடித்து முன்னேறியவர்களே.  அதாவது 'வெற்றி சூத்திரம்' தெரியாமல் 'சூத்திரன்' போல் கஷ்டபட்டு சாதித்தவர்கள் ஏராளம். சூத்திரதாரிகளின் வலையில் சிக்கி ஏமாந்தவர்களும் இருக்கின்றனர்.  அது ஆன்மீக துறையாக இருந்தாலும் இதே நிலமை தான்.  எ.கா:- கௌதம புத்தர்-'ரா' குடும்பத்தில் பிறந்தவர்.

Since Year என்பது தரமான உடைகள் முதல் பல துறைகளில் சாதித்தவர்களுக்கான ஓர்' மணி மகுடம்' ஆகும்.  அதாவது அவர்கள் தொடங்கிய ஆண்டை அந்த கம்பெனி பெயருக்கு கீழ் 'Since' என்று குறித்து ஆண்டை எழுதுவார்கள்.  அது அவர்கள்  'Sincere'-ஆக உழைத்து திறமையை வெளிபடுத்தியதற்கான அடையாளம்.   அதோடு அந்த துறையில் அவர்கள் பலவற்றை விட்டு சென்றவர்கள்.  அந்த துறையில் வருபவர்களுக்கு ஓர் 'வழிகாட்டி' போலவும் இருப்பவர்கள் ஏராளம்.  பல 'ஆள்காட்டிகளை' எல்லாம் விலக்கி நம் 'நாள்காட்டி' அனைத்தும் ஜெயமாக்கியவர்கள்.  

ஓர் நாளைக்கு ஒரு மணி நேரம் செய்தி ஒளிபரப்பிய போது அந்த செய்தி பல பேருக்கு கேள்விபட்டீர்களா என்பது போல் அனைத்து இடங்களிலும் பரவி சென்றது அதோடு அனைத்தும் காது கொடுத்து கேட்கபட்டு பலவற்றை சிந்திக்க முற்பட்டனர்.  ஆனால் இப்போது பல சமூக வளை தளம் முதல் அனைத்து தொலைகாட்சிகளிலும் செய்திகள் நம்மை தொலைத்து எடுத்து அதில் பலதை கவனிக்காமல் தொலைத்துவிட்டு நாம் தொலைந்து காணபடுகிறோம். 

ஒரு செய்தி வியாபார பொருள் ஆகாத போது செய்தி செய்தியாக அனைத்துமே முக்கியத்துவம் பெற்று இருந்தது.  ஆனால் இன்று செய்தி என்பது வியாபார பொருள் ஆகி அது பல 24/7 News Channel- ஆன பிறகு எல்லா செய்தியுமே சர்வசாதாரணமானது போல் பலதை கவனிக்காமல் கடந்து சென்றுவிடுகிறோம்.  ஒரு காலத்தில் செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண சாமி என்று கூறி வாசிக்க தொடங்கிய போது அனைவரின் கவனமும் அங்கு இருந்தது.  இன்று காமெடி, பாடல், படம் கேட்பது போல் ஆனதும் எதிலும் 'சலிப்பு' ஏற்பட்டு கவனம் சிதறி இருப்பது போல் கடமைக்கு பார்ப்பவர்கள் இன்று 'ஏராளம்' ஆகிவிட்டார்கள்.  செய்திகள் 'Forward' ஆகிறது ஆனால் நாம் எதுவும் 'Forward' ஆகவில்லை.  அதனால் தான் தொடர்ந்து அதே 'Content' [கள்ள காதல், தற்கொலை etc]-ல் வெவ்வேறு பெயர்களில், ஊர்களில் நடந்தது அனைத்து சேனல்களிலும் செய்திகளாக ஒளிபரப்பாகி கொண்டே இருக்கிறது.  

எதுவும் வியாபார பொருள் ஆகாத வரை தான்.  வியாபார பொருள் ஆகிவிட்டால் அதன் மீதான தாக்கம் அதிகமாகுமே தவிர குறையாது.  என்னுடைய ஆர்டிக்கலே பல சேனல்களில் வியாபார பொருள் ஆனால் நானே நினைத்தாலும் என்னால் எழுதாமல் இருக்க முடியாது.  அவர்கள் விடமாட்டார்கள் எப்படியாவது என்னை எழுத வைக்கவே முற்படுவார்கள்.  பிறகு முற்று புள்ளி இல்லாமல் "ஜெட்" வேகத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கும்.  பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் அவர்கள் வியாபாரத்திற்காக! புரிகிறதா!  பாவம் என்னடா!  புண்ணியம் என்னடா வியாபார உலகினிலே என்பது போல தான்.

தீவிர வாசகர்கள் பைத்தியமாய் ரோட்டில் திரிந்தாலும் என்னை எழுத வைக்க முடியாது.  ஆனால் வியாபாரம் ஆகி அது பணம் ஆனால் 'குபேரனே' குபே- வில் வந்து தடுத்தாலும் முடியாது.  ஏனென்றால் அதில் இவர்கள் குபேரனாக முயற்சிப்பதால் எதையும் செய்ய தயங்க மாட்டார்கள் 'கவன்', லூசிபர் etc படம் போல்.  ஒரு துளி பல துளியாகி நாள்கணக்கில் அது தொடர்ந்தால் அது வெள்ளம் மற்றும் சுனாமி ஆகும்.   எழுதுபவரே பாதிக்கபட்டாலும் பாதியில் நிறுத்த கூடாது என்பது போல் தொடர சொல்வார்கள்.  யாருடைய கல்லா பெட்டி நிறைய என்றால் வியாபாரிகள் போல் ஆன பத்திரிக்கை ஓனர்கள் கல்லா பெட்டி நிறையவே.  இன்று வியாபாரிகள் பலர் பத்திரிக்கை துறையில் பத்திரிக்கை மற்றும் சேனல் நடத்துகின்றனர்.  அதற்காக ஒட்டுமொத்தமாக அனைவரையும் கூறவில்லை.

பத்திரிக்கையில் பத்தி பத்தியாக பல உண்மைகளை வியாபாரம் முதல் Scam வரை பல பத்திரிக்கையில், சேனலில் கட்சி பற்றியோ மற்றும் பல முறைகேடுகள் பற்றியோ எழுத முடியாது.   பத்திரிக்கை சுதந்திரம், தர்மம் எங்கே போனது?  பத்திரிக்கையாளர்கள் பல தொலைகாட்சி சேனலில் ஏவல் ஆளாகி ரொம்ப காலம் ஆகி விட்டது.  இதற்கு பெயர் Journalism மா?  அவர்கள் யாரை தாக்க, தூற்ற, போற்ற சொல்கிறார்களோ அவர்களை ஓர் ரவுடி போல் சொல்வதை வேலைகாரன் படம் போல் செய்ய வேண்டும்.  பத்திரிக்கை துறையில் ஆரோக்யமாக செயல்பட பத்திரிக்கையாளர்கள் நினைத்தால் தான் முடியும்.  பல  ஓனர்கள் 24 மணி நேரமும் சேனலை வழி நடத்த தெரியாதவர்கள்.  அதோடு ஆர்டர் போடவும் முடியாது.  Add Agency எல்லாம் நம்மை தலைவணங்க சொல்லி அவர்களுக்கு 'சலாம்' போட்டால் பத்திரிக்கை சங்கம் எதற்கு இருக்கிறது?  தலைசிறந்த பத்திரிக்கையாளர்கள் எதற்கு இருக்கிறார்கள்?  அனைவரும் ஒன்றிணைந்து முடிவு எடுத்து அனைத்து சேனலும் செயல்பட்டால் எந்த Agency-யும் எதுவும் தீர்மானிக்க முடியாது.  நம்முடைய திறமை தான் விளம்பரம் முதல் அனைத்தையும் தீர்மானிக்கும்.  பத்திரிக்கையாளருக்கும் மதிப்பு கிடைக்கும்.  அதைவிட்டு Add agency-யிடம் கையேந்தி நின்றால் ஓனருக்கு வேண்டுமானால் லாபம் ஆக இருக்கலாம்.  ஆனால் பத்திரிக்கையாளர்களுக்கு மதிப்பே இதில் கிடையாது.  ஏனென்றால் இதில் பத்திரிக்கையாளரின் Creativity, Talent என்பது எத்தனை சதவீதம்?  மரியாதை என்பது அந்த சேனலில் கிடைப்பதே பெரிய விஷயமாகிவிடும்.  ஏனென்றால் Add Agency-யை கூட்டி கொண்டு வந்தாலே போதும் என்று ஆனதால்.  அதோடு சக பத்திரிக்கையாளரிடமும் நாம் கெத்தாக எதுவும் கூற முடியாது.  அப்படியே கூறினாலும் உனக்காக அங்கு ஒன்றுமில்லை.  Add Agency தான் எல்லாமே என்பார்கள்.  இதுவும் ஓர் செவி வழி செய்தியாக கேள்விபட்டதே தவிர உண்மையா என்று தெரியவில்லை.  ஆனால் உங்கள் மனசாட்சிக்கு தெரியும்.

எந்த துறையிலும் அந்த துறை சார்ந்த ஆட்களிடம் தான் அந்த துறை கட்டுகோப்பாக இருக்க வேண்டும்.  அப்போது தான் மதிப்பு மற்றும் வரலாற்று நாயகர்கள் அந்த துறையில் உருவெடுப்பார்கள்.  இந்த தலைமுறையில் சாதித்த இந்திய அளவில் சிறந்த பத்திரிக்கையாளர்கள் பட்டியல் நம்மால் குறைந்தபட்சம் 100 பத்திரிக்கையாளர்கள் பெயர்களாவது குறிப்பிட முடியுமா?  ஏன் முடியவில்லையென்றால் பத்திரிக்கை துறை நம் கைவசம் இல்லை.  அது வியாரிபாரிகளிடம் போனதால் எல்லாமே வியாபார பார்வையாகி அதில் நம்மை இயங்க சொல்கிறார்கள்.  அதனால் நம் திறமை சார்ந்த எந்த நிகழ்ச்சிகளும் இல்லாமல் வெறும் செய்தி சேகரித்து கொடுக்கும் Post Man, Courier வேலை போல் செய்வதால் நாம் இருந்தாலும் ஒன்று இல்லையென்றாலும் ஒன்று என்று முடிவுக்கு வந்து விடுகின்றனர். கூரியர் வேலைக்கு மூன்று மாதம் Training கொடுத்தாலே போதுமானது என்பது போல் ஆகிவிட்டது அவன் சிக்கு புக்கு சிக்கு புக்கு என்று சேகரித்து வந்துவிடுவான்.  நம் திறமையை வெளிபடுத்தும் நிகழ்ச்சிகள் பல இருந்தால் தான் அவர்கள் நம்மை மதித்து நம்முடைய சுகதுர்க்கங்களாகிய எதையும் காது கொடுத்து கேட்பார்கள்.  ஆனால் நிதர்சனமான உண்மை அப்படி ஒன்றும்  நம்முடைய நிகழ்ச்சிகள் பெரிதாக இல்லை என்பது தான். நாம் சேனலில் மற்றும் செய்தித்தாள் நிறுவனத்தில் பணி புரிகிறோம்.  அங்கு நம்முடைய அடையாளம் என்று என்ன நிகழ்ச்சிகள் இருக்கிறது  ID CARD-ஐ தவிர்த்து.

இதே நிலமை தான் டி.வி சேனலிலும்.  வெறும் நாடகமே  பல மணி நேரங்கள் தினமும் ஓடி கொண்டே இருக்கிறது.  அதைவிட்டால் திரைபடங்கள் அவ்வளவே.  இப்படி இருந்துவிட்டு நான் பத்திரிக்கையாளன் என்று கூறினால் நமக்கு கெத்தாக இருக்குமா? அங்கு உன்னுடைய வேலை என்னய்யா என்றால் டிவிடி கேசட் போடுவது போல் நாடகங்கள் மற்றும் பட கேசட்டுகளை போடுவேன் என்பது போல் தானே உள்ளது.  அதுவும் இல்லையென்றால் செய்தி தொகுப்பாளர் என்ற பெயரில் யாரோ தொகுத்து வைத்ததை ஸ்கிரீனில் போடுவார்கள் அதை செய்தியாக வாசிப்போம்.  ஆனால் Designation பத்திரிக்கை துறை அல் டெலிவிஷன் துறை. திறமைக்கு பஞ்சமோ என்ற எண்ணம் வருகிறது.  ஏனென்றால் பல நிகழ்ச்சிகள் பல சேனலில் புது மாதிரியாக Copy and Paste பண்ணியிருக்கிறார்கள் அவ்வளவே.  மற்றபடி இன்றளவும் வேறு வடிவங்களில்  எந்த நிகழ்ச்சியும் இல்லை.  எ.கா:- விஜய் டி.வி, Zee tv-யை வேறு வடிவத்தில் Copy and Paste பண்ணியே பல பிரபல தமிழ் சேனல்கள் ஒளிப்பரப்பின மற்றும் ஒளிபரப்பும் செய்து கொண்டிருக்கிறது.  பல கோடிகள் சம்பாதிப்பது முக்கியமான துறைகளில் முக்கியமான குறிக்கோளாக வைத்து செயல்பட கூடாது.  அதோடு பணம் சம்பாதிப்பது என்பது இன்று நாய் குரைப்பது போல் ஆகிவிட்டது பணக்கார உலகத்தில்.  அதோடு அது எல்லோரிடமும் உள்ளது.  பிரபல சேனல் என்ற பெயர் பிரசவம் பார்ப்பது போல் நம் உழைப்பால் பல நிகழ்ச்சிகளால் திறமைகளை நிரூபித்து  ஒளிபரப்பி பெற வேண்டும். மற்றபடி எல்லோருமே பார்ப்பதை வைத்து என்றால் வெள்ளை பன்னி, கருப்பு பன்னி  முதல் தோகை விரித்து ஆடும் மயில் வரை அத்தனையையும் தான் மக்கள் வியந்தும், நாற்றத்துடன் மக்கள் பார்த்து கடந்து செல்கிறார்கள்.  அதற்காக அதை சாதாரண பன்னி என்று கூறாதீர்கள். பிரபல பன்னி என்று கூறுங்கள் என்பது போல் இருக்கிறது.  சன் போல் ஒளிராமல், பல சன் சேனல்கள் எந்த அடையாளமும் இல்லாமல் 'அஸ்தமித்தவனுடைய' 'அஸ்தி' போல் கசந்தாலும் அது 'அஸ்வினி' நட்சத்திரம் ஒளிர்வது போல் கூறி பிழைப்பு நடத்துகின்றனர்.  சர்க்கரை கலந்த சுவையான "ஜவ்வரிசி பாயாசம்" போன்று எங்களுடைய நிகழ்ச்சிகள் மக்களுக்கு பலவித சுவைகளை அள்ளி தருகிறது என்று பிரபல சேனல் சொல்லி கொள்வதால் என்ன பயன்?  பத்திரிக்கை துறையில் மற்றும் டெலிவிஷன் துறையில் இன்றைய தலைமுறையில் Mr.வழிகாட்டி Since 1984 யார்?  இது தோணவில்லை என்று கூறாதீர்கள்.  இவ்வாறு எதுவும் தோணாததால் தான் யாரும் வழிகாட்டியாக இந்த தலைமுறையில் தோன்றவில்லை.  இப்படியே ஆண்டுகள் பல உருண்டோடினால் உண்மையான Journalism என்பதே என்ன என்று தெரியாமல் போய்விடும்.

நம் 'Activity' அனைத்தும் நம் திறமையை வெளிபடுத்துவதாக இருக்க வேண்டும்.  அதைவிட்டு Studio-வில் 'Act' செய்வது போல்  'Makeup'  போட்டு வெறும் செய்தி சேகரிப்பது மற்றும் சேகரித்த செய்தியை 'செவ்வனே' அப்படியே அச்சு பிசிராமல் படிக்க சொல்வது மட்டும் ஓர் 'Maker' வேலை கிடையாது. பத்திரிக்கை துறை மற்றும் Television துறையில்  'KingMaker' ஆக வேண்டுமென்றால் நமக்கென்று 'Mission' இருக்க வேண்டும். நம்முடைய 'Action' அனைத்தும் அதை நோக்கியே இருக்க வேண்டும்.  அப்போது தான் 'Vision' வித்தியாசமாகவோ, நேர்த்தியாகவோ, அழகாகவோ மக்களுக்கு பலவற்றை அளிக்கும்.  திரைத்துறை காமெடியை பார்த்து அலுப்பு தட்டியவர்களுக்கு மிக பெரிய விருந்தாக அப்போது அமைந்தது தான் 'லொள்ளு சபா', தமிழில் ஹாலிவுட் திரைபடங்கள் என்று Creative Maker-ன் கைவண்ணமானது பல கிராமங்கள் வரை 'சபை' ஏறியது.  செய்திகள் சொல்வது மட்டுமே ஊடக செய்தித்துறையின் வேலை மற்றபடி வேறெதும் பெரிதாக வேலையே கிடையாது என்பது போல் இருந்த ஊடக செய்தி துறையில் பல இருக்கிறது.  அதில் ஓன்று இது என்று ஒரு செய்தியை தலைப்பாக்கி அதில் விவாதம் என்று நேர்பட பேசி இன்று அது பல பெயர்களில் பல தலைப்புகளில் விவாதமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.  TRB-யை இப்படியும் ஆரோக்கியமான முறையில் பெருமையாக ஏற்றலாம் என்று பலர் நிரூபித்துள்ளனர்.  இதில் பல நிறுவனர்களின் BackGround பத்திரிக்கை துறையே கிடையாது என்பது குறிப்பிடதக்கது.  ஆனால் பத்திரிக்கை துறை மற்றும் ஊடக  துறையை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்ல பெரிய பங்கு வகித்துள்ளார்கள்.  பத்திரிக்கை தர்மத்தை கட்டி காக்கும் கண்ணியமான பொறுப்பை பல வியாபாரிகள் ஏற்று அதை சீரும் சிறப்புமாக இன்றுவரை காப்பவர்கள் காத்து கொண்டே இருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

நம்ம 'ஏரியாவில்' நாம தான் என்று இருக்க வேண்டும்.  அதைவிட்டுஅளவுக்கதிகமாக 'யூரியா' போன்றவர்களை பத்திரிக்கை துறை எனும் பயிரில் 'தெளித்தால்' நாம் எதுவும் 'தெளிவாக' சுயமாக முடிவெடுக்க முடியாமல் பயிர் நாசமாக வாய்ப்பிருக்கிறது.  நாம் இதில் தெளிந்து 'உளவு கண்' கொண்ட 'உளவாளி' போல எல்லாவற்றையும் கொஞ்சம் கவனமாக 'துளவி' உற்று நோக்கினால் அனைத்தும் புலப்படும். வருங்காலத்தில் ஊடகத்துறையின் எதிர்காலம் அதோடு நம்முடைய எதிர்காலம் என்ன? எதிர் காலத்தில் ஊடகத்துறையின் செயல்பாடு எப்படி இருக்கும்? என்று நாம் இப்போதே ஓரளவிற்கு இதை வைத்து யூகிக்க முடியும்.  Courier News Boy-யாக இருப்பவருக்கு என்ன பெரிய எதிர்காலம் மற்றும் பெரிதாக என்ன வரலாற்று அடையாளம் இருக்கும் என்பதை 'சிந்தித்து' பார்த்தால் பல நமக்கு எதுவும் 'சிந்தாமல்' விளங்கும்.  ஒட்டு மொத்த ஊடக துறையும்  ஓட்டுக்கு காசு வாங்கி கொண்டு நம் ஓட்டு முதல் கள்ள ஓட்டு வரை போடுவது மற்றும் விற்பது போல் இத்துறையை விற்காமல் மற்றும் விலை போகாமல் காப்பவர்கள் காத்து கொண்டே இருக்கின்றார்கள் என்பது குறிப்பிட தக்கது.  பத்திரிக்கை துறை மற்றும் ஊடகத்துறை என்பது பல பொருட்கள் அடங்கிய 'பெரிய குடோன்' போன்றது.  இந்த 'கூடாரம்' சில 'கூடா' நட்பால் பல சேனல்களில் ஒரு சில Programe-களை தவிர்த்து மற்றவைகள் இல்லாமல் எதுவும் அற்றவைகளாக காலியாக உள்ளது.  அதோடு குறிப்பிட்ட சிலரை தூற்றுவதற்காகவே சேனல் ஒளிபரப்பு ஆவது போல் ஒளிபரப்பாகிறது.  அது இனி கூடாது என்று இருந்தால் நன்மை பயக்கும்.  

இதை கூப்பாடு போட்டு பூபால கூக்குரல் ஆக உங்களை கூப்பிட்டு கூறுவது போல் கூறிவிட்டேன்.  இந்த கூற்று சரியாக இருந்தால் கூறியவற்றை கூர்முனையாக மனதில் பதித்து அந்த கூர் மழுங்காமல் பாதுகாத்து செயலாற்றுங்கள்.   

மேற்கண்ட அனைத்தையும் 'சமிக்ஞை ஒலி' எழுப்புவது போல் எழுப்பிவிட்டேன்.  கொலுசு சத்தம் பெண்களுக்கு அழகு.  சலங்கை ஒலியானது பரதத்திற்கு அழகு.  மனிதனின் சத்தம் மனித தன்மை மற்றும் மனிதனுக்கான அழகு ஆகும்.  'Programe' நன்றாக செய்யபட்டிருந்தால் தான் அதை 'Projection' பண்ணி காட்டும் போது 'நாள் காட்டியில்' இந்நாள் ஓர் பொன்னாள் என்பது போல் வரலாற்றில் அனைத்தும் பதிவாகும்.  நம் லட்சிய 'Project' வெற்றி பெற நாம்  வெட்டி தனமாக வெட்டி வேலையில் ஈடுபட்டு 'வெட்டு' வாங்கி விழுந்தது போல் மேற்கண்டவைகளில் எதுவும் விழாமல் அந்த துறையானது தலைநிமிர நாம் முதலில் பலவற்றை 'வெட்டி' வீழ்த்தி தலைநிமிர வேண்டும்.  எதையும் வெட்டாமல் இருந்தால் எல்லாம் புற்றீசல் போல தான் காணபடும்.  நம்முடைய 'மவுசு' எவ்வளவு என்பதில் தான் நம்முடைய 'ரவுசு' அடங்கி உள்ளது.  மவுசில்லாமல் ரவுசு விட்டால் கைபிள்ளை போல் காமெடி பீஸ்ஸாக தான் கடைசி வரை இருக்க முடியும்.  

இது எந்தவொரு பத்திரிக்கையையோ, பத்திரிக்கையாளரையோ, ஊடகத்தையோ கூற அல்ல.  குறிப்பிட்டு 11 வருடங்களாக ஒரே திருமகனை Live-ல் போட்டுவிட்டு அவன் உழைத்ததை உழைப்பாக கூறாமல் இவர்கள் பிழைப்புக்காக இருந்துவிட்டு அது பெரிய உழைப்பு என்று கூறிகொள்கிறார்களே அவர்களை கண்டிப்பாக, உறுதியாக, நிச்சயமாக, உண்மையாக கூறவே இல்லை என்பதை இத்துடன் தெரிவித்து கொள்கிறேன். கடும் வெயிலில் சிக்னலுக்கு சிக்னல் இரவுபகல் பாராமல் பிச்சை காரனும் வியர்வை சிந்த பிச்சை எடுத்து கொண்டிருக்கிறான் அதுவும் உழைப்பு தான் என்று அவர்கள் சொல்லி கொள்வார்கள்.  அதே சமயம் A/C-யில் டாக்டர்கள் இருந்து கொண்டு Operation Theatre-ல் Operation செய்து உயிரை காப்பாற்றுகிறார்கள் மற்றும் குணபடுத்துகிறார்கள் இவர்களும் உழைக்கிறார்கள்.  இவ்வாறாக  வாத்தியார்கள் முதல் ஒவ்வொரு துறையில் இருக்கும் பல நபர்கள் வரை அனைவரும் ஒவ்வொரு 24 மணிநேரமும் அனைவரும் உழைக்கின்றனர்.  ஆனால் நாம் எதில் உழைப்பை போட்டோம் என்பதை வைத்து தான் நமக்கான அங்கீகாரம் என்பது நிர்ணயிக்கபடுகிறது.  நாம் கூறினால் போதாது.  நாம் எப்படி இருந்தாலும் நம்மை பற்றி நாம் தவறாக கூறாமல் உயர்வாக தான் உயர்த்தி பிடிப்போம் என்பது அனைவரும் அறிந்ததே.  

இது அனைத்தும் ரைட்டா, ராங்காஎன தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html