SARAVANA DEVOTIONAL ROCKING POETRY
1-"எம்பெருமான் சிவனின் போற்றுதலுடன் தலைப்பு" ஆத்மாவில் இருந்து நேரலையில் "அண்ணாமலைக்கு அரோகரா !நமச்சிவாயனுக்கு அரோகரா! ஈஸ்வரனுக்கு அரோகரா! மற்றும் பிள்ளையார் பட்டி கணேசனுக்கு கணநாதனுக்கு ஜே'! ஓம் சிவாய நம! [SOUL LIVE GOD SHIVA DEVOTIONAL POETRIC] ★ புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,
தேடினாலும் காண கிடைக்காத இறைவா! நீலகண்டா! புலி தோல் அணிபவனே! உனக்கு என் வணக்கம். உன் திருநாமத்தை சொன்னாலே மன அமைதி தரும் சிவா! உனக்கு என் வணக்கம். ஆன்மீகத்தில் மூடி கிடந்த என் மன திரையை விளக்கியவரே! உனக்கு என் வணக்கம். சிவம் ஆகிய நான் கோயிலில் மட்டும் அல்ல எங்கும் இருக்கிறேன் நான். அதனால் நீ வெளியே எங்கும் தேடாதே உன்னில் தேடு என்று தேட வைத்த ஆண்டவனே! உனக்கு என் வணக்கம். ஜாதகம் என்பதில் பாதகம் இருந்தாலும் எந்த பாதிப்பையும் அடைய செய்யாமல் காப்பவனே! உனக்கு என் வணக்கம்.
☆
குறட்டை விட்டு ஆழ்ந்து தூங்கி வழிந்த என் மனதை தட்டி எழுப்பி, குடைந்து என்னை நல்லதொரு சிற்பம் ஆக்கிய சிற்பியே! உனக்கு என் வணக்கம். மனதில் அடைச்சல் ஆக இருந்த பல கெட்டவைகள் நமக்கு குடைச்சல் ஆக மாறி நம்மை அழிக்காமல் காக்கும் காவலனே!உனக்கு என் வணக்கம். நம்முள் இருக்கும் மன அசுத்தத்தை நீக்கி சுத்தம் செய்து முழுமையான ஆச்சாரமானவன் ஆக்குபவரே! உனக்கு என் வணக்கம்.
☆☆
நல்ல கோச்சாரம் என்பதே நம்மிடம் மன அழுக்கு இல்லாமல் இருப்பதே என்று உணர்த்துபவரே! உனக்கு என் வணக்கம். பல அருஞ்சுவை மிக்க கம கமக்கும் திண்பண்டங்கள் உண்ண இருந்தாலும் உன் பிரசாதத்திற்கு ஈடு ஏதும் கிடையாது தெய்வமே! ஆலயம் முதல் திண்ணை வரை உன்னை எந்த இடத்தில் நினைத்தாலும் மோட்சம் என்று நிரூபணம் ஆன என் தெய்வமே! கோபுர தரிசனம் கோடி புண்ணியம் தெய்வமே! இம்மாதிரியாக எழுதுவது அனைவருக்கும் இறைவனின புண்ணியம் நிச்சயம் கிடைக்கும் தெய்வமே!
☆☆☆
பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஆனது அவர்களை காக்கும் என்றால் எனக்கு நீயே பலம் தெய்வமே! நீங்கள் மட்டுமே என்னை எதிலும் மங்க செய்யாமல் பலத்துடன் இருக்க செய்பவர் தெய்வமே! என் உடம்பு கூடு என்பதில் உயிர் நீயே! ஆப்பிள் பழம் போன்று மென்மையானவர் நீயே!
☆☆☆☆
அனைவரும் மிங்கிள் ஆகி வணங்க ஏதுவானவர் நீயே! என்னுடைய ஆன்மீகத்தில் ஆரம்ப புள்ளியும் நீயே! உன்னை விட்டு பிரிவதில் முடிவு இல்லா முற்று புள்ளியும் நீயே!
☆☆☆☆☆
எல்லாவற்றிலும் "சரபம்" நீயே! சர்வமும் நீயே! சத்குருவும் நீயே! என்னுடைய ஜீவஆத்மாவில் ஆத்ம சொரூபம் நீயே! என்னுடைய கெட்ட வர்ம புள்ளிகளை நீக்கிய வர்மா நீயே! நல்ல புனித கர்மத்தை மட்டும் செய்ய வைப்பவரும் நீயே!
☆☆☆☆☆☆
அமர்களமாக அருள் பாலிப்பவரும் நீ தான்! அமரன் ஆக்குபவரும் நீ தான்! விரதம் இருந்து பல பாவணைகளில் பக்தியோடு உன்னை அனுஷ்டித்து வணங்கினால் கெட்டதை விரட்டி அடித்து நமக்கான பல கடவுச்சொல்லை வழங்கும் எம் கடவுளே! தர்மத்தின் தலைவனே!
☆☆☆☆☆☆☆
உன்னை அடைகலம் ஆக எண்ணி தஞ்சம் புகுந்துவிட்டால் எதில் நலிவடைந்து விழுந்தாலும் சூர்யோதயம் போல சுடர் வீசி மீண்டும் எழுவது நடக்கிறது எம் கடவுளே!
☆☆☆☆☆☆☆☆
உன்னை வணங்காமல் இருப்பதில், உனக்கான அர்பணிப்பு என்பதில் தொடராமல் இருப்பதில் நான் ஒரு கஞ்சன்! உன்னை விட்டு வெகு சீக்கிரத்தில் விடுபடாமல் இருப்பதில் நான் ஒரு கஞ்சனே! உன்னை வியாபிக்காமல் இருப்பதில் நான் ஒரு கஞ்சனே! நாத்தீகம் பேசுவதில் நான் ஒரு கஞசன்!
☆☆☆☆☆☆☆☆☆
ராமனுக்கு ஆஞ்சநேயர் என்பது போல் நான் உனக்கு என்று ஆகும் முயற்சியை கைவிடுவதில் நான் ஒரு கஞ்சனே! அட ராமா என்னங்க இது என்று கூறும் அளவிற்கு உன் மேல் இருக்கும் பைத்தியத்தில் இருந்து தெளியாமல் இருப்பதில் நான் ஒரு கஞ்சனே!
☆☆☆☆☆☆☆☆☆☆
எத்தனை ஸ்வர்ண அணி கலன் இருந்தாலும் ருத்திராட்ச அணிகலனுக்கு இணை ஏதும் இல்லை இறைவா! வாத்திய நாதங்கள் முழங்க மேளம் கொட்ட, உனது சிவ நாமம் ஜெய நாமம் போல் ஒலிக்க உன்னை காணும் போது உடல் முதல் அனைத்தும் ஆன்மீகத்தில் சிலிர்க்கும் மற்றும் கூச்செரியும் இறைவா! இதனை பல முறை என்னுள் இந்த ஆன்மீக உணச்சியை உணர்ந்துள்ளேன் இறைவா!
1☆
முக்கனியில் எனக்கு பிடித்தது மாங்கனி ஏனென்றால் மாம்பழத்திலும் தத்துவத்தை உணர்த்தியதால் இறைவா! அறிவின் ஒளி விளக்கே! எங்கள் வினாயக பெருமானே! கணபதியே! கண நாதனே! உனக்கும் என் வணக்கம்.
1☆☆
வினா எழுப்பினால் வினைகள் அகலும். வினாயகரை வணங்கினால் முன் ஜென்ம வினைகள் அகலும். உன்னுடைய யானை முகம் எங்களுக்கு தேனை வார்க்கும் நம்பிக்கை முகம் ஆகும் இறைவா!
1☆☆☆
எனக்கான ராஜ போதை என்பது ஊற்றி பருகும் மது கிண்ணத்தில் அல்ல இறைவா! உங்களை பற்றி எழுதுவதில் தான் உள்ளது இறைவா!
1☆☆☆☆
எனக்கு உங்கள் மேல் பித்து பிடிக்க வைத்து என்னுடைய கெட்ட பித்தம் தெளிய வைத்தவர் நீயே! பெரிய படையே உங்கள் முன் நின்றாலும் தொடையை தட்டி மீசையை முறுக்காமல் எதிலும் வெற்றி கண்டவரே! உங்களுக்கு என் வணக்கம். எளியவர்கள் முதல் அனைவரும் உன்னுடைய தரிசனத்தை பெற அரச மரத்தடியில் வீற்றிருப்பரே கணேசா! உங்களுக்கு என் வணக்கம் மற்றும் நன்றி.
1☆☆☆☆☆
எதிலும் கவர்ச்சி இல்லாமல் கவர்ந்து இழுப்பவரே விக்னேஸ்வரா! உங்களுக்கு என் வணக்கம். உங்களை தொழுதால் மன அழுத்தம் தொலை தூரமே இறைவா!
1☆☆☆☆☆☆
கனரக வாகனம் போன்று கடுமையான மன சுமையுடன் கடிந்து கொண்டு இருக்கும் கடினமான வாழ்க்கை உன்னை தியானித்ததும் பூந்தென்றலாய் இலகுவாகி மனது செம்மையாக ஆவது ஓர் அதிசயமே இறைவா! "டிக் டிக்" என்று அனைத்து கெட்டதும் "கேட் பாஸ்" வாங்கி ஓட்டம் பிடித்து ஓடவும், வாழ்க்கையில் அனைத்தும் ஜெயம் என்ற "Tik Tik" அடிக்க உன்னுடைய கரத்தை பற்றி கரம் குவித்து வணங்கி உன் அருகில் "சீடன்" போல இருந்தாலே போதுமானது இறைவா!
1☆☆☆☆☆☆☆
எனக்கான "நரை" என்பது என்னுடைய பேச்சிலும், செயலில், சிந்தனையில் மட்டும் கொடுத்தவரே! உனக்கு என் கோடான கோடி நன்றி இறைவா! உங்கள் மீது எனக்குள்ள தாகம் என்றும் எதை ஊற்றினாலும் தணியாத மோக தாகம் ஆகும் இறைவா! உங்கள் மீது உள்ள மோகம் என்னை எத்தனை பாகமாக வெட்டி போட்டாலும் குறையாது இறைவா! எப்போகத்திலும் என்னோடு இருப்பவரே!
1☆☆☆☆☆☆☆☆
நான் இறந்தாலும் சிட்டாக பீனிக்ஸ் பறவை போன்று மறுபடியும் வந்து உங்களுடனே இருந்து விடுவேன் இறைவா! என்னுடைய ஸ்ரீ தேவியும் நீங்களே! என்னுடைய மூதேவியும் நீங்களே!
1☆☆☆☆☆☆☆☆☆
மூதேவி என்பவள் அனைத்தையும் இழந்து மூலையில் உட்கார வைப்பவள் அல்ல பக்தர்களே! மூளையை நாளைய எதிர்காலத்திற்கு தயார்படுத்த சிறிது நேரம் மூலையிலும், தூக்கத்திலும் வைத்திருப்பவள் பக்தர்களே! சோம்பேறி தனம் என்பது ஓடி கொண்டே இருப்பவர்களுக்கான ரெட் சிக்னல் ஆகும் பக்தர்களே! இந்த ரெட் சிக்னல் அவர்களுக்கான கிரீன் சிக்னல் ஆகும் பக்தர்களே! கடல் அலை ஓய்ந்தாலும் ஓயும்! ஆனால் நான் ஓதுவது மற்றும் உங்கள் மீது உள்ள பக்தியில் கன்னியம் பேணுவதில் ஓய மாட்டேன் இறைவா!
20
மகா ராணி கன்னிகையும் நாணி தலை குனிந்து வேண்டி நிற்பது உன்னிடத்தில் தான்இறைவா! மஹா சக்கரவர்த்தியும் பல யோகங்களை பெற மஹா யாக குண்டம் வளர்த்தி வத்தி மற்றும் சாம்பிராணி, கற்பூரம் ஏற்றி கை கூப்பி நிற்பதும் உன்னிடத்தில் தான் இறைவா!
2☆
எனக்கான எல்லாவற்றிற்குமான சப்போர்ட்டும் நீயே! உன்னிடமிருந்து தொலைந்து போவது என்பது இல்லாமல் அதோடு நானும் உன்னை தொலைக்காமல் இருப்பதே நீ கொடுத்த வரம் ஆகும் பகவானே! அதற்கு என் நன்றி.
2☆☆
நான் மோதுவதில் பிடித்தது உன்னை பிரிய சொல்பவர்களிடம் மோதுவது தான் பகவானே! ஆர்வமோடு நாள் கணக்கில் தினமும் பல்வேறு கருத்து மோதல்களில் ஈடுபட்டாலும் உன்னை பற்றிய கருத்து மோதல்களில் கலந்து கொண்டு பங்கேற்பது தனி சுகமே, ஆனந்தமே, இன்பமே பகவானே!
2★★★
பஞ்சவர்ண கிளி போல் பல யுகங்களில் பல அவதாரங்கள் எடுத்தவர் நீங்களே! இந்த கட்டுரையின் பத்திகளின் நாயகனும், சப்ஜெக்ட்டும் நீயே! உங்களை தொடர ஆரம்பித்ததும் தொடர்வண்டி போல உங்களையே தொடர வேண்டும் என்கிற ஆசையே மேலோங்குகிறது பகவானே! விளையும் பயிர் முளையிலேயே தெரியும். அது போலவே உங்களை தரிசனம் செய்ததுமே கதிர் அருவாள் கதிர்களை அறுப்பது போல் நம்முள் இருக்கும் கெட்டதை அறுத்து நல்ல கதிர் வீச்சு என்பதை நம்முள் செலுத்துகிறது பகவானே! அது பல ஆலயத்தில் பலர் உணர்ந்திருக்க முடியும் பகவானே! அதாவது ஒரு விதமான தற்சமய மன அமைதி பகவானே!
2☆☆☆☆
எந்த அலைச்சலும், மன உலைச்சலும் இல்லாமல் அலைகடலென கிடைக்கும் தங்களின் அன்பிற்கு என்றைக்கும் நானொரு அடிமையே! உங்களை துதித்தால் என்றைக்கும் எங்களுக்கு துர்க்கம் கிடையவே கிடையாது பகவானே!
2☆☆☆☆☆
ஏழரை சனி என்பதை பனி மூட்டம் போல அப்படியே படர்வது போல் ஆனால் படராமல் செய்பவரே! உனக்கு என் வணக்கம். சனி பெயர்ச்சியில் எனக்கு பாதகம் என்பது பெயருக்கு மட்டும் வந்து ஆனால் வராமல் போவது போல் மற்றும் என் எதிரிக்கு மட்டுமே பாதகத்தை கொடுத்து பல சாதகங்களை எனக்கு அளித்து என்னை ஆள் ஆக்குபவரே! உனக்கு என் வணக்கம்.
2☆☆☆☆☆☆
சனி என்பவர் அனுபவத்தை கொடுக்கும் நல்லவர் ஆவார் பக்தர்களே! நாம் எதிர்காலத்தில் எதிலும் வீழாமல் இருக்க இன்று நமக்கு அருள் பாலிக்கும் கடவுள் அவர் பக்தர்களே! அவருடன் என் இறைவனின் நாமமும் கலந்திருப்பதால் என்னை எந்த கலக்கமும் அடைய செய்யாமல், அதோடு எதிலும் கலகம் இல்லாமல் காக்கும் சனி பகவானே! உனக்கும் என் வணக்கம் மற்றும் நன்றிகள் பகவானே!
2☆☆☆☆☆☆☆
ஐம்புலன்களையும் ஒடுக்கி என் மன கதவை திறந்து அனைத்தையும் புலப்பட வைத்த ஈஸ்வர தெய்வமே உனக்கு என் வணக்கம். என்னை கவிஞன் போல கவிதை நடையில் ஓரளவிற்கு எழுத முற்பட வைத்தவனும் நீயே! அதனால் உனக்கு என் இதயம் கனிந்த நன்றி!
2☆☆☆☆☆☆☆☆
என் உடம்பில் இருக்கும் உறுப்புகள் உனக்காக துடிப்பதில், கிரிவலம் என்பதில் நடப்பதில் எனக்கு பேரின்பமே இறைவா! அதற்கு என் நன்றி இறைவா! பல சிஷ்ய பிள்ளைகள் உனக்கு இருந்தாலும் அதில் நானும் ஒருவனாக இருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே இறைவா! அதற்கு என் நன்றி இறைவா!
2☆☆☆☆☆☆☆☆☆
நீ வீற்றிருக்கும் கோயிலை கண்டாலும் உன்னுடைய விருப்பம் இல்லாமல் வணங்க முடியாது இறைவா! அதனால் தான் பலர் அப்படியே செல்கின்றனர் இறைவா! ஆனால் எனக்கு அந்த பாக்கியத்தை கொடுத்தமைக்கு நன்றி இறைவா!
30
தற்காலிக அற்ப சுகத்திற்காக அலைந்து பொட்டியில் அடைபட்டது போல் அதிலேயே இருப்பதில் எதுவும் இல்லை இறைவா! நிரந்தர சுகம் ஆனது வானம் போன்று பரந்து விரிந்தது போல் உள்ளது இறைவா! இதிலிருந்து விடுபட்டு அதனை அடைய உன்னையே அடைகலமாக அடைந்தாலே அது போதுமானது இறைவா!
3☆
உன் சிலை வழிபாட்டிற்கும், உனக்கான அர்ச்சனைக்கும், அபிஷேகத்திற்கும் எந்த விலையும் யாரும் நிர்ணயிக்க முடியாது இறைவா! அதனை காண கண் கோடி வேண்டும் இறைவா! அதனால் தான் கோடிகள் பலரிடம் புரண்டாலும் ஏதோ ஒன்று இல்லாதது போலவே சிலர் இருக்கின்றனர் இறைவா!
3☆☆
உறுதி என்பது உன்னை பற்றுவதில் இருந்தால் இறுதி வரை எனக்கு எந்த துன்பமும் இல்லை இறைவா! சோர்வோடு இருக்கும் உறுப்புகள் உன்னை கண்டால் ஏதோ ஓர் மகிழ்ச்சி இறைவா! அதோடு உனக்காக என்றால் எதுவும் சோர்வடைய மறுக்கிறது இறைவா!
3☆☆☆
ஆனந்தம் என்பதே உன் புகழை கூறுவதும், உன் நாமத்தை உச்சரிப்பதிலும், உன் பாடல்களை பாடுவதிலும், பக்தி பரவசத்தில் இருப்பதிலுமே இருக்கிறது இறைவா! இந்த சூட்சுமம் தெரிந்த பக்த கோடிகள் இன்பமாக இருக்கிறார்கள் இறைவா!
3☆☆☆☆
காசு, பணம் என்பதை உனக்கு உபயமாக கொடுப்பதை விட இந்த இறை பணி எனக்கு மிகவும் பிடித்துள்ள மகத்துவமான பணியாக நான் கருதுகிறேன் இறைவா!
3☆☆☆☆☆
உன் சேவடியே சரணம் என்று தன்னையே உட்படுத்தி அர்பணித்தவர்களுக்கு மற்றும் முருகனுக்கு காவடி சுமப்பது போல் என்றைக்கும் உன்னை மனதில் நிறுத்தி சுமப்பவருக்கு தடைகள் என்ற எந்த நிறுத்தமும் கிடையாது இறைவா! அதோடு ஒரு குறையும் நேராது இறைவா!
3☆☆☆☆☆☆
என் குருவாகிய உனக்கு மேலும் ஓர் குரு காணிக்கையாக உன் திருபாதம் என்பதில் இந்த கட்டுரையை சமர்பிக்கிறேன் இறைவா!
இதோ கட்டுரை நீ அக்னி சொரூபமாக இங்கு வீற்றிருந்து பக்தர்களின் கெட்ட குணத்தை சாம்பலாக்கி பக்தர்களுக்கு திருகார்த்திகை தீபத்தன்று அகல் விளக்கில் தீபச் சுடராக பேரொளியாய் மின்னி காக்க காக்க என்று அகிலத்தில் பக்தர்களை என்றென்றும் காக்கும் அண்ணாமலையில் வீற்றிருக்கும் "அருணாசலேஸ்வரருக்கு அரோகரா" [Devotional Light Function]:-
ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம
இது அனைத்தும்
பலவற்றிலிருந்து தொகுக்கபட்ட ஒன்றாகும். இது உண்மையா, பொய்யா என்பதை இது சம்பந்தபட்டவர்களிடம் கேட்டு விளக்கம்
பெற்று கொள்ளுங்கள்.
அண்ணாமலையார் அல்
லிங்கோத்வர் தல வரலாற்று தொகுப்பு:-
திருவண்ணாமலையிலுள்ள
மலையானது 260 கோடி ஆண்டுகள் பழமையானது என டாக்டர் பீர்பால் சகானி
என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். சைவர்களின்
நம்பிக்கைப் படி இம்மலையானது கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், தற்போது நடைபெறும் கலி யுகத்தில் கல் மலையாகவும்
இருக்கிறது.
பால் பிரண்டன்
எனும் ஆய்வாளார் மெசேஜ் பிரம் அருணாச்சலா எனும் நூலில் "லெமூரியா கண்டத்தின்
எஞ்சிய பகுதி திருவண்ணாமலை" எனக் கூறியுள்ளார்.
படைக்கும் கடவுளாகிய பிரம்மாவும் காக்கும் கடவுளாகிய திருமாலும், தங்களில் யார் பெரியவரென பூசலெழ, நடுவில் ஒளிப்பிழம்பு தோன்ற, அந்த ஒளிப்பிழம்பின் அடியையும், முடியையும் யார் கண்டு முதலில் வருகின்றனரோ, அவரே நம்மில் பெரியவர் எனக் கூறினர். இதனால் திருமால், வராக ( பன்றி) அவதாரம் எடுத்து, அடியைக்காண பூமியைக் குடைந்து சென்றும், அடியைக் கண்டறிய இயலவில்லை. அன்ன வடிவமெடுத்து முடியைக் காணப் புறப்பட்ட பிரம்மா, தாழம்பூ கீழே வருவதைக் கண்டு, அதனிடம் இந்த நெருப்புப் பிழம்பு யாதென வினவ, அதற்கு இது சிவனாரெனவும், நான் அவரின் சடையிலிருந்து நழுவி நாற்பதாயிரம் ஆண்டுகளாக கீழ் நோக்கி வந்து கொண்டு இருக்கிறேன் என்றும் கூற, பிரம்மன் முடியைக் காணும் முயற்சியை விடுத்து, தாழம்பூவிடம், நெருப்புப்பிழம்பான இந்த சிவனின் முடியை நான் கண்டேனென, திருமாலிடம் பொய் சொல்லும்படி கேட்க, அதன்படியே தாழம்பூவும் கூறியது. தன்னால் கண்டறிய இயலவில்லையென பிரம்மரிடம் கூறிய திருமாலிடம், நீ எனக்கு ஒரு குழந்தைக்கு ஒப்பானவனெனக் கூறி எள்ளி நகையாட, இதனால் ருத்திரமுற்ற சிவன், பிரம்மரிடம், பத்ம கற்பத்தில் நீ திருமாலின் உந்தி கமலத்தில் பிறப்பாயெனவும், உனக்கு புவியில் தனி ஆலயம் அமையாது எனவும், பொய்சாட்சி கூறிய தாழம்பூவிடம், நீ இனி எனது வழிபாட்டில் பயன்படமாட்டாயெனவும் உரைத்தார். தன் தவறினை உணர்ந்து மன்னிப்பு கேட்ட தாழம்பூவிடம், நான் எனது பக்தைக்காக புவியில் குழந்தையாக அவதரித்த உத்திர கோசமங்கை எனும் திருத்தலத்தில் மட்டுமே பயன்படுவாயெனவும் உரைத்தார். பிரம்மர் தன்னிடம் மன்னிப்பு கேட்டதால், அவருக்கு வழிபாடு நிகழ்வதற்காகவும், திருமாலால் தனது அடியை கண்டறிய இயலாததால், திருமாலை சிறியவரென உரைப்பார்களென்பதால், கருணாமூர்த்தியான சிவன், உடனே நாம் மூவரும் ஒருங்கிணைந்து, சிவலிங்கமாகலாமென உரைத்தார். அதன்படியே அடிப்பாகம் பிரம்மராகவும், நடுப்பாகம் திருமாலாகவும், மேல்பாகம் சிவனாகவும் மாறி வேதங்கள் புகழும் சிவலிங்கம் தோன்றிய நாளே மகா சிவராத்திரி நாளாகும்.
24 ஏக்கர் பரப்பளவு 6 பிரகாரஙகள் 9 ராஜகோபுரங்கள் கொண்ட கோயிலாகும். இக்கோயில்
மலையடிவாரத்தில் இருப்பது சிறப்பு. இச்சிவாலயத்தில் 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்களைக் கொண்ட
ஆயிரங்கால் மண்டபம், அதன் அருகே பாதள லிங்கம், 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்பம், அண்ணாமலையார் பாத மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன.
கோபுரங்கள்:-
அண்ணாமலையார்
கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. அவைகளில் ராஜ கோபுரம், பேகோபுரம், அம்மணியம்மன்
கோபுரம், திருமஞ்சன கோபுரம், கிளி கோபுரம், வல்லாள மகாராஜா கோபுரம் ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும்.
தெற்கு கட்டை கோபுரம், வடக்கு கட்டை கோபுரம், மேற்கு கட்டை
கோபுரம் ஆகிய கோபுரங்கள் உள்ளன.
மண்டபங்கள்:-
இச்சிவாலயத்தில் 306 மண்டபங்கள் உள்ளன. அவற்றில் ஆயிரம் கால் மண்டபம், தீப தரிசன மண்டபம், 16 கால் மண்டபம், புரவி மண்டபம், ஏழாம் திருநாள்
மண்டபம் ஆகியவை உள்ளன.
சந்நதிகள்:-
சிவபெருமான்
இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். இத்தலத்தில் உள்ள மலையே சிவலிங்கம் என்பது
நம்பிக்கை. அம்மன் உண்ணாமலையம்மை ஆவார். முருகன், விநாயகர், அர்த்தநாரீசுவரர், பெருமாள், பைரவர், பிரம்மலிங்கம், பாதாளலிங்கம் ஆகிய சன்னதிகள் உள்ளன.
திருவண்ணாமலையில்
மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. எனவே கோயிலில் இறைவனை வலம் வருதலைப் போல மலையை
வலம் வரும் வழமை இங்குள்ளது. மலையைச் சுற்றிவர இரு வழிகள் உள்ளன. மலையை ஒட்டிச்
செல்லும் வழியில் பாறைகள், முட்கள் மிகுந்த கடின பாதையாக அமைந்துள்ளது.
மலையைச்
சுற்றியுள்ள பாதை ஜடாவர்ம விக்கிரம பாண்டியனால் கி.பி 1240ல் திருப்பணி செய்யப்பட்டது.
பொதுவாக மக்கள்
வலம் வரும் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், வருண லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்களும், ரமணமகரிசி, சேசாத்திரி
சுவாமிகள், விசிறி சாமியார் போன்றோர் சமாதிகள் அமைந்துள்ளன.
எல்லா நாட்களிலும்
மலையை மக்கள் வலம் வருகிறார்கள் என்றாலும் முழு நிலவு நாளில் வலம் வருதல் சிறப்பாக
கருதப்படுகிறது.
இம்மலையானது
யுகங்களின் அழிவுகளிலும் அழியாமல் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே கிருதா
யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில்
மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறியிருப்பதாக
நம்பப்படுகிறது.
எட்டு திக்கிலும்
அஷ்டலிங்கங்களைக் கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் காணப்படுகிறது.
அஷ்டலிங்கங்கள் எனப்படுபவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் , வருண லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம். தேவாரத்தில்
புகழப்படும் ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலை வலப்பாதையில்தான் அமைந்துள்ளது. இந்த
மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. இம்மலையில் இன்றும் பல
சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு.
மலையை வலம்
வரும்போது மனிதர்கள் இடப்பக்கம் நடக்க வேண்டும், ஏனென்றால் மலையை
ஒட்டியுள்ள வலப்பக்கம் சித்தர்களும், யோகிகளும், தேவர்களும் வலம் வருவதாக ஐதீகம். கிரிவலம் செல்லும்போது
பஞ்சாச்சர நாமத்தையோ( நமசிவாய, சிவாயநம) அல்லது
திருமுறைகளையோ ( தேவாரம், திருவாசம்......) உச்சரிக்க வேண்டும் , அதைத் தவிர்த்து வேறு எதையும் பேசக்கூடாது. கிரிவலம்
செல்லும்போது நிதானமாக நடக்க வேண்டும், அவசரமாகவோ, வேகமாகவோ அல்லது மற்றவர்களை இடித்துக் கொண்டோ செல்லக்
கூடாது.
கார்த்திகை தீப
நாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா அண்ணாமலையார் கோவிலில்
நடைபெறுகிறது. இதில் பத்து நாட்கள் உற்றவர்களின் ஊர்வலங்களும், மூன்று நாள்
தெப்ப திருவிழாவும் அதனையடுத்து சண்டிகேசுவர் உற்சவமும் நடைபெறுகிறது.
சிவன் கார்த்திகை
மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார்.
இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார்
சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம்
மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூசைசெய்வர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி
அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, ‘ஏகன் அநேகனாகி
அநேகன் ஏகனாகுதல்’ தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின்
உட்கருத்தாகும்.
பரணி தீபம்:-
பத்தாம் நாள்
அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர்
கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை
தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு
ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல்
விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.
பரணி தீபம்
ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுகதீபம் ஏற்றப்படுகிறது. பரணி
தீபத்தினை இறுதியாக பைரவர் சன்னதியில் வைக்கின்றனர்.
மகாதீபம்:-
மகா தீபம்
கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது.
இம்மலை 2,668 அடி உயரமானதாகும்.
மாலை நேரத்தில்
பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து
வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சிதருகின்ற அர்த்தநாரீசுவரர் உற்வச கோலம்
தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது.
இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம்
ஏற்றப்படுகிறது.
இந்த
மகாதீபத்தினை பக்தர்கள் மலையின் மீது ஏறிப் பார்க்கின்றனர்.
சிவகங்கை
தீர்த்தம்
பிரம்ம தீர்த்தம்
பாடல் பெற்ற
தலம்:-
திருமுறைப் பாடல்
பெற்ற 275 திருத்தலங்கள் (சிவன் கோயில்கள்) திருமுறைத்தலங்கள்
எனப் போற்றப்படுகின்றன. இவற்றில் 22 திருத்தலங்கள்
நடுநாட்டில் (தமிழ்நாட்டின் ஒரு பகுதி) அமைந்துள்ளன. இந்த 22 தலங்களில் மிகவும் சிறப்புடையது திருவண்ணாமலை ஆகும்.
நாயன்மார்கள்:-
திருஞான
சம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
முதலானோர் அண்ணாமலையாரை வந்து தரிசித்து பதிகங்கள் பாடியுள்ளார்கள். மாணிக்கவாசகர்
திருவண்ணாமலைக்கு வந்து பலகாலம் தங்கியிருந்து (வைணவத்தில் மார்கழி மாதத்திற்கு
திருப்பாவை இருப்பது போல) சைவத்திற்கு மார்கழியில் "திருவெம்பாவை" (20) பாடல்களையும், திருவம்மானை
பதிகங்களையும் இயற்றி உள்ளார். கிரிவலப்பாதையில் அடியண்ணாமலை என்னும் இடத்தில்
மாணிக்கவாசகருக்கு ஒரு கோயில் இருப்பதை இன்றும் காணலாம்.
செல்வராலும்
அறிஞராலும் அறியொணாத இறைவன் பின்னர் யாருக்கு எளியவனாகத் தன் உருவைக் காட்டுகிறான்
என்றால், காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கும்
பக்தர்களுக்குத்தான். பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய மாணிக்கவாசகர், அண்ணாமலையில் அந்தப் பொங்கழல் உருவமான அண்ணாமலையானை
கண்டபோது 'ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ்சோதி' என்ற தன் திருவெம்பாவைப் பாடலை ஆரம்பிக்கிறார். பத்தொன்பது
பாட்டுப்பாடி முடிந்ததும் ஆதியாகிய முடி எங்கேயிருக்கிறது, அந்த மாகிய அடி எங்கே இருக்கிறது என்று கண்டுவிடுகிறார்.
இறைவன் காண்பதற்கு எளியவனாக அமைந்து விடுகிறான்.
ஆதியாம் பாதமலர், அந்தமாம் செந்தளிர்கள் என்றுதானே, திருவெம்பாவை இருபதாம் பாட்டு கூறுகிறது. ஆம், இறைவனது அடியும் முடியும் அவனது திருத்தாள்களே என்ற
உண்மையைப் பக்தனானவன் எவ்வளவு எளிதாகக் கண்டு விடுகிறான். மகாவிஷ்ணு வையும்
பிரம்மாவையுமே மண்ணைக் கவ்வ வைத்துவிடுகிறானே அவன், 'விண்ணிறைந்து மண்
நிறைந்து மிக்காய் விளக்கொளியாய் எண்ணிறந்து எல்லை இலாதானாக' இருக்கும் இறைவனை எவ்வளவு எளிதாகச் சுட்டிக்காட்ட
முடிகிறது. இத்தனை அரிய உண்மைகளை விளக்கிக்கொண்டு நிற்கின்ற மலைதான் திரு
அண்ணாமலை. அந்த மலையின் அடிவாரத்திலே கோயில் கொண்டிருக்கிறவர்தான் அண்ணாமலையார்.
அண்ணாமலையை
நினைக்கின்ற போதெல்லாம், இல்லை அண்ணாமலையானைக் கண்டு தொழுகின்ற போதெல்லாம் இறை
வழிபாடு உலகத்தில் எப்படித் தோன்றிற்று, என்ற உண்மையுமே
விளக்கமுறும். மனிதனுக்கு உண்ண உணவும் உடுக்க உடையும் எவ்வளவு அவசியமோ அவ்வளவு
அவசியம் அவன் வாழ்வதற்கு ஒளியும் என்று அறிகிறோம். சூரியன் இல்லாத பகலும், சந்திரன் இல்லாத இரவும், நட்சத்திரங்கள்
இல்லாத வானும் இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்ப்போம்.
இறைவனது
படைப்புகளில் எல்லாம் சிறந்த படைப்பு ஞாயிறுதானே. அதனிடமிருந்து எழுகின்ற ஒளியும்
வெம்மையும் இல்லாவிட்டால் உலகமும் உயிர்களும் உய்வதேது? ஆதலால் சிந்திக்கத் தெரிந்த மனிதன் ஞாயிறையே, ஞாயிறு மூலமாக அதனை உலகுக்குத் தந்த இறைவனையே வந்தித்து
வணங்க முற்பட்டிருக்கிறான். இப்படித்தான் எல்லாச் சமயத்தாரிடத்தும் இறை வழிபாடு
ஒளி வழிபாடாகவே உரு எடுத்திருக்கிறது. இருள் போக்கும் தன்மையோடு, மருள் நீக்கும் தூய்மையும்,ஆக்கி,காத்து அழிக்கும் தன்மையும், அருவாய், உருவாய், அருவுருவாய்
இயங்கும் இயல்பும், பஞ்ச பூதங்களில் ஒன்றான தீயினிடத்தே தான்
மிகுந்திருக்கின்றன. இப்படி அக்கினியின் இயல்பும் இறைவன் இயல்பும் இணைந்
திருப்பதன் காரணமாக ஒளி வழிபாடே தீ வழிபாடாக பரிணமித்திருக்கிறது.
'இறைவனை ஞானச் சுடர் விளக்காய் நின்றவன் என்று அப்பர்
பாடினால், ஆதி அந்தம் ஆயினாய், சோதியுள் ஓர்
சோதியானாய் என்று சம்பந்தர் வழிபடுகிறார். சோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே என்று மாணிக்கவாசகரும், தூண்டா விளக்கின் நற்சோதி என்று சுந்தரரும் இறைவனை
அழைத்தால், கற்பனை கடந்த சோதி, கருணையே உருவமாக
நிற்கிறான் என்று சேக்கிழார் பாடிப் பரவி மகிழ்கிறார். பயிலும் சுடர் ஒளி மூர்த்தி
பங்கயக்கண்ணன் என்று நம்மாழ்வார் பாற்கடல் சேர்ந்த பரமனைக் குறித்தால், திருத்தக்கத்தேவர் சுடரிற் சுடரும் திருமூர்த்தி என்றே
பாடுவார். இப்படியே அடியார்களும் கவிஞர்களும் இறைவனைப் பொங்கழல் உருவனாகவே
காண்கிறார்கள். இந்த அனல் வழிபாடே பின்னர் திருவிளக்கு வழிபாடாக மக்களிடையே
இன்றும் நிலைத்திருக்கிறது.
நூல்கள்:-
இத்தலத்தில்
திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல
அஷ்டகம் நூல்கள் இயற்றப்பட்டுள்ளன.
சைவ எல்லப்ப
நாவலர் எழுதிய அருணாசல புராணம், அருணைக் கலம்பகம்
குருநமச்சிவாயர்
எழுதிய அண்ணாமலை வெண்பா
தேவாரம், திருவாசகம், பதினொராந்திருமுறை, பெரியபுராணம், கந்தபுராணம், திருப்புகழ், சோனசைலமாலை, திருவருணைக்கலம்பகம், அருணாசல புராணம், அருணாசல மகாத்மிய வசனம், அருணகிரி அந்தாதி, அண்ணாமலை வெண்பா, திருவருணை
அந்தாதி, அண்ணாமலை சகதம், சாரப்பிரபந்தம், கார்த்திகை தீப வெண்பா, சோணாசல வெண்பா, சோணாசல சதகம், திருவருணைக்கலிவெண்பா, திருவருட்பதிகம், அருணாசலேசுவரர்
பதிகம் -1, அருணாசலேசுவரர் பதிகம் - 2, உண்ணாமுலையம்மன் சதகம், அருணாசலேசர்
நவகாரிகை மாலை, உண்ணாமுலையம்மன் வருகைப்பதிகம், அருணாசல சதகம், அருணாசல
அட்சரமாலை, அண்ணாமலையார் வண்ணம், திருவண்ணாமலைப்
பதிகங்கள், அண்ணாமலைப் பஞ்ச ரத்னம், திருவருணைத் தனி வெண்பா, அட்சரப் பாமாலை, அருணாச்சலேசுவரர் உயிர் வருக்கம் படைத்தற் பாமாலை, அருணசல அட்சரமாலை, அருணாசலநவ
மணிமாலை, அருணாசல பதிகம், அருணாசல அஷ்டகம், அருணாசல பஞ்சபத்தனம் ஆகியவை இச்சிவாலயத்தின் புகழைப்
பாடுகின்ற நூல்களாகும்.
ஞானிகளும் துறவிகளும்:-
இத்தலம்
சித்தர்களின் சரணாலயமாகவும் விளங்குகிறது. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான
இடைக்காட்டுச் சித்தர் இத்தலத்திற்கு உரியவராக விளங்குகிறார்.
அண்ணாமலை
சுவாமிகள்,அப்பைய தீட்சிதர்,அம்மணி அம்மாள்,அருணகிரிநாதர்,அழகானந்த அடிகள்,ஆதி சிவ பிரகாச சாமிகள்,இசக்கி சாமியார்,இடைக்காட்டுச் சித்தர்,இரமண மகரிசி,இறை சுவாமிகள்,ஈசான்ய
ஞானதேசிகர்,கண்ணாடி சாமியார்,காவ்யகண்ட கணபதி
சாத்திரி,குகை நமச்சிவாயர்,குரு
நமச்சிவாயர்,குருசாமி பண்டாரம்,சடைச் சாமிகள்,சடைச்சி அம்மாள்,சற்குரு
சுவாமிகள்,சேசாத்திரி சாமிகள்,சைவ எல்லாப்ப
நாவலர்,சோணாசலத் தேவர்,ஞான தேசிகர்,தட்சிணாமூர்த்தி சாமிகள்,தம்பிரான்
சுவாமிகள்,தெய்வசிகாமணி சித்தர்,பத்ராச்சல
சுவாமி,பழனி சுவாமிகள்,பாணி பத்தர்,மங்கையர்கரசியார்,ராதாபாய் அம்மை,வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்,விசிறி சாமியார்,விருபாட்சி
முனிவர்,வீரவைராக்கிய மூர்த்தி சாமிகள் ,ஶ்ரீலஶ்ரீ இராஜ யோகி மூக்குப்பொடிச் சித்தர் ஆகிய
சித்தர்கள் அண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்களாவார்கள். இவர்களில் பலர்
அண்ணாமலையிலேயே ஜீவசமாதி அடைந்துள்ளார்கள். சில சித்தர்களின் ஆசிரமம் திருவண்ணமலை
கிரிவலப்பாதையில் அமைந்துள்ளது.
தற்போதும்
பல்வேறு சித்தர்கள் திருவண்ணாமலையில் வாழ்ந்து வருவதாக சைவர்கள் நம்புகிறார்கள்.
தல சிறப்பு:-
இத்தலம் பஞ்சபூத
தலங்களில் அக்னித் தலமாகும்.
நினைத்தாலே
முக்தி தலமென சிவபுராணம் குறிப்படுகிறது.
காமதகனம் நிகழ்வு
இத்தலத்தில் மட்டுமே நடைபெறுகிறது.
ஆடிப்பூரத்தன்று
மாலையில் உண்ணாமுலையம்மன் சந்நிதி முன் தீமிதி திருவிழா நடைபெறுகிறது. இவ்வாறு
தீமிதி திருவிழா நடைபெறும் சிவாலயம் இதுவே.
அருணகிரி
நாதருக்கு விழா எடுக்கப்படுகிறது.
வழிபாடு:-
இக்கோவிலில்
ஆறுகால பூசை தினமும் நடைபெறுகிறது. பஞ்ச பருவ பூசைகளும், சுக்ரவாரம் மற்றும் சோமவார பூசைகளும் நடைபெறுகின்றன. பஞ்ச
பருவ பூசைகள் என்று அழைக்கப்படுபவை, அமாவாசை, கிருத்திகை, பிரதோசம், பௌர்ணமி, சதுர்த்தி
பூசைகளாகும்.
கரும்புத்
தொட்டில்:-
குழந்தையில்லாதவர்
திருவண்ணாமலையை கிரிவலம் வந்து தங்களுக்கு குழந்தை பிறக்க அண்ணாமலையை
வேண்டுகின்றார்கள். அவ்வாறு குழந்தை பிறந்தால் கரும்புத் தொட்டிலினை இட்டு
மீண்டும் கிரிவலம் வந்து வேண்டிக் கொள்கின்றார்கள். இவ்வாறு கரும்புத்
தொட்டியலிடுவது இக்கோவிலின் முக்கிய நேர்த்திக் கடன்களில் ஒன்றாகும்.
பலரும்
அறிந்திராத ஆதார தகவல்கள் அடங்கிய தொகுப்பு:-
தி இல்லஸ்டிரேடட்
வீக்லி ஆப் இந்தியா [8.8.1978]:-
வாடிகன்
நகரத்தில் உள்ளது பாண்டிபிகோ மியூசியம். இங்கு, கிரீடம் மற்றும்
பாம்பு அணிகளுடன் பஞ்சமுக லிங்கம் ஒன்றும் காணப்படுகிறது.
இத்தாலியின்
வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில், கி.மு.8 முதல் 4- ஆம் நூற்றாண்டு
வரை வாழ்ந்திருந்த எட்ரூஸ் கர் காலத்தில் இத்தகைய லிங்கங்கள் வழிபாட்டில்
இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக் கின்றனர். இந்த வடிவத்தை அவர்கள் ஐஸ்
(ஈஸ்) அல்லது ஐச்வர் ( AISWAR ) என்று அழைத்தனராம். இந்திய வரலாற்று அறிஞர் டாக்டர்
பி.என்.ஓக் என்பவர், இதனை ஈச்வரன் என்றும், இந்த வடிவம்
சிவலிங்கமே என்றும் உறுதியாகக் கூறுகிறார்.
இந்தியர்களுக்கும்
எட்ரூஸ்கன் (ணிஜிஸிஹிஷிசிகிழிஷி) மக்களுக்கும் வியாபாரத் தொடர்பு இருந்தபோது, அங்கு சிவலிங்க வழிபாடு ஏற்பட்டிருக்கலாம் என்று
குறிப்பிடும் தொல்பொருள் ஆய்வுத்துறையினர், இந்திய- ரோமானிய
வர்த்தகம் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்ததை உறுதி செய்கிறார்கள்.
வாடிகனில்
கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் Gregorian Etruscanmuseum of
the Vatican city- யில் வைக்கப் பட்டுள்ளது .
வாடிகனில் உள்ள
பீட்டர்ஸ் தேவாலய முற்றம் சிவ லிங்க வடிவில் அமைந்துள்ளதை இப்படத்தின் மூலமாக
காணலாம்
போக்குவரத்து:-
இத்திருத்தலம்
விழுப்புரம் காட்பாடி ரயில் மார்கத்தில் விழுப்புரத்திலிருந்து 65 கி.மீ, தூரத்திலும்
காட்பாடியிலிருந்து 90 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து
வந்து செல்வதற்கு பேருந்து வசதிகளை இத்திருத்தலம் கொண்டுள்ளது. ஒரு வழித்தடம்
செங்கல்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம், செஞ்சி வழியாகவும் மற்றொறு வழித்தடம் திருபெரும்புதூர், காஞ்சிபுரம், ஆற்காடு, ஆரணி, போளூர்
வழியாகவும் செல்லலாம்.
இத்திருத்தலம் வேலூரிலிருந்து
70 கி.மீ. தொலைவிலும், திண்டிவனத்திலிருந்து
60 கி.மீ. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து
60 கி.மீ. தொலைவிலும், கிருட்டிணகிரியிலிருந்து
100 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
சேவார்த்திகளின்
வசதிக்காக குறைந்த வாடகையில் தங்குமிடங்களை திருக்கோயில் நிர்வாகம் ஏற்படுத்தித்
தந்துள்ளது. இதைத்தவிர தனியாருக்குச் சொந்தமான விடுதிகளும் திருக்கோயிலைச்சுற்றி
உள்ளன.
மேற்கண்டவை கூட
இதையும் தெரிஞ்சிக்கோங்க கிறிஸ்துவர்களே, முஸ்லீம்களே மற்றும் அனைத்து மக்களே:-
A) கிறிஸ்துவ மதம் (இயேசு கிறிஸ்து):-
இதில் இரு பிரிவு
இருக்கிறது தேவன் வழிபாடு (பைபிள்) மற்றும் சாத்தன் வழிபாடு (கருப்பு பைபிள்).
i) Church Of Satan என்னும் சாத்தானிய திருஅவை. இது
அமெரிக்காவின் அங்கீகாரம் பெற்ற மதம்.
சாத்தானிய
திருஅவையும் தனக்கென கொள்கைகள், கோட்பாடுகள், சட்டங்கள், வழிபாட்டு
முறைகள், புனித நூல் ஆகியவற்றை கொண்டுள்ளது. இது
கிறித்தவத்திற்கு எதிராக சாத்தானைவழிபட உருவாக்கப்பட்டது என்பதே சாதாரண மனிதனின்
பார்வை.
தோற்றம்:-
ஏப்ரல், 13, 1966 ல் சன் ஃபிரன்சிகோவில் உள்ள கறுப்பு வீட்டில் Black House ஆரம்பிக்கப்பட்டது. (அந்த வீடு முழுவதும் கறுப்பு வண்ணம்
பூசப்பட்டிருக்கும் அதான் கறுப்பு வீடு)
புனித நூல் (Satanic Bible):-
சாத்தானிய
திருஅவையின் நம்பிக்கைகள் என நாம் பொதுவாக நம்புவவை உண்மையே அல்ல. லாவேயின்
கருத்துப்படி சாத்தான் என்பது தற்பெருமை, கோபம், காமம் போன்ற இயற்கை உணர்ச்சிகளின் அடையாளமே. இயற்கை
உணர்ச்சிகளை பாவம் என்று சொல்லும் ஆபிரகாம் வழிவந்த மதங்களை சாத்தானிய திருஅவை
மறுக்கிறது.
சாத்தானை கடவுளாக
இல்லாமல் ஓர் இயற்கையின் ஆற்றலாக பார்க்கிறார்கள். லூசிபரை ஓர்
புரட்சியாளனாக காண்கிறார்கள். இதில் நரபலிகள்
கொடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவர்கள் 666 என்ற எண்ணை பயன்படுத்துகிறார்கள்.
இவர்கள் வாழ்க்கை
முறை இயற்கை தூண்டல்களை பாவம் என ஒதுக்குவதில்லை. மிகவும் சுதந்திரமாக
வாழ்பவர்கள்.
சடங்குகள்:-
சாத்தானிய
அவையில் அதன் உறுப்பினர்களுக்கு திருமுழுக்கு, திருமணம் மற்றும்
இறப்பு சடங்குகள் வழங்கப்படுகின்றன. இவற்றை நிறைவேற்ற குருக்களை கொண்டுள்ளனர்.
கிறித்தவத்தில்
உள்ளது போன்ற திருப்பலியையும் Mass இவர்கள்
கொண்டாடுகிறார்கள். (இச்சடங்கு கிறித்தவத்திற்கு முந்தைய சமயங்களிலும் இருந்தது)
அதை தொடர்ந்து கலவியும் நடைபெறுகிறது.
மந்திரம்:-
இவர்கள் நம்
நாட்டு பில்லி, சூனியம், ஏவல்
ஆகியவற்றையும் பயன்படுத்துகிறார்கள். இதனை இவர்கள் பழைய மரபு மதங்களில் இருந்து
கற்றுக்கொண்டனர்.
தேவன் ஒருவனே, ஒரே கிறிஸ்துவ மதப் புத்தகம் பைபிள். உலகெங்கும் Jesus-ஐ வழிபடும் ஒரே மதம் கிறிஸ்துவம். ஆனால் இதில் பல பிரிவுகள் உள்ளது. அதோடு "லத்தீன் கத்தோலிக்" பிரிவைச் சேர்ந்த
கிறிஸ்தவர்கள் "சிரியன் கத்தோலிக்" பிரிவு தேவாலயத்துக்குள் செல்ல
மாட்டார்கள்.
இந்த இரண்டு
பிரிவினரும் "மார்த்தோமா" இன சர்ச்சுக்குள் செல்வதில்லை. இந்த மூவருமே "பெந்தகொஸ்தே" திருச்சபைக்குள்
நுழைய முடியாது. மேற்கண்ட நான்கு பிரிவினரும் "சால்வேஷன்
ஆர்மி" தேவாலயத்துக்குள் செல்ல முடியாது. இந்த ஐவரும்
"செவன்த்டே அட்வென்டிஸ்ட்" இன சர்சுக்குள் போக மாட்டார்கள். இவர்கள் ஆறு பிரிவினருமே
"ஆர்த்தோடக்ஸ்" பிரிவு ஆலயத்துக்குள் போவதில்லை. இந்த ஏழு பிரிவுகளை சேர்ந்தவர்கள் "ஜேகோபைட் "
பிரிவினரின் சர்ச்சுக்குள் நுழைவதில்லை.
இது போல் மொத்தம்
146 பிரிவுகள் கிறிஸ்தவ மதத்தில் மட்டுமே உள்ளது.
B)அன்றைய பிரசித்தி பெற்ற சிவன் கோயில் இன்றைய தாஜ்மஹாலா?:-
தாஜ்மஹால் பற்றிய
சர்ச்சைக்குரிய செய்திகள் அவ்வப்போது பூதாகரமாகிறது. தாஜ்மஹால் ஒரு கோவில்
என்று நமது தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த சிக்கல்
முதல்முறை எழுப்பப்படுவது அல்ல, பல காலமாக
அவ்வப்போது விவாதிக்கப்பட்டு வருவதே.
றிழி ளிணீளீ
என்பவர் எழுதிய ’தாஜ்மஹால்– உண்மைக் கதை’ (ஜிணீழீ விணீலீணீறீ – கி ஜிக்ஷீuமீ ஷிtஷீக்ஷீஹ்) என்ற
புத்தகத்தில் அது ஒரு ஹிந்துக் கோயில் என்றுஆதாரப்பூர்வமாகத் தெரிவிக்கிறார்.
இதோ அவர் தரும்
தகவல்கள் சுருக்கமாக:–
1.ஷாஜஹானின் மகனாகிய அவுரங்கசீப் காலத்திலும்கூட எந்தவொரு
அரசவை ஆவணங்களிலோ அல்லதுஇதழ்களிலோ தாஜ்மஹால் என்ற பெயர் குறிப்பிடப்படவில்லை.
2. உலகெங்கிலும் உள்ள முஸ்லீம் நாடுகளில் எங்கும் ‘மஹால்‘ என்றழைக்கப்படும்
கட்டிடம் இல்லை,
3. ஷாஜஹானின் மனைவியின் பெயர் மும்தாஜ் அல்ல, ஆனால் மும்தாஜ் உல் –ஜமானி.
4. ஷாஜஹான் காலத்தில் பாரதம் வந்த பல ஐரோப்பியபார்வையாளர்கள்
தாஜ்—மஹால் என்று குறிப்பிட்டிருப்பது, தேஜோமஹாலயா என்ற சமஸ்கிருத
சொல்லின் மருவுச்சொல்லே ஆகும். தேஜோமஹாலயா என்பது சிவன் கோவில்ஆகும்
5. ஆக்ராவில் உள்ள தேஜோமஹாலயாவில் தான் ஆக்ரேச்வரமஹாதேவ் என்ற
பெயருடன் சிவ வழிபாடு நடந்து வந்துள்ளது.
6. தாஜ்மஹாலுக்குள் பளிங்கு மேடையில் ஏறும் முன்காலணிகள்
அகற்றும் பழக்கம் உள்ளது. கோயிலில் மட்டுமே இந்த பழக்கம் பின்பற்றப்படுகிறது.
கல்லறையாக இருந்தால்காலணிகள் நீக்கப்பட வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
7. இந்தியாவில் 12
ஜோதிர்லிங்கங்கள் உள்ளன. தாஜ்மஹால் எனப்படும் தேஜோமஹாலயா, நாகதீஷ்வர் எனஅழைக்கப்படும் ஒரு ஜோதிர்லிங்க ஸ்தலம் ஆகும்.
இதன்சுவர்களில் காணப்படும் நாக உருவங்கள் இந்த கருத்துக்குவலுசேர்ப்பதாக உள்ளது.
8. விஸ்வகர்மா வாஸ்து சாஸ்திரம்‘ என்ற
புகழ்பெற்றஹிந்து கட்டிடக்கலை நூல் ‘தேஜ லிங்க‘ என்ற ஒரு லிங்கவடிவைக் குறிப்பிடுகிறது. அப்படிப்பட்ட லிங்க வடிவமே இங்குபிரதிஷ்டை
செய்யப்பட்டிருந்தது.
9. ஆக்ரா நகரம், ஒரு பழமையான சிவ
வழிபாட்டுமையமாகும். அதன் மரபுவழி குடியானவர்கள் இன்றும்குறிப்பாக சிராவண
மாதத்தின் போது இரவு உணவுக்கு முன், ஐந்து சிவன்
கோயில்களில் வணங்கும் பாரம்பரியத்தைதொடர்கின்றனர்.
10. ஷாஜஹானின் சொந்த அரசவைக் குறிப்புகளைஉள்ளடக்கிய பாத்ஷாநாமா, மும்தாஜ் உல் ஜமானி உடலை அடக்கம் செய்ய ஜெய்ப்பூர் மஹாராஜா
ஜெய்ஸிங் இடமிருந்துகுவிமாடம் கொண்ட (இமாஆரத்–அலிஷன் வு
கும்பேஸ்) ஒருபிரம்மாண்டமான மாளிகைக் கைப்பற்றப்பட்டதை ஒப்புக்கொள்கிறது.
கைப்பற்றப்பட்டக் கட்டிடம் ராஜா மான்சிங்அரண்மனையாக அறியப்பட்டது.
11. தொல்பொருளியல் துறை 1631 முதல் 1653 வரை 22 ஆண்டுகளுக்கு
மேலாக ஷாஜஹான் தன் மனைவிக்குக்கட்டிய கல்லறை தான் தாஜ்மஹால் என்கிறது. இதற்கு
தகுந்தசான்றுகள் இல்லை. சில முகலாய பதிப்பையும் தவிர்த்து, டாவர்னியர் எனும் பிரஞ்சு பார்வையாளரின் குறிப்புகளைமட்டுமே எடுத்துக் கொண்டு 22 ஆண்டுகளாகக் கட்டப்பட்டது எனக் கூறுவது அபத்தமானது.
12. இளவரசர் அவுரங்கசீப் அவரது தந்தைஷாஜகானுக்கு எழுதிய கடிதம்
மூன்று இடங்களில் பதிவாகியுள்ளது. அந்த கடிதத்தில் அவுரங்கசீப் கி.பி. 1652 ஆம் ஆண்டில், மும்தாஜின்
கல்லறை என்று கூறப்படும் இடத்தில் ஏழு மாடிகள் கொண்ட பல பழமையான
கட்டிடங்கள்இருப்பதாகவும், அதில் மராமத்துப்
பணிகள் செய்யவேண்டியிருப்பதாகவும் கூறியுள்ளார்.
13. தாஜ் கட்டிட வளாகத்தை ஒப்படைக்கக் கூறும் ஷாஜஹானின் இரண்டு
கட்டளைகளை முன்னாள் ஜெய்ப்பூர்மன்னர் ‘கபட் த்வாரா‘ எனும் அவரது தனிப்பட்ட தொகுப்பில் ரகசியமாக
வைத்திருந்தார்.
14. ஜெய்சிங்கிற்கு ஷாஜஹான் அனுப்பிய மற்ற மூன்றுகட்டளைகள்
ராஜஸ்தான் மாநில ஆவண காப்பகத்தில்பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவற்றில் மக்ரானா
குவாரியில்இருந்து மும்தாஜ் கல்லறைக்குத் தேவையான பளிங்குக்கற்களையும் அவற்றில்
குரானின் பகுதிகளை செதுக்க பணியாளர்களையும் வழங்குவதற்கு உத்தரவிட்டார். ஏற்கனவே
தாஜ்மஹாலின் வெறித்தனமான கைப்பற்றலால் மிகவும் கோபமாக இருந்த ஜெய்சிங், அந்த கட்டிடத்தை மாற்றியமைக்க பளிங்கு கொடுக்க மறுத்து
விட்டார். மேலும் பளிங்கு செதுக்கும் வேலையறிந்த ஆட்களையும் தமது
பாதுகாப்புக்குள் வைத்துக் கொண்டார்.
15. உண்மையில் தாஜ்மஹால் 22 வருட
காலத்தில்கட்டியிருந்தால், மும்தாஜ் இறந்து
கட்டிடம் வளர்ந்து முழுவடிவம் பெற்ற பிறகே, அதாவது 15லிருந்து 20
வருடங்களுக்குப்பிறகே பளிங்கு தேவைப்பட்டிருக்கும்.
16. மேலும், மூன்று
குறிப்புகளிலும் தாஜ்மஹால், மும்தாஜ் அடக்கம் ஆகியவை பற்றி எந்தப் பரிவும் இல்லை.
சிறிதும் ஒத்துழைக்காத ஜெய்சிங்கிடமிருந்து பளிங்குப் பெற்றுபிரம்மாண்டமான
தாஜ்மஹாலை கட்டியெழுப்ப ஷாஜகான்முனைந்திருக்க வாய்ப்பில்லை.
17. டாவர்னியர் எனும் பிரெஞ்ச் பயணியின் குறிப்புகளின் படி
அங்கு சுற்றிப் பார்க்க வரும் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஷாஜஹான்
வேண்டுமென்றே அங்கிருந்த சிவலிங்கத்தை அப்புறப்படுத்தி தாஜ் கட்டிடம் அருகே
மும்தாஜ் உடலை அடக்கம் செய்தார். தேஜோமஹாலயாவில்
இருந்து, மொத்த வளங்களும் அங்குலம்
அங்குலமாக கொள்ளையடிக்கப்பட்டது. ஏழுமாடி கட்டிடமான தேஜோ மஹாலயாவில் கொள்ளை
மற்றும் அழிப்பு வேலைகள், குரான் வசனங்களை செதுக்குதல் ஆகியவற்றிற்கே 22 ஆண்டுகள் பிடித்துள்ளன.
18. 1632 இல் (மும்தாஸின் மரணத்தின் ஒருவருடத்திற்குள்) ஆக்ராவிற்கு வருகை தந்த ஆங்கிலப்பார்வையாளர் பீட்டர்
முண்டி அவரது பயணக் குறிப்புகளில்ஆக்ரா மற்றும் தாஜ் –இ– மஹாலின் கல்லறை, தோட்டங்கள்மற்றும்
அதனைச் சுற்றி அமைந்திருந்த கடைப் பகுதிகள்குறித்து விவரித்திருக்கிறார்.
இதிலிருந்து ஷாஜகானுக்குமுன்பாகவே தாஜ்மஹால் இருந்துள்ளது தெரிய வருகிறது
19. ஷாஜஹானின் காலத்தில் இருந்த டி லாட் என்ற ஒரு டச்சு அதிகாரி சிறந்த கட்டிடங்களை பட்டியலிட்டுள்ளார். அதில் அதே
மான்சிங் அரண்மனையில்மும்தாஜ் அடக்கம் செய்யப்பட்டது குறித்து பதிவு உள்ளது.
20. பெர்னியர் என்ற பிரஞ்சு பார்வையாளர், முஸ்லிம்அல்லாதவர்கள் அடித்தளத்தில் நுழைவது
தடைசெய்யப்பட்டிருந்தது என்றும் தடை செய்யப்பட்ட பகுதியிலிருந்துதிகைப்பூட்டும்
பிரகாசமான ஒளி வெளிப்பட்டுக்கொண்டிருந்ததையும் பதிவு செய்திருக்கிறார். வெள்ளிகதவுகள், கதவுகளில்
பொறிக்கப்பட்ட தங்கம், பல்வேறுவிலையுயர்ந்த கற்கள் பின்னப்பட்ட சரங்கள், சிவலிங்கத்தின்மேல் தொங்கிக் கொண்டிருக்கும் முத்துக்களின்
சரங்கள்ஆகியவற்றை அந்த ஒளிக்குக் காரணமாகக் கூறுகிறார். ஷாஜகான் இந்தக்
கட்டடத்தைக் கைப்பற்றி அனைத்துசெல்வங்களையும் கொள்ளையிட்டான், மும்தாஜ் மரணம்அதற்கு ஒரு சாக்காக அமைந்தது.
21. 1638 ஆம் ஆண்டு ஜுவான் ஸ்டார்கி மற்றும் ஜான்பாசெட் லண்டன்
ஆகியோரால் வெளியிடப்பட்ட ‘வோயஜேஸ்அண்ட் டிராவல்ஸ் டு வெஸ்ட்– இண்டீஸ்‘ என்ற நூலில்
(அதாவது மும்தாஜ் இறந்த 7 வருடங்கள் மட்டுமே) தனதுஆக்ரா பயணத்தை விவரிக்கும்
ஜோகன் ஆல்பர்ட்மாண்டெல்ஸ்லோ, கட்டப்பட்டு
வரும் தாஜ் மஹால் பற்றிய எந்தகுறிப்பும் இல்லை.
22. பாதேஷ்வர் கல்வெட்டு என்று குறிப்பிடப்படும் ஒருசமஸ்கிருத
கல்வெட்டு தாஜ் ஒரு சிவன் கோவில் என்றமுடிவை ஆதரிக்கிறது. இந்த
கல்வெட்டுகைலாசத்துக்கிணையான காந்தியுள்ள ஒரு ஷ்படிகம் போன்றவெள்ளை சிவாலயத்தை
குறிப்பிட்டுக் கூறுகிறது. கி.பி 1155 காலத்தை சேர்ந்த
அந்த கல்வெட்டு தாஜ்மஹால்தோட்டத்திலிருந்து ஷாஜஹானின்
கட்டளையினால்அகற்றப்பட்டது.
23. ஒரு அமெரிக்க ஆய்வகத்தால் கார்பன் 14 சோதனைக்கு உட்படுத்தப்பட்ட தாஜின் ஆறுகள் பக்கமுள்ளகதவின்
ஒரு மரத்துண்டு, ஷாஜஹான் காலத்தை விட 300 ஆண்டுகள்
பழமையானது.தாஜ் கட்டிடம் இன்னும்பழமையானது, கி.பி.1155 அதாவது, ஷாஜகானுக்கு 500 ஆண்டுகளுக்கு முந்தையது.
24. தாஜ்மஹால் இந்து கோவில் பாணியில் கட்டப்பட்டதுஎன்று
ணி.ஙி.பிணீஸ்மீறீறீ, விக்ஷீs.ரிமீஸீஷீஹ்மீக்ஷீமற்றும்
ஷிவீக்ஷீ கீ கீ பிuஸீtமீக்ஷீ ஆகிய
சர்வதேசகட்டிடக்கலை நிபுணர்கள் அடித்துக் கூறுகிறார்கள். தாஜின்வரைவுத் திட்டம்
ஜாவாவின் பண்டைய இந்து சண்டீ சேவாகோவிலின் வரைவுத் திட்டத்தை ஒத்திருப்பதாக
ஹேவல்சுட்டிக் காட்டுகிறார். நான்கு மூலைகளிலும் விதானங்களுடன்கூடிய மையக்
குவிமாடம் இந்து ஆலயங்களின் உலகளாவியஅம்சமாகத் திகழ்கிறது.
25. தாஜ்மஹாலின் எண்கோண வடிவமானது ஒரு சிறப்புஇந்துத்துவ
முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, ஏனென்றால்
இந்துக்கள் மட்டுமே எட்டு திசைகளுக்கும் சிறப்புபெயர்களையும், அவர்களுக்கு கௌரவமிக்க அஷ்டதிக்பாலர்கள் எனும்
காவலாளர்களையும் கொண்டு வணங்குபவர்கள். கோபுர கலசம் மேலுலகத்தையும்
அஸ்திவாரம்பாதாள உலகையும் குறிப்பதாகவும் உள்ளது.
26. தாஜ்மஹால் கோபுரத்தின் மீது ஒரு சூல வடிவகலசம் உள்ளது.
தாஜின் கிழக்குப்பகுதியில் உள்ள சிவப்புமுற்றத்திலும் ஒரு பெரிய சூல வடிவ கலசம்
உள்ளது. இந்தகலசங்களின் மத்திய தண்டு வளைந்த மாவிலைகள் மேல்வைத்த கும்பத்தின்
அமைப்பைக் சித்தரிக்கிறது, இதுஹிந்துக்களின் புனிதச் சின்னமாகும். இமாலயப்
பிரதேசத்தில்உள்ள ஹிந்து மற்றும் புத்த கோயில்களின் மீது இதே போன்றஅடையாளங்கள்
காணப்படுகின்றன.
27. ஷாஜஹான் உண்மையில் தாஜ்மஹாலை ஒருஅதிசயமான சமாதியாக
கட்டியிருந்தால், தாஜ்மஹாலில்மும்தாஜ் நல்ல முறையில்
சடங்குகளுடன்புதைக்கப்பட்டிருப்பார், ஒரு சரித்திர
நிகழ்வாக புதைக்கப்பட்டதேதியை வரலாறு பதிவு செய்திருக்கும். அத்தகைய தேதிஎங்குமே
குறிப்பிடப்படவில்லை.
28. மும்தாஜ் இறந்த ஆண்டு கூட தெரியவில்லை. இது 1629, 1630, 1631 அல்லது 1632 என பல்வேறு
விதமாகஊகிக்கப்படுகிறது. ஒரு அற்புதமான அடக்கம் அவளுக்குஉரியதாக
இருந்திருந்தால், அவள் இறந்த தேதி ஊகிக்கத்தக்கதாக
இருந்திருக்காது. இவை அனைத்தும்தாஜ்மஹால், ஹிந்துக் கோயில்
ஒன்றின் மீது எழுப்பப்பட்ட கட்டிடம் என்பதையே இது நிரூபிக்கின்றன.
சிறுபான்மையினருக்கு சாதகமாகிவிட்ட வரலாற்றுத் திரிபுகளைக் கூட
சுட்டிக்காட்டஇயலாத நிலைக்கு நம் நாடு தள்ளப்பட்டுள்ளது என்பதையும்இந்நிலை
மாற்றப்பட வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.
29. ஷாஜஹானின் அரசவைக் குறிப்புகளில் தாஜ் கட்டியதற்கானசெலவு
விவரங்கள் எங்கும் இல்லை. பல்வேறு ஏமாற்றுஎழுத்தாளர்களால் 4 மில்லியனிலிருந்து 91.7 மில்லியன்
ரூபாய்வரை தோராய மதிப்பீடுகள் சொல்லப்படுகின்றன.
30. இதேபோல் நிர்மாண காலம் ஊகத்தின்அடிப்படையில் 10 ஆண்டுகளிலிருந்து 22 ஆண்டுகள்
வரைசொல்லப்படுகிறது. ஆனால் ஷாஜகானின் அரசவைக்குறிப்புகளில் கட்டிட நிர்மாணப்
பணிகளில்ஈடுபட்டிருந்தமைக்கு எந்தவொரு குறிப்பும் இல்லை.
அதேபோல
தாஜ்மஹாலின் வடிவமைப் பாளராக பெர்சியரானஎஸ்ஸா எஃபெண்டி, துருக்கியரான அஹ்மத் மெஹெண்டிஸ், பிரெஞ்சுக்காரர் ஆஸ்டின் டீபோர்டேக்ஸ், இத்தாலியரானஜெரோனிமோ வெரோனோ, ஷாஜஹான் என்று பல
கருத்துகள்நிலவுகின்றன.
இது அனைத்தும்
உண்மையா, பொய்யா என தெரியவில்லை.
https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html