மஹா லட்சுமி [Play Game God]

 


மாதர் குலம் பூப்படைந்து பாவாடை  தாவணி ஆடையை கட்டுவது  முதல் திருமணம் அன்று தனது மகள் மணமகளாய்  தனக்கு பிடித்த அதிபட்ச விலை உள்ள பட்டு சேலை உடுத்தி மாப்பிள்ளை அதிக பவுன் தாலி கயிறு கட்டுவது வரை மற்றும் சீர் வரிசை முதல் குழந்தையின் காது குத்து வரை தலை  குனியாமல் நிமிர்ந்து  நிறைவாக ஏதும் குறையில்லாமல் அவள் ஆசையை பூர்த்தி செய்பவள்! குறி தவறாமல் தாக்கும் ஏவுகணை போன்ற பலத்த பிரச்சனைகளை கட் அவிழ்த்து  ஏவி விட்டவர்களையே ஆவி போல் பறந்து காவு வாங்கும் சக்தி உடையவள்! பிறப்பு முதல் பல்லாக்கில் தூக்கும் இறப்பு வரை கூடவே வருபவள்! இளமை காலம் முதல் வயதாகி நரை தரித்து கிழடு தட்டி மரணத்தை எதிர் நோக்கும் மூப்படைந்த முதுமை காலம் வரை முதுகெலும்பாய் இருப்பவள்! என் கைரேகையில் தனரேகையாய் இருப்பவளே! அதோடு பதினாறு செல்வங்களை பறந்து விரிந்து அமைத்து வாரி கொடுக்கும் வள்ளல் ஸ்ரீ  மஹா லட்சுமி என்கிற "திருமகள்" [Play Game God]★புரட்சி கவிஞர்Engineer Rajali Valavanur V.ரா.SivaSaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,




கோவிந்தா கோவிந்தா

வைராவீராராச என்று பல பெயர்களுடன்ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களேஎன் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.

மஹாலட்சுமி தேவியை உள்ளம் உருகி  பூக்கூடையில் இருந்து புஷ்பத்தை எடுத்து அலங்காரபடுத்தி அர்ச்சனை செய்வது போல் என் கவிதை கூடையில் இருந்து கோடான கோடி நன்றி தெரிவித்து கூறும் மலர் தூவும் கவிதைகளாகும். இதனை வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு கவிதைகளாக வடித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. இவர்களை பற்றி இன்னும் தீவிரமாக எழுத எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை அதனால் வாக்கியம் அமையவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது. Hyper Tension கோபமும் வருகிறது. எனக்கு இதை எழுதியும் போதாது, போதாது, பத்தாது, பத்தாது என்று மனம் துடிக்கிறது.

பரந்து விரிந்த உலத்தில் உள்ள மனிதர்களை பற்றி அங்குலம் அங்குலமாக ஒரு சதுர பரப்பையும் விடாமல் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த தேவியை அடைய முற்பட்டாலே போதுமானது.  அனைத்தையும் ஒரு மில்லி கூட பாக்கி இல்லாமல் நமக்கு கூறி தெளிய வைக்கும் வல்லமை இவர்களுக்கு மட்டுமே உள்ளது. இவளை பெரியளவில் அடைய மனசக்தி முதல் அனைத்து சக்தியும் அளவுக்கதிகமாக நமக்கு வேண்டும்.  இல்லையென்றால் இவள் கிடைக்கமாட்டாள். அதோடு சில நேரங்களில் நம் பாடு திண்டாட்டம் தான் என்று கூட ஆக வாய்ப்பிருக்கிறது. இது அனைத்தும் நமக்கான வரமாகும். 

அது இதனை என்னை போல் கடந்து வந்தவர்களுக்கு தான் புரியும். அது உலகத்தை ஏழையாக பார்ப்பதற்கும், கோடிஸ்வரனாக பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்குமோ அந்த அளவு கூட சிலருக்கு கடந்து வந்து உலகத்தை பார்க்கும் போது இருக்கும். முழுசா மாறிய சந்திரமுகியை பார் என்பது போல்.




1☆

நீ நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று சரண் அடைந்தால் என்னுடன் இருக்க மாட்டாய் என் லட்சுமி தேவியே! எவ்வளவு பின்புலம் இருந்தாலும் தனக்கான தகுதி  இல்லையென்றால் நீ விலகி விடுவாய் என் லட்சுமி தேவியே! நீ விருப்பமில்லாமல் இருந்தால் ஆனந்தம் உண்மையான ஆனந்தமாய் கொடுக்க மறுக்கிறாய் என் லட்சுமி தேவியே!

2☆

உன்னை அடையும் முன் அனுபவத்தை அதிகமாக கொடுக்கிறாய் என் லட்சுமி தேவியே! மனதுக்கு தாங்கும் சக்தி அதிகம் இருந்தால் தான் என்னை தாங்க முடியும் என்று  கூறாமல் கூறுவாய் என்  லட்சுமி தேவியே! நல்லது எது, கெட்டது எது என்று விந்தையாக தந்தை போல   உணர்த்துகிறாய் என் லட்சுமி தேவியே!

3☆

 மானிடர்களின் நிஜமான முகத்தை அறிய முற்பட்டால் உன்னை அடைய முற்பட்டாலே தெரிந்து கொள்ள செய்வாய் என் லட்சுமி தேவியே! லட்சியம் சரியான லட்சணத்துடன் இருக்க வேண்டும் என்று தோல்வி கொடுத்து உணர்த்துவாய் என் லட்சுமி தேவியே! எல்லாவற்றிலும் ஈடு கொடுத்து இருந்தால் தான் அதற்கு ஈடாய் நீ கிடைப்பாய் என் லட்சுமி தேவியே!

4☆

பிற தெய்வங்களிடம் இருப்பதை அடைய அவர்களை  வணங்கி சரண் புகுந்தால் போதுமானது என் லட்சுமி தேவியே! பிற தெய்வங்களிடம் தகுதி மிகுதியாக தேவையில்லை என் லட்சுமி தேவியே! உன்னிடம் இருப்பதை அடைய வேண்டுமென்றால் தகுதி இருந்தால் மட்டுமே போதும் நீ  வந்து விடுவாய் என் லட்சுமி தேவியே!

5☆

பேராசை மட்டுமே கொண்டு உன்னை அனு தினமும் அனுகினால் எதிலும் அனுமதி கிடைக்கவில்லை என் லட்சுமி தேவியே!  அகல கால் வைத்தால் அகலமாக உன்னை இழந்து விழுகிறேன் என் லட்சுமி தேவியே! குறுக்கு வழியில் கிறுக்கு தனமாக அடைய நினைத்தால் சுருக்கு போட்டு  தூக்கில் போடுகிறாய் என் லட்சுமி தேவியே!

6☆

திறன் இல்லாமல் உன்னிடம் வந்தால் அரன் ஆக இருக்க மறுக்கிறாய் என் லட்சுமி தேவியே! தீரன் ஆக இருந்தால் தீர தீர அக்ஷய பாத்திரம் போல் நிரம்பி கொண்டே இருக்கிறாய் என் லட்சுமி தேவியே! வீரன் ஆக இருந்தால் வீறு கொண்டு வந்தடைகிறாய் என் லட்சுமி தேவியே!

7☆

இயலாதவன் உன்னை இழுத்து கட்ட முயன்றால் இழுக்கு என்று வழுக்கி கொண்டு போகிறாய் என் லட்சுமி தேவியே! இயன்றவனிடம் நீயே வந்தடைந்து எதையும் இயக்கும் சக்தியை அருள்வாய் என் லட்சுமி தேவியே! கருட பார்வையில் துல்லியமாக கண்காணித்து விழுப்புண்ணோடு இருப்பவர்களையும்  கருணையோடு துல்லி சென்று ஆட்கொள்கிறாய் என் லட்சுமி தேவியே!

8☆

அனைத்தையும் தாண்டி உன்னை பெறாவிட்டாலும் பலவற்றை பெற்று விட்டேன் என் லட்சுமி தந்தையே! அதிர்ச்சிகரமான உண்மைகளை தெரிந்து கொள்ளாமல் தெரியாமல் கூட அளவுக்கதிகமாக நீ வந்தடையமாட்டாய் என் லட்சுமி தந்தையே! உன்னிடம் பாராட்டு சீராட்டு பெற என்னிடம் பலவற்றை விரட்டு விரட்டு என்று விரட்ட வேண்டும் என் லட்சுமி தந்தையே!

9☆

உன் மேல் கோபம் கொண்டால்  எனக்கான சாபம் என் லட்சுமி தந்தையே!  அனைத்து தகுதிகளும் பெற்றால் தான் பெற்றால் தான் பிள்ளையா என்று ஓடோடி வருவாய் என் லட்சுமி தந்தையே! புரியாத புதிர் நீ என் லட்சுமி தந்தையே!

10☆

ஏழை என்றால் தகுதியில் உனக்கு ஓர் பாலகன் நான் லட்சுமி தந்தையே! லட்சாதிபதி என்றால் தகுதியில் உனக்கு ஓர் இளைஞன் நான் லட்சுமி தந்தையே! மில்லியன் கணக்கில் கோடிஸ்வரன் என்றால் தகுதியில் உனக்கு ஓர் இளமையோடு கிழவன் நான் லட்சுமி தந்தையே!

11☆

உனக்கு பிடித்துவிட்டால் தடுப்பவர்களை முடிப்பவளே! என் லட்சுமி தாயே!  யாரிடமாவது செல்ல நினைத்து விட்டால் அவர்களை யாராலும் வெல்ல முடியாது என் லட்சுமி தாயே! உனக்கு விருப்பமானவர்களிடம் எந்த ரூபம் கொண்டும் சென்றடைவாய் என் லட்சுமி தாயே!

12☆

தகுதியானவர்களுக்கு தாயை போல் ஓடி வந்து செல்வம் மிகுந்த அன்பு காட்டுவாய் என் லட்சுமி தாயே! திறமையானவர்களுக்கு ஏக போகமாய் வாரி வழங்குவாய் என் லட்சுமி தாயே! சாதுர்யமானவர்களுக்கு சாதுவாய் இருந்து அனைத்தையும் கொடுப்பாய் என் லட்சுமி தாயே!

13☆

அதள பாதாளத்தில் தள்ளுபவளும் நீயே! பாதாளத்தில் இருப்பவனை தூக்கு தூக்கி அள்ளு என்று அள்ளி கொடுப்பவளும் நீயே! தகுதிகள் விலகினால் கிள்ளு கிள்ளி சுதாரிக்க செய்பவளும் நீயே!

14☆

பதாகைகளில் உன் புகைபடத்தை பொறித்து பூஜை பண்ணினாலும் குறை இருந்தால் தள்ளி போவதும் நீயே! குறைகள் குறைய குறைய நிறைய நிறைய தருவதும் நீயே! உலக தில்லையில் எனக்கான ஆசான் நீயே! என் லட்சுமி தேவி! உனக்கு கோடான கோடி நன்றிகள் லட்சுமி தேவி!

15☆

எல்லாம் உன் திருவிளையாடல்! அந்த ஆடல் என்பதே எனக்கான ஆசிர்வாதம் என் லட்சுமி தேவியே! என் ஆட்டத்தை மெருகேற்ற நீ கொடுத்த வாய்ப்பே இது என் லட்சுமி தேவியே! உனக்கு கோடான கோடி நன்றிகள் என் லட்சுமி தந்தையே!

16

திருமகள் ஆகிய நீ என்னுடன் இருந்தால் அனைத்து "திருக்களும்"  கிடைக்கும் என் லட்சுமி தாயே! பதினாறு செல்வங்களை பறந்து விரிந்து அமைத்து கொடுப்பவளேஎன் திருமகள் தாயே! வாரி கொடுக்கும் வள்ளல் நீயேஎன் திருமகள் தாயே!  Play Game God! We Play is Fantastic! All God Wishes For U!

மாதர் குலம் பூப்படைந்து பாவாடை  தாவணியாடையை கட்டுவது  முதல் திருமணம் அன்று தனது மகள் மணமகளாய்  தனக்கு பிடித்த அதிபட்ச விலை உள்ள பட்டு சேலை உடுத்தி மாப்பிள்ளை அதிக பவுன் தாலி கயிறு கட்டுவது வரை மற்றும் சீர் வரிசை முதல் குழந்தையின் காது குத்து வரை  தலை குனியாமல் நிமிர்ந்து நிறைவாக ஏதும் குறையில்லாமல் அவள் ஆசையை பூர்த்தி செய்பவள்! குறி தவறாமல் தாக்கும் ஏவுகணை போன்ற பலத்த பிரச்சனைகளை கட் அவிழ்த்து  ஏவி விட்டவர்களையே ஆவி போல் பறந்து காவு வாங்கும் சக்தி உடையவள்! பிறப்பு முதல் பல்லாக்கில் தூக்கும்  இறப்பு வரை கூடவே வருபவள்! இளமை காலம் முதல் வயதாகி நரை தரித்து கிழடு தட்டி மரணத்தை எதிர் நோகும் மூப்படைந்த முதுமை காலம் வரை முதுகெலும்பாய் இருப்பவள்! என் கைரேகையில் தனரேகையாய் இருப்பவள் மஹா லட்சுமி என்கிற "திருமகள்!

உலக மைதானத்தில் தகுதி இல்லாமல் சாதாரணமாக எதுவும் கிடைக்காது. இத்தில்லையில் நமக்கு எது நேர ஆரம்பித்தாலும் அதற்கு நாம் மட்டுமே பல இடங்களில் காரணமாய் இருப்போம். அதனை களைந்தால் எந்த திகைக்க வைக்கும் காரியங்களையும் திடமோடு நம்மால் முடிக்க முடியும்.

உலகில் வாழும் கிறிஸ்துவ மக்கள் அனைவருக்கும் எனது இனிய  கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .

  

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html