குறுத்த இலை-பழுத்த இலை [YOUNG LEAF AND OLD LEAF]

அனுபவம் என்பது வயதில் உட்கார்ந்து இருப்பது அல்லநம் மனோ நிலையில்  கற்றலில் தான் எப்பொழுதும் அமர்ந்து  இருக்கிறது.  இது சத்தியமான  நிஜம்.  பிரியா விடை அளித்தாலும் பிரிய மனமில்லாமல் மனுஷ வாழ்க்கையில் கதி கலங்கி  மனதை கசக்கி பிழியும் "குறுத்த இலை-பழுத்த இலை". இந்த இலையில்  நறுமணம் மிக்க மசாலா கலவையை சேர்த்து   மணக்க  மணக்க கம கமவென்று அறுஞ்சுவை மிக்க கறி பிரியாணியும்,ஈமு கோழி முட்டை ஆம்லேட்டும், சுறா மீன் வறுவலும்  அதோடு 420 ஜர்தா புகையிலை பீடாவும்  சேர்க்கப்பட்டு விருந்து படைப்பது போல இக்கட்டுரை வடிவமைக்கபட்டு  இத்தலைப்பை  சவாரி செய்கிறது.  அதோடு இது மனதை கண்டிப்பாக கிறங்கவும் வைக்கும்.(புகையிலை உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் அதோடு புற்று நோய் என்கிற கேன்சரை உண்டாக்கும்). [HUMAN LIFE BODY "YOUNG LEAF AND OLD LEAF". FAIRWELL DAY CONTAINED AND END OF THE PROGRAMME PLEASE LEAVE.  BUT NOT LEAVE. EXPERIECE PERSON SAID  BELIEVE.★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam செட்டியார்.

 


அனுபவம் என்பது வயதில் உட்கார்ந்து இருப்பது அல்லநம் மனோ நிலையில் கற்றலில் தான் எப்பொழுதும் அமர்ந்து இருக்கிறது.  இது சத்தியமான  நிஜம். பிரியா விடை அளித்தாலும் பிரிய மனமில்லாமல் மனுஷ வாழ்க்கையில் கதி கலங்கி  மனதை கசக்கி பிழியும் "குறுத்த இலை-பழுத்த இலை". இந்த இலையில்  நறுமணம் மிக்க மசாலா கலவையை சேர்த்து   மணக்க  மணக்க கம கமவென்று அறுஞ்சுவை மிக்க கறி  பிரியாணியும், ஈமு கோழி முட்டை ஆம்லேட்டும், சுறா மீன் வறுவலும்  அதோடு 420 ஜர்தா புகையிலை பீடாவும்  சேர்க்கப்பட்டு விருந்து படைப்பது போல இக்கட்டுரை வடிவமைக்கபட்டு இத்தலைப்பை சவாரி செய்கிறது.. அதோடு இது மனதை கண்டிப்பாக கிறங்கவும் வைக்கும்.(புகையிலை உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் அதோடு புற்று நோய் என்கிற கேன்சரை உண்டாக்கும் ). [HUMAN LIFE BODY YOUNG LEAF AND OLD LEAF. FAIRWELL DAY CONTAINED AND END OF THE PROGRAMME PLEASE LEAVE.  BUT NOT LEAVE. EXPERIECE PERSON SAID  BELIEVE.


சக்தி இல்லையேல் நமக்கு எதுவும் இல்லை. சக்தி இல்லையென்றால் நமக்கென்று யாரும் இருக்கமாட்டார்கள். இதில் சக்தி என்பது  மாயஜால சக்தியை தான் சக்தி என்றும் மற்றும் சிலவற்றை மட்டுமே சக்தி என்று கருதுகிறோம்.  ஆனால் சக்தி என்பது நம்முடைய அனைத்தும் தான்.

குறுத்த இலை - பழுத்த இலை:-

1)படிக்காதவர்களிடம்  எந்த நன்றாக படிக்கும் மாணவனும் Close-ஆக இருக்க மாட்டான்.  பெற்றவர்களே நன்றாக படிக்கும் பிள்ளையிடம் இருப்பது போல படிக்காத பிள்ளையிடம் பாசத்துடன் இருக்க மாட்டார்கள். படிக்கும் பிள்ளைக்கு அன்பு-படிக்கா பிள்ளைக்கு வெறுப்பு.

2) இந்த படிக்கும் பிள்ளை வேலைக்கு சரியாக போகவில்லையென்றால் தண்ட சோறு , உறுப்படாதவன்.

3)Busness-ல் திறமையுடன் இருந்து Develop ஆனால் என் புருஷன் திறமையானவர்.  இல்லையென்றால் எதற்கும் கையாளாகதவர்.

இப்படியாக சிறிய வயதில் இருந்தே ஒவ்வொன்றிலும் வெற்றி என்பது இல்லையென்றால் நம்மை யாருக்கும் பிடிப்பதில்லை. இதை அனுபவபூர்வமாக பல விஷயங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு இது புரியும்.  வெற்றி என்பதே சக்தி தான். இவ்வாறாக அனைத்திலும் சக்தி இல்லாதவர்கள் (அல்) தோல்வியடைந்தவர்களிடம் யாரும் இருப்பதில்லை.  இப்போது கூட இருக்கும் அனைவரும் வெற்றியடைந்து கொண்டு இருப்பதால் தான் இருக்கிறார்கள். காதலிக்கும் போது பிடிக்கிறது-Dating-ல் கசக்கிறது பிரிகிறார்கள்.  Dating-ல் பிடிக்கிறது-திருமணம் ஆனதும் கசக்கிறது. சில பேருக்கு Divorce ஆகிறது. நம்மை பிடிப்பதும் ஒரு சக்தி தான்.

நாம் ஒரு Tube Light -போல நம் வாழ்க்கையில் அனைத்திலும் வெளிச்சம் ஆக இருக்கும் வரை அனைத்து பொருளும் தெரியும்.  அது போல அனைவரும் இருப்பார்கள். Fuse போகிவிட்டால் யாரும் இருக்க மாட்டார்கள்.  உடனே இல்லை இது பொய்.  பல பேர் இருக்கிறார்கள் என்று கூறுவார்கள்.  பெண்ணை கொடுத்தற்காக வேறுவழி இல்லாமல் வேண்டுமென்றால் அவர்கள் இருப்பார்கள்.  மற்றபடி யாரும் இருக்க மாட்டார்கள்.  இனம் இனத்துடன் தான் இருக்கும்.  புரியவில்லையா? அதாவது பணக்காரனாக இருந்து ஏழை ஆகிவிட்டால் ஏழை தான் உன் கூட இருப்பார்கள். பணக்காரர்கள் இருக்கமாட்டார்கள்.  ஏழையோடும் ஏழைதான் இருப்பார்கள். பிளாட் பாரத்தில் இருப்பவர்கள் இருக்கமாட்டார்கள்.  இவர்களே Promotion-ஆகி ஏழையில் இருந்து பணக்காரர் ஆகிவிட்டால் இவர் போய்விடுவார்.  வேறு ஒரு ஏழை தான் கிடைப்பார்அதாவது குறுத்த இலை கருத்துடன் அதில் தான் இருக்கும். இதில் வாழ்க்கை முழுக்க குறுத்தது பழுத்தது ஆகலாம். பழுத்தது குறுத்தது ஆகலாம்.  அப்படியென்றால் எதுவும் நிலையில்லை.  இந்த நிலையில்லாத வாழ்க்கையில் தான் நாம் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

தெருவில் இருக்கும் வரை தெருவில் இருப்பவர்கள் Function-ற்கு வருவார்கள், பேசுவார்கள்.  தெருவை விட்டு போய்விட்டால் பலர் வரமாட்டார்கள். இது வேலை செய்யும் அலுவலகம் வரை இதே நிலமை தான்.  கல்லூரி  நண்பர்களும் படிக்கும் போது இருந்ததை போலவே வேலைக்கு போனதும் இருக்கமாட்டார்கள். வேலை இல்லாமல் அடிக்கடி போன் செய்தால் மச்சான் கொஞ்சம் பிசியா இருக்கிறேன் அப்புறம் Call பண்றேன் என்று கூறுபவர்களை நம் வாழ்க்கையில் கண்டிருப்போம். அதற்காக அனைவரும் இப்படி தான் என்று கூறவில்லை. Frendship என்கிற வார்த்தை இன்றும் உயிர்ப்புடன் இருப்பதற்கு காரணம் நல்ல நண்பர்களால் தான்எந்த ஏழையும் பணக்காரர்கள் இருக்கும் இடத்தில் இருப்பதில்லை. எந்த பணக்காரனும் ஏழை வசிக்கும் இடத்தில் இருப்பதில்லை.  பணக்காரன் ஏழை ஆனாலோ (அல்) ஏழை பணக்காரன் ஆனாலோ தான் அது நடக்கும். Company-யிலும் Office-லும் கூட நம்முடைய மேலதிகாரிகள் அவர்களிடம் பழகுவது போல நம்மிடம் பழகுவதில்லை. குறைந்த பட்சம் ஒன்றாக சாப்பிடுவதும் இல்லை.  கேட்டால் அனைவரும் பாகுபாடில்லாமல் Canteen-ல் தான் சாப்பிடுகிறோம் என்போம்.  எல்லாமே இனம் இனத்துடன் தான் இருக்கிறது, பேசுகிறது, சாப்பிடுகிறது.  கட்சியிலும் ஆலோசனை கூட்டம் என்பது தனி தனியாக தான் நடக்கிறது. கவுன்சிலர் கூட்டம், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்று தான் நடக்கிறது.  கட்சி தலைமை கூட்டத்தின் அனைத்திற்கும் இவர்கள் செல்ல முடியாது.  இது அனைத்துமே இனம் இனத்துடன் தான் இருக்கிறது.  கட்சி ரீதியான பெரிய திருமணத்தில் Leader, MLA, MP-க்கு தனி பந்தி மற்றவர்களுக்கு தனி பந்தி என்பது நடப்பது பல பேர் போனவர்களுக்கு தெரியும்.  இது புரியும். வேலையில் இருக்கும் வரை தான் எவ்வளவு பெரிய அதிகாரியானாலும், எத்தனை வருடங்கள் வேலை செய்தாலும் உள்ளே அனுமதி. வேலையை விட்டு சென்றுவிட்டால் அனுமதியில்லை.  நமக்கு சல்யூட் வைத்த, பயந்த SECURITY நம்மை வெளியில் நிற்க வைப்பார்.

மொத்தத்தில் நிலையில்லாதது மேற்கண்ட அனைத்தும். மேற்கண்ட அனைத்தும் நமக்கு எப்பொழுது வேண்டுமென்றாலும் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம். அப்படி நடந்தால் இன்று நம்முடன் கடைசி வரை இருப்பது போல் சிரித்து உரையாடியவர்கள் பலர் இருக்கமாட்டார்கள்.  இது பணக்காரரில் இருந்து ஏழை ஆனவர்களுக்கும், Busness-ல் நஷ்டம் அடைந்தவர்களுக்கும் etc புரியும்.  அது போல ஏழையில் இருந்து பணக்காரர் ஆனவர்களுக்கும் உண்மை புரியும்.

அது தான் எதுவும் நிலையில்லாதது என்பது. அதாவது உண்மையில் நம் கூட யாரும் இல்லையென்பதே அது.  ஏனென்றால் மேற்கண்ட அனைத்து சக்திகளும் நிலையில்லாத ஒன்று.  அறிவு-மழுங்க கூடியது. பணம்-எளிதில் பறிபோக கூடியது.  அதிகாரம்-இன்று இருப்பது (லஞ்சத்தில் மாட்டிக்கொண்டால் பறிபோய்விடும் etc). Busness-இன்று நன்றாக போய் கொண்டிருக்கிறது. பிள்ளைகள்-வளரும் வரை (முதியோர் இல்லம், தனிகுடித்தனம்). மனைவி-நாம் சந்தோஷமாக அவர்களை வைத்திருக்கும் வரை(Divorce etc).  அரசியல் கட்சி, CM முதல் COUNCILER வரை -மக்கள் ஓட்டு போடும் வரை.  கட்சியில் இருப்பவர்கள்-அவர்கள் வெற்றி பெற்று கொண்டிருக்கும் வரை.  மாமா, மாமியார் மரியாதை-மருமகளிடம் எதற்கும் நிற்காத வரை.  அப்பா, அம்மா மரியாதை-மகனிடம் எதற்கும் கையேந்தாத வரை. நேர்மையானவர்களுக்கு மரியாதை - மேலதிகாரியிடம் எந்த உதவியும் கேட்காத வரை. மாமனாருக்கு மரியாதை-மாப்பிள்ளையிடம் உதவி என்று கேட்காத வரை. ETC. 

இவ்வாறாக எதுவும் இன்று இருக்கிறது. நாளையும் இருக்குமா என்பது சந்தேகம்.  அதிர்ச்சி தரக்கூடிய உண்மை இப்படி இருக்க உண்மையான வாழ்க்கையை வாழ்வோம். குறுத்த இலை பழுத்த இலையை பார்த்தும் சிரிக்க தேவையில்லை.  பழுத்த இலை குறுத்த இலையை பார்த்தும் சிரிக்க தேவையில்லை. நம்முடைய நிலமையை பார்த்து நம் மனமே சிரிக்கிறது.  இதை விட வேறு கேவலமான, அசிங்கமான சிரிப்பு வேண்டுமா என்ன? இந்த உண்மையை பல பேர் பார்த்து புரிந்து கொண்டதால் தான் போலியான வாழ்க்கையை துறந்து உண்மையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் இப்படி உண்மையான வாழ்க்கை வாழ்ந்துவிட்டால் எதுவும் நம்மை பாதிக்காது, கஷ்டபடுத்தாது, வருந்த செய்யாது. நானூறு பேர் புடை சூழ நடப்பதைவிட உண்மையான நாலு பேருடன் இருந்து கொண்டு தனியாக நடப்பது மேல். E.G படையப்பா, ஆறிலிருந்து அறுபது வரை.

குறிப்பு:-

1) விளையாட்டில் நன்றாக விளையாடி கொண்டிருக்கும் வரை தான் விளையாட்டு வீரர்களுக்கு சக விளையாட்டு வீரர்கள் முதல் அனைவரிடத்திலும் மரியாதை. E.G:- ஆடுகளம் (அதாவது சம்பந்தபட்டவரையே மீறி சென்றால் வரும் பிரச்சனைகள்.  அப்படியென்றால் கடைசி வரை வாய்ப்பில்லை).

2) இதே தான் சினிமா துறை முதல் அனைத்து துறைகளும்.  சரக்கு எனும் சக்தி இருக்கும் வரை தான் எல்லாம். சரக்கு தீர்ந்துவிட்டால் ஓரம் கட்டிவிடுவார்கள். நாம் சரிந்துவிடுவோம். எதுவும் நிலையில்லாதது  "இசைபடத்தில் வருவது போல் CONCENTRATION இல்லாத நிகழ்வு நமக்கு நடந்தால் நம் கதி.  அதனால் தான் பலரும் வாழ்க்கையே RACE என்பார்கள்.  உயிருள்ள வரை நாம் மேற்கண்டவற்றில் எல்லாவற்றிலும் ஜெயித்து கொண்டே இருக்க வேண்டும். PRACTICAL-ஆக எப்போதும் எல்லாவற்றிலும்எல்லா வயதிலும் ஜெயிக்கிற சக்தி நமக்கு இருக்குமா?  எப்பொழுது வேண்டுமென்றாலும் பழுத்த இலை குறுத்த இலை ஆகலாம்.  குறுத்த இலை பழுத்த இலை ஆகலாம். இதனை பணக்கார வாரிசுகளால் மற்றும் மேற்கண்டவற்றில் வெற்றி மட்டுமே என்று இருப்பவர்களுக்கு புரியாது. ஆனால் வாழ்க்கை முழுவதும் இருக்கிறது. அதில் தோல்வியை சந்திக்கும் போது இது புரியும்.  வெற்றி என்பதில் நல்லவர்கள், கெட்டவர்கள் என அனைவரும் இருப்பார்கள். தோல்வியில் இருக்கும் போது தான் உண்மையானவர்கள் இருப்பார்கள்.

இதில் கூறபட்டுள்ள அனைத்தும் எந்த ஒரு நபரையும், துறைகளையும் குறிப்பிட அல்ல. அதோடு யாராவது இனம் மாறி உங்களுடன் இருந்தால் வாழ்த்துக்கள். இன்று நீ இருக்கும் உயரம் உனக்கு சொந்தமானவை அல்ல. ஏனென்றால் உன்னிடம் இருக்கும் சக்தி நிலையானதல்ல.  போலிகளை புறம் தள்ளி உண்மையான  வாழ்க்கை வாழ்வோம். அது தான் வெற்றி-சந்தோஷம் அடையாதது. தோல்வி-வருத்தம் அடையாதது.  அதிகாரத்தில் இருந்தாலும்-திமிறு அடையாதது.  பதவியில் இருந்தாலும்-பகட்டுடன் வாழாதது. பணம் இருந்தாலும்- எளிமையாக வாழ்வது ETC.  இதை தெரிந்தோ தெரியாமலோ  செட்டியார் குடும்பத்தினர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த உண்மையை அவர்களின் வாரிசுகளுக்கு தெரிந்தோ, தெரியாமலோ மறைமுகமாக கூறி கொண்டு இருக்கின்றனர். கஷ்டம் தெரிந்தால் இந்த உண்மை தெரியாது. தொடர் தோல்வியுற்றால் தான் உலகம் தெரியும்.  E.g:- Master Words in "Villan " Movie தோல்வியெல்லாம் கீதையடா என்ற பாடல் வரிகள்.  அதை தான் இந்த வில்லனும் கூறுகிறேன்.  

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

குறிப்பு -1:-

நல்லவர்கள் நம் கூட இருக்கும் வரை நமக்கு அவர்களின் அருமை தெரியாது-கெட்டவர்களுடன் இருந்து நாசமான பிறகு தான் தெரியும்நல்லவர்களின் அருமை புரியும். அது போல் தான் இந்த கீதையும் அப்போது தான் புரியும்.

வெற்றி என்கிற சக்தி-சிரிக்க வைக்கும். 

தோல்வி என்கிற சக்தி- சிந்திக்க வைக்கும்.

இதை அனைத்தையும் ஒரு குறுத்த இலை தான் எழுதுகிறது.  அனுபவம் என்பது வயதில் இருப்பது அல்லநம் கற்றலில் தான்  எப்பொழுதும்  இருக்கிறது. 

குறிப்பு -2:-

நியூட்டன் Law-வின் தத்துவம் போல தான் மனிதனின் வாழ்க்கையும். அது மேலே செல்லும் அனைத்தும் கீழே வரும் என்பது தான்.  அது போலவே மேற்கண்டவைகளும் மற்றும் அனைத்துமே.  பிறகு எப்படி மேலே சென்றவர்கள் மற்றும் வெற்றியடைந்தவர்கள் அப்படியே இருக்கிறார்கள்?  பதில் இது தான் அதை அவர்கள் தன்னுடைய சக்தியால் நிலை நிறுத்தி வைத்துள்ளனர். ஒரு சிலர் ஏற்றம் பெற்றவர்கள் மற்றும் ஏறியவர்கள் சிறிது இறங்கினாலும் அதை எப்படியோ Study பண்ணுவதால் தான் அவர்களால் அந்த இடத்திலோ அல் மேலும் முன்னேறுவதோ நடக்கிறதுஇந்த சக்தி எப்போது வேண்டுமென்றாலும் போகலாம்நிலையில்லாதது மற்றும் கவன குறைவு உடையது. அதோடு இது எவ்வளவு பெரிய மலையையும் கரைக்கவல்லது. ஏற்றம் பெற வைத்த அந்த சக்தி நம்முடன் இல்லையென்றால் எவ்வளவு வேகத்தில் ஏறினோமா அதை விட அதிக வேகத்தில் இறக்கிவிடும் சக்தியும் அதற்கு உண்டு. வாழ் நாள் முழுவதையும் இதற்காக அர்பணித்ததால் தான் அது நம்முடன் இருக்கிறது. அதனை Study-யாக வைத்து கொள்ள வாழ் நாள் முழுவதும் ஓடியே ஆக வேண்டும்.  ஓட்டம் குறைந்தால் நம்மிடம் இருப்பது குறைந்துவிடும்.  ஓட்டத்தை நிறுத்தினால் மேற்கண்டவை படுத்தே விடும். E.G:- M Kumaran S/O Maha Lakshmi  திரைபடம் Concentrate Divert ஆனதும் அவரால் ஜெயிக்க முடியாத Scene மற்றும் நண்பன் படத்தில் Exam-ற்கு முன் Divert செய்வது.

இதில் கூறபட்டுள்ள அனைத்தும் ஒரு உதாரணத்திற்காகவும் மற்றும் நிலையில்லாத இந்த பொய்யான வாழ்க்கையை வாழ்வதை விட பொய்யான வாழ்க்கையில் உண்மையான வாழ்க்கை வாழ்ந்தால் நமக்கு எவ்வித கஷ்டமும், துன்பமும், வருத்தமும் இருக்காது என்பதை விளக்கவே இக்கட்டுரை. கடன் பட்டார் நெஞ்சம் போல களங்கி நின்றான் இலங்கை வேந்தன் என்பது போல இல்லாமல் என்றென்றும் புன்னகையுடன் வாழ்வோம், நம்முடைய வாழ்க்கையை அடுத்த தலைமுறைக்கு விதையாவோம். (சாதனையாளர்களுக்கு இறப்பு கிடையாது. இறந்திருக்கலாம் ஆனால் இறக்கவில்லை). மற்றபடி தனி நபரையோ, யாரையும் குறிப்பிட அல்ல.

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

justicemayel.blogspot.com