பல்லாண்டு மங்கலகரமாக கணவன் வீட்டில் வாழ "வருக வருக" என வரவேற்று இளம் வயதில் மருமகளாய் புகுந்த வீட்டில் குத்து விளக்கு ஏற்றி ரோஜா பூ போன்ற இதழ்களில் புன்னகையுடன், மனதில் நெகிழ்ச்சியுடன் வந்து சுருக்கம் விழுந்து
முதிர்ச்சியானாலும் ஓய்வில்லாமல் இன்றும் பல இடங்களில் நந்தவனமான குடும்பத்தில்
குடும்ப பாரத்தை, பிரச்சனைகளை முந்தி வந்து தாங்கி மெழுகாய் உருகி கரையும் மற்றும் மகப்பேறு
காலமாகிய பத்து மாதத்தில் பீப்பாய் கணக்கில் சகல வலிகளையும் சகட்டுமேனிக்கு ஏற்று
பச்சிளம் குழந்தையை ஈன்றெடுத்து அதனை மார்பில் கிடத்தி பாலூட்டி, சீராட்டி வளர்க்கும் மகத்துவமான மாதர்களுக்கு, தாய்குலத்திற்கு மத்தியில் "ஒரு விதமான திருஷ்டி சுற்றி கழிப்பது போல்" மெத்தனத்தால், சேர்க்கை சரியில்லாமல் சிக்கல் நிறைந்த மான கேடு ஆன காரி உமிழ
கூடிய ஒன்றை வீணே ஒரு சிலர் ஓர் பகட்டு வாழ்க்கையாக கருதி தானே ஓர் தீப்பந்தம் ஆகி தன் குடும்பத்திலேயே
சொருகி வீணான ஒழுக்கமின்மையான கொடிய மோசடிகளால் பஸ்பம் ஆக்கியது போல் தனக்கே பல
துன்பங்களை தந்து கொண்டு தன் குடும்பத்தையே உருகுலைத்து கொண்டு இவ்வாறு காலம் கடத்தும் " ஓர் பெண் வீட்டார்
இவ்வுலகில்" என்கிற கற்பனை நாவல் " டீ கடை பெஞ்ச்" என்கிற பொது மன்றத்தில் சில மெய்யான தகவலுடன்
பொது பேச்சாக. இந்த பேச்சு பலர் காமாலையில் இருந்து கண் திறந்து இன்புற்று வாழவும்
தான். [The Common Speaker is Speak to
Local Tea Stall]
கோவிந்தா கோவிந்தா
வைரா, வீரா, ராச என்று பல பெயர்களுடன் ஒரு பெயராய், ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN-ன் ரிதம் F.M 605 108-ல் இருந்து justicemayel.blogspot.com என்கிற தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய வாசகர்களே.
டீ கடை பெஞ்ச் என்பதில் பொதுவாக அனைத்தையும்
பேசுவார்கள் மற்றும் சில சமயங்களில் கொச்சையாகவும் பேச கூடிய இடமாகும். அது போலவே "ஓர் பெண் வீட்டார் இவ்வுலகில்" என்று கற்பனையாகவோ, நிஜமாகவோ எங்கு நடந்தியிருந்தாலும், நடக்காவிட்டாலும் எதுவாயினும் அதை டீ குடித்து கொண்டே டீ கடை
பெஞ்ச்-ல் பேசுவது போல் ஓர் அலசு அலசி பேசுவது தான் இது. இதோடு பல அகவல் போன்ற தகவல்களுடன். மற்றபடி இது யாரையும் குறிப்பிடுவன அல்ல. இந்த டீ கடை
பேச்சு மன்றம் என்பதற்கு மூடு விழா என்பதே என்றும் கிடையாது. இது பெண்களின்
மாண்புகள், பெருமைகள் முதல் அனைத்தும் அலசு அலசு என்று அலசி பேச கூடிய டீ கடை
பெஞ்ச் மன்றமாகும். ஏற்கனவே சில கட்டுரைகள் எழுதியிருந்தாலும் இது வேறு தகவல்களை
கொண்டதாகும்.
என்ன டீ கடை பெஞ்ச் என்கிறீர்கள் இப்பொதெல்லாம் எங்கும்
பெஞ்ச் இல்லை என்று கூற கூடாது. அப்படி கூறினால் இந்த கட்டுரையை முதலில் நீங்க படிக்கவே கூடாது.
பல்லாண்டு மங்கலகரமாக மருமகளாய் புகுந்த வீட்டில் குத்து விளக்கு ஏற்றி ரோஜாபூ போன்ற இதழ்களில் புன்னகையுடன், மனதில் நெகிழ்ச்சியுடன் நந்தவனமான குடும்பத்தில்
குடும்ப பாரத்தை, பிரச்சனைகளை முந்தி வந்து தாங்கி மெழுகாய் உருகி கரையும் மற்றும்
மகப்பேறு காலத்தில் பீப்பாய் கணக்கில் சகல வலிகளையும் டின் டின் ஆக பத்து
மாதத்தில் சகட்டுமேனிக்கு ஏற்று பச்சிளம் குழந்தையை ஈன்றெடுத்து அதனை மார்பில் கிடத்தி பாலூட்டி, சீராட்டி வளர்க்கும் மகத்துவமான மாதர்களையும், தாய்குலத்தையும் மட்டுமே காலம் காலமாக இவ்வுலகம் கண்டுள்ளது.
நம் வீட்டில் இளமையுடன் இளம் தளிர் ஆக வந்து முதுமை
அடைந்து கிழவி ஆனாலும் குழவி போன்று குடும்பத்திற்காவே சுற்றி சுற்றி உழைக்கும் ஓரே ஜீவன் பெண் மட்டுமே. ஏன் வருகிறார்கள்
எதற்கு வருகிறார்கள் என்பது வேறு விஷயம். அதற்காக இவர்கள் தியாகிகளும் அல்ல என்பது வேறு விஷயம்.
ஏன் நூற்றாண்டுகள் கடந்தும் இவ்வாறு இருப்பது பெரிய
மாற்றமில்லாமல் இருக்கிறது என்றால் அது போற்றதக்க கூடிய ஒன்று என்பதால் தான். அதோடு நம்மை காபந்து பண்ணுகிறவர்களுக்கு ஓர் நன்றி கடன்
போல விஸ்வாசமாக இருப்பதால் தான். அதனால் தான் தாய்குலத்திற்கு ஒன்று என்றால் உலகமே
கிளம்ப தயாராக இருக்கிறது. இவர்களுக்கு மத்தியில் திருஷ்டி சுற்றி பூசனிக்காய் உடைத்து
கழிப்பது போல் ஒரு சிலர் பூமியில் சிஷ்டிக்கபடுகிறார்கள்.
இவர்களுக்கு மத்தியில் மெத்தனத்தால் மான கேடு ஆன, பிரச்சனையான ஒழுக்கமின்மையான காரி உமிழ கூடிய ஒன்றை வீணே தானே
சந்தனம் போல் பூசி கொண்டு இதனை ஓர் பகட்டு வாழ்க்கை என்று நினைத்து ஈடுபட்டு தன் குடும்பத்தை தானே ஓர் தீப்பந்தம் ஆகி சொருகி பஸ்பம்
ஆக்கிவிட்டு அதோடு தனக்கே பல துன்பங்களை தந்து கொண்டு தன் குடும்பத்தையே உருகுலைத்து கொண்டு காலம் கடத்தும் "இவ்வாறு ஓர் பெண் வீட்டார் இவ்வுலகில்" என்று வீணாக எதையும் பேசாமல் கற்பனை நாவலுக்குள்
செல்கிறேன். இதுவெல்லாம் எங்காவது நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை.
ஆனால் ஒரு பெண் குடும்பம் மற்றும் அந்த பெண் ஆனவள்
கணவன் இறந்துவிட்டாலோ அல் விவாகரத்து அடைந்து விட்டாளோ அல் தவறான நடத்தை கொண்டவள்
என்று பெயர் வாங்கிவிட்டால் அவரை காலம் முழுக்க தாங்கி பிடிக்க யாரும் இருக்க
மாட்டார்கள் ஒரு சிலரை தவிர்த்து. ஒரு சிலர் நான் Millinium Girl
அப்படி தான் இருப்பேன் என்பது போல் இருக்கிறார்கள். அவர்களும் புரிந்து கொள்ளவே இக்கட்டுரை.
சிக்கல் ஆன ஒன்று நமக்கு "சிக்" என்ற ஒன்றாக இருக்கலாம் அல் தெரியலாம்
சாமுராய் படத்தில் தெரிவது போல். ஆனால் அது பலருக்கு அதுவே விபரீதமாகி "செக்" ஆகி நிர்கதி ஆக்கி உள்ளது. ஈசன் படம், நம்ம வீட்டு பிள்ளை படம் etc போன்ற படங்கள் அனைத்தும் நம்மை கவனமாக, எச்சரிக்கையாக இருக்க சொல்லும் படங்களே. அதாவது
நம்முடைய சேர்க்கையை மறுபரிசீலனை செய்ய சொல்வது.
Millinium என்பதற்கும் நாம் வாழும் வாழ்க்கைக்கும் எந்தவித சம்மந்தமும்
இல்லை. Millinium பிறந்து விட்டதால் உலகில் ஏழையே இல்லை என்பதை போல் ஆகி விட்டதா
என்ன? சரி விஷயத்திற்கு வருவோம்.
சில பலமான வேள்விகள் போன்ற கேள்விகளை இந்த யாகம் போன்ற
கட்டுரையில் சுள்ளிகளாக போட்டு கேட்கிறேன்.
விதவைகள் என்பவர்கள் உலகில் எத்தனை பேர் உள்ளனர்? அவர்கள் எத்தனை பேருக்கு
மறுவாழ்க்கை கிடைத்துள்ளது?
இளம் வயதில் வயதானவரை திருமணம் செய்தும் நல்ல படியாக
வாழ்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இளம் வயது ஆணுடன் திருமணம் நடந்தும் விவாகரத்திற்கு ஏன் செல்கிறார்கள்?
நல்ல Chemistry இவர்களுக்குள் ஏன் இல்லை?.
விவாகரத்து ஆன பெண்களில் எத்தனை பேருக்கு மீண்டும்
வேறொருவருடன் திருமணம் ஆகி உள்ளது?.
காதலித்து பிரிந்த எந்த பெண்ணுக்காவது அதே காலேஜ்-இல், அலுவலகத்தில் வேறு ஆணுடன் காதலோ, கல்யாணமோ அதிக இடங்களில் நடந்துள்ளதா? பெரிதாக ஏன் நடக்கவில்லை?
பெண் அதிகமாக வாயாடுவாள் என்று தெரிந்தால் எத்தனை பேர்
இதற்கே வீட்டில் உள்ள அப்பா, அம்மா அனுமதியோடு திருமணம் செய்ய சம்மதம் தெரிவிப்பார்கள்?
கதி இவரே என்று போலியான மோசடியாளர்களை சமூக வளை
தளங்களில் நம்பி ஏமாந்து நிர்கதியானவர்கள் எத்தனை பேர் தெரியுமா? இன்றும் ஏதோ ஒரு செய்தி
வந்து கொண்டு தான் இருக்கிறது. செய்திகளில் வராமல் எவ்வளவு நடக்கிறதோ? ஆனால் நாம் சமூக வளை தளம் என்பது ஏதோ நம்முடைய படிப்பு
போன்ற முக்கியமானது போன்று நினைத்து ஒரு சிலது வேண்டாம் என்றாலும் விட
மறுக்கிறோம்.
பெண் வீட்டாரையும், பெண்ணையும் கல்யாணம் செய்து கொள்ள போகும் மாப்பிள்ளை வீட்டார்கள்
முதல் ஊர், தெரு, காலேஜ், அலுவலகம் என்று அனைவரும் கண்ணும் கருத்துமாக கவனித்து
கொண்டிருக்கிறார்கள். பிக் பாஸில் சொல்வது போல் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது All Are Watching. ஆனால் நம்மிடம் எதையும்
கூறமாட்டார்கள். ஏன் Watching என்றால் அவர்கள் வீட்டின் உறுப்பினராகும் விஷயம் என்பதால் தான். அவர்கள் விருப்பமே மேலோங்கும் தகுதியான விருப்பம்
ஆகும். அதனால் தான் அவர்கள் வீட்டின் உறுப்பினரான பின் அவர்கள் விருப்பம்
என்னவோ அதுவே உன் விருப்பம் ஆக இருக்க வேண்டும் என்று புகுந்த வீட்டிற்கு செல்லும்
பெண்ணிடம் கூறுகிறார்கள். இது அனைத்தும் முன்னோர்கள் வழிகாட்டுதலில் நடைபெற்று
கொண்டிருக்கிறது.
நம் வீட்டில் அங்கத்தினர்களாக ஆகவில்லையென்றாலும்
நண்பர்கள், உறவினர்கள் யாராவது கேட்டாலோ பெண் வீட்டாரை பற்றி முழுவதும் கூறுவது
இதனால் தான்.
ஆனால் பெண் வீட்டார்கள் மாப்பிள்ளை வீடு என்பதை முழுவதும் விசாரித்து
விட்டு பிடிக்கவில்லையென்றால் வேண்டாம் என்று கூறுவார்கள் அது வேறு காரணத்திற்காக.
பெண் வீட்டார்களுக்கு மாப்பிள்ளை என்பவர் நம் பெண்ணை
கட்டிய ஓர் பெரிய உறவு , சொந்தம் மட்டுமே. மாப்பிள்ளை வேண்டுமென்றால் தட்சனை போதவில்லை என்றோ, எனக்கு ஒரு சில பிரச்சனை இருக்கிறது அதனை தீர்த்து
வையுங்கள் என்றோ கூறலாம். மற்றபடி பெண் வீட்டார் சம்பந்தபட்டதில் பெரிதாக எதிலும் தலையிட
முடியாது, கட்டளையிட முடியாது. பெண் வீட்டார் வீட்டில் வீட்டோட மாப்பிள்ளையாக
சென்றால் கேவலம் என்று கூறபடுகிறது. ஏனென்றால் தட்சனை வாங்கி கொண்டு நீ தான் பார்த்து கொள்ள வேண்டும். மற்றபடி திராணி இல்லாமல் கையாலாகதவன் போல நீ இருக்க கூடாது. அதாவது தட்சனை வாங்குகிறாய் என்றால் பார்த்து கொள்ளும்
தகுதி நமக்கு இருக்க வேண்டும். அதனால் தான் உனக்கெல்லாம் எதுக்குடா கல்யாணம் என்று ஒரு சிலரிடம்
கூறுவார்கள். அதாவது வேலை வாங்கி கொடுங்கள் என்று கூறலாம். அப்படியே வேலையும் நீங்களே செய்யுங்கள் என்று கூறினால்
சரியாக இருக்குமா?
மாப்பிள்ளை வீட்டார் போன்றெல்லாம் பெரிதாக எல்லாம்
ஒன்றும் கிடையாது. ஆனால் மாப்பிள்ளை வீட்டில் பெண் என்பவள் ஓர் வரவு ஆக அவர்களுடனே
நிரந்தரமாக வசிப்பவள் மற்றும் இன்பம், துன்பத்தை பங்கிட்டு கொள்பவள். ரேஷன் கார்டில் புதிய வரவாக
இணைபவள். அதோடு மாப்பிள்ளை வீட்டாரின் பரம்பரைக்கான வாரிசை பெற்று தருபவள் என்று
மாப்பிள்ளை வீட்டார் விஷயத்தில் தான் அதிகம் உள்ளது. பெண் வீட்டார் என்பவருக்கு மாப்பிள்ளை வீட்டார் போன்று
பெரிதாக ஒன்றுமில்லை. அதோடு மாப்பிள்ளை வீட்டார் குடும்பத்தில் எதாவது விசேஷம்
என்றால் மருமகளாக வந்தவர்களுக்கான பங்களிப்பு பெரிதாக இருக்கும். அதனால் தான் அந்த காலத்தில் பெண்ணிற்கு ஆட தெரியுமா, பாட தெரியுமா என்று கேட்டுள்ளனர். கூத்து எதாவது கட்டுவதற்கா அல் நடிக்க வைக்க, பாட வைக்க போகிறார்களா என்று தெரியவில்லை. ஒரு வேலை சிறப்பு தகுதிகள்
இருந்தால் முன்னுரிமை கொடுப்பார்களா என்று தெரியவில்லை.
அதனால் தான் ரொம்ப பெண் வீட்டார் எதாவது பேசினால்
கட்டளைகள் போன்று இட்டால் இந்த இடம் நமக்கு வேண்டாம் என்று கூறுவது மற்றும்
அதிலிருந்து ஒதுங்கி கொள்வது.
பொதுவாக பெண்கள் இதுவரை எந்த சமூகம் சார்ந்த
பிரச்சனையிலும் அலுவலகத்தில் மற்றும் சமூக வளைதளங்களில் கூட பெரிதாக பேசியதும்
இல்லை, கலந்து கொண்டதும் இல்லை. தினமும் தொலைகாட்சியில் நாடகத்தை
தவிர்த்து செய்தி தாள்கள் மற்றும் செய்தி சேனல்கள் பார்க்கும் மற்றும் படிக்கும்
பழக்கம் பெண்களுக்கு மிகவும் குறைவே. அரசியல் பேசி நான் கேட்டதே கிடையாது. இவ்வாறு சமூகம் சார்ந்த எதிலும் பெரிதாக ஈடுபாடு
இல்லாதவர்கள் பெண்கள். சமூக வளை தளங்களில் பெண்கள் எத்தனை பேர் தன் கருத்தை தெரிவித்து இருக்கின்றனர், வெளிபடுத்தி இருக்கின்றனர் Comment வரை என்று பார்த்தால்
பெரிதாக எதுவும் இல்லை. அவ்வாறு குறைந்த எண்ணிக்கையில் இருந்தால் அது கணக்கில் வராது. ஏனென்றால் அவர்கள் சங்க காலம் முதல் பூமி அழியும் வரை
இருக்கவே செய்வார்கள். இவ்வாறு இருப்பினும் அவர்கள் இன்றளவும் போற்றபடுகிறார்கள் என்றால்
அதற்கு மேற்கண்டவைகளே காரணமாகும்.
பிறகு பெண் உரிமை என்று எதை கூறுகிறார்கள் என்றால்
அவர்கள் மஞ்சமுடன் தஞ்சம் வேண்டும் என்று புகுந்த வீட்டில் வந்துவிட்டு அங்கு தான்
இது குறை, அது குறை என்று கூறுகிறார்கள். அதோடு அவர்களுடைய வட்ட பாதையின்
சுற்றளவும் இதோடு முடிந்து விடுகிறது. அவர்கள் கணவனை திருத்துவது முதல் ஆளாக்குவது
வரை எதற்காக என்றால் அப்போது தான் அவர்கள் சுகமாக வாழ முடியும் என்பதால் தான்
அதோடு புருஷன் மீது உள்ள அக்கறையும் தான். கணவன் கெட்ட பழக்க வழக்கத்தில் அடிமை ஆகி விட்டால் அதோடு எதாவது
கேன்சர் போன்ற நோய் வந்து விட்டால் தன் பாடு திண்டாட்டம் ஆகி விடும் அது கூடவே
அளப்பரிய பாசத்துடன் தான் கூறுகிறார்கள். அதனால் தான் அனைத்திலும் எங்கள பத்தி நினைக்காமா இப்படி நடக்கலாமா
என்பது. இதில் தான் குடும்ப சண்டைகள் வருகிறது. வேலையில்லா பட்டதாரி -2 படத்தை போல. இவ்வாறெல்லாம் தன்னுடைய நிலமை தெரிந்து பாசத்துடன், அன்புடன் நடக்கும் பலருக்கு மத்தியில் சிலர் எதையும் தெரியாமல், புரிந்து கொள்ளாமல் நடப்பது வியப்பை தருகிறது.
என்றும் எங்கும் பெண்கள் சுற்றளவு சோழியும்
கும்புடியும் சும்மா ஆடுமா என்பது போல் குடும்பத்தோடு முடிந்து விடுகிறது. அலுவலகங்களிலும் பாலியியல், Promotion சார்ந்தோ etc வரும் பிரச்சனைகளை தான்
நண்பர்களிடமும், கணவனிடமும் கூச்சலிடுவார்கள். மற்றபடி அலுவலத்தில் இடியே விழும் பிரச்சனைகள் தன்னை தவிர்த்து
ஆண்களுக்கு எவருக்கு இருந்தாலும் பாவம் டீ அவர் என்று கூறி விட்டு
சென்றுவிடுவார்கள் அல் அவரிடம் என்ன சார் உங்களுக்கு போய் இப்படியெ நடக்குது என்று
கூறி விட்டு சென்று விடுவார்கள். ஒரு சிலர் குரல் கொடுக்கலாம் அவ்வளவே.
இது அனைத்தும் சரியோ,
தவறோ இதுவே இவ்வுலகில் நடக்கும் பிராக்டிக்கலான விஷயம்
ஆகும். இதனை நாம் என்ன கூறினாலும் இனியும் இதே பாதையில் தான் செல்ல
போகிறது. மகளிர் அமைப்பு முதல் மாதர் சங்கம் வரை பெண்களின் குடும்பம் சார்ந்த மற்றும் பாலியியல் சம்பந்தபட்ட கொடுமைகளுக்கு தான் போராடுகிறது. மற்றபடி வேறு எதுக்கும் போராடியதாய் தெரியவில்லை. செய்தி தாள்களிலும் பெரிதாய் எந்த ஆணுடன் பேச அனுமதிக்க
மறுக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை என்றெல்லாம் ஒரு பெண் கூறியதாகவோ அதற்காக
மகளிர் அமைப்பு, மாதர் சங்கம் போராடியதாகவோ எந்த செய்திதாள்களிலும், சேனல்களிலும் வந்ததில்லை.
காவல் நிலையத்திலும் இது போன்ற விஷயங்களை புகார்களாக
வரதட்சனை கொடுமை போன்று கொடுத்ததும் இல்லை. வரதட்சனை என்பதே எங்கள் வீட்டில் புது வரவாய் வருபவரிடம் வரவாக
வாங்கும் தட்சனையாகும். குரு தட்சனை போன்று.
அதனால் தான் நல் வரவாக வந்த பெண் இறந்துவிட்டால்
எதுவும் யாரும் திருப்பி தருவதில்லை. தட்சனையாக கொடுக்கபட்ட பொருள் என்றும் வாங்கியவருக்கு உரியதாகும்
என்பது குறிப்பிடதக்கது.
அதாவது அந்த பெண்ணை புது வரவு ஆக என் குடும்பத்தின்
அங்கமாக சேர்த்து கொண்டு அவளின் வரவு, செலவு முதல் அனைத்தையும் பார்த்து கொள்வதற்கு பெண் வீட்டார்
கொடுப்பதே தட்சனை ஆகும். இது நம் முன்னோர்கள் உலகம் முழுக்க இப்படி முறையாக ஒரு
சம்பிரதாயத்தை வகுத்து அமைத்திருக்கிறார்கள்.
இது குத்து மதிப்பாய் ஒரு சிலரிடம் கேட்டு அறிந்தது
தான். இதனை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள நினைத்தால் இதை பற்றி நன்றாக
தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து புரிந்து கொள்ளுங்கள்.
தட்சனை முதல் பிச்சை வரை அனைத்திலும் நம் முன்னோர்கள்
பகுத்து ஆராய்ந்து முறைபடுத்தி தான் கூறி உள்ளனர்.
நாம் மோசமாக ஓர் கொடிய பாதிப்பை அடைந்து மோசமான
நிலைக்கு தள்ள பட எதற்கு மோசடிகள் செய்ய வேண்டும். மோசடிக்கு எந்த நல்ல பெயர் வைத்து கூறினாலும் அது மோசடியே. மோசடிகள் இது வரை மோசடி செய்தவர்களை சாவடி என்கிற
மாதிரி தான் ஆக்கி உள்ளது.
மேற்கண்டவற்றை புரிந்து கொள்ளாமல் நடப்பவர்களை மற்றும்
விவாகரத்து என்று நடந்து தன் வாழ்க்கையை இழந்தவர்களை" டீ கடை பெஞ்ச்" என்கிற மன்றத்தில் "இவ்வாறு ஓர் பெண் வீட்டார் இவ்வுலகில்" என்று பேசுவது தான் இது. மற்றபடி எந்தவொரு பெண்ணையும் மற்றும் பெண் வீட்டாரையும்
குறிப்பிட அல்ல. அதற்காக விவகாரத்து என்பது பெண் வீட்டார் மீது மட்டுமே தவறு
இருந்து நடப்பதாக அர்த்தம் அல்ல. யாரும் 100% எந்நேரமும் அன்பாக, பாசமாக மட்டுமே நடக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் மனிதர்களே குற்றம், குறைகள் என்பது இருபாலருக்கும் இருக்கும் என்பது ஒரு
வித மனித இயல்பே ஆகும். பலர் காமாலையில் இருந்து கண் விழித்து, புரிந்து செயல்பட்டு இன்புற்று வாழவே இந்த ஆர்டிக்கல்.
முகமதியர்களின் சுல்தான் ஆட்சியில் "பராக்" என்றால் "வரார்" என்று அர்த்தம். பேட்ட பராக் போல வீரா வரார், வைரா வரார், ராச வரார் என்பது. இது அனைத்தும் ஒன்றாக அதோடு பெயரில் பல PUNCH வசனங்களுடன் இருக்கும் நான் என்றென்றும் உங்களுக்காக நான் எழுத்துக்கள் அடங்கிய ஆர்டிகல்லாக உங்கள் மனதில் வரைய "வரார்" என்று வந்து கொண்டே இருப்பேன். அதோடு என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.
இது அனைத்தும் உண்மையா,
பொய்யா என தெரியவில்லை.