சாட்டையை சுழற்றி வரலாற்றில் சாணக்யன் ஆக போட்டி முதல் பகிரங்க பேட்டி வரை பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி புரட்டி போடும் மதியுடன் கூடிய ஹிஸ்டரி ரைட் ஜிம்னாஸ்டிக் "வியூக ராஜ்ஜியம் ஓர் திருப்பு முனை " [TURNING POINT STRATIGICAL]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.
சாட்டையை சுழற்றி வரலாற்றில் சாணக்யன் ஆக போட்டி முதல் பகிரங்க பேட்டி வரை பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி புரட்டி போடும் மதியுடன் கூடிய ஹிஸ்டரி ரைட் ஜிம்னாஸ்டிக் "வியூக ராஜ்ஜியம் ஓர் திருப்பு முனை ஆகும்.
அரசாட்சி முதல் மக்களாட்சி வரை சில சமயங்களில்
எந்த வித மனசாட்சியும் இல்லாமல் பல விஷயங்களில் சாட்சியே இல்லாமல் வகுப்பதே "வியூகம்" ஆகும். மகாபாரதம், இராமாயணம் முதல் பல புராணங்களும்,
இதிகாசங்களும் வியூகங்களின் "காட்சி"-யாகும்.
யுத்தத்திற்கு அடிப்படையானதே "வியூகம்" ஆகும். இதில் பல யூகங்கள் அடிப்படையிலும் வியூகங்கள் அமைப்பார்கள்.
பல லோகங்களை கைப்பற்றியதாக சொல்லும் அத்தனையும் "வியூகம்" என்பதால் மட்டுமே முடிந்தது. யுகம் யுகமாய் அனைத்தையும் "ஆண்டது" முதல் "மாண்டது" வரை நடந்தது இந்த "வியூகத்தால் தான். ஆண்டவர்கள் ஆண்டு
முழுவதும் ஆண்டு கொண்டிருப்பது மற்றும் ஆண் ஆண்மையுடன் வீர தீர செயல்களில் வெற்றி
பெறுவது மற்றும் வாணிபத்தில் கலைவாணி துணையோடு துணை நின்று ஓர் வீணையுடன் யானை
சேர்வது போல் இருப்பது வியூகம் ஆகும். இதை "பானை" செய்வது போல் கவனத்துடன் செய்ய வேண்டும். இல்லையென்றால் நாம்
கேனையாவது நிச்சயம். வியூகம் என்பதே ஓர் "கலை" ஆகும். இதில் நாம் ஓர் கலைமாமணி -யாக இருந்தால் நம்மிடம் "மணி என்கிற பணம்" கொட்டும்.
இந்த வியூகத்தால் கோடிகணக்கான பேர் கோடிகளை அள்ளவும்
முடியும். கோடிஸ்வரன் ஒருவரை தெரு கோடியில் நிற்க வைக்கவும் முடியும்.
வியூகத்தால் எட்டுபட்டியையும் வாங்கவும் முடியும். பட்டிதொட்டியெல்லாம்
பிரபலமாகவும் முடியும். சரியில்லையென்றால் நாம் வியாபாரத்தில் சரிந்து சரிவான
பாதையில் பட்டியில் அடைபட்டது போல் அடைபடவும் முடியும். வியூகம் என்பது நமக்கு
சரியான ஓர் "அடைகலம்" ஆகும். இது ஓர் "தேன் அடை" போன்றது. அடையில்லாமல் தேன் சேர்க்க முடியாது. அதுபோலத்தான்
இதுவும். தான் தான் எல்லாம் என்று வாழவும், தாழாமல் எதிலும் நம்மை தாழ்த்தி கொள்ளாமல், தாழ்வான காரியங்களை செய்யாமல், தாராளமாக அள்ளி கொடுத்து, கஷ்டம் மற்றும் எதிலும் நஷ்டம் என்பது படாமல்
எல்லாவற்றையும் தாண்டி செல்வதற்கும், நம் வாழ்க்கை மற்றும் தொழில் எனும் தாழி உடையாமல் இருக்க "தாலி" போன்ற ஓர் முக்கியமான ஒன்று இந்த "வியூகம்" ஆகும். இது பலரை "காலி" செய்யகூடியது. இது நமக்கு ஓர் "வேலி" போன்று காத்து நிற்கும்.
பெரும்பாலும் வியூகங்கள் அனைத்தும் ஓர் ஜிம்னாஸ்டிக்
போன்றது. "ஜிம்னாஸ்டிக்" என்பது "ஸ்டிக்" போன்று வளையாமல் இருப்பது அல்ல. எல்லாவற்றிலும் "ஸ்டிக்ட்"-ஆக வளைவதே ஜிம்னாஸ்டிக் ஆகும். ஜிம்னாஸ்டிக் போன்றதே
வியூகங்களாகும். இதனை "ஜிம்" போல நாம் அனைத்திலும் உடற்பயிற்சி செய்வது போல் பயிற்சி மேற்கொண்டு "வியூக பயிற்சி"-யில் தேறி இருந்தால் எதிலும் அயர்ச்சி இல்லாமல், நாம் அனைத்திலும் வெற்றி பெற்று ஜிலேபி சாப்பிடுவது
நிச்சயம்.
வியூகம் என்பது "தும்பிக்கை" போன்று பலமானது. அதை "அம்பிகையை" வணங்கி "நம்பிக்கையுடன்" நம்பமுடியாத அளவிற்கு நம்மை "நம்பி" இருப்பவர்கள் நம்முடன் இருக்கவும், தம்பிமார்களுடன் சேர்ந்தோ அல் தனியாகவோ, "வெம்பி" போகாத அளவிற்கு வியூகத்தை வகுக்க வேண்டும்.
வியூகம் பலமானது மற்றும் பலமுகங்களை கொண்டது. இது பலரையும் பலவிதமாக
எதையும் செய்யகூடியது. இது "பல்லக்கும்" தூக்கவைக்கும். "பல்லாக்கும்" தூக்கவைக்க கூடிய ஓர் பல்பொருள் அங்காடி போன்றது. இது பல்லை உடைத்தது பொக்கையாக்கி நமக்கு "யாக்கை"-யை தர கூடியது. இதை ஓர் "வேட்கையாக" கொண்டு நாம் வேட்டையாட வேண்டும். அப்படி ஆடினால் எதிரிகளுக்கு
தோல்வி என்ற "வேட்டு" சத்தம் நிச்சயம். அதற்கு வியூகத்தால் அவர்களை "ஆட்டு ஆட்டு" என்ற ஆட்ட வேண்டும்.
என்றும் செம்மையானது இது. செம்மண்ணில் வீடு கட்டினாலும்
வலிமையாக இருக்க செய்வது. எதிரிகளின் செங்குருதி-யை செங்கல் உறுவுதல் போல சரிக்க
மற்றும் செரிக்க கூடியது.
ஆடுகளத்தில் ஆடு போல் பலி ஆகாமல் ஆட்டம் போட்டு
வெற்றியாட்டம் ஆடுவதற்கும், ஆடி தேரோட்டம் போல் ஆடி தீர்ப்பதற்கும் முக்கியமானது இது.
விக்னங்களை தீர்க்கும் தீர்வு மற்றும் புனிதமான
தீர்த்தம் போன்றது இந்த வியூகம். எல்லாமே "தூக்கல்" உடன் தூள் கிளப்புவதற்கு மற்றும் "ஆக்கல்" அனைத்தும் நம்முடையதாக இருப்பதற்கு வியூகம் முக்கியமாகும். இது இருந்தால் எல்லாமே ஆகும். இந்த முக்கியமான
ஒன்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தால் எதிரிகளை "முக்கி முக்கி" எடுக்கலாம். எதிரிகளுக்கான ஓர் வைரஸ் ஜூரம் "வியூகம்" ஆகும். இது எதிரிகளை "நுங்கு" உரிப்பது போல் உரித்து "சங்கு" ஊத வைக்க கூடியது.
சோலையில் "பாளை" விடுவது போல் இது நம்முடைய மனதில் வியூகம் சரியாக தோன்றினால்
வெற்றி நிச்சயம். பிறகு நாமும் பாளையகாரர்கள் போல பலவற்றை வாங்கி என்றென்றும்
விசேஷம் கொண்டாடி இன்பமாக வாழலாம். தவறானால் இது "விஷம்" குடித்தற்கு சமம்.
ரைட் வியூகம் ஓர் ரைஸ்மில் போன்றது. அரிசியை தனியாக
எடுப்பது போல் நமக்கு எது வேண்டுமோ அதை பிரித்தோ (அல்) மற்றதை சேர்த்தோ தரவல்லது. இதனை நாம் ஓர் நல்ல Riding போல ஓட்ட தெரிந்தால்
வாழ்க்கையில் அனைத்தையும் சீக்கிரம் பெறமுடியும். எந்த வித சீக்கும் இல்லாமல்
எதிலும் சிக்கல் இல்லாமல் அதோடு எதிலும் சிக்காமல் சிக்னலை கடக்க முடியும்.
எதிலும் செக்கு போல் சுற்றாமல் எதிரிகளை பேர்அடியால்
எத்தனைபேர் இருந்தாலும் அத்தனை பேருக்கும் இரத்தத்தால் (அல்) தோல்வியால் செக்க சிவப்பாக்கி அவர்களுக்கு "செக்" வைக்க கூடியது.
வியூகத்தை சார்ந்திருந்தால் நாம் எந்த சார்பும்
இல்லாமல் மற்றும் எந்தவித அபச்சாரமும் நடக்காமல் "சார்வால்" என்ற பெயருடன் மரியாதையாக வாழலாம்.
வியூகம் என்பதற்கு மானம், ஈனம், சூடு, சொரனை, கௌரவம் என்பதெல்லாம் கிடையாது. ஆனால் லட்சியத்தில் மானம் போகாமல்
இருக்க சூடு, சொரணையுடன் செயல்பட கூடியது.
இது ஜிம்னாஸ்டிக் போல எல்லாவற்றிலும் வளைந்து கொடுக்க
கூடியது. நாம் என்ன நினைத்தோமோ அதை "வரம்" போல் பெற்று தரக்கூடியது. வியூகம் என்பதில் பெரும்பாலும் நேர்மை
என்பதைவிட எதையும் செயலில் மேன்மையாகவோ, மென்மையாகவோ, கரடுமுரடாகவோ நாம் நினைத்ததை நடத்தி கொடுக்க கூடிய ஒன்றாகும். இது
ஓர் சகுனி. இது ஓர் கூனி போன்றது ஆகும். சரித்திரம் என்று சொல்லக்கூடிய
அனைத்தும் வாழ்ந்தது, வீழ்ந்தது என்பது வியூகத்தால் மட்டுமே. இது பிள்ளைகள், சகோதரர்கள் மற்றும் மனிதர்களை காப்பாற்றவும் செய்யும்
அழிக்கவும் செய்யும். E.g:- அசோகா சாம்ராட் ஷாருக்கான் படம். கள்ளிபால் வைத்து கொல்வது, பஞ்ச பாண்டவர்கள் மகாபாரதம் சொந்த காரர்களையே கொல்வது. இதற்கு பாசம், நேசம் என்பதே கிடையாது. நாம் நினைத்ததில் பாசம், நேசம் கொண்டு இருக்க கூடியது.
நேர்மையான வியூகங்களும் இருக்கவே செய்கின்றன. ஆனால் வியூகத்திற்கு "ரைட்" என்பது நாம் நினைத்தை நடத்தி கொடுப்பது மட்டுமே "ரைட்" ஆகும். அதற்காக காற்றை போல எங்கும் செல்ல கூடியது. எதையும் துளைத்து சென்று அவர்களை துளைத்து எடுத்து
விட்டு, நம் லட்சியத்தை துளைக்காமல் திரும்ப கூடிய பிரம்மாஸ்திரம் போன்றது இந்த வியூகம். இதற்கு சாஸ்திரம் போன்று வரையறை கிடையாது.
அந்த காலத்தில் பல ஜில்லா-க்களை ஜில்லாகேடி-களாக
கைபற்றியவர்கள் முதல் இந்த காலத்தில் ஆட்சியை பிடித்தவர்கள் வரை வியூகம் அமைத்து
செயல்பட்டதால் தான் ஈடேறியது. ஆட்சியின் காட்சியை முடிவு செய்வது வியூகங்கள் தான்.
இதில் " நயவஞ்சம்" கொஞ்சகாலமோ, நிரந்தரமாகவோ நயமாக "தஞ்சம்" பெற்று இருக்கும். இங்கு துரோகம் என்பது உடம்பில் ரோகம் போல்
இருப்பது.
பல இடங்களில் ராஜ்ஜிய ஹிஸ்டரி என்பதே வியூகராஜ்ஜியம்
தான். இதில் பரிட்சையம் இல்லையென்றால் நமக்கு நடப்பது அனைத்துமே ஓர்
பாடம் ஆகி தோல்வியில் கற்க வேண்டியது தான்.
ஹிந்துஸ்தானம் முதல் அனைத்து சமஸ்தானங்களும் வியூகம்
என்ற "தானம்" பெற்றே எழுப்பப்பட்டது. ஹிட்லரின் மிக பெரிய வியூகங்கள் போரில்
வகுத்து இருக்கலாம். ஆனால் அவரின் பெரிய வியூகமே அவர் தோல்வியுற்றால் தற்கொலை
செய்து கொள்வது என்பது தான். அதுவும் ஓர் வியூகமே. கைதி படம்.
சிங்கத்தளபதிகள் மற்றும் மன்னன் என்பவர்களையெல்லாம்
வியூகத்தால் மண்ணை கவ்வ வைத்து அசிங்கமாக்கி வீழ்த்தபட்ட பல கதைகள் வியூகத்தில்
உள்ளது. சிகை அலங்காரம் செய்து சிங்காரமாய், ஒய்யாரமாய் திரிந்த பலரை சிதைத்துள்ளது. இதில் விவேகம் என்பது
நம்மில் இருந்தால் வியூகத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்புண்டு.
மன்னராட்சி, ஆங்கிலேயே ஆட்சி முதல் சுதந்திரம் அடைந்து மக்கள் ஆட்சி என்று
கூறுகின்ற அரசியல்வாதி ஆட்சி வரை எட்டுதிக்கும் ஆள்வது இந்த வியூகம் தான். பல கட்சிக்கு ஆட்சி
எட்டாகனியாக இருக்க செய்வதும் இந்த வியூகங்கள் தான்.
"கண்டம்" என்பது "கண்டம்" விட்டு "கண்டம்" தாவும் ஏவுகணையில் இருந்து, மார்கண்டேயன் கண்டம் போல் நீடித்த ஆயுள் உடன் இருப்பதில் இருந்து, எமனின் எமகண்டம் வரை முடிவு செய்வது இந்த வியூகங்கள்
தான். ஆட்சியின் காட்சி காட்சியில் மீட்சி போன்ற அனைத்துமே உலகம் முழுக்க மூழ்காத
ஓர் கத்தி கப்பலாக கூடவே கனமான நங்கூரத்துடன் இருப்பது இந்த திமிங்கல வியூகம்தான். இதற்கு மேற்கண்ட அனைத்துமே சக்கரை பொங்கல் தான்.
அனைவரின் வாழ்க்கையையும் சங்கு சக்கரம் சுத்துவது போல் சுத்த வைப்பது இந்த வியூகம்
நம் வாழ்க்கையில் சுத்துவதால் தான். வாழ்க்கை ஓர் சக்கரம் என்பார்கள். சக்கரம் சக்கை போடு போடுவதும் சக்கை போல் கீழே விழுவதும் இதன்
கையில் தான் உள்ளது.
இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என்று தெரியவில்லை.
https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html