தோல் உரித்து கூறு போடும் சில அருவா வெட்டு?" [LIGHT WEAPON ATTACK}

 

 

கோலாகலமாக தெய்வத்தால் உயர் குலத்தில், பரம்பரையில் சகல வசதிகளுடன் அனைத்து சௌகர்யங்களுடன் எந்த கடினமான உழைப்பும் இன்றி உச்சாணி கொம்பில் மேட்டு குடியில் பிறந்து விட்டு பெருமை போதையில் நாங்கள் பால் போன்று தூயவர்கள் என்று கருதி தள்ளாட்டம் கொண்டு அதனை தம்பட்டம் அடித்து சொல்லி தங்களை தாங்களே ஆறுதல் அடைந்து திரிபவர்கள் இவர்கள். அதோடு மேற்கண்ட பாகுபாடு பார்த்து வாழ்பவர்கள் தாழ்ந்து வாழும் கேவலமானவர்கள் ஈடுபடும் நீச்சமான பாதக காரியங்களில் கள்ளி பால் குடித்து தப்பித்து ஆனால் உடம்பு முழுக்க நாடி நரம்புகளில் இரத்த நாளங்களில் கள்ளம் ஏறி  இருப்பவர்கள் போன்று வெறி கொண்டு களவாணி தனத்தில் ஈடுபடலமா? இவர்கள் பாலா கள்ளி பாலா?  உயர் பிறவியா பாவ பிறவியா?  இந்த களவானிகள்? தோல் உரித்து கூறு போடும் மெல்லிய லேசான கோடிகளுக்கு சமமான சில பக்காவான அருவா வெட்டு துண்டுகளுடன் கரையேறும் கனைகள்?" தேன் போன்ற தித்திக்கும்  வாணியாக★புரட்சி கவிஞர் Valavanur V.R.S.LINGAM.

கோவிந்தா கோவிந்தா





வைராவீராராச என்று பல பெயர்களுடன் ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய வாசகர்களே.

இது எந்தவொரு ஜாதியையும், குலத்தையும், பரம்பரையும் குறை கூற எழுதியது அல்ல.   இது அனைத்தும் யாரையும் குறிப்பிடுவன அல்ல.  கோடிகள் வைத்திருப்பவர்கள் கோடிகள் பெறுவதற்கு உயர் குணங்கள் கண்டிப்பாக தேவை.  இல்லையென்றால் தெருகோடியில் தான் நிற்கும் படி ஆகும். கோடிஸ்வரர்களின் வாரிசு என்று கோடிகளில் கோலகலமாக அதற்கான எந்த உழைப்பும் இல்லாமல் பெற்றவர்கள், வாழ்பவர்கள் அனைவருக்கும் அது ஈஸ்வரன் கொடுத்த பரிசு ஆகும்.  ஏன் அது பலருக்கு பரிசாக கிடைக்க வில்லை?  வாரிசாக பிறக்க முடியவில்லை?  அதோடு அனைவராலும் ஏன் முடியவில்லை?

சகல வசதிகளுடன் மற்றும் அனைத்து சௌபாக்கியங்களுடன்  உச்சாணி கொம்பில் எந்த கடினமான உழைப்பும் இன்றிஉயர் குலத்தில்பரம்பரையில் பிறப்பது மற்றும் வாழ்வது என்பது நாம் முற்பிறவியில் பலருக்கு நன்மை செய்து வாழ்ந்ததால் இந்த ஜென்மத்தில் தெய்வம் நமக்கு கொடுத்த பரிசாகும்.  சாஸ்திரமே இதை கூறுகிறது.  இதை மட்டுமல்ல உயர் குலத்தில் பிறந்தவன் எப்படி நடக்க வேண்டும்மற்றும் அவர்கள் குணம் எப்படி இருக்க வேண்டும்என்று வரையறுக்கபட்டிருக்கிறது.

உயர் குணங்கள் யாருக்கு இருந்தாலும் அவன் தாழ்ந்த குலத்தில் பிறந்தாலும் உயர் குலத்தில் பிறந்தவனுக்கு சமம் ஆகும்.  அதாவது இனி அவர் உயர் குலத்தை சேர்ந்தவர். ஜாதி பெயர் எதுவாக இருந்தாலும். மனதில் கள்ளம் ஏறி கேவலத்தில் வெறி கொண்டு ஈடுபடுபவர்கள் உயர் குலத்தில் பிறந்தாலும் அவர்கள் அனைத்திலும் தாழ்ந்து வாழ்பவர்களாகவே கருதபடுவார்கள்.  

பால் போன்ற தூயவர்கள் என்று சொல்லி கொள்வது என்பது அவர்களுக்கு ஆறுதல் ஆக அவர்களே சொல்லி திரிவது போன்றதே ஆகும்.  தூய பால் போன்ற குணமுடையவர்கள் செய்யும் காரியங்களே இதுவென்றால் கள்ளி பால் என்கிற விஷ பால் குடித்து தப்பித்து ஆனால் உடம்பு முழுக்க நாடி நரம்புகளில்இரத்தத்தில் விஷம் போன்ற கள்ளம் ஏறியது போல் இருப்பவர்கள் செய்யும் பாவ காரியங்கள் என்னென்ன?    

உயர் ஜாதியில் பிறந்தவர்கள் கேவலமான நீச்சமான காரியங்களில் இப்பிறவியில்  ஈடுபட்டால் அடுத்த பிறவியில் மோசமான முறையில் கஷ்டங்கள் மட்டுமே உள்ள பிறவியை எடுத்து வாழ்வார்கள்.   

பாகுபாடு பார்த்து வாழ்பவர்கள் நம் குலத்திலேயே உயர் குணங்களோடு பலர் வாழ்கிறார்கள்.  அவர்களோடு உங்களை பாகுபடுத்தி பார்த்திருந்தால் எவரும் நீச்சமான, பாவ காரியங்களில் ஈடுபடமாட்டார்கள்.  களவாணிகள் அனைவரும் மனதில் கள்ளம் உடையவர்களும் அல்ல.  கள்ளம் உடையவர்கள் மட்டுமே மோசமான களவாணிகளாக கருதபடுவார்கள்.  ஏனென்றால் அவர்களை திருத்திவிட முடியும்.  உங்களை சற்று கடினம் தான்.

உயர் குடிமக்கள் ஆக வேண்டும் என்றால் உயர் குடியில் மட்டும் பிறந்தால் மட்டும் போதாது. அதோடு உயர் குடிகளாக ஆகி விட முடியாது. உயர் குணங்கள் அவசியம் இருக்க வேண்டும்.

சில கனைகள்:-

ஒருவனை காதலிக்கும் பெண்ணிடம் அவனை குறை சொல்லி என்னை திருமணம் செய்து கொள் என்று கூறுவது எதற்கும் வக்கு இல்லாதவன் கூறுவது. ஒவ்வொரு மாநிலத்திலும் பல பெண்கள் இருக்கிறார்கள்.  அதோடு இதுவரைக்கும் தமிழ் படம் ஒரு சிலதை தவிர்த்து உலகில் நடந்ததில்லை. இது உயர் குணமா?

சின்ன பையன் என்று ஒருவரை குறிப்பிட்டு விட்டு பின் அவரை நமக்கு சமமாக நினைத்து நீயா, நானா என்று போட்டி போடுவதாய் நாமே கூறினால் நாம் பெரியவரா? சிறியவரா? அல் அவர் சின்னவரா?  பெரியவரா?  இது உயர் குணமா?

நான் சொல்வதை கேள் என்று ஒருவரை அனைத்திலும் தொடர்ந்து கட்டாயபடுத்தி கூறி கொண்டே இருந்தால் நாம் சொன்னது சரியா? தவறா?  அதோடு நாம் சரியாக தான் கூறினோமா?  இது உயர் குணமா?

நம் மகளின் மீதே நாம் பாசம் இல்லாமல் இருந்துவிட்டு அதை பெரிதாக யாரென்றே தெரியாத திருமணம் செய்யும் வேறொருவரிடம் அதை எதிர்பார்ப்பது உயர் குணமா?

மாப்பிள்ளைக்கே பொருள் உதவிகள் முதல் பிற உதவிகள் செய்வது வரை பிச்சை போடுவது போல் என்று கூறினால் நாம் மற்றவருக்கு கொடுப்பது என்னவென்று அர்த்தம்?.  முதலில் யாருக்காவது கொடுப்போமா?  கொடுத்திருக்கிறோமா என்ற கேள்வி எழாதா?  இது உயர் குணமா?

மாப்பிள்ளைஉறவு காரர்கள் நமக்கு கீழேயே எப்போதும் இருக்க வேண்டும் என்று நினைப்பது? மற்றும் அதற்காக பல சதி வேலைகள் செய்தால் நீங்கள் அவருக்கு உறவா?  பகையானவரா?  இது உயர் குணமா?

ஒருவருக்கு பெண் கொடுக்க போகிறேன் என்று கூறிவிட்டு ஊர் முழுக்க சம்மந்தம் பேசுவது போல் அனைத்தையும் அனுமதித்து நடந்தால் உயர் குணமா?  பிறகு எதற்கு அவருக்கு தான் என் மகள் என்று கூற வேண்டும்?  முதலில் உயர் குணம் உள்ளவர்கள் உங்கள் மகளை திருமணம் செய்வார்களா?  தாழ்ந்த குணம் உடையவன் தான் திருமணம் செய்வான்.  சொக்க தங்கம் படத்தின் மூலமே இது தான். 

ஊரில் இருப்பவர்கள்தெரிந்தவர்கள், நட்பு வட்டாரங்களில் கூறினார்கள் அதனால் தான் இவ்வாறு செயல்பட்டேன் என்று கூறுவது.  இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா.  24 மணி நேரமும்  எதையாவது உங்களுக்கு கூறி கொண்டே இருக்கிறார்கள் என்றால் நீங்கள் என்ன சோதாவா?  ஒன்றும் தெரியாதவரா? இதிலேயே சந்தேகம் எழ வேண்டாமா?  இது போன்று உலகத்தில் திரைபடங்களில் கூட நடந்தது இல்லை.  நீங்கள் உயர் குடி தானே?  அப்படி என்றால் உங்கள் அருகே யார் இருக்க வேண்டும்? யார் இருக்கிறார்கள்?  ஒரு வேலை உங்களை யார் வேண்டும் என்றாலும் வழி நடத்த முடியும் என்றால் உங்கள் குடும்பம் என்ன ஆவது?  நீங்கள் என்ன ஆவது?  உங்கள் தனிபட்ட விருப்பங்களை குப்பையில் வீசி விடலாமா? அதற்காக வேண்டாம் என்று அர்த்தமல்ல.  இது போன்று கடவுளுக்கு கூட நடந்தது இல்லை.  ராமாயணத்தில் சிவ அம்சம் உள்ள அனுமான் இருப்பார்.  அவரே ராமரை பெரிதாக தடுக்கவும் இல்லை கூறவும் இல்லை சீதை பற்றிய விஷயத்தில்.  ஆனால் சீதைக்கு துணையாக இருந்தார்.  நாமெல்லாம் தெய்வத்தை விட பெரிய ஆள் இல்லை என்பது குறிப்பிடதக்கது.  லாபம் வந்ததா?  கேவலம், நஷ்டம் வந்ததா?  என்பது உங்களுக்கே வெளிச்சம்.

கெட்டபழக்கத்தை திருத்துகிறேன் என்று கூறி அவர் முன்னேற கூடாது என்று நம்முடைய கெட்டதை அனைத்தையும் இதை கூறி விதைப்பது? உயர் குணமா?

உழைப்பில் எதாவது சாஸ்திரத்தில் கூட வரையறுக்கபட்டுள்ளதா?  அதோடு யாரோ கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளில் நாம் இன்று நோகாமல் குளிர் காய்கிறோமே?  இது யாருடையது?  இவ்வாறாக யாரோ கஷ்டபட்டு உழைத்து கண்டுபிடிப்பார்கள் அதில் உலகமே ஒய்யாரமாய் இருக்கும் என்று கூறினால் கொரானாவிற்கு மருந்து கிடைக்குமா?  அல் மருந்தே இல்லாமல் இப்போது அந்த நோயே இல்லாதது போல் மறந்து வாழ்பவது போல் வாழ நான் பெரிய அளவிற்கு துணை புரிந்திருக்கிறேன்.  இது சாத்தியமாகுமா?  இவ்வாறு கூறுவது உயர் குணமா?  

இந்த கனைகள் போல பல கனைகள் இருக்கிறது.  இது லேசாக மட்டுமே அருவாளில் ஒரு சிலவற்றை வெட்டி போட்டு கூறுவது போல்  கூறபட்டுள்ளது

இப்படி இருந்தால்அப்படி இருந்தால் நம்முடைய ஜாதி, மதம் என்பதன் மரியாதை மதிப்பு போய்விடும் என்று கூறிவிட்டு பிறகு நாமே மேற்கண்ட மற்றும் பல கேவலங்களில் ஈடுபட்டால் சரியோ, தவறோ ஜாதிமதத்திற்கு யார் இழுக்கு ஏற்படுத்தியது?  இதுவெல்லாம் கௌவரமானதா? மதிப்பு வாய்ந்ததா?

இந்த கனைகள் அனைத்தும் உயர் குடி மக்கள் உயர் குடிகளாக கரையேறவே. உயர் குடிகளே குடித்து விட்டு போதையில் தள்ளாடுவது போல் மேற்கண்டவற்றில் மற்றும் தாழ்ந்த பாதகமான பாவ காரியங்களில் ஈடுபட்டால் யார் உயர் குடிமக்கள்? தாழ்ந்தவர்கள் பிறகு எந்த பாவ காரியத்தை செய்தால் தாழ்ந்தவர்கள் என்று கருதபடுவார்கள்?  பிறருடையதை களவாடுவது மட்டும் களவாணி தனம் அல்ல.  நம் மனதில் கள்ளம் கொண்டு செயல்படும் அனைவரும் களவாணிகளே.  அதற்காக இந்த கனைகள் அனைத்தும் அனைவரையும் குறிப்பிடுவது அல்ல. 

கெட்ட பழக்க வழக்கங்கள் இருக்கலாம் தவறில்லை. ஏனென்றால் முழுக்க கெட்டது என்றால் அரசு ஏன் அனுமதிக்க வேண்டும்?.  அதோடு இதனை உற்பத்தி செய்வதை விட ஒரு கெட்டது உலகில் எங்காவது இருக்கிறதா?  அதற்காக கெட்ட பழக்கத்தை ஆதரிக்கிறேன் என்று அர்த்தமில்லை.  அதோடு பல மருத்துவர்களே Stress-ஐ குறைக்க கர்ப்பிணி முதல் பலருக்கு குறைந்த பட்சமாக குடியை குடிக்க ஆலோசனை தருவதாக கேள்விபட்டிருக்கிறேன்.  அதோடு புகையிலை, குட்கா, சிகரெட் என்பது 2 நிமிடங்களுக்கு சற்று சிறிய போதை மயக்கத்தை தருவதாகும். இந்த பழக்க வழக்கங்கள் ஒரு சில மருத்துவர்களுக்கே இருக்கிறது. முழுக்க கெடுதல் என்றால் உபயோகிப்பார்களா? Elite  பார்களில் போய் கேளுங்கள் டாக்டர்கள் யாராவது வருகிறார்களா என்று. 

கெட்டது மட்டுமே செய்யும் பழக்கமே தவறானது ஆகும்.  இங்கு அனைவரும் 100% தூயவனாக இருப்பது கடினமானது மற்றும் முடியாதது ஆகும்.  தெய்வங்கள் மீதே பல குற்றச்சாட்டுகள் அனைத்து மதங்களிலும் நாத்திகர்களால் புராண ஆதாரங்களுடன கூறபடுகிறது. அதனால் நாமெல்லாம் ஒரு விஷயமே அல்ல. எனினும் குறைந்தபட்சம் நாம் எத்தனை சதவீதம் உயர் குடிகளாக இருக்கிறோம் என்பது நாம் அறிய வேண்டியது முக்கியமாகும்.

தீட்டு என்பதில் மனிதனின் தாழ்ந்த குணத்தை விட ஒரு தீட்டு உலகில் இல்லை.  ஆச்சாரம் என்பது உடல் சுத்தத்தில் இருப்பதை விட அகத்தில் ஆச்சாரமாய் இருப்பதே முக்கியம் ஆகும்.  அப்படியென்றால் நாற்றம் அடிப்பது போல் இருக்கலாமா என்று கேட்க கூடாது.  மன நாற்றம் உடல் நாற்றத்தைவிட மோசமானது.   

இதில் அனைத்தையும், பலவற்றையும் நியாயபடுத்த முயற்சிக்கலாம்.  முயற்சித்தாலும் அது வீணே.  அதற்கு பதில் உயர் குணங்களை அடைய முயற்சிக்கலாம் அது அரோக்கியமானதாகும்.  நியாயத்தை என்றுமே நியாயபடுத்த வேண்டிய அவசியமில்லை. நியாயம் இல்லாததை தான் நியாயபடுத்த வேண்டி இருக்கும். ஆனால் அது நியாயம் ஆகாது.  அது தராசின் அடியில் காந்தம் வைத்து எடை போட்டு ஏமாற்றுவதற்கு சமம்.  

அது நியாய தராசை பிடிக்கும் தெய்வத்திடம் செல்லும் போது மாட்டிக் கொள்கிறது.  அதோடு செல்லா காசாகிறது.  அதனால் தான் அடுத்த பிறவி முதல் இப்பிறவியிலும் ஏகபட்ட கஷ்டங்கள், துன்பங்கள், வேதனைகள் மற்றும் வாழ்க்கை பாதிப்பது எல்லாம்.

வினோதமானவர்கள் வினோதமான காரியங்களை செய்வார்கள்.  உயர் குடி ரத்தம் உயர் அளவில் நமக்கு ஓடுகிறது என்றால் நம்மிடம் தாழ் குணங்கள் அனைத்தும் வர அஞ்ச வேண்டும் மற்றும் ஓட வேண்டும்தாழ் குணமுடையவர்கள் அபச்சாரம் அபச்சாரம் என்று ஓடி மறைய வேண்டும் ஒதுங்க வேண்டும் நம்மை பார்த்தால்.

இதனை தோல் உரித்து கூறு போட்டு மெல்லிய முறையில் கனைகள் தொடுத்து லேசான அரிவாள் வெட்டு போன்று அனைத்தையும் வெட்டி துண்டுகள் போட்டு  பக்காவாக ஓர் "வாணி"யாக தித்திக்கும் தேன் போல இந்த வாணியர் கூறிவிட்டேன்.  இது இதிலிருந்து மீண்டு கரையேறவே கூறபட்டது.

முகமதியர்களின் சுல்தான் ஆட்சியில் "பராக்என்றால் "வரார்என்று அர்த்தம்பேட்ட பராக் போல வீரா வரார்வைரா வரார்ராச வரார் என்பது.  இது அனைத்தும் ஒன்றாக அதோடு பெயரில் பல PUNCH வசனங்களுடன் இருக்கும் நான் என்றென்றும் உங்களுக்காக நான் எழுத்துக்கள் அடங்கிய ஆர்டிகல்லாக உங்கள் மனதில் வரைய "வரார்என்று வந்து கொண்டே இருப்பேன்.  அதோடு என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.

இது அனைத்தும் உண்மையாபொய்யா என தெரியவில்லை.

justicemayel.blogspot.com