3 IN 1 Three in One "I LOVE YOU "J " ♥பிழையில்லா டெடிகேஷன்(சோர்வு, சோம்பேறிதனம்)+ தொலைநோக்கு (தோல்வி)+ வீச்சு (சுறுசுறுப்பு)= (ஜெயம்)♥:-
JMN-ஆனது எல்லாவற்றிலும் புதுமையை நிகழ்த்தியுள்ளது. அதேபோல் முதன் முறையாக ஒரு தலைப்பில் இரண்டு இருக்கும்.
அதாவது அது இல்லாமல் இது இல்லை என்பது போல். அதாவது "அதீதம்" என்பது நம்முடன் இருக்கும் போது இரண்டும் ஒன்று சேரும். இரண்டு என்பது நம்முடன் இருக்கும். இந்த இரண்டும் இருந்தால் மூன்றாவதாக நமக்கு எப்போதும்
ஜே(J)-தான். அதாவது இது 3 in 1 ஆர்டிக்கல் ஆகும்.
கா) பிழை:-
பிழை என்பது ஓர் இழை போன்றது. நம்முடைய வாழ்க்கை முதல் பிறர் வாழ்க்கை வரை நூல் இல்லா
காத்தாடி போன்றது தான் அனைவரின் வாழ்க்கையும். அதனால் தான் நூல் இழையில் Miss-ஆகி விட்டது என்று கூறபடுகிறது. நாம் செய்யும் ஒவ்வொரு
காரியத்திலும் LIFE எனும் இழையில் எதாவது சிறிய பிழை செய்வதால் தான் நமக்கு தோல்வி
ஏற்படுகிறது. அதாவது ஏதோ ஒரு பிழையால் தான் நாம் ஏழையாக இருக்கிறோம். ஏழையாக
பிறந்தது நம்முடைய பிழை அல்ல. ஏழையாகவே இருந்தால் அது தான் பெரும் பிழை. அதனால் பிழையில்லா பிழையை செய்து நாம் "J"-வை பெறுவோம். வாழை போல வீழ்வது நம்முடைய பிழையால் தான் என்பதை
கருத்தில் கொண்டால் நம்முடன் என்றென்றும "J"
இருக்கும். கோழையாக எதிலும் முயற்சி செய்யாமல் இருப்பதும் ஓர் பிழையே. நாம்
மரத்தில் உள்ள தழை போல கீழே விழுவதற்கு காரணம் இந்த பிழைதான். பிழையை போக்குவோம் பெருவாழ்வு வாழ்வோம்.
க) வீச்சு-சுறுசுறுப்பு :-
வீச்சு என்பதை நன்றாக வீசினால் நம் குறி எதிலும் தப்பாது. அதிலும்
எப்போதும் ஓர் தொலைநோக்கு பார்வையோடு மற்றும் சிந்தனையோடு, டெடிகேஷனோடு வீசினால் நமக்கு எதிலும் வீழ்ச்சி என்பது இல்லை.
நம் வாழ்க்கையில் அனைத்திலும் வீச்சு இருக்கிறது.
வீச்சை வீட்டில் உள்ளவர்களிடம் பாசம் எனும் வீச்சை வீசினால் நம்மை யாரும்
பிரியமாட்டார்கள். முதியோர் இல்லம் முதுமை பெறும். ஆனாதை இல்லங்கள் ஆனாதை ஆகும். பாசம் இளமை பெறும். இந்த பாச
வீச்சிற்கு என்றும் அழிவில்லை.
கதிர் கதிராக இருக்கும் வரை எந்த பாதிப்பும் பெரிய
அளவில் கிடையாது. அதுவே கதிர் ஆனது வீச்சுடன் சேர்ந்து கதிர் வீச்சாகும் போது பெரிய
அளவில் அதன் தாக்கத்தை வெளிப்படுத்தும்.
வேலையில் நாம் டெடிகேஷன் எனும் வீச்சு நமக்கு இருந்தால்
PROMOTION என்பது பெரிதல்ல. வைலை இழப்பு நடக்காது. நடந்தாலும் அது நமக்கல்ல அவர்களுக்கு தான்.
நம்மிடம் வீச்சு இல்லையென்றால் வீழ்வது நிச்சயம்.
வீச்சு என்பது அதீத சுறுசுறுப்பு எனவும் கூறலாம். வீச்சு இருக்கும் இடத்தில் சுறுசுறுப்பு இருக்கும். சுறுசுறுப்பு இருக்கும் போது சுள்ளான் கூட சும்மா
இருக்கமாட்டான். அதீத சுறுசுறுப்பு இருந்தால் நமக்கு எதுவும் சுமை இல்லை. அதாவது
வீச்சு எனும் அதீத சுறுசுறுப்பு இருக்கும் போது எந்த சுமையும் சுருங்கிவிடும். சுருங்க சொன்னால் பிழையில்லா வீச்சு வீசினால் நமக்கு "ஜே" தான்.
சுக்கிரன் நம்முடன் இருக்க வேண்டுமென்றால் அதீத
சுறுசுறுப்பு இருக்க வேண்டும். "சு" எனும் வீச்சு இருந்தால் எல்லாம் சுசு என்று கம்மென்று அனைவரின் வாயையும்
மூடலாம். அனைத்து துன்பமும் சுக்கு சுக்காய் போக வேண்டும் என்றால் வீச்சு
இருக்க வேண்டும்.
அ) டெடிகேஷன்-சோம்பேறிதனம்,சோர்வு:-
மனித உடலில் உள்ள உறுப்புகள் டெடிகேஷனுடன் வேலை
செய்யவில்லையென்றால் நம் பாடி டெட் பாடி ஆகும்.
நமக்கு எதிலும் டெடிகேஷன் இருந்தால் நமக்கு எதிலும்
சோர்வு தட்டாது. நம்முடைய ஒவ்வொரு DAY-விலும் DEDICATED உடன் இருந்தால் DAY-ஆனது போவதே தெரியாது.
மரம், செடி, கொடி முதல் இயந்திரம் வரை அனைத்துமே தன்னுடைய வேலையில் DEDICATION உடன் இருப்பதால் தான் நம்மால் இயந்திரத்தை இயக்க
முடிகிறது. காய்கறிகள், பழங்கள் அனைத்தும் நமக்கு கிடைக்கிறது. ஓர் அறிவு முதல் அறிவே இல்லாத இயந்திரம் வரை
டெடிகேஷனுடன் இருக்கிறது. ஆனால் ஆறு அறிவு உள்ள நம்மால் தான் இருக்க முடியவில்லை. காட்டில்
உள்ள மரம், செடி, கொடி-களை இயற்கை எந்த CHEMICAL-லும் இல்லாமல் நல்ல முறையில் வளர்த்து ஆரோக்கியமான நல்ல காய், கனி, மரங்களை நமக்கு கொடுக்கிறது. காரணம் "DEDICATION". ஆனால் நம்மால் இயற்கையான முறையில் கெமிக்கல் இல்லாதவற்றை உற்பத்தி
செய்யமுடியவில்லை. காரணம் நாம் இயற்கையை விட்டு விலகியது தான் காரணம். ஏமாற்றுகாரர்களால் ஏமாந்து இன்று நிலமே கெட்ட
கெமிக்கலால் பாழாய் போனது தான் மிச்சம். இதற்கு காரணம் மண் மீது "டெடிகேஷன்" இல்லை. அதனால் மண்புழு வயலில் இருப்பது அதிசயமாகிவிட்டது. கெமிக்கல்
என்றால் தீண்டதகாத பொருள் அல்ல. அதில் நல்லது, கெட்டது என்ற CHEMICAL உள்ளது. அதில் கெட்ட CHEMICAL-ஆல் தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது. அனைத்தும் கெட்டு போகாமல் நம்முடைய உடலை கெட வைத்து பல நோய்களை
அடைய செய்கிறது.
டெடிகேஷன் இருந்தால் நமக்கு சோர்வு, சோம்பேறிதனம் ஏற்படாது. நமக்குள் ஒரு உத்வேகம் இருக்கும். டெடிகேஷன் மறுபெயர் "பற்று" என்று கூறலாம்.
சோம்பேறிதனம், சோர்வு எதனால் ஏற்படுகிறது. அந்த நிமிடத்தில், நொடியில், நாளில் நமக்கு DEDICATION இல்லாததால் தான். அதோடு COMPANY-யிலும் DEDICATION-னுடன் வேலை செய்ய வேண்டும் என்பதற்காக தான் பிரேக் கொடுக்கிறார்கள். அந்த BRAKE-முடிந்தும் களைத்தே இருக்க காரணம் DEDICATION எனும் வீச்சு இல்லாததால் தான். நாம் வேலை செய்கின்றோம். ஆனால் DEDICATION-உடன் வேலை செய்கின்றோமா?
நாம் பல் துளக்குவது முதல் குளிப்பது வரை DEDICATION உள்ளது. அதாவது இது நம் உடலின் மீது உள்ள DEDICATION. இது இல்லாததால் தான் பலர் தினமும் குளிப்பதில்லை.
DEDICATION இல்லாமல் செய்யும் எந்த வேலையிலும் சோம்பேறிதனம், சோர்வு அதிகமாக இருக்கும். இதற்கு GATE PASS கொடுத்து அனுப்ப வேண்டும் என்றால் நமக்குள் DEDICATION-ஐ கொண்டு வர வேண்டும். இது இருந்தால் அது இருக்காது. அது இருந்தால் இது இருக்காது. ஆனால் இருக்கும் தூங்க செல்லும் போது மற்றும் BRAKE-ல். அப்ப கொண்டு வருவோமா. DEDICATION-லும் பிழை வரும் ஆனால்
பிழையில்லா டெடிகேஷனுடன் இருந்தால் நமக்கு என்றும் "J(ஜே)" தான்.
ஆ) தொலைநோக்கு -தோல்வி:-
"தொலைநோக்கு" என்ற வார்த்தை நம்மிடம் இருந்தால் நமக்கு தோல்வி என்பதே கிடையாது. இப்போது தோல்வி ஏற்பட்டது போல் சில விஷயங்களில்
தோன்றலாம் . ஆனால் அது தோல்வியல்ல. அது சில மாதங்களோ, வருடங்களோ போன பின் தான் தெரியும் உண்மையில் நாம் தோல்வியடையவில்லை
என்பது. ஏனென்றால் கொஞ்சம் தொலைவு சென்றால் தான் இந்த "தொலைநோக்கில்" வெற்றி கிடைக்கும். E.G:- கல்யாணம்.
அதே போல் தொலை நோக்கால் பல கஷ்டங்கள் ஏற்படலாம். ஆனால்
துன்பங்கள் தொலைந்து போவது உறுதி எனலாம். ஆனால் சரியான தொலைநோக்கு வீச்சு
இருந்தால் தான் இது சாத்தியமாகும். ஏன் என் கட்டுரையிலேயே தொன்னூறு பேக்கேஜ் தான் ஒரு கலர்புல்லான Package-ஆக ஆரம்பித்து மற்றும் எல்லாம் சேர்ந்தது. அதை இந்த 101-ஆம் கட்டுரையில் "தொலைநோக்கை" எழுதுகிறேன்.
தொலைநோக்கை புரிந்து கொள்வது சில விஷயங்களில் கடினம். மற்றபடி தொலைநோக்கை தொட்டுவிட்டால் "Jயம்" நிச்சயம். E.G:- தாய், தந்தையர்கள் படிக்க சொல்வது, கெட்ட பழக்கம் இல்லாமல் இருக்க சொல்வது.
துன்பங்கள் தொலைய வேண்டுமென்றால் பல விஷயங்களில்
தொலைநோக்கான முடிவே சிறந்தது. இன்று சரி, தவறு என்பதே தொலை நோக்கில் மாற கூடியது.
தொன்று தொட்ட பண்பாடுகளையும், மரம், செடி, கொடி, விலங்கினங்கள் தொலையாமல் நாம் காப்பாற்றுவதால் தான் இன்று நாம் அதில் பல பலன்களை
அடைகிறோம். அதோடு நல்லதை அடுத்த தலைமுறைக்கு மொழி, கலை, உணவு, உடை முதல் அனைத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொடுக்க முடிகிறது. இது அனைத்தும் தொலைநோக்கால் கிடைத்தது தான்.
தொலை நோக்கான சிறிய விஷயங்கள் பெரிய பலன்கள்:-
தோட்டம்.
மரம், செடி, கொடி-களை வளர்த்தல்.
ஆடு, மாடுகளை வளர்ப்பது .
"தொலைநோக்கு" தொலையாமல் காப்போமாக.
J) I LOVE YOU "ஜெயம்":-
வாழ்க்கையில் மேற்கண்டதை காதலித்தால் நமக்கு என்றைக்கும் "ஜெயம்" தான். காதல் என்பது ஒரு பொதுவான வார்த்தை. அதை ஓர் குறிப்பிட்ட ஒரு விஷயத்திற்கு மட்டும் தான் இது என்று கூறிவிட முடியாது. அந்த பொதுவான வார்த்தையை நம்முடைய ஒவ்வொன்றிலும் இருந்தால் நம்மை நோக்கி "J (ஜெ)"-வானது தானாகவே வந்து சேர்ந்துவிடும். அதனால் நமக்கு "ஜெயம்" வேண்டுமென்றால் அதற்கு ஐ லவ் யூ சொல்லுங்கள் மற்றும் அதனை நேசியுங்கள். அதற்காக J பெயரில் உள்ள பெண்ணிற்கு I LOVE YOU கூறினால் காதலில் Jயம் கிடைக்கும் என்று கூறி வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள். பிறகு "J" -விடம் தான் கூறினேன் ஜெயம் கிடைக்கவில்லை. அடிதான் கிடைத்தது என்று கூறாதீர்கள்.
ஜெயத்தை நேசித்தால் மேற்கண்டவற்றில் ஈடுபாடு வரும். "ஈடு" வந்துவிட்டால் பிறகு பாடெல்லாம் ஒரு பெரிய பாடாக இருக்காது. பாட்டு
பாடுவது கூட. பின்னர் உங்களுக்கு "J யம்" தான். "ஈடு" வந்துவிட்டால் பிறகு அனைத்தையும் ஈடுகட்டி விடலாம்.
என்னுடைய பட்ட பெயர் "JI" தான். அதற்கும் ஓர் காரணம் உள்ளது. அது JI படம் என்பது பெயர் வைப்பதற்கு. ஆனால் இயற்க்கையாகவே நடந்தது இதற்காக தானோ.
J-என்றால் "ஜெயம்". I-என்றால் "நான்". நான் தான் வெற்றி என் வாழ்க்கையில் அனைத்திலும் வெற்றி தான் என்பது
தான் அர்த்தம்.
இந்த பெயரையும் விட்டு வைக்கலையா என்று கூறுவது எனக்கு
கேட்கிறது. இதுவெல்லாம் நாம் முடிவு செய்வதல்ல. எழுத்து முடிவு செய்வது. அதனை என் நண்பர்கள் இயற்கையாக தெரியாமலேயே எனக்கு இந்த
பெயரை வைத்துவிட்டார்கள். GENIUS-ம் நானே வெற்றியும் நானே. 2 IN 1 பெயர் "JI
(G)". அதற்காக வெற்றி மட்டுமே இறப்பு வரை என்பது
சாத்தியமில்லை என்பது குறிப்பிடதக்கது. ஐயோ ஐயோ ஓடுங்க ஓடுங்க தாங்க முடியல இவன்
உண்மையான லொள்ளு.
இது அனைத்தும் உண்மையா,
பொய்யா என தெரியவில்லை.