Part-1 ஆர்ச்.காம்[ " துதூடா" "தீடா" "கல் டா" "கோடா"]
மார்ச் மாதத்தில் பிறந்த எல்லாருக்கும்
"ஆர்ச்" வைக்க மாட்டார்கள். அதாவது எதாவது செய்வது என்பது இருந்தால் தான் இறந்த பின் மறைவது
என்பது இல்லாமல் சிலையாவது இருக்கும். சிலையில் உள்ளவர்கள் அனைவரும் விலை
கொடுத்துள்ளார்கள். அவ்வாறு ஆவது என்பது ஓர் கலை. அது மலை ஏறுவது போல் சிரமம்.
சுலையாக கிடைக்க வேண்டும் என்றால் அது பலா பழம் போல் தான் இருக்கும். பலா-வில் மேலே முள் இருப்பது போல் பல போராட்டங்கள்
இருக்கும். கூடவே ஸ்கெட்ச் இருக்க வேண்டும் அது EDGE
-வரை இருக்க வேண்டும்.
ஆர்ச் செங்கல் மூலமாக தான் மற்றும் மக்கள் மனதில் கல் இல்லா ஆர்ச் போல் ஆர்ச்-ல்
நாம் இருக்க வேண்டும் என்றால் நாம் "கல்" போல மனது இருந்தால் தான் முடியும். சொல், செயல்,வெல், என்று அனைத்தும் குறிக்கோள் நோக்கி "செல்" என்று இருக்க வேண்டும். குறி-யில் வெறி இருக்க வேண்டும். வெறி-யில் எறிய வேண்டும்.
இல்லையென்றால் "மேல்" என்பதே நாம் MALE-ஆக இருந்தாலும் கிடையாது. மேல் மாடியிலேயே வசித்தாலும் பசியோடு தான் இருக்க வேண்டும். இதில் போகிற போக்கில்
நாம் போனால் நம் கால் எதிலும் தடம் பதிக்காது. நம் கால் லட்சியம் என்பதில் தான் ஊன்ற வேண்டும். அவ்வாறு ஊன்றினால்
நம் லட்சியத்திற்கு ஒரு காலும் ஊனம் கிடையாது. இதில் பல மோதல் இருக்கலாம். ஆனால்
நமக்கு காதல் "குறி"-யில் தான். ஆதலால் சாதல் வரை போராட வேண்டும்.
இந்து-வாக இருந்தால் மடம் என்பதில் மடாதிபதி- யாக முடியாது. குறைந்த பட்சம் மடம் என்பதில்
உறுப்பினராக கூட முடியாது. மகுடம் வேண்டுமென்றால் வெகுண்டு எழ வேண்டும். வாகை சூட
குண்டு, குழியை கடக்க வேண்டும். குண்டு-ஆக இருந்தாலும் நம்மை வரலாறு அழைக்கும். நம்மை படம் எடுக்க
வேண்டுமென்றால் நம் லட்சியத்தை பற்றி வரைபடம் இருக்க வேண்டும். படம் காட்ட கூடாது.
நல்ல கைபாகம் எப்படி "ருசி"- யை தருகிறதோ அவர்கள் எப்படி பருப்பு, இருப்பு என்று வெறுப்பு காட்டாமல், சுறு சுறுப்பு போடு சமைக்கிறார்களோ, இருப்பை தக்க வைக்கிறார்களோ அது போல் குரு, இரு, பெரு என்று அடைந்த பின் தான் ஆன்மீகத்தில் மீதமில்லாத பெருமையை
அடைந்து, மடாதிபதி என்ற பொறுப்பை தருவார்கள்.
அதிபதி ஆக வேண்டுமென்றால் மக்களிடம் வெகுமதி பெற
வேண்டும். அப்போது தான் வான்மதி புகழ் அடைய முடியும். பிறகு நம் வாழ்க்கையில்
அனைத்தும் தேன் போல தான்.
தண்ணீர் போல நம் கண்ணில் கண்ணீர் வர கூடாது என்றால்
அதோடு நம் மீது பன்னீர் தெளிக்க வேண்டும் என்றால் நம் மனதில் வெண்ணீர் ஆக "லட்சி" இருக்க வேண்டும். அப்போது தான் LET SEE என்பது ஈஸி.
"ஓம்" எனும் பிரணவ மந்திரம் போல "காம்" ஆக இருக்க வேண்டும். WARMUP போல "லட்சி"-க்காக தயார் ஆக வேண்டும். நம்முடைய அனைத்தும் பாம் போல இருக்க
வேண்டும். சாதித்த மூதாதையர்-கள் கோயிலில் ஐயர் இருப்பது போல நம் கூடவே தான் இருக்கிறார்கள். அவர்களை தேடவே வேண்டாம்.
நம் "கை" லட்சி-கையை நோக்கி இருக்க வேண்டும். அது வாடிக்கையாக இருக்க வேண்டும். அதுவே
நம் துடிப்பாக வேண்டும். நம் சொற்களில் கடிதல் இல்லால் இருந்தால் நாம் வெற்றி பெற்றதை வெடி வைத்து
கொண்டாடலாம். நம் செயல் இடி போல இருக்க வேண்டும்.
சந்து, பொந்து என்று அனைத்து இடங்களிலும் ஆன்மீக தத்துவம், கருத்துக்களை பெற்றால் தான் "குரு"-வாக முடியும். தூககியடிக்கும் பந்து போல நம் குறி -யை நோக்கி
போனால் தான் நமக்கு கோல் கிடைக்கும். அப்போது தான் கடவுளுக்கு மடாதிபதியாகி
பால் ஊற்ற முடியும். லட்சியத்தை ஏந்து இல்லையென்றால் நொந்து தான் இருக்க வேண்டும்.
வந்து வில் ஏய்தவன் வில்லாளி, சொற்களில் சொல் ஏய்தவன் சொல்லாளி.
வல்லவன் சொல்பவன் அல்ல. மற்றும் எங்கும்
குறிக்கோளை-விட்டு செல்ல மறுப்பவன். அதோடு பகலவன் போல பகைவன் என்பவனை
சுட்டெரிப்பவன்.
ஆர்ச் என்பது எல்லாம் தான். கண்டுபிடித்தவர்கள் கண்டுபிடிப்பதில் கண்ணாக இருந்ததால் தான் "வாய்ப்பாடு" மற்றும் பல பொருட்களில் இன்னும் ஆர்ச்-ஆக வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள். ஆர்ச் ஆக வாழ ஏழயாக இருந்தாலும் கவலையில்லை. வாய் இருந்தால் பேய் என்பதே ஓடும்.நாம் தாழ இருந்தால்
தாழ்வு இல்லை. வாழ போல தழைத்தோங்க லட்சி-யும் அதில் குறி-யும் இருந்தால்
போதுமானது. போன வாழ்க்கையும் திரும்ப வரும். இழ ஓர் அணியாக சேர்ந்தால் உடை. அது போல "ஆர்ச்" ஆக மேற்கண்ட அனைத்தும் ஒன்று சேர முயற்சிப்போம். இல்லையென்றால் அழதான் வேண்டி இருக்கும். தழ போன்ற இந்த
இலையுதிர் வாழ்க்கையில் கதிர் ஆக வாழ்க்கையில் எழ வேண்டும். இதில் பிழ என்பது இருக்க கூடாது.
எல்லாமே "துதூடா" என்றால் நம்ப முடிகிறதா? நம்ப முடியலனா வெம்ப தான் வேண்டும். எம்ப எம்ப தான் குல்லமானவர்கள் உயரமானதை எட்ட முடியும். அவர்கள் தமிழ் உமிழ்-வதால் நமக்கு வெற்றி கிடைக்கிறது. அதில் "ஆர்ச்"ஆனவர்கள் தான் அனைவரும். ஆழம் என்பது நம் மன தெம்பு-வில் உள்ளது. ஆழம் அதிகமாக இருந்தால் எந்த அம்பும், வம்பு-ம் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. அதன் பிறகு எல்லாம் துரும்பு தான். அதாவது நம் மனது இரும்பு போல் ஆனால் எல்லாமே நமக்கு கரும்பு தான். இது இல்லையென்றால் எட்டா கனி தான். பிறகு அது, இது, என்று எதுவுமில்லை.
"தீ" மனதில் இருக்க வேண்டும். நீ "தீயா" இருந்தால் ஏமாற்றுபவர்கள் அனைவரையும் போயா எனலாம். வரவை வாயா எனலாம் வாய்
கொண்டு. பிறகு நமக்கு நோய் இல்லை. ஏய் இருக்கலாம் ஏய்க்கதான் கூடாது. பேய் என்பது பொய்யாக
இருக்கலாம். நம்மிடம் தான் பொய்மை அதிகமாக இருக்க கூடாது. கண் கருத்தில் இருந்தால் நமக்கு மனதில் புண் கிடையாது. புண்ணாக்கு என்ற பெயரும் வாங்க மாட்டோம். பிறகு "மண்" போற்றும் அளவிற்கு "ஆர்ச்" ஆக வாழலாம்.
"ரா" "யா" இருக்குதாயா:-
இது இருந்தால் ராயல் ஆக "ராயா" வாழலாம். பிறகு எல்லாமே "ரா" தான். அனைத்தும் யா கூ(ஊதிவிடலாம்) தான். இறகு விரித்து பறக்கலாம்.
"சத்தியா" சத்தியம்யா, "சிந்துயா"(குறிக்கோளை சிந்தித்தல்யா) "சந்தியா" "சந்திரா"(எதையும் சந்திக்கும் திறன்யா)", தியா(திறனோடு இருப்பது), பிரியா(கொள்கையில் பிரியம்யா) பிறகு "காவ்யா" (காவியம்யா) தான். "நித்ரா", "நித்யா" ,"ருத்ரா", "முத்தையா என்கிற முத்து",மந்த்ரா, "இந்திரா" "சித்ரா"(நித்திரை இல்லாமல் நித்தம் சித்திரை வெயில் போல எது
சுட்டெரித்தாலும் முத்திரை பதிப்பது. சித்திரை நட்சத்திரம் போல ஜொலிப்பது மற்றும்
சித்தியுடன் இருப்பது மற்றும் ருத்திரன் போன்ற திறன் ஓடு இருப்பது அதோடு மந்திரன்
போன்று இருப்பது மந்தி போல்இருந்தால் நிந்திப்பார்கள் பிறகு சந்தி சிரித்துவிடும்.
இதை குந்தி கொண்டு யோசியுங்கள்). இந்திரா இந்திரன் போன்று சொர்க்கத்தில் வாழ்வது. எதையும் இனிமையாக
பேசுவது.
இதை அனைத்தையும் கேட்டதும் "ரன்" எடுக்க கூடாது. மாரத்தான் ஓட்ட பந்தயத்தில் "ரன்" எடுக்கலாம்.தேசிய கிரிக்கெட் போட்டியில் பேட் எடுத்து "ரன்" சேர்க்கலாம். இதில் "ரன்" எடுத்தால் இந்திரன் போன்று சொர்க்த்தில் வாழ்வது கிடையாது. சந்திரன் போன்று வானுயர உயர முடியாது. "ர"-வை ரா என்று போட்டிக்கும், எதிரைகளை ஓட செய்யவும் அழையுங்கள். இதை அனைத்தையும் மனதில் சேமியுங்கள். சேமியா? ர-வை ரம்யா,கம்யா என்று அழையுங்கள் வாழ்க்கை ரம் அடித்தது போல் வாழ்க்கையே
போதையாக இருக்கும். ரம்யா-வை கூட்டு அதை பல பேர் இடம் கூப்பாடு போட்டு கூட்டதை கூட்டி பிறகு கூட்டமே காட்டு காட்டு என்று அடித்ததும்
எனக்கு வேட்டு வைத்துவிட்டார்கள் என்று கூற கூடாது.
உங்ககிட்ட சத்தியா,
காவ்யா, பிரியா, சந்தியா, நித்யா சிந்து, சந்திரா,சித்ரா,மந்த்ரா, இந்திரா,முத்தையா முத்துயா இதுவெல்லாம் இருந்தால் கெத்துயா. இருக்குதாயா?. இது ரொம்ப ரொம்ப ஓவர் தானயா தெரியுதுயா, புரியுதுயா, எரியுதுயா(மனதில் லச்சி தீ).
இதுவெல்லாம் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள் என்று
செந்தில் பண்ண அல்வா காமெடி போல பண்ணாதீர்கள். அதற்காக இவர்களை வரதட்சனை இல்லாமல்
திருமணம் செய்துவிட்டு, கோயிலிலும் தட்சனை போட்டு "விட்"டு "ஆர்ச்யா" கட்டுயா என்றால் உனக்கு எல்லாமே வாழ்க்கையில் "கட்"யா தான். உன் திறமையை காட்டி "காட்" பாதர் ஆக வேண்டும். இப்படி பாதர் பண்ணினால் Father ஆக கூட முடியாது. இது வேற பாதர்யா.
உன்னை எங்கு இட்டு சென்றாலும் "கேட்"டை சாத்த தான் செய்வார்கள் மற்றும் முட்டாள் ஆக நாம் இட்லியை ஈட்டிங் செய்ய தான் முடியும். இப்படி காமெடி
சீட்டிங் செய்தால் பீச் மாங்காய் போல பீஸ் பீஸ் ஆக்கி விடுவார்கள். பிறகு மாஸ்டர்
பீஸ் ஆக முடியாது. டம்மி பீஸ் ஆக தான் இருப்பீர்கள். மம்மி அம்மி கல்லை காலில் போட்டாலும் போடுவார்களே தவிர கால்கட்டு
போட மாட்டார்கள். முதலில் யாரிடமாவது பீஸ் கொடுத்து டூயஷன் சேருங்கள். இல்லை Fuse-ஐ பிடுங்கி விடுவார்கள். Peace
Fulla Power Fulla அதோடு Joke Fulla ஆர்டிக்கல் ஆர்ச்-ஐ பற்றி எழுத்துக்களே ஆடி போகும் அளவிற்கு ஆடு
ஆடு என்று எழுதினால் சுண்டல் வாங்கி கொண்டு வண்டல் மணலில் கிண்டல் பண்ணினால்
பண்டல் போன்ற ஆர்டிக்கல் எழுதிய எனக்கு எப்படி இருக்கும். அப்படி அப்படி இருகாகாது. ஆர்ச்-ற்கு பல படி கட்டுகள் இருக்கிறது அதனை கட்டினால்
தான் இந்த ஆர்ச் நமக்கு. முதலில் இதை படி படி அதுவே வாழ்க்கையின் முன்னேற்றத்தின் முதல்
படி. இதை பிடி பிறகு லட்சியத்தை குறி வைத்து அடி பின் முடி. கன் போன்று அனைத்தையும் "கன்"-ஆக சுட்டு தள்ளுங்கள். ஆன்மீகத்தில் வாடிகன் நமக்கு. போலிஸ் ஆவதும் நமக்கே Gun-ஐ கன்னாக சுடுவது. குழந்தைகளின் பாசம் நமக்கு தான்
கன்னத்தில் முத்தம் கொடுப்பது. ஆன்மீகத்திலும் முருகன் அருள் கிடைக்கும்.
இது இந்தியாவின் புது ஸ்டைல்யா. நான்யா அறிமுகம்யா
செய்யறேன்யா. எழுத்துக்களை பிழியுனம்யா அப்போது தான் மொழியில் காதுகளுக்கு
இனிமையான ஜீஸ்யா.
எனது கட்டுரையில் "சிரிப்பு" இருக்கும் கருத்துக்களில் "கரிப்பு" இருக்காது. ஆனால் உங்கள் சிந்தனையில் "அரிப்பு" இருக்கும். எனது கட்டுரைக்கு வாசகர்களிடம் எப்போதும் சிவப்பு கம்பள "விரிப்பு" இருக்கும்.
நான் கடவுள் "ஹரி"-போல எல்லாவற்றையும் அறிய
வைப்பவன். அறிந்ததும் மனதில் இருக்கும் கெட்டதை நீங்கள் அரிவீர்கள். எந்த
கெட்டதும் ரிட்டன் எடுக்காமல் இருக்க பல ரிதங்களை எழுத்துக்களின் மூலமாக சேர்த்து
ரிவரின் அருகில் ரிதம் கேட்பது போலவும், உங்களை ரிஷி -களை போல மனதில் இதை நிலைநிறுத்த செய்ய அனைத்து எழுத்துக்களையும்
க்யூ-வில் நிறுத்தி அதை Queen-ஆக்கி பல ரோஜா,மல்லிகை,செம்பருத்தி என பருத்தி நூலில் என்னை வருத்தி அழகிய கலப்பு ரோஜா
மாலையை தொடுத்துள்ளேன். இது உங்கள் மனதை துளைத்து எடுக்க ஓர் போர் தொடுத்துள்ளேன். இது உங்கள் மனதில் உள்ள துன்பங்களை துடைத்தெறிய
நிச்சயம் உதவும். துடப்பம் பல்பம் ஆகி அதை வகுப்பறையில் நாம் கற்று நம் வாழ்க்கையே
ஆல்பம் ஆகிறது. இந்த துடப்பம் மனதில் இதயத்தில் இருக்கும் அழுக்கை துடைப்பது. நான்
எழுதும் கட்டுரை மனதை துவைத்தெடுக்கும் ஓர் வாஷிங் மெஷின் போல. துள்ளல்
ஆட்டத்துடன் ராக் &ரோல்-ஆக இந்த எழுத்துக்களை ரோல் பண்ணி அதை ரோல்ஸ் ராய் எனும்
சொகுசு காரில் செல்வது போல் உங்கள் வாழ்க்கையை சுகமாக ஆக்க முனைந்துள்ளேன். துக்கம் இல்லாமல் இருக்க ரோம் நகரில் உள்ள பூக்களை போல்
இதை சரம் போல அவசரம் இல்லாமல் கட்டியுள்ளேன். இது உங்கள் மூளையை சங்கு சக்கரம் போல சுற்ற வைக்கும் இந்த சர
வெடியை உங்கள் சரவணன் எழுதியுள்ளேன். யுவர்ஸ் யுவர்ஸ்-க்காக எழுதியது. இது உங்கள் இடத்தில் ஓர் புழுதியை கிளப்ப
வேண்டும். அதற்காகவே இந்த கிறுக்கு பையன் கிறுக்கல்களாக எழுதியுள்ளான். இது உங்கள் மனதை அயன் பாக்ஸ் போல உங்களை "நீட்" ஆக்கவே இந்த "நீட்" கட்டுரை. இது நீட் தேர்வு போல சற்று கடினம் தான். இது ஒரு துக்ளக் தர்பார் போல உங்கள் மனதை ஆட்சி செய்ய
கூடியது. இந்த சுவடி ஆவடியில் காவடி எடுப்பது போல் இது மனதில் உள்ள கெட்டவற்றை கபடி
ஆடி சாவடிக்கவே. எந்த பீடையும் பீடியில் வரும் புகை போல செல்வதற்காகவே
இக்கட்டுரைகள். அதோடு இந்த கட்டுரைகள் உங்களுக்கு ஓர் பீஷ்மர் போல உதவிகரமாக
இருக்கும்.பல சமயங்களில் பீர் அடித்தால் வரும் போதை போல் இதிலும் இருக்கும்.
இக்கட்டுரைகள் ரயில் பெட்டி போன்று பல எழுதியது உங்கள் மனதில் இது ஓர் நல்ல உயில்
எழுதவே .அதை மயில் மூலமாக மெயில் அனுப்புகிறேன். இது Life-யில் பெயில் ஆகாமல் ஓரளவிற்கோ, சுமாராகவோ,பக்காவாகவோ பார்த்து கொள்ளும். அதற்காக அக்கம், பக்கம் எல்லாம் பார்க்காமல் பக்கம் பக்கமாக எழுதி பல Files-களாக உங்களுக்கு மடல் போல ஆனால் கஷ்டபட்டு பெடல் போட்டு
எழுதி உங்கள் மனதை குடல் போல பிரட்ட,மிரட்ட எழுதுகிறேன். இது உங்களை பல மெடல் வாங்க நிச்சயம் பச்சயம் போல ஒட்டி கொள்ளும்
மற்றும் உதவும்.
இது அனைத்தும் மெய்யா,பொய்யா என தெரியவில்லை.
"டா" என்பது உறவுடா. இதை எல்லாம் தெரிந்து கொள்ளடா, துன்பத்தை தூள் ஆக்குடா, உன்னை நீயே தூக்கு டா சார் என்பது மோர் போல. ஆனால் "டா" என்பது டாடா இரும்பு போல உறவில் புரிந்து கொள்ளடா. டாடா "டா" பாய் "டா". மீதம் Part 2-வில் சந்திக்கலாம்.
https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html